அத்வானி 'பாரத் உதய் யாத்ரா' என்று கன்யாகுமரியிலிருந்து ஆரம்பித்து நாடெங்கிலும் சுற்றப் போகிறாராம். ஆக 'பாரத் உதய்' (India shining, இந்தியா ஒளிர்கிறது) மத்திய அரசின் சாதனையாக ஆரம்பித்து, தே.ஜ.கூ கூட்டணியின் சாதனையாகி, பா.ஜ.க சாதனையாகி, இப்பொழுது அத்வானியின் சாதனையாகியுள்ளது.
வீடியோ முன் கையும், களவுமாகப் பிடிபட்ட திலீப் சிங் 'மீசைக்கார' ஜுதேவின் ஸ்வராஜ் மாஸ்தா பஸ் இது.
அரசியலை விடுவோம். இந்த வண்டியில் உள்ள சவுகரியங்கள் இதோ:
* முற்றும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்டது
* நான்கு ஓட்டுநர்கள், 12 பேர் அமரும் வசதி
* இரண்டு சோஃபாக்கள்
* இணைய இணைப்புள்ள மடிக்கணினி
* பேக்ஸ் கருவி
* தொலைக்காட்சிப் பெட்டி, CD/VCD/DVD பார்க்கும் வசதி
* ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் மேல் பக்கம் திறந்து அதன்வழியே அத்வானி மேலேற்றப்பட்டு மக்களை நோக்கிப் பேசக் கூடிய வசதி
கேள்விகள்:
1. இணைய இணைப்பு எப்படிக் கிடைக்கிறது? VSAT வழியாகவா? இல்லாவிட்டால் எல்லோருக்கும் கிடைக்கும் ரிலையன்ஸ் CDMA வழியாகவா? அத்வானி புண்ணியத்திலாவது இவர் போகும் வழியெல்லாம் அரசு செலவில் இலவச wi-fi hotspots போட்டுக்கொண்டே போகலாமே?
2. "எனக்கும் வேணும்" என்று ஜெயலலிதா எப்பொழுது அடம் பிடிக்கப் போகிறார்?
3. கருணாநிதி என்ன ஜோக் அடிக்கப்போகிறார்?
மேலைத்தத்துவம் எதற்காக?
6 hours ago
No comments:
Post a Comment