நேற்று பிறந்த நாள் ராதாகிருஷ்ணனுடையது மட்டும் அல்ல; கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையுடையதும். சுதந்திரமடையா இந்தியாவில் கம்பெனி முறையில் பங்கு விற்று கப்பல் தொழில் நடத்தி சுதேசி வியாபாரத்தைப் பெருக்கி ஆங்கிலத் தொழில் ஆதிக்கத்தை அடக்க நினைத்த நல்லதொரு தொழில் முனைவர். ஆங்கிலேய அடக்குமுறையால் சொத்திழந்து, ஜெயிலில் செக்கிழுத்துப் பின்னர் நோயால் உயிர் விட்டவர்.
இன்று சென்னை வானில் இந்திய விமானப் படையின் விமானங்கள் தன் தீர வீரச் செயல்களைக் காண்பிக்கும். இதை சென்னை தூரதர்ஷனும் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கிறார்கள். அதே நேரத்தில் பால்கிவாலா ஃபவுண்டேஷன் சார்பாகப் புகழ் பெற்ற வழக்கறிஞர், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜேத்மலானி "Judicial system - need for urgent reforms" என்னும் தலைப்பில் பேசுகிறார். விமான வான் காட்சி இருக்கவே இருக்கிறது. பின்னர் பார்த்துக் கொள்ளலாம். சென்றமுறை பால்கிவாலாப் பேச்சில் என்.விட்டல் பேசியிருந்தார். அவரது பேச்சின் அச்சிட்ட தாள் என்னிடம் உள்ளது. தமிழ்ப்படுத்தி அதனையும், இன்றைய ராம் ஜேத்மலானியின் பேச்சையும் இங்கு போடுகின்றேன்.
அகம்,நிலம், ரகசியப் பயணம்
1 hour ago
No comments:
Post a Comment