கடந்த இரண்டு வாரங்களில் பல விஷயங்களை சரியாகக் கவனிக்க முடியவில்லை. முக்கியமாக AICTE, சென்னை உயர்நீதிமன்ற விவகாரம். ஆனால் camelpost என்பவர் என் பல பதிவுகளிலும் அவ்வப்போது ஒரே விஷயத்தையே ஏழெட்டுமுறை பின்னூட்டம் அளித்துவிடுகிறார். அதில் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை reject செய்கிறேன்.
நர்மதா அணை விஷயத்தில் நான் அதிகமாக எழுதவில்லை. தி ஹிந்துவில் ஏற்கெனவே ராமஸ்வாமி ஐயர் எழுதி வெளியான இரண்டு கட்டுரைகளைச் சுட்டியிருந்தேன். இன்று மற்றொரு கட்டுரை அவரிடமிருந்து. அவசியம் படிக்கவேண்டியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment