tag:blogger.com,1999:blog-5012938.post3131514572478911562..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5012938.post-2362750626635434112008-10-31T06:22:00.000+05:302008-10-31T06:22:00.000+05:30இப்போது தான் காண நேர்ந்தது: 'ananimous' (tue aug5)...இப்போது தான் காண நேர்ந்தது: <BR/><BR/>'ananimous' (tue aug5) கருத்துக்களின் கடைசி பத்தி என்னை உலுக்கி விட்டது. இது போல் கருத்துக்கள் சோ போன்றவர்க்கு காய்த்துப்போயிருக்கலாம்: ஆனால் பொது நன்மை, பொது அறிவு என்ற ஆர்வத்தில் பதிவு செய்வதாக (நான் நினைக்கும் ) தங்கள் போன்றவர்க்கு இது அநீதி என்றே எனக்கு தோன்றுகிறது. த்மிழன் அல்லாத பார்ப்பான் என்ற சொற்றொடர் ஒவ்வாதது: பார்பனத் தமிழன் என்று சொன்னால் ஒருவேளை கொஞ்சம் மென்மையாக இருந்திருக்கலாம்: <BR/><BR/>ஆனால், அதையும் விட ஒன்று கவனியுங்கள்: இப்படி ஒப்பாரி வைப்பதற்கும் ஒரு பார்பனத் தமிழன் தான் முன் வார வேண்டும் என்பது தான் இன்னும் நம் நிலை. <BR/> தமிழன் என அங்கீகாரம் பெற இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டுமோ?nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51516789880313268942008-08-05T10:05:00.000+05:302008-08-05T10:05:00.000+05:30//உணர்வுரீதியாக எனக்கும் கொசாவா மக்களுக்கும் எந்த ...//உணர்வுரீதியாக எனக்கும் கொசாவா மக்களுக்கும் எந்த உறவுமில்லை, பகையுமில்லை. ஆனால் கொசாவா பிரிந்து தனி நாடானதை நான் ஆதரிக்கிறேன். அதேபோலத்தான் தமிழ் ஈழத்தையும் ஆதரிக்கிறேன்.//<BR/><BR/>ஆக...! தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறீர்கள். ஆனால் உணர்வுரீதியாக உங்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் உறவும் இல்லை பகையும் இல்லை என்கிறீர்கள்.<BR/><BR/>உணர்விரீதியாக தமிழன் எனும் உறவுள்ளவர்கள் ஆதரிக்கத்தானய்யா செய்வார்கள். இந்தியா என்பது ஆட்சி அதிகாரத்திற்காக போடப்பட்ட எல்லைக்கோடுகள். அதற்கும் அப்பால் தமிழர் எனும் உணர்வும் உறவும் எமக்கும் எம் ஈழத்தமிர்களுக்கும் உண்டு. அதை அரசியல் எல்லைக் கோடுகள் தடுத்துவிட முடியாது.<BR/><BR/>தமிழன் அல்லாத "பார்ப்பனன்" ஆன உங்களுக்கு உணர்வுரீதியான உறவு இருக்காது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-32046347741614532272008-03-16T03:11:00.000+05:302008-03-16T03:11:00.000+05:30பத்ரி, தங்கள் கருத்துகளுக்கு நன்றி.அன்புடன், பி.கே...பத்ரி, தங்கள் கருத்துகளுக்கு நன்றி.<BR/><BR/>அன்புடன், பி.கே. சிவகுமார்PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24758127997734442572008-03-13T10:26:00.000+05:302008-03-13T10:26:00.000+05:301. நான் தனித் தமிழ் ஈழம் என்னும் அமைப்பை ஆதரிக்கிற...1. நான் தனித் தமிழ் ஈழம் என்னும் அமைப்பை ஆதரிக்கிறேன். சிங்கள மக்களிடமிருந்து தமிழர்களுக்கு எப்போதும் நியாயம் கிடைக்காது என்று நம்புகிறேன்.<BR/><BR/>2. விடுதலைப் புலிகளது ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டத்தை - அரசியல் ரீதியில் - ஆதரிக்கிறேன்.<BR/><BR/>3. விடுதலைப் புலிகளின் பல செயல் திட்டங்கள், நடைமுறைகளை எதிர்க்கிறேன். முக்கியமாக அரசியல் தலைவர்களை தற்கொலைப் படை கொண்டு கொல்வது, தனக்குப் பிடிக்காதவர்களை வன்மமாகத் தீர்த்துக் கட்டுவது, எதிர்க்கருத்துகளுக்குச் சிறிதும் இடம் கொடுக்காதது.