மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவரான சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் நேற்று தன் 96வது வயதில் காலமானார்.
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுத்துப் புலமை வாய்ந்த சிட்டி தி.ஜானகிராமனுடன் சேர்ந்து 'நடந்தாய் வாழி காவேரி' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். காவிரி ஆற்றை அதன் ஊற்றிலிருந்து பின்பற்றி கடலில் கலக்கும்வரை தொடர்வார்கள் இருவரும்.
சிட்டியின் வாழ்க்கை வரலாற்றை நா.கண்ணனின் தூண்டுதலில்பேரில் 'கடலோடி' நரசய்யா தொடராக வலைப்பதிவில் எழுதத் தொடங்கினார். ஆனால் 27 April 2004 அன்றோடு அது நின்றுவிட்டது.
மூத்த தமிழ் எழுத்தாளருக்கு நம் அஞ்சலிகள்.
தி ஹிந்து செய்தி
[மேற்கண்ட படம் சிட்டியின் 94வது வயதில் நான் எடுத்தது.]
Subscribe to:
Post Comments (Atom)
அஞ்சலிகள்!
ReplyDelete