இன்று தி ஹிந்துவில் கண்ணுக்குப் பட்ட செய்தி:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்கி மூன்று நாள் கருத்தரங்கு ஒன்று நடக்கவிருக்கிறது. அங்கு மொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தமிழை வளர்ப்பது எப்படி, மொழியியல் அடிப்படையில் தமிழ் மென்பொருள்கள் தயாரிப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் பேசப்போவதாக மேற்கண்ட செய்தி சொல்கிறது.
சனி, ஞாயிறு இரண்டு நாள்களும் சிங்கப்பூரில் தமிழ் இணையம் 2004 மாநாடு நடக்க உள்ளது என்பதையும் அனைவரும் அறிவீர்கள்.
சனி அன்றே சென்னையில் செம்மொழி தமிழ் மீது ஒருநாள் கூட்டமும் நடைபெறுகிறது.
சிங்கப்பூர் நடப்புகளை எனது வலைப்பதிவில் பார்க்கலாம். மற்றவற்றில் பங்கேற்பவர்கள் யாராவது வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment