சுப்ரமணிய பாரதி இறந்த நாள். சிஃபி.காம் தமிழில் சிறப்புப் பகுதி இங்கே. Internet Explorer இல்தான் தெரியும் [இயங்கு வார்ப்புகள் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால்]. நேற்று தவறாக வேறு ஒரு சுட்டியை இங்கு கொடுத்து விட்டேன், அதற்கு மன்னிக்கவும்.
பாரதி நினைவு நாளன்று அவன் வாழ்ந்த திருவல்லிக்கேணியில், "வெளிநாட்டவர்" [வெள்ளைக்கார வெளிநாட்டவர்?] மட்டும் வந்து தங்கக்கூடிய ஒரு விடுதி இந்த நாளிலும் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்? அது பற்றிய தி ஹிந்து நாளேட்டின் கட்டுரை இதோ. தங்கும் விடுதிக்கு ஒரு நாள் கட்டணம் வெறும் ரூ. 200 தானாம். உள்ளூர்க்காரனை உள்ளே விட்டால் குடித்து ரகளை செய்வானாம். வெள்ளைக்காரன்தான் ஒழுங்காய் இருப்பானாம். ஆக ஜியார்ஜ் புஷ், டோனி பிளேர் வந்தால் பரவாயில்லை. ஜெயலலிதாவைத் தங்க விட மாட்டார்கள். சோனியா காந்தி பரவாயில்லை?
பெண் சிந்தனையாளர்கள், அறம் சார்ந்த தத்துவம்- சைதன்யா
11 hours ago
No comments:
Post a Comment