கே.எம்.விஜயன் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர். மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் தேவைப்படும்போது உயர், உச்ச நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகளைக் கொண்டுவருவார். தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் போது, டெஸ்மா சட்டம் கொண்டு அரசு லட்சக்கணக்கானவர்களை வேலையை விட்டு நீக்கம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது தொடர்பான வழக்கு "டெஸ்மா சட்டம் நியாயமானதா? அதை ரத்து செய்ய வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்பொழுது நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லாமல் தமிழக அரசிடம் அனைத்து ஊழியர்களையும் வேலைக்குத் திரும்ப எடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, அரசு ஊழியர்கள் எந்தக் காலத்திலும் வேலை நிறுத்தம் செய்ய உரிமையே கிடையாது என்று தனது சொந்தக் கருத்தையும் சேர்த்து விட்டது. இதுபற்றிய தனது கருத்தை விஜயன் இந்த மாதத் திசைகள் இதழில் எழுதியுள்ளார். அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.
துபாய் பரணி இலக்கிய விழாவில்.
5 hours ago
No comments:
Post a Comment