தமிழில், 2006-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது, கவிஞர் மு.மேத்தாவுக்குக் கிடைத்துள்ளது.
(இது பின்னர் எழுதிச் சேர்க்கப்பட்டு, இந்தத் தேதியில் வருமாறு செய்யப்பட்டுள்ளது. எனது பதிவின் வசதிக்காக)
Tuesday, December 26, 2006
Tuesday, December 19, 2006
நியூ ஹொரைசன் மீடியா ஆங்கிலப் பதிப்பு
தமிழை அடுத்து ஆங்கிலத்தில் புத்தகங்கள் வெளியிடும் வேலையில் இறங்கியிருக்கிறோம். இதற்கென இரண்டு ஆங்கிலப் பதிப்புகள் (imprints) வரவுள்ளன.
ஓர் ஆங்கில இம்பிரிண்ட் முழுக்க முழுக்கப் புனைகதைகளுக்காக. இந்திய மொழிகளில் வெளியாகும் நாவல்கள், சிறுகதைகள், (ஓரளவுக்கு இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், சித்திரங்கள்) ஆகியவற்றை ஆங்கிலத்தில் கொண்டுவந்து இந்தியாவிலும் ஆங்கிலம் படிக்கும் பிற நாடுகளிலும் கிடைக்கச் செய்வது இந்தப் பதிப்பின் நோக்கம்.
முதலில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு. முதலாவதாக எடுத்துக்கொண்டிருப்பது அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ஆதவன் ஆகியோரது நாவல்கள் ஒன்றொன்று. இவை ஜனவரி மாதக் கடைசியில் வெளியாகும்.
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குக் கொண்டுவரவேண்டிய நாவல்கள், சிறுகதைகள் என்று அவசியமாக நீங்கள் கருதும் புத்தகங்களைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் எனக்கு எழுதவும்.
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றும்போது பல பிரச்னைகள் தெரியவந்தன. தமிழ் -> ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர்களும் நிறைய தேவைப்பட்டனர். இதைக் கருத்தில் கொண்டு ஒரு சிறு கருத்தரங்கை சென்ற வாரம் (13 டிசம்பர் 2006) ஏற்பாடு செய்திருந்தோம். இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் இருவரும் கலந்துகொண்டனர். சில மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும் கலந்துகொண்டனர்.
ஜெயகாந்தனும் இந்திரா பார்த்தசாரதியும்
மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.
கூட்டம்
மற்றொரு ஆங்கிலப் பதிப்பு கிழக்கு பதிப்பகம் போன்று ஆங்கிலத்தில் எளிமையான non-fiction புத்தகங்களை வெளியிடுவதற்காக. இவையும் கூடிய விரைவில் வெளியாகும்.
ஓர் ஆங்கில இம்பிரிண்ட் முழுக்க முழுக்கப் புனைகதைகளுக்காக. இந்திய மொழிகளில் வெளியாகும் நாவல்கள், சிறுகதைகள், (ஓரளவுக்கு இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், சித்திரங்கள்) ஆகியவற்றை ஆங்கிலத்தில் கொண்டுவந்து இந்தியாவிலும் ஆங்கிலம் படிக்கும் பிற நாடுகளிலும் கிடைக்கச் செய்வது இந்தப் பதிப்பின் நோக்கம்.
முதலில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு. முதலாவதாக எடுத்துக்கொண்டிருப்பது அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ஆதவன் ஆகியோரது நாவல்கள் ஒன்றொன்று. இவை ஜனவரி மாதக் கடைசியில் வெளியாகும்.
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குக் கொண்டுவரவேண்டிய நாவல்கள், சிறுகதைகள் என்று அவசியமாக நீங்கள் கருதும் புத்தகங்களைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் எனக்கு எழுதவும்.
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றும்போது பல பிரச்னைகள் தெரியவந்தன. தமிழ் -> ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர்களும் நிறைய தேவைப்பட்டனர். இதைக் கருத்தில் கொண்டு ஒரு சிறு கருத்தரங்கை சென்ற வாரம் (13 டிசம்பர் 2006) ஏற்பாடு செய்திருந்தோம். இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் இருவரும் கலந்துகொண்டனர். சில மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும் கலந்துகொண்டனர்.
மற்றொரு ஆங்கிலப் பதிப்பு கிழக்கு பதிப்பகம் போன்று ஆங்கிலத்தில் எளிமையான non-fiction புத்தகங்களை வெளியிடுவதற்காக. இவையும் கூடிய விரைவில் வெளியாகும்.
Saturday, December 16, 2006
ஒரிஸ்ஸா கோயிலில் தலித்கள்
எவ்வளவோ வருடங்கள் முன்னதாகவே தலித்கள் கோயிலுக்குள் நுழைய போராட்டங்கள் நடந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்டத்தில் வகை செய்யப்பட்ட பின்னரும்கூட இப்பொழுது ஒரிஸ்ஸா மாநிலத்தில் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் - அதுவும் வெறும் 1,400 குடும்பங்கள் மட்டுமே உள்ள ஒரு கிராமத்தில் - பெரும் பிரச்னை எழுந்துள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள ஜகன்னாதர் கோயிலைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களிலும் தலித்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. நிச்சயம் பல கிராமங்களில் சட்டத்துக்குப் புறம்பான இதுபோன்ற செயல்பாடுகள் நடைமுறையில் இருக்கலாம். ஆனால் இப்பொழுது தலித்கள் வலுவான குழுவாகத் தங்களைக் கூட்டி, போராடத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் கோயிலில் சில தலித் பெண்களை நுழைய அனுமதிக்கவில்லை. இதையடுத்து தலித்கள் ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்தில் போராடி கோயிலுக்குள் நுழைய அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் இது நீதிமன்றம் அளவுக்கே போயிருக்கக் கூடாது. தலித்கள் காவல்துறையில் புகார் செய்த உடனே காவல்துறையும் மாவட்ட நிர்வாகமுமே தலித்கள் கோயிலுக்குள் நுழைய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்க வேண்டும்.
இப்பொழுது உயர் நீதிமன்ற ஆணைக்குப் பிறகு கோயிலுக்குள் தலித்கள் நுழைந்ததால் கோயில் தீட்டாகிவிட்டது என்றும் பரிகாரம் செய்யவேண்டும் என்றும் உயர்சாதிக்காரர்கள் அடம் பிடிக்கிறார்கள்.
அப்படி ஏதாவது நடந்தாலும் நடக்காவிட்டாலும் தலித்கள் தினம் தினம் கோயிலுக்கு - பக்திக்காக இல்லாவிட்டாலும்கூட - போகவேண்டும். விருப்பமிருந்தால் பிறர் கோயிலுக்கு வரட்டும், இல்லாவிட்டால் ஒழியட்டும்.
தலித்கள் உள்ளே நுழைந்ததற்காக பரிகாரம் செய்ய கோயில் பூசாரிகள் முற்பட்டால் தலித்கள் வன்கொடுமைச் சட்டத்தின்படி (SC/ST (Prevention of Atrocities) Act, 1989) பூசாரிகளையும் கோயில் நிர்வாகத்தினரையும் தண்டிக்க முகாந்திரம் உண்டு.
இந்தச் சட்டத்தின் இரண்டு ஷரத்துகள் கவனிக்கப்படவேண்டியவை. யார் இந்த சட்டப்படி குற்றம் செய்கிறார் என்று சட்டம் இவ்வாறு சொல்கிறது:
3.1 (xiv) denies a member of a Scheduled Caste or a Scheduled Tribe any customary right of passage to a place of public resort or obstructs such member so as to prevent him from using or having access to a place of public resort to which other members of public or any section thereof have a right to use or access to
3.1 (x) intentionally insults or intimidates with intent to humiliate a member of a Scheduled Caste or a Scheduled Tribe in any place within public view
கோயிலுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது முதல் ஷரத்தின்படி குற்றம். உயர் நீதிமன்ற ஆணைக்குப்பின் அனுமதிக்கப்பட்டாலும் மேற்கொண்டு பரிகாரம் அது, இது என்று செய்தால் அது தலித்களை அவமதிப்பது என்ற வகையில் மேற்கோள் காட்டிய இரண்டாம் ஷரத்தின்படி குற்றம்.
ஒரிஸ்ஸா முதல்வர் நேரடியாகத் தலையிட்டு எந்தவிதமான எதிர்ப்பையும் அவரது நிர்வாகம் ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
இந்த கிராமத்தில் உள்ள ஜகன்னாதர் கோயிலைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களிலும் தலித்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. நிச்சயம் பல கிராமங்களில் சட்டத்துக்குப் புறம்பான இதுபோன்ற செயல்பாடுகள் நடைமுறையில் இருக்கலாம். ஆனால் இப்பொழுது தலித்கள் வலுவான குழுவாகத் தங்களைக் கூட்டி, போராடத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் கோயிலில் சில தலித் பெண்களை நுழைய அனுமதிக்கவில்லை. இதையடுத்து தலித்கள் ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்தில் போராடி கோயிலுக்குள் நுழைய அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் இது நீதிமன்றம் அளவுக்கே போயிருக்கக் கூடாது. தலித்கள் காவல்துறையில் புகார் செய்த உடனே காவல்துறையும் மாவட்ட நிர்வாகமுமே தலித்கள் கோயிலுக்குள் நுழைய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்க வேண்டும்.
இப்பொழுது உயர் நீதிமன்ற ஆணைக்குப் பிறகு கோயிலுக்குள் