சென்னையில் தாயும், மகளுமாக இருவர் இறந்துள்ளனர். பதினைந்து குடிசை வீடுகள் தீ பற்றி எறிந்துள்ளன.
ஸ்ரீரங்கத்தில் என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள சில குடிசை வீடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிக பட்சமாக வெடிகள், ராக்கெட்டுகள் போன்றவற்றை வெடிக்கின்றனர். அதனால் ஏதேனும் சேதம் ஏற்படுவது இவர்களுக்குத்தான் அதிகம் என்று ஏன் புரியவில்லை?
இரவு முழுவதும் இங்கு வெடித்தனர். உச்ச நீதிமன்றத்தின் 'இரவு பத்து மணிக்கு மேல் வெடிக்கத் தடை' பற்றி யாருக்கும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
எப்பொழுது தீபாவளி வெடிகளை விட்டொழிக்குமோ? எப்பொழுது குறைந்த வாழ்க்கை வசதிகள் உள்ளவர்கள் இந்தப் 'பண்டிகை'க்காக பணத்தை வீண்செலவு செய்வதை நிறுத்துவார்களோ?
நன்றி
3 days ago
No comments:
Post a Comment