<BR/><BR/>உணர்வுரீதியாக எனக்கும் கொசாவா மக்களுக்கும் எந்த உறவுமில்லை, பகையுமில்லை. ஆனால் கொசாவா பிரிந்து தனி நாடானதை நான் ஆதரிக்கிறேன். அதேபோலத்தான் தமிழ் ஈழத்தையும் ஆதரிக்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81470907628590936512008-03-12T02:36:00.000+05:302008-03-12T02:36:00.000+05:30பத்ரி,கருணாநிதியும் தி.மு.க.வும் விடுதலைப் புலிகள்...பத்ரி,<BR/><BR/>கருணாநிதியும் தி.மு.க.வும் விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பது சரிதான். விடுதலைப் புலிகள் விஷயத்தில் உங்கள் நிலை என்ன என்று பகிரங்கமாக அறிவிக்க முடியுமா? ஏற்கனவே எழுதியிருக்கிற இத்தனை கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன் என்று அவற்றிற்கான சுட்டிகள் தராமல் (அவற்றைப் படித்திருந்தாலும் மீண்டும் தொகுத்துக் கொள்ள இதைக் கேட்கிறேன் என்று எடுத்துக் கொள்ளவும்) -<BR/><BR/>1. விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களா?<BR/><BR/>2. முதல் கேள்விக்குப் பதில் ஆம் என்றால்<BR/> 2a) உணர்வுரீதியாக ஆதரிக்கிறீர்களா?<BR/> 2b) அரசியல்ரீதியாக ஆதரிக்கிறீர்களா?<BR/> 2c) உணர்வுரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஆதரிக்கிறீர்களா?<BR/><BR/>என்பதை ஆம்/இல்லை என்ற பதில்களால் சொல்ல முடியுமா? கருணாநிதியும் தி.மு.க.வும் போல நீங்களும்கூட டெலிகேட் நிலையில் நின்றுகொண்டு, கம்பிமீது சாகசம் செய்கிற வேலையை இவ்விஷயத்தில் செய்வதாக எனக்குள் ஓர் எண்ணம். எனவே அறிந்து கொள்ள கேட்கிறேன். கருணாநிதியும் தி.மு.க.வும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அரசியல் கட்சிகள், பத்ரி தனிமனிதர். சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற பதில் சொல்வீர்களேயானால், நன்றி.<BR/><BR/>அன்புடன், பி.கே. சிவகுமார்PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53886676253273007472008-03-09T20:11:00.000+05:302008-03-09T20:11:00.000+05:30பத்ரி,திருமாவளவனின் பேச்சைக் குறித்துச் சட்ட மன்றத...பத்ரி,<BR/><BR/>திருமாவளவனின் பேச்சைக் குறித்துச் சட்ட மன்றத்தில் பதிலளிக்கும் போது கருணாநிதி, பொடா சட்டத்தின் தீர்ப்பைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். அந்தத் தீர்ப்பு குற்றத்தின் செயலை மட்டுமல்ல, நோக்கத்தையும் பார்க்க வேண்டும் என்ற கிரிமினல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான, mens reaவைப் சுட்டிக் காட்டி சில கருத்துக் களைச் சொல்கிறது. (இது பற்றி என் தினமணிக் கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்) இந்த அடிப்படையில்தான் திருமாவளவனின் மாநாட்டை மட்டுமல்ல, அந்தன் பின்னுள்ள நோக்கத்தையும் பார்க்க வேண்டும் எனச் சொல்கிறேன். அந்த நோக்கம் அவரது ஜூவி பேட்டியில் வெளிப்படுகிறது.<BR/>கருணாநிதி இதைக் கருத்தில் கொள்ளாமல் பேசினார் என்பதுதான் என் வாதம். அவர் இதைக் கருத்தில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, உச்சநீதி மன்றம் சர்ர்சைக்குரிய பிரிவுகளாகக் கருதப்பட்ட 21, 22, 23 பிரிவுகளைச் செல்லாது எனச் சொல்லவில்லை என்பதையும் வசதியாக மறந்து விட்டார். மறந்து விட்டார் என்பது மட்டுமல்ல, தீர்ப்பில் இல்லாததை இருப்பது போல பேசுகிறார். அதைச் சுட்டிக் காட்டுபவர் மீது அவர் கட்சிக்காரர்களால் உரிமைப் பிரசினையும் கொண்டு வரப்படுகிறது. இவை எல்லாம் out of the way போய் அவர் திருமாவளவனை காக்க முற்படுகிறார் என்பதைக் காட்டுகின்றன. ஏன் என்பதுதான் கேள்வி. அவர் திருமாவளவனது நோக்கங்களை ஆதரிக்கிறாரா என்பதுதான் சந்தேகம்.