தமிழகத்தில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா அரசு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ESMA சட்டத்தில் சிறையில் போட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. Industrial action என்று சொல்லப்படும் வேலை நிறுத்தத்திற்கான உரிமை எல்லா ஜனநாயக நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் தீயணைப்புத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தனர். அவர்களை யாரும் சிறையில் போடவில்லை. போன மாதம் ஃபிரான்ஸில் தொழிலாளர்கள் பென்ஷன் சீர்திருத்தத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர். அவர்களையும் யாரும் சிறையில் போடவில்லை.
ESMA போன்ற சட்டங்களை (POTAவையும்தான்) ஒட்டுமொத்தமாக தூர எறிய வேண்டும். அதைப் பயன்படுத்தும் அரசினையும் அரசியல்வாதிகளையும் தூர எறிய வேண்டும்.
தகழி
11 hours ago
No comments:
Post a Comment