தி.க.சி (திறனாய்வாளர்) அவர்களை ப.தி.அரசு கவுரவிக்க, மே.து.ராசுகுமார் வாழ்த்திப் பேசுகிறார். மார்க்சிய அழகியல் என்கிற கருத்தாக்கத்தை தமது நிர்தாட்சண்யமான இலக்கிய விமரிசனங்களில் திறமையாகக் கையாண்டவர் தி.க.சி. தாமரை என்கிற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தபோது பல நல்ல எழுத்தாளர்களையும் விமரிசகர்களையும் உருவாக்கியவர். இன்றுவரை இளம் படைப்பாளிகள் சிறந்த எழுத்தை தரும்போதெல்லாம் யார் எவர் என்று பாராமல் திறந்த மனத்துடன் உடனே கடிதம் எழுதி பாராட்டுபவர் தி.க.சி. நெல்லையில் வசிக்கும் தி.க.சியின் மகனும் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் - பெயர் வண்ணதாசன்.
2026 – கோவை புத்தகத் திருவிழாவில்
1 day ago
No comments:
Post a Comment