tag:blogger.com,1999:blog-5012938.post3227447920785259650..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (1)Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5012938.post-44102475905120672932012-11-19T17:20:26.377+05:302012-11-19T17:20:26.377+05:30எல்லோருக்கும் வணக்கம் , ஐயா பல வருடங்களுக்கு முன...எல்லோருக்கும் வணக்கம் , ஐயா பல வருடங்களுக்கு முன்பு போபாலில் விஷ வாயு கசிந்ததே அதனுடைய இழப்பு என்ன ? நினைவில் கொள்ளுங்கள் எவ்வளவு உயிர்கள் ,எவ்வளவு பொருளாதாரம் ,இன்னும் வடியாமல் இருக்கும் சோகத்தின் அளவு எத்தனை என்று தெரியுமா ,இன்னும் எத்தனை தலைமுறைக்கு நம் சகோதரி முடமான குழந்தையை பெற்றுக்கொண்டு இருக்கப்போகிறாள் ,நேற்றைய ஒரு சாண்டி புயுலுககே ஆடிப்போன அமெரிக்கா,போபாலில் என்ன செய்து கிழித்தார்கள் இரவோடு ,இரவாக முக்காடு போட்டு க் கொண்டு ஓடிப் போனானே அந்த ஆண்டர்சன்,நம் சட்டம் அவனை என்ன செய்தது ,இதுதான் நாளையும் இங்கு நடக்கும் ,இல்லை இல்லை அது வேறு இது வேறு என்று சொல்கிறார்களா ,சரி முதலில் போபாலுக்கு செல்லுங்கள் அங்கு ஏற்ப்பட்ட அணைத்து நஷ்டங்களுக்கும் கணக்குப்போட்டு முதலில் ஈடு செய்யுங்கள் ,அந்த மனிதர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடுங்கள் ,அது திருப்தியாக இருந்தால் திரும்பவும் அப்படி ஒரு விபத்து நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உத்திரவாதம் கொடுத்தால் பிறகு அந்நிய முதலீடு பற்றி யோசிக்கலாம் . Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48101363479807417932012-11-19T16:31:16.146+05:302012-11-19T16:31:16.146+05:30mumuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50931093744962243412012-10-23T17:43:16.381+05:302012-10-23T17:43:16.381+05:30இதற்கு பதில் எழுதியதாக நினைத்திருந்தேன். ஆனால் என்...இதற்கு பதில் எழுதியதாக நினைத்திருந்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ பதில் வெளியாகவில்லை. ருச்சி ஊறுகாய் மட்டுமல்ல, ஹிந்துஸ்தான் லீவர் முதல் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் பல பொருள்களும் சிறு, குறு தொழிற்சாலைகளால் மட்டுமே உற்பத்தி செய்யக்கூடியவை. ஆனால் பெரு நிறுவனங்கள் அவற்றை மார்க்கெட்டிங் செய்யலாம். நான் சொன்னது தகவல் பிழையல்ல. நீங்கள்தான் புரிந்துகொள்ளவில்லை. ஊறுகாயை ருச்சி நிறுவனம் உற்பத்தி செய்யமுடியாது. சிறு/குறு தொழிற்சாலை வைத்திருப்போரிடம் செய்யச்சொல்லி தங்கள் பாட்டில்களில் அடைத்து விற்கமுடியும். சென்னை, மும்பை போன்ற நகரங்களில் பல தொழிற்சாலைகள் இவ்வாறு பெரும் நிறுவனங்களுக்காக இயங்கிவருகின்றன.<br /><br />அதேபோலத்தான் விவசாய விளைபொருள்கள் சட்டம் பற்றி நான் எழுதியதும். எல்லா விவசாயப் பொருள்களையும் எல்லா மாநில அரசுகளும் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால் அரசின் பட்டியலில் உள்ள பொருள்களை விவசாயிகள் யாருக்கும் விற்றுவிட முடியாது. தயவுசெய்து ஆ.பி.எம்.சி சட்டங்களின் வரைவை இணையத்தில் படியுங்கள்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-79320813936645083332012-10-23T12:28:26.752+05:302012-10-23T12:28:26.752+05:30badhri has this knack.....badhri has this knack.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23480783757669319652012-10-18T10:03:13.487+05:302012-10-18T10:03:13.487+05:30|| சில பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று அரசு...|| சில பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும்.<br /><br />சில மாதங்களுக்குமுன் பருத்தி ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவித்தது மத்திய அரசு. பின் இரண்டே வாரங்களில் தன் கருத்தை மாற்றிக்கொண்டது. பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் லாபம். செய்யாவிட்டால் உள்ளூர் துணி ஆலைகளுக்கு லாபம். அவர்கள் குறைந்த விலையில் விவசாயிகளை நசுக்கித் தங்களுக்கு வேண்டிய பருத்தி இழைகளை வாங்கிக்கொள்ளலாம்.||<br /><br />தயாநிதி மாறன் இருந்த போது செய்த லாபியின் காரணமாக பருத்தி ஏற்றுமதித் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது;பயனடைந்தவர்கள் பெரு ஏற்றுமதியாளர்கள் மட்டுமே. <br /><br />விவசாயிகளும், உள்ளூர் சிறு உற்பத்தியாளர்களும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.<br /><br />(ஜான்சன் நிறுவனம் தனது உள்ளாடைகளுக்கான விலையை நான்கு மாதங்களில் 12 தடவைகள் மாற்றியது.)<br /><br />வியாபாரிகளும் பொதுமக்களும் நொந்து போனார்கள்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40410442495304322242012-10-17T18:35:01.556+05:302012-10-17T18:35:01.556+05:30பத்ரி,
ஏகப்பட்ட தகவல் பிழைகளை இந்தப் பதிவில் பதிந்...பத்ரி,<br />ஏகப்பட்ட தகவல் பிழைகளை இந்தப் பதிவில் பதிந்திருக்கிறீர்கள்.<br /><br />|| உதாரணமாக சில: ஊறுகாய், கடலை எண்ணெய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கண்ணாடி வளையல், எவர்சில்வர் அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றை மேற்படி நிறுவனங்கள் மட்டும்தான் செய்யமுடியும். நீங்களும் நானும் ரூ. 100 கோடி முதலீட்டில் இவற்றை உற்பத்தி செய்ய முன்வந்தால் நமக்கு அனுமதி கிடையாது.||<br /><br />ருசி ஊறுகாய் தயாரிக்கும் கவின்கேரின் 2011 விற்றுமுதல் 11,000 மில்லியன் இந்திய ரூபாய்கள். அந்த அளவு முதல் போட்டுச் செய்யும் வியாபாரம் வேண்டிய அளவு லாபம் கிடைக்குமா என்று வேண்டுமானால் பெரு நிறுவனங்கள் பார்க்கலாம்..<br /><br />||ஒவ்வொரு மாநிலமும் Agricultural Produce Marketing Committee Act (விவசாய விளைபொருள் சட்டம்) என்ற ஒரு சட்டத்தைத் தன் கையில் வைத்துள்ளது. ||<br /><br />கிராமங்களில் விளைவிப்பவர்கள் தாங்கள் விரும்பும் தனியார்களிடம் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சட்டரீதியாக யாரும் அவர்களைத் தடை செய்வதாகத் தெரியவில்லை.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-4336167350371998902012-10-16T22:47:05.295+05:302012-10-16T22:47:05.295+05:30உள்ளே வருகின்றவர்களுக்கு ஒரே நோக்கம் லாபம். தொழில...உள்ளே வருகின்றவர்களுக்கு ஒரே நோக்கம் லாபம். தொழிலில் லாபத்தைத் தவிர வேறு எதுவும் நோக்கமும் தேவையில்லை என்பதும் உண்மை தான். ஆனால் நம்மவர்கள் தங்களுக்கு தேவைப்படும் ஆதாயத்திற்கு ஆசைப்பட்டு அத்தனை பேர்களையும் அடகு வைக்கும் இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் சமானியர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை நம்புகிறீர்களா? இதற்கு மேலும் உள்ளே வந்து கொண்டுருக்கும் நிறுவனங்களுக்கு உள் கட்டமைப்பு, மின்சாரம், சாலை வசதிகள் போன்றவற்றில் நாம் கொட்டிக் கொடுக்கப்போகும் பணம் என்பது அடிப்படை அடித்தட்டு மக்களிடம் இருந்து தானே பிடுங்கி கொடுக்கப்பட்டு கொண்டு வருகிறது.<br /><br />சட்டங்கள் சரியானதாக இருந்தது, அதை கையாளும் இடத்தில் இருப்பவர்கள் நம்பகத்தன்மையாக இருந்தால் எவர் வந்தாலும் போட்டி போடலாம். இங்கே பேஸ்மெண்ட் வீக். ஆனால் பன்னாட்டுநிறுவனங்கள் உள்ளே வந்து நம்முடைய பொருளாதார கட்டிடத்தை ஸ்ட்ராங்காக மாற்றி விடுவார்கள் என்று நாமும் நம்பிக்க் கொண்டுருக்கின்றோம்.<br /><br />மன்மோகன் இன்னும் சில வருடங்களில் "போய்" விடுவார். நீங்களும் நானும் நடக்கப் போகும் கூத்துக்களை பார்க்கத்தான் போகின்றோம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19260019765263560862012-10-16T22:41:52.366+05:302012-10-16T22:41:52.366+05:30ஒட்டுமொத்த வரி வசூல் என்பதை விட வராத வகையென்ற வரி ...ஒட்டுமொத்த வரி வசூல் என்பதை விட வராத வகையென்ற வரி விட்டுக்கொடுக்கும் தொகை என்பது 2008-09இல் அதிகமாகவே உள்ளது. மறைமுக வரி வசூல் என்பதில் 2009-10இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்பது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. சுங்கவரி மற்றும் ஆயத்தீர்வையில் சலுகையளித்துள்ளதே இதற்கு காரணம். எனவே வரி வசூலைப் பொறுத்தவரை இது எதிர்மறையிலான விளைவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.<br /><br />ஒரு ஆண்டு முன்னால் சென்று பார்ப்போம். 2009-10 பட்ஜெட்டில் இதே வார்த்தைகளுடன் சலுகை சொல்லப்பட்டிருந்தது. கடைசி சொற்றொடரில் மட்டும் மாற்றம் இருந்தது. ‘எனவே அதிக அளவில் வரி வசூலில் மிதப்புத் தன்மையிலிருந்து மீண்டு நிலைநிறுத்த இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்‘. ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்த வார்த்தைகள் இல்லை.<br /><br />அனைத்து மக்களுக்கான பொது விநியோகமுறைக்குப் பணம் எதுவும் இல்லை அல்லது அந்த முறை விரிவாக்கப்படாது என்கிறது இந்த அரசு. பசி மிகுதியாக உள்ள மக்கள் தொகையினருக்கு வழங்கப்படும் உணவு மானியங்களில் சிறுக சிறுக வெட்டப்படுகிறது. அதே சமயம் விலைவாசி உயர்வும், உணவுத் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கிறபோது 2005-09 ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மனிதருக்குமான தினசரி தேவைக்கான உணவு தானிய இருப்பைப் பார்த்தால் அரை நூற்றாண்டுக்கு முந்தைய 1955-59இல் இருந்ததை விடக் குறைவுதான்.<br /><br />The Hindu 7/3/2011ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81803342210578575142012-10-16T22:40:09.203+05:302012-10-16T22:40:09.203+05:30ஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பய...ஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர். ஆனால் தற்போது வரா இனம் என கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வருமான வரி, சுங்கவரி, ஆயத்தீர்வை ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் மொத்தமாக எவ்வளவு தொகை என்று பார்க்கலாம். தற்போது கைவசமிருக்கிற 2005-06 முதலான 6 ஆண்டு விவரங்களில் 2005-06ல் மட்டும் ரூ. 2,29,108 கோடி. நடப்பாண்டு பட்ஜெட்டில் இரட்டிப்பாகி அது ரூ. 4,60,972 கோடி. கடந்த 6 ஆண்டுகளின் இழந்த இத்தொகையைக் கூட்டினால் ரூ 21,25,023 கோடிகள் அல்லது அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அருகில் உள்ள தொகை. இது 2ஜி அலைக்கற்றை ஊழல் மதிப்பீட்டுத் தொகையைப்போல் 12 மடங்கு மட்டுமல்ல, உலக நிதி நாணய நிறுவனம் சமீபத்தில் கணக்கிட்டுள்ளபடி இந்த நாட்டைவிட்டு கள்ளத்தனமாக /சட்ட விரோதமாக 1948 லிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு முதலீடாகச் சென்றுள்ள ரூ 21 லட்சம் கோடி தொகைக்கு சமம் அல்லது கூடுதலாகும் (462 பில்லியன் டாலர்). இந்தக் கொள்ளை என்பது 2005-06 தொடங்கி 6 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் இந்த 3 தலைப்பிலான தொகை மட்டும் 2005-06 ஐ விட 101 சதவீதம் அதிகம் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52928601515471225882012-10-16T22:38:59.035+05:302012-10-16T22:38:59.035+05:30சாய்நாத் எழுதிய கட்டுரை இது.
இந்திய அரசின் பட்ஜெட...சாய்நாத் எழுதிய கட்டுரை இது.<br /><br />இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ 240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளி விபரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது.<br /><br />2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ 34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தேசம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ. 240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வாஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது.<br /><br />ரூ 88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என தள்ளுபடி செய்த வகை மட்டுமே. இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப் படவில்லை. இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28297218217372566852012-10-16T22:16:30.272+05:302012-10-16T22:16:30.272+05:30முரசொலி மாறன், இந்தியாவின் வணிக வரித் துறை அமைச்சர...முரசொலி மாறன், இந்தியாவின் வணிக வரித் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சுரண்டல் திட்டம் தான் சிறப்பு பொருளாதார மண்டலம். தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி இதற்கு தொழில் நுட்பப் பூங்கா என்ற பெயர் மாற்றினார். இந்த மண்டலத்தில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மாநில விற்பனை வரி - என்று எந்த வரியும் கிடையாது. 100 சதவீத வருமான வரி விலக்கு. தமிழ் நாட்டில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்நிய நிறுவனமான நோக்கியா செல் நிறுவனத்தைக் கொண்டு வந்தார்.<br /><br />இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதாக தமிழக அரசு உறுதி அளித்து செயல்படுகிறது. நோக்கியா நிறுவனம் மத்திய அரசுக்கு கட்டும் ‘வாட்’ வரியை தமிழக அரசே நோக்கியாவுக்கே திருப்பி செலுத்துகிறது. இவ்வாறு 2005 முதல் இதுவரை ரூ.650 கோடியை நோக்கியாவுக்கு தமிழக அரசு வழங்கியிருக்கிறது. மக்களுக்குத் தெரியாமல் இப்படி ஒரு கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88672809995266670932012-10-16T22:15:00.883+05:302012-10-16T22:15:00.883+05:301991 ஆம் ஆண்டு புதிய மின்சாரக் கொள்கை ஒன்று உருவாக...1991 ஆம் ஆண்டு புதிய மின்சாரக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கையை படிப்படியாகத் திணிக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக ஒரிசா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மின்சாரத் துறை அரசிடமிருந்து தனியாருக்கு விற்கப்பட்டன. என்ரான் என்ற அமெரிக்க மின் நிறுவனம், முதன்முதலாக மராட்டியத்தில் கால் பதித்தது. இதற்கான அனுமதியை வழங்கியது, 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்து, பிறகு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் பதவி விலகிய வாஜ்பாய் ஆட்சி. அந்த 13 நாட்கள் அதிகார காலத்தில் என்ரான் நிறுவனத்தை அழைத்து வந்தார். இதற்கு என்ரான் போட்ட முதலீடு 9000 கோடி. இதில் 40 சதவீத முதலீட்டை இந்திய வங்கிகளின் அதிகார வர்க்கமே கடனாகத் தர முன் வந்தன.<br /><br /> என்ரான் மின்சாரத்துக்கு மராட்டிய மாநில அரசு கொடுத்த விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.7. இழப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகையையும் தருவதாக வாஜ்பாய் ஆட்சி உறுதி கூறியது. பெரும் சுருட்டலோடு அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தைத் தராமலே - என்ரான், அமெரிக்காவுக்கு ஓடி விட்டது. இதே என்ரான் நிறுவனம், அமெரிக்காவில் மோசடி செய்து திவால் ஆன போது, என்ரான் தலைமை நிர்வாகி, அங்கே கைது செய்யப்பட்டார். இங்கே என்ரானின் சட்ட ஆலோசகராக இருந்தவர் ப. சிதம்பரம். அவர் பின்னர் நிதியமைச்சரானபோது மராட்டியத்தில் திவாலாகிப் போன என்ரான் நிறுவனத்துக்கு ரூ.9000 கோடி மக்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து அரசுக்காக வாங்கிக் கொண்டார்.<br /><br /> ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-58375371864510671122012-10-16T22:13:20.829+05:302012-10-16T22:13:20.829+05:30தமிழ்நாட்டில் உள்ள நோக்கியா அலைபேசி நிறுவனம் 2005 ...தமிழ்நாட்டில் உள்ள நோக்கியா அலைபேசி நிறுவனம் 2005 ஆம் ஆண்டு 625 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் பத்தாண்டுகளுக்கு மதிப்புக்கூட்டும் வரியை திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.அதன்படி நோக்கியா நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தியாவின் இதர மாநிலங்களில் அந்த நிறுவனம் செலுத்தும் மதிப்புக்கூட்டு வரியையும் தமிழ்நாடு அரசு திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, இந்தியாவின் இதர மாநிலங்களில் நோக்கியா அலைபேசி கருவிகள் விற்கப்படும் போது, அந்த மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியை தமிழ்நாடு அரசு ஈடுசெய்கிறது!<br /><br />இதன்படி 2008 ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் 107 கோடி ரூபாய் நோக்கியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அதாவது, நோக்கியா நிறுவனம் எவ்வளவு தொகையை முதலீடு செய்ததோ, அதைவிட அதிக பணத்தை பத்தாண்டுகளில் தமிழ்நாடு அரசு திருப்பியளிக்கப்போகிறது, கூடவே தமிழ்நாட்டில் வரிவிலக்கும் உண்டு. நிலம், மின்சாரம், கட்டமைப்பு, தண்ணீர் வசதி போன்ற இன்னபிர இலவச இணைப்புகளும் உண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47494285232553863562012-10-16T22:12:38.354+05:302012-10-16T22:12:38.354+05:30மேலும் இந்தக் கேள்விக்கான பதில் எந்தவகையில் அந்நிய...மேலும் இந்தக் கேள்விக்கான பதில் எந்தவகையில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவானது/எதிரானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?<br /><br />மின் அஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்தாமல் சென்று விட்டேன். இப்போது தான் பார்த்தேன். <br /><br />நிறைய விசயங்கள் எழுத வேண்டும் போல் உள்ளது. உங்கள் பார்வையைப் போல எனக்கும் ஆசை தான். போட்டி உருவாகும். தரமானது பெற முடியும். ஆனால் நம் நாட்டில் எதார்த்தம் வேறு விதமானது.<br /><br />குருமூர்த்தி எழுதிய கட்டுரைகளை நீங்களும் படித்து இருக்கக்கூடும். அமெரிக்காவில் அந்தந்த மாநிலங்களே வால் மார்ட் உள்ளே வரக்கூடாது என்று விரட்டுகிறார்கள். காரணம் என்ன?<br /><br />பன்னாட்டு நிறுவனங்கள் பெறும் ஆதாயங்கள், இவர்கள் மூலம் அரசியல்வாதிகள் பெறும் ஆதாயங்கள் போன்றவற்றை சில தகவல்களை மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். உண்மையிலே இந்த நிறுவனங்களால் நமக்கு என்ன லாபம்? நாட்டிற்கு என்ன லாபம்? என்பதை மற்றவர்கள் படித்து தெரிந்து கொள்ளட்டும். இது அரசாங்கத்தின் கொள்கை என்பது போன்ற வார்த்தைகள் இருந்தாலும் இதுவும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தானே?<br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-9425951585428636602012-10-16T14:30:16.963+05:302012-10-16T14:30:16.963+05:30//Bovonto/Kaalimark இதுக்கெல்லாம் ஆன கதி என்னன்னு ...//Bovonto/Kaalimark இதுக்கெல்லாம் ஆன கதி என்னன்னு எல்லோருக்கும் தெரியும்,//<br /><br />பத்திருபது வருடங்களுக்கு முன்னால் அவையெல்லாம் இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனின்னு கொடி கட்டிப் பறக்கவில்லையே? அவைகளுக்கு அன்றிருந்த உள்ளூர் மோனொப்பொலியை சாதகமாக்கி வளர்ந்தார்கள் அல்லவா?<br /><br />கோக்கோ கோலா எவ்வளவு முயன்றும் தம்ஸ்அப் <b>ப்ராண்டை</b> உடைக்க முடியவில்லையே.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49372573412175024932012-10-16T14:26:10.530+05:302012-10-16T14:26:10.530+05:30From wiki:
In 1870, 70-80 percent of the US popula...From wiki:<br />In 1870, 70-80 percent of the US population was employed in agriculture.As of 2008, approximately 2-3 percent of the population is directly employed in agriculture<br />*****<br /><br />Something similar will happen in India. With more options available, the younger generation is not willing to do the manual work in the fields. <br /><br />We are witnessing a society, in which a majority of population is moving into manufacturing and services.<br /><br />I see these things happening in the next 15 years:<br />1) Corporate farming <br />2) Land ceiling act will be modified to allow bigger landholdings<br />3) Organic farming in a big way<br />4) Food processing becoming a major industry<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8800273681849850102012-10-16T11:58:46.408+05:302012-10-16T11:58:46.408+05:30Bovonto/Kaalimark இதுக்கெல்லாம் ஆன கதி என்னன்னு எல...Bovonto/Kaalimark இதுக்கெல்லாம் ஆன கதி என்னன்னு எல்லோருக்கும் தெரியும், இப்போ வால்மார்ட் வந்தா இதே கதி அரிசிக்கும், காய்கறிகளுக்கும், தானியங்களுக்கும் ஏற்படுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37519342749278138532012-10-15T23:00:39.181+05:302012-10-15T23:00:39.181+05:30வால்மார்ட் வந்துடும் என்று பயமுறுத்துபவர்கள் விவசா...வால்மார்ட் வந்துடும் என்று பயமுறுத்துபவர்கள் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் வியாபாரிகளே...கடந்த ப்த்து வருசங்களாக விவசாயிகள் தற்கொலை செய்கிறதுக்கு காரணம் கார்ப்பரேட்களா...இல்லவே இல்லை.வியாபாரிகள்தான்.<br /><br />கடந்த பத்து வருடமாக வியாபாரிகளுக்கு போட்டியே இல்லை.விவசாயிக்கு ஆப்சனே இல்லை. ஏற்கனவே நிறையபேர் விவசாயத்தை விட்டு போய்விட்டார்கள்.மீதி இருப்பவருக்குத்தான் இது உதவும்.அதேசமயம் வெளிநாட்டு சில்லறை நிறுவனம் ஆதிக்கம் செலுத்தாமலிருக்கு என்ன செய்ய என்றும் கேள்வி இருக்கத்தான் செய்கிறது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-26594673830919512132012-10-15T22:39:40.177+05:302012-10-15T22:39:40.177+05:30@ஜோதிஜி திருப்பூர்