<BR/><BR/>நீங்கள் முழுச் சித்திரத்தையும் பார்க்க வேண்டும்.<BR/><BR/>2.முஷரஃப்போடு தமிழ்ச் செல்வனை ஒப்பிட முடியாது. முஷராஃப் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் ராணுவத்தின் அதிகாரி என்ற முறையில் அந்த ராணுவம் இட்ட கட்டளைகளை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகள் இறையாண்மை கொண்ட ஒரு அரசின் ராணுவம் அல்ல. அது ஒரு பயங்கரவாத இயக்கம்.<BR/><BR/>தமிழ்ச் செல்வனை அமைதிப் புறாவாக வர்ணிப்பதும் அவரது மரணத்தை அரசியல் படுகொலையாக சித்தரிப்பதும்தான் மகாத்மா, மார்டின் லூதர் உதாரணங்களை நினைவுபடுத்தத் தூண்டுகிறது.<BR/><BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18652716491046420172008-03-07T13:27:00.000+05:302008-03-07T13:27:00.000+05:30இது ஒரு தர்மசங்கடமான பிரச்சினைபெரும்பாலும் எல்லா த...இது ஒரு தர்மசங்கடமான பிரச்சினை<BR/><BR/>பெரும்பாலும் எல்லா தமிழர்களுக்கும் இலங்கை பிரச்சினைக்கு மனதளவில் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது உண்மை ஆனால் அதனை வெளிப்படையாக தெரிவிககமுடியாமல் ராஜீவ் கொலையும் சட்டமும் தடுக்கின்றன, அதனால் பெரும்பாலும் தானாகவே அவர்களுக்கு ஒரு நல்லது நடந்துவிடாதா என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்றே நான் நம்புகிறேன், அது சிலநேரங்களில் தம்மனதில் உள்ளது வெளிப்படுகிறது, அதனை அரசியல் எதிரிகள் தங்கள் சுயலாபத்திற்காக பயன் படுத்திக்கொள்ள இது போன்ற சம்பவங்கள் உதவுகிறது மற்றபடி இலக்கியவாதிகளும் அறிவுசார் மனிதர்களும் இதை ஒரு கருணை அடிப்படையிலேயே அம்மக்களின் துயரங்களை நோக்குகிறார்கள் என்பது என் எண்ணம்.<BR/>செல்விAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22369458789624816632008-03-06T12:54:00.000+05:302008-03-06T12:54:00.000+05:30//லட்சுமன் கதிர்காமரும் போர் உடையில் இல்லை, போர் ப...//லட்சுமன் கதிர்காமரும் போர் உடையில் இல்லை, போர் புரியவில்லை அவரும் சிவிலியன் பிரதிநிதி தான், அமைதி பேச்சில் அவரும் இருந்தார். பிறகு ஏன் கொல்லப்பட்டார்? அமைதி பேச்சில் அவரும் இருந்தார். பிறகு ஏன் கொல்லப்பட்டார்?//<BR/><BR/>அவரைக் கொன்றவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. இது தான் இலங்கை பிரச்சனையின் ஆணி வேர். உண்மை என்னவென்று தெரியாமல் தமிழருக்கென்று ஒரு தேசம் கிடைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக பலரும் புலிகளை எதிர்ப்பது.<BR/><BR/>நீங்கள் ராஜிவ் காந்தி குறித்து இந்த கருத்தை கூறியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் கதிர்காமர் பற்றி கூறியது தான் எனக்கு எரிச்சல்.<BR/><BR/>ராஜீவின் கொலையும் கண்டிக்கத்தக்கதே, கதிகாமரின் கொலையும் கண்டிக்கத்தக்கதே, தமிழ்செல்வனின் கொலையும் கண்டிக்கத்தக்கதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45224295445990940152008-03-04T11:37:00.000+05:302008-03-04T11:37:00.000+05:30பின் தொடர்தல்: கருத்து சுதந்திரமும் கருத்தாக்கமும்...பின் தொடர்தல்: <A HREF="http://snapjudge.wordpress.com/2008/03/04/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a4/" REL="nofollow">கருத்து சுதந்திரமும் கருத்தாக்கமும்</A>Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-26354518158100718262008-03-04T10:46:00.000+05:302008-03-04T10:46:00.000+05:30"அந்த விலை என்ன? ஆட்சிக்கலைப்பா?அதனால் தமிழனுக்கு ..."அந்த விலை என்ன? ஆட்சிக்கலைப்பா?<BR/>அதனால் தமிழனுக்கு என்ன இழப்பு? கருனாநிதி குடும்பத்தின் நலனுக்காக தமிழன் தனது இன உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாதா?"<BR/><BR/>கருணாநிதி குடும்பம் நன்றாக<BR/>இருந்தால்தான் தமிழர்கள் அத்தனை<BR/>பேரும் நன்றாக இருக்க முடியும்,<BR/>அதற்காக அவர் எத்தனையோ சிரமங்களை தாங்கிக் கொண்டு<BR/>பதவியில் இருக்கிறார் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-85687275732203666912008-03-03T19:59:00.000+05:302008-03-03T19:59:00.000+05:30//அதற்கான விலையை கருணாநிதி கொடுக்க வேண்டி வரலாம் எ...//அதற்கான விலையை கருணாநிதி கொடுக்க வேண்டி வரலாம் என்பதை அவர்கள் உணரவில்லை.//<BR/><BR/>அந்த விலை என்ன? ஆட்சிக்கலைப்பா?<BR/>அதனால் தமிழனுக்கு என்ன இழப்பு? கருனாநிதி குடும்பத்தின் நலனுக்காக தமிழன் தனது இன உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாதா?சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandamhttps://www.blogger.com/profile/09421049774111610034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23108924693708370042008-03-03T12:33:00.000+05:302008-03-03T12:33:00.000+05:30"முதல்வர் கருணாநிதியும் திமுகவும், இதற்கான பதிலை வ..."முதல்வர் கருணாநிதியும் திமுகவும், இதற்கான பதிலை விரைவில் சொல்லிவிடுவது நல்லது.<BR/>"<BR/><BR/>1991ல் நடந்ததை கருணாநிதி மறந்திருக்கமாட்டார்.ஆனால்<BR/>திருமா போன்றவர்களுக்கு<BR/>எதைப் பேசக்கூடாது என்பது<BR/>தெரியவில்லை.அதற்கான<BR/>விலையை கருணாநிதி<BR/>கொடுக்க வேண்டி வரலாம்<BR/>என்பதை அவர்கள் உணரவில்லை.<BR/>தன் வாயால் கெடும் நுணல்களை<BR/>யார் காப்பாற்ற முடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6161388953402216422008-03-03T12:29:00.000+05:302008-03-03T12:29:00.000+05:301.திருமாவளவன் சாதாரண ஆள் கிடையாது, பல பேர் உறுப்பி...1.<BR/>திருமாவளவன் சாதாரண ஆள் கிடையாது, பல பேர் உறுப்பினராக உள்ள ஒரு கட்சியின் தலைவர். அவர் இப்படி பேசினால், 'ஓகோ ஆயுதம் கடத்துவது பெருமைக்குரிய விஷயம் போலும்' என்று யாராவது எண்ணி அப்படி செய்ய துணிந்துவிட்டால்?<BR/>இதற்க்காகவே அவரிடம் அரசே எச்சரிக்கை விட வேண்டும்.<BR/><BR/>2.<BR/>//தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவர் போர் உடையில் இல்லை. போர் புரியவும் இல்லை. முன்னர் ஒருகாலத்தில் அவர் போர் புரிந்திருக்கலாம். போர் வீரர்களுக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. //<BR/><BR/>லட்சுமன் கதிர்காமரும் போர் உடையில் இல்லை, போர் புரியவில்லை அவரும் சிவிலியன் பிரதிநிதி தான், அமைதி பேச்சில் அவரும் இருந்தார். பிறகு ஏன் கொல்லப்பட்டார்?<BR/><BR/>//இந்த அடிப்படைப் புரிதல் இல்லாவிட்டால் போராடும் அமைப்புகள் எதனோடும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்றுகூறி கூடிப்பேச அழைத்து, அங்கே வந்தவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, முன் ஒருநாள் நீயும் போரில் என் நாட்டவரைக் கொன்றாயே என்று குற்றம் சுமத்துவது போலத்தான் இது உள்ளது. //<BR/><BR/>DittoAnonymousnoreply@blogger.com