Monday, December 01, 2014

சாரு நிவேதிதாவின் ‘புதிய எக்ஸைல்’ முன்பதிவு

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் நாவல் ‘புதிய எக்ஸைல்’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக, ஜனவரி 2015 சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வெளியாகிறது. வெளியீட்டு விழா ஜனவரி 5-ல் நடக்கிறது. இதுகுறித்த தகவல்கள் பின்னர் வெளியாகும்.

இந்த நாவல் கிட்டத்தட்ட 1,000 பக்கங்களில், கெட்டி அட்டையில் அட்டகாசமாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. விலை ரூ. 1,000/-

ஆனால் சாரு கேட்டுக்கொண்டதற்கிணங்க, மிகக் குறைவான காலத்துக்கு - இன்று டிசம்பர் 1 தொடங்கி டிசம்பர் 7 வரை மட்டும் - பாதி விலையில், அதாவது ரூ. 500/-க்கு புத்தகத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்ய விரைந்து இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள்.

ஒரு சிலர் இந்த முன்பதிவுத் திட்ட விலையை எடுத்துக்கொண்டு கேலி செய்கிறார்கள். வேண்டுமென்றே விலையை உயர்த்தி, பிறகு குறைப்பதுபோல் குறைத்து விற்பதாக எழுதுகிறார்கள். பொதுவாக நான் இதற்கு பதில் சொல்லமாட்டேன். ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் விளக்க முற்படுகிறேன்.

இன்று கெட்டி அட்டை தயாரிப்பில் நல்ல தாளில் அச்சாக்கப்படும் புத்தகத்துக்கு வைக்கப்படும் விலை என்ன என்று நீங்களே பாருங்கள். எங்கள் பதிப்பகத்தில் கிட்டத்தட்ட பக்கத்துக்கு ஒரு ரூபாய் என்ற நிலையில்தான் விலை வைக்கிறோம். சில நேரங்களில் யாரும் வாங்க மாட்டார்களோ என்ற பயத்தில் விலையைக் குறைக்கிறோம். சாருவின் புத்தகம் என்பதால் அந்த பயம் இல்லை. விற்றுவிடும். (ஜீரோ டிகிரி இப்போதும் சக்கைப்போடு போடுகிறது.)

எங்கள் புத்தகங்களை நாங்கள் மும்பையில் உள்ள ரெப்ரோ நிறுவனம் அல்லது மங்களூரின் மணிபால் நிறுவனம் ஆகியவற்றில்தான் அச்சிடுகிறோம். அச்சின் தரத்தையும் பைண்டிங்கின் தரத்தையும் பாருங்கள். ஹார்ட்பவுண்ட் புத்தகங்களை மங்களூர் மணிபாலில்தான் அச்சிடப்போகிறோம். (பரத்வாஜ் ரங்கன் எழுதிய மணிரத்னம் புத்தகம் இங்குதான் அச்சிடப்பட்டது.)

பாதி விலைக்குத் தருவது என்பது கிட்டத்தட்ட லாபமின்றித் தருவதுதான். இது கட்டுப்படியாகும் என்றால் அனைத்துப் புத்தகங்களையும் இப்படியே தர மாட்டோமா? சாருவின் ரசிகர்களுக்காக மட்டும், மிகக் குறுகிய காலத்துக்கு மட்டும்தான் இந்தச் சலுகை. புத்தக வெளியீட்டு அரங்கிலோ அல்லது புத்தகக் கண்காட்சியிலோ நிச்சயம் இந்தச் சலுகை இருக்காது. எனவே உடனடியாக முன்பதிவு செய்துவிடுங்கள்.