Do you mean small companies pa...@ஜோதிஜி திருப்பூர்<br /><br />Do you mean small companies pay their taxes and only the MNCs evada ?? !!!!!<br /><br />If yes, what makes it possible for the MNC to evade taxes to localbodies ??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-65953099129086606372012-10-15T21:17:31.511+05:302012-10-15T21:17:31.511+05:30/// ரிலையன்ஸ் ஃப்ரெஷ், மோர் போன்ற நிறுவனங்கள் ///.../// ரிலையன்ஸ் ஃப்ரெஷ், மோர் போன்ற நிறுவனங்கள் ///<br /><br />நிறுவனத்தின் பெயர் 'ரிலையன்ஸ் ரீடெய்ல்' என்று நினைக்கின்றேன். அவர்கள் 3 வித ஃபார்மாட்டில் கடைகளை வைத்திருக்கிறார்கள் - 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்', 'ரிலையன்ஸ் சூப்பர்' மற்றும் 'ரிலையன்ஸ் மார்ட்'. பலரும் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் என்றே எழுதுகிறார்கள். அது மூன்றில் ஒரு ஃபார்மாட் மட்டுமே.<br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-26854237891065829602012-10-15T18:58:56.224+05:302012-10-15T18:58:56.224+05:30பத்ரி,
சில்லரை வர்த்தகத்தில் நேரடி முதலீடு போல எத...பத்ரி,<br /><br />சில்லரை வர்த்தகத்தில் நேரடி முதலீடு போல எதிர்காலத்தில் விவசாயத்தில் நேரடி முதலீடு / கார்பரேட் முதலீடு சத்தியமா?<br /><br />அதாவது மக்களின் மனநிலைப்படி இன்னும் 10/15 வருடத்தில் விவசாயம் செய்ய யாரும் இருக்க போவதில்லை; <br /><br />அத்தகைய சூழலில் மேட்டூர் அணையை - ரிலையன்ஸூம், மைசூர் அணையை - வால்மார்ட்டும், முல்லைப் பெரியாறு அணையை - பிர்லா குரூப்பும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வது சாத்தியமா???<br /><br />இதுபோல் பெருவிவசாயத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் ஏதேனும் உண்டா??? <br /><br />உற்பத்தியாளர்களும் அவர்களே, விற்பனையாளர்களும் அவர்களே, என்னும் சூழலில் விலை விண்ணைத்தொடுமே....<br /><br />அரசு எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் என்று நாம் நினைக்கலாம், பேசலாம், எழுதலாம். அவை நேர்மையான அரசாக இருந்தால்; <br /><br />அந்த நேர்மை நம் மக்களிடமும் இல்லை அரசுகளிடமும் இல்லை.<br /><br />:) :)காத்தவராயன்https://www.blogger.com/profile/07370865401816194845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76363800861912618202012-10-15T16:12:48.834+05:302012-10-15T16:12:48.834+05:30இதற்கு நான் எப்படி பதில் சொல்லமுடியும்? சம்பந்தப்ப...இதற்கு நான் எப்படி பதில் சொல்லமுடியும்? சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாநில, மத்திய அரசுகள்தான் பதில் சொல்லவேண்டும்.<br /><br />வரி கட்டாமல் இருப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை அரசிடம் உண்டு.<br /><br />மேலும் இந்தக் கேள்விக்கான பதில் எந்தவகையில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவானது/எதிரானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68473820100893158832012-10-15T15:41:18.296+05:302012-10-15T15:41:18.296+05:30ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. இந்தி...ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டுருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ள இடங்களில் அந்தந்த ஊராட்சி பேரூராட்சி நகராட்சி நிர்வாகத்திற்கு முறைப்படி நிலுவையில்லாமல் வரியை செலுத்திக் கொண்டுருக்கிறார்களா? ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com