tag:blogger.com,1999:blog-5012938.post117535793464301394..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: உணவு, விவசாயம், நெருக்கடி - 2Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5012938.post-1175601201874290162007-04-03T17:23:00.000+05:302007-04-03T17:23:00.000+05:30பத்ரி,நிலங்களை துண்டு துண்டாக்க வேண்டும் என்று சொல...பத்ரி,<BR/><BR/>நிலங்களை துண்டு துண்டாக்க வேண்டும் என்று சொல்லவில்லை, மாறாக நிலங்களை உழுபவருக்கு பிரித்து கொடுத்து கூட்டுபண்ணைகளின் கீழ் இணைத்து விவசாய உற்பத்தியை நவீன முதலாளித்துவ முறைகளை உபயோகப்படுத்தி செய்வதுடன், விவசாயிகளையும் ஜனநாயகப்படுத்தலாம். இதனை சீனாவிலும் ரஸ்யாவிலும் செய்து அபரிமிதமான சாதனைகளை சாதித்துள்ளனர். இது உற்பத்தி துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களை சாதித்துக் காட்டும் என்பதற்க்கும் சீனா, ரஸ்யாவே உதாரணமாக உள்ளன.<BR/><BR/>உணவு பற்றாக்குறையை பொறுத்தவரை இந்திய விவசாய உற்பத்தியை ஏகாதிபத்திய தரகு நிறுவனங்கள தமது சந்தை தேவைக்கான உற்பத்தி பின் நிலங்களாக மாற்றும் உத்தியின் ஒரு பகுதியாகவெ பார்க்க வேண்டியுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் இந்த பின்னணீயிலேயே பார்க்க வேண்டிய பிரச்சனை. <BR/><BR/>இது குறித்து இந்தியாவுக்கான் அரசியல்-பொரூளாதார ஆய்வு குழு(RUPE) சமீபத்திய வெளியிட்டை படித்தால் சில புரிதல்கள் கிட்ட வாய்ப்புள்ளது. http://www.rupe-india.org/<BR/><BR/>உண்மையில் இந்தியாவின் ஆகப் பெரும்பான்மை மக்கள் விவசாயத்துடன் இணைந்துள்ளனர் எனில் விவசாயத் துறையை சீரமைப்பதுதான் நாட்டுக்கு நல்லதாக இருக்கும். உற்பத்தி துறை என்பது விவசாயத்தின் தேவைக்கான ஒரு துறையாக இருக்க வைத்த் வளர்த்தெடுப்பதுதான் மக்களுக்கு சிரமம் இல்லாத விசயமாக இருக்கும் அதை விடுத்து தற்போது தொழிற்நுட்பம், வேலை வாய்ப்பு என்ற பெயரில் செய்யப்படும் அனைத்து விசயங்களும் உலகாளாவிய மூலதனத்தின் சிக்கலை தீர்க்கும் உத்தியாகவே தெரிகீறது. உலகளாவிய மூலதனம் தனது மூலதன சுழற்சிக்காக இந்தியா போன்ற மூன்றாம உலக நாடுகளின் மூலாதாரங்களை சுரண்டுகின்றன. தமக்கு ஏற்ப்பட்ட சமூக பொருளாதார அழுத்தங்களை மூன்றாம உலக நாடுகளின் மனித வளம், சந்தை, இயற்கை வளத்தின் மீது திசை திருப்பிவிட்டு, சுற்றுச் சூழலில், சமூக பொருளாதார சூழலில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். வல்லரசாக காட்டப்படும் சீனாவின் நிலைமையும் அதுதான். 1978க்குப் பிறகான சீனா சந்தை சோசலிச சீர்திருத்தங்கள் அங்கு பணக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரித்த அதே வேளையில்தான் சாதாரண மக்களின் அடிப்படை தேவைகளை சுருக்கி, சுத்தமான தண்ணீர், சுகாதாரம், கல்வி, மருத்துவ வசதி, போக்குவரத்து, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.<BR/><BR/>இத்துடன், ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தமது உள்நாட்டு முதலாளிகளின் வளர்ச்சியை இன்று வரை வெளிநாட்டு மூலதனத்திலிருந்து காப்பதன் மூலமே வளர்த்துள்ளனர். மாறாக நம்மைப் போன்ற மூன்றாம் உலக் நாடுகளுக்கு மட்டும் கதவை திற காற்று வரும் என்று காதில் பூ சுற்றுகிறார்கள். இதற்க்கு உதாரணம் மேற்கத்திய நாடுகளின் உற்பத்தி துறை என்பது சுற்றுச்சூழலுடன் முரன்படுவதில் அதன் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டதும், அதே நேரத்தில் உலகளாவிய அளவில் உற்பத்தி துறையில் ஏற்பப்ட்ட நெருகக்டியையும் சேர்த்துதான் உற்பத்தி துறையில் மட்டும் உலகமயத்தை செயல்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் தந்திரத்தை பார்கக் வேண்டும்,.<BR/>http://poar-parai.blogspot.com/2007/03/blog-post_14.html<BR/><BR/>சுற்றுசுழலுடன் பெரிய அளவில் முரன்பாடு கொள்ளாதா விவசாய துறையை மேற்கத்திய நாடுகள் உலகமயப்படுத்தாமை அல்லது ஒரு பக்கசார்பு உலகமயப்படுத்தும் தந்திரத்தையும் இங்கு கணக்கில் கொண்டால் இந்த சதி திட்டத்தின் முழு உருவம் பிடிபடும்.<BR/><BR/>இந்த அம்சங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே தண்ணீர் தனியார்மயம், விவசாயத்தில் பன்னாட்டு கம்பேனிகள், மரபணு விதைகள், பிற உலகமய திட்டங்களை நாம் பார்க்க வேண்டும்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com