tag:blogger.com,1999:blog-5012938.post113599759463913889..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ராமைய்யாவின் குடிசைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5012938.post-1154720959563930212006-08-05T01:19:00.000+05:302006-08-05T01:19:00.000+05:30இவ்வளவு கொடுமையான சம்பவமா?இத்தனை நாள் வெறுமனே பெயர...இவ்வளவு கொடுமையான சம்பவமா?<BR/>இத்தனை நாள் வெறுமனே பெயரை கீழ்வெண்மணி சம்பவம் என்று மட்டும் கேள்விப்பட்டிருந்தேன்.<BR/><BR/>இன்றுதான் கூகிள் மூலம் தேடி <BR/>திண்ணையில் டிஜிகே அவர்களின் கட்டுரை படித்தேன். அப்படியே உங்கள் பதிவும் கிடைத்தது.<BR/><BR/>இது ஒரு ஜனநாயகத் தலைகுனிவு என்றே சொல்லவேண்டும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136289590667069902006-01-03T17:29:00.000+05:302006-01-03T17:29:00.000+05:30நீங்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய பதிவிலிருந்த ...நீங்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய பதிவிலிருந்த சாலிகிராமம் முகவரியில் the roots ஐத் தொடர்பு கொண்டு கேட்டிருந்தேன். வெளியீட்டு விழா அழைப்பிதழ் வந்திருக்கிறது. குறுவட்டு எந்நாளிலும் வந்து விடலாம். நிலச் சீர்திருத்தம் குறித்த சிறு செய்திகளுக்கு நன்றி.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136288339530784542006-01-03T17:08:00.000+05:302006-01-03T17:08:00.000+05:30வெண்மணி தீயில் கருகிய 44 உடல்களை நேரில் பார்த்தேன்...வெண்மணி தீயில் கருகிய 44 உடல்களை நேரில் பார்த்தேன்...சோலை. சுந்தரபெருமாளுடன் ஒரு நேர்காணல்.<BR/><BR/>http://www.tamizhbooks.com/content/content_ner/dec04_ner_venmani.htmThangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136271430497384972006-01-03T12:27:00.000+05:302006-01-03T12:27:00.000+05:30பத்ரி, சோலை. சுந்தரபெருமாளின் 'செந்நெல்' படித்துப...பத்ரி, சோலை. சுந்தரபெருமாளின் 'செந்நெல்' படித்துப்பாருங்கள். அதுவும் கீழவெண்மணியை களமாகக்கொண்ட சிறந்த நாவல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136260027700586912006-01-03T09:17:00.000+05:302006-01-03T09:17:00.000+05:30ரவி: தமிழகத்தில் உபரி நிலம் என்று அறிவிக்கப்பட்டதே...ரவி: தமிழகத்தில் உபரி நிலம் என்று அறிவிக்கப்பட்டதே குறைவு.<BR/><BR/>1961, 1970 சட்டங்கள் நிறைய ஓட்டைகளை விட்டுச்சென்றனவாம். இந்த நில உச்ச வரம்பு தனியாருக்கும் கூட்டுக்குடும்பங்களும்தான் பொருந்தும் என்று இருந்தது. அதே போல ஐந்து பேர்களுக்கு மேலான குடும்பங்கள் 30 (15) ஏக்கருக்கு மேல் வைத்துக்கொள்ளலாம் என்றும் வேறுசில விலக்குகளும் கூட அளிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இந்த நில உச்சவரம்பு அறக்கட்டளைகளுக்குப் பொருந்தாது. தனியார் அறக்கட்டளைகளையும் சேர்த்து... இதனால் பலரும் தனியார் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி தமது நிலங்களை இந்த அறக்கட்டளைகளுக்கு எழுதிவைத்து அதைத் தம் கையிலேயே வைத்துள்ளனராம். அதேபோல பெனாமி கைமாற்றங்கள்...<BR/><BR/>அதனால்தான் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிலப்பரப்பையும் ஒரேபோன்ற நிலச்சுவான்தார்களையும் கொண்ட இரு மாநிலங்கள் - மேற்கு வங்கம், தமிழகம் இரண்டில் 5:1 என்ற கணக்கில் நிலச்சீர்திருத்தம் நடந்துள்ளது.<BR/><BR/>இந்தியாவில் நிலச்சீர்திருத்தம் பற்றி முழுமையான தகவல்கள் என்னிடம் கிடையாது. இதுபற்றி தகவல் தேடிப் படிக்க ஆசைப்படுகிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136222125394330682006-01-02T22:45:00.000+05:302006-01-02T22:45:00.000+05:30Badri, It looks like something is missing in your ...Badri, <BR/><BR/>It looks like something is missing in your statistics. TN has distributed more than 90% of the excess land which is much higher than WB's distribution rate. Am I missing something here?<BR/><BR/>- RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136221287526948372006-01-02T22:31:00.000+05:302006-01-02T22:31:00.000+05:30தெருத்தொண்டன்: உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் கிட...தெருத்தொண்டன்: உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் கிடக்கட்டும்.<BR/><BR/>நிலச்சீர்திருத்தம் என்பது ஒரு முக்கியமான விஷயம். இது இந்தியாவில் மிகவும் மோசமாகத்தான் இதுவரையில் நடைபெற்றுள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ஒரு சிறிய புத்தகம் - "கிராமப்புற இந்தியாவில் நிலம்", ஆசிரியர் கே.வரதராஜன், 24 பக்கங்கள், விலை ரூ. 5 - பல விஷயங்களைத் தெளிவாக்குகிறது.<BR/><BR/>நிலச்சீர்திருத்தம் என்பது ஒரு தனி மனிதருக்கு அல்லது இந்து கூட்டுக்குடும்பத்துக்குச் சொந்தமாக எத்தனை ஏக்கர் நிலம் இருக்கலாம் என்று முடிவுசெய்து, உபரியாக உள்ள நிலத்தைக் கையகப்படுத்தி, பின் அதனை நிலமற்ற விவசாயக் கூலித்தொழிலாளிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது.<BR/><BR/>அந்த வகையில் தமிழகத்தில் காங்கிரஸ் காலத்தில் (1961-ல்) உச்ச வரம்பாக இருந்த 30 ஏக்கர் திமுக காலத்தில் (1970-ல்) 15 ஏக்கராக குறைக்கப்பட்டதாம். ஆனாலும் இதுநாள்வரையில் தமிழகத்தில் உபரி நிலம் என்று அறிவிக்கப்பட்டது 2,02,795 ஏக்கர். அதில் கையகப்படுத்தப்பட்டது 1,94,118 ஏக்கர். இதிலிருந்து விநியோகிக்கப்பட்டது 1,83,670 ஏக்கர் மட்டும்தான்.<BR/><BR/>இதையே மேற்கு வங்கத்துடன் ஒப்பிட்டால், உபரி என அறிவிக்கப்பட்டது: 13,94,180 ஏக்கர். கையகப்படுத்தியது 13,04,185 ஏக்கர். விநியோகிக்கப்பட்டது: 10,88,445 ஏக்கர்.<BR/><BR/>அதாவது தமிழகத்தைப் போல ஐந்து மடங்கு அதிகம்.<BR/><BR/>இன்றுவரையிலும் கூட திமுக, அதிமுக அரசுகள் இந்த விவகாரத்தில் வேண்டிய அளவுக்கான தீவிரம் காட்டவில்லை.<BR/><BR/>இதுதான் முக்கியமான பிரச்னை. 1968 கீழவெண்மணி எரிப்புக்குப் பிறகும்கூட political will இல்லாத காரணத்தால் நிலச்சீர்திருத்தம் சரியாக நடைபெறவே இல்லை.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136212439745556312006-01-02T20:03:00.000+05:302006-01-02T20:03:00.000+05:30எனது பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நூலின் பெ...எனது பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நூலின் பெயர் "தென்பரை முதல் வெண்மணி வரை". முதல் மறுமொழியில் உள்ள தவறைத் திருத்திக் கொள்கிறேன்.தெருத்தொண்டன்https://www.blogger.com/profile/08750942999342930583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136192807707654252006-01-02T14:36:00.000+05:302006-01-02T14:36:00.000+05:30இங்கே சென்னையில் வேறு எங்கு கிடைக்கிறது என்கிற தகவ...இங்கே சென்னையில் வேறு எங்கு கிடைக்கிறது என்கிற தகவல்கள் இருக்கிறதா? புக்லேண்ட்ஸ், ஹிக்கின் பாதம்ஸ் ..?Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136179324095344042006-01-02T10:52:00.000+05:302006-01-02T10:52:00.000+05:30பத்ரி,பதிவுக்கு நன்றி.. இந்த சம்பவம் குறித்து எழுத...பத்ரி,<BR/>பதிவுக்கு நன்றி.. இந்த சம்பவம் குறித்து எழுதுவதற்கோ பதிவு செய்வதற்கோ "பலருக்கு" ஆர்வம் இருப்பதில்லை. சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராக கூலி விவசாயத் தொழிலாளர்களை அமைப்பாகத் திரட்டிப் போராடியதில் அனைத்து சாதித் தோழர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். நல்லவேளை அவர்களுடைய ஆர்வத்திற்கு யாரும் அப்போது களங்கம் கற்பிக்கவில்லை. சீனிவாசராவ், மணியம்மை மற்றும் பலர் தலித் மக்கள் அல்லர். ஆனால் ராமய்யாவின் குடிசையில் பலியான அனைவரும் தலித் மக்கள்.. கூலி விவசாயத் தொழிலாளர்கள்.. வன்கொடுமைக்கு எதிராகப் போராடிய செங்கொடி இயக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு கீழ்வெண்மணி நினைவகத்தைக் கைப்பற்ற நவீன தலித் போராளிகள் முயல்வதாகவும் அவ்வப்போது செய்திகள் வருகின்றன.<BR/><BR/>வெண்பரை முதல் வெண்மணி வரை என்ற ஆவணப் புத்தகம் அப்பணசாமியால் தொகுக்கப்பட்டது. புத்தகத்தின் பெயர் சரிதானா என்று திடீர் சந்தேகம்.. பாரதி புத்தகாலயம் வெளியிட்டதாக நினைவு..டிசம்பர் 25, 1968 இல் உயிரோடு இருந்தவர்கள் 25 ஆண்டுகள் கழித்து அந்த கொடுமையான இரவை நினைவு கூர்ந்துள்ளார்கள்..<BR/><BR/>பாரதி கிருஷ்ணகுமாரின் சி.டி.யை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்த கொடூரமான சம்பவம் குறித்து- நிலப்பிரபுத்துவத்தின் கோர முகம் குறித்து ஏன் தமிழ்ச் சூழலில் அதிகம் பேசப்படுவதில்லை? இது விவாதத்திற்குரிய விஷயம். <BR/><BR/>அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா என்பதாலா? <BR/><BR/>அதன்பின் வந்த அனைத்து ஆட்சிகளும் அவரது பெயரைப் பயன்படுத்துவதாலா? <BR/><BR/>அல்லது கொளுத்திய கரங்களைக் குலுக்கிக் கொண்டு செங்கொடி இயக்கத்தினர் அசெம்பிளி சீட்டுகளுக்கு ஐக்கிய முன்னணி அமைத்ததாலா? <BR/><BR/>அல்லது நிலவுடைமைப் பண்பாட்டின் ஒரு கூறைத் தேர்வு செய்து அதைக் காப்பாற்ற மாபெரும் மாபெரும் இயக்கங்களை நடத்த வேண்டிய அவசியம் இங்கு சில கட்சிகளுக்கு இருப்பதாலா?<BR/><BR/>சரி விடுங்கள்..இன்னும் சில பின்னூட்டங்கள் ஏன் வரவில்லை? இந்தப் பதிவு போடுவதில் பத்ரிக்கு ஏன் அக்கறை? எந்த ஈயத்தின் சதிக்கு பாரதி கிருஷ்ண குமார் பலியாகி இருக்கிறார்? பதிரியின் அலுவலகத்திற்கு வந்து பா.கி.கு காபி வாங்கி சாப்பிட்டிருப்பாரோ என்று முதலில் ஐயப்பட்டேன். ஆனால் அந்த சந்தேகத்தை பத்ரி போக்கிவிட்டார். <BR/><BR/>அடுத்து நான் ஏன் பத்ரியின் பதிவுக்கு நன்றி தெரிவித்து பதிவு போடவேண்டும்? அவர் அது குறித்து எழுதியதற்கு மறு மொழியிட்டாயா, இவர் இது குறித்து எழுதியதற்கு பின்னூட்டமிட்டாயா? இப்போது மட்டும் என்ன அக்கறை? <BR/>இது போன்ற கேள்விக் கணைகள் வீசப்படும்.தெருத்தொண்டன்https://www.blogger.com/profile/08750942999342930583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136009610513951132005-12-31T11:43:00.000+05:302005-12-31T11:43:00.000+05:30தமிழக வரலாற்றில் நிலப்பிரபுத்துவ கொடுமைக்கு நீடித்...தமிழக வரலாற்றில் நிலப்பிரபுத்துவ கொடுமைக்கு நீடித்து, நிலைத்து சான்று பகர்வது வெண்மணி.<BR/>‘சானிப்பாலும், சவுக்கு அடியும்’ அந்த ஏழை கூலி விவசாயிகளுக்கு தண்டனையாக கொடுக்கப்பட்டதாக நான் படித்திருந்தேன். மேலும், அவர்கள் அந்தக் காலத்தில் கேட்டது வெறும் ‘அரை படி’ நெல் கூலி உயர்வுதான். இதற்குத்தான் நிலப்பிரபுக்கள் 44 கண்மணிகளின் உயிரினைப் பறித்திருக்கிறார்கள்.<BR/>இது அன்று மட்டுமல்ல; இன்றும் சாதிய ஏற்றத் தாழ்வு, தீண்டாமை, நில உடைமை போன்ற சங்கிலிகளால் இன்றைக்கும் தலித் மக்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதுதான் ஆந்திர மாநிலம் சுண்டூரில் நடந்தது. அதே போல் பீகாரில் தலித் மக்கள் படுகொலை என்று இந்திய நாடு முழுவதும் நாய்களை விட கேவலமாக நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுடைய உழைப்பை மட்டும் விரும்பி ஏற்கும் நிலபிரபுத்துவ நாய்கள், இந்த மக்களை நாயினும் கீழாக நடத்துவதை வேறறுப்பது எப்போது என்ற கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்கிறது.<BR/>அதே போல் வெண்மணி குறித்து இதுவரை வந்துள்ள நாவல்களில் மிகச் சிறந்தது “செந்நெல்” சோலை சுந்தர பெருமாள் எழுதியுள்ளார். இதையும் தவறாமல் படியுங்கள். இது குருதிப்புனலை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136007375021552692005-12-31T11:06:00.000+05:302005-12-31T11:06:00.000+05:30தகவல்களுக்கு நன்றி பத்ரி.தகவல்களுக்கு நன்றி பத்ரி.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136003291786878282005-12-31T09:58:00.000+05:302005-12-31T09:58:00.000+05:30திண்ணையில் டிஜிகே எழுதியதில் பாரதி கிருஷ்ணகுமாரின்...<A HREF="http://www.thinnai.com/ar1230053.html" REL="nofollow">திண்ணையில் டிஜிகே எழுதியதில்</A> பாரதி கிருஷ்ணகுமாரின் செல்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.<BR/><BR/>பாரதி கிருஷ்ணகுமார்<BR/>4/17 நாவலர் தெரு<BR/>தேவராஜன் நகர், தசரதபுரம், சாலிக்கிராமம் (அஞ்சல்) சென்னை 600 093<BR/>ஃபோன்: 94442 - 99656<BR/><BR/>இந்தக் குறுந்தட்டை பரவலாக வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்ல விநியோகஸ்தர்கள், புத்தக/சிடி ஏற்றுமதியாளர்களை அணுகவேண்டும். எனக்கு பாரதி கிருஷ்ணகுமார் யாரென்று தெரியாது. வேண்டுமானால் தெரிந்தவர்கள் மூலமாக விசாரித்து என்ன முயற்சிகள் எடுத்துள்ளார் என்று கேட்டுச் சொல்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1136002867103787982005-12-31T09:51:00.000+05:302005-12-31T09:51:00.000+05:30விரிவான பதிவுக்கு நன்றி. இந்தப் படத்தின் CDயை வெளி...விரிவான பதிவுக்கு நன்றி. இந்தப் படத்தின் CDயை வெளிநாடுகளில் இருந்து வாங்க வழியிருக்கிறதா? அல்லது சென்னையில் கிடைக்கும் இடம் பற்றிய தகவல்களைத் தரமுடியுமா? <BR/><BR/>கோபாலகிருஷ்ண நாயுடு ஒரு படித்த, செல்வாக்குள்ள, பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு செய்திருக்கமாட்டார் (அவருக்கு எதிரான வேறு உறுதியான சாட்சிகளை போலிஸ் காட்டாததால்)என்ற விளக்கத்துடன் விடுதலை செய்யப்பட்டார் என்றுதெரிகிறது. மூப்பனார் அவரது விடுதலைக்காக உழைத்தவர்களில் ஒருவர் எனவும் அறியப்படுகிறது. இது பற்றிய சில தகவல்கள் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்களில் கிடைக்கும்.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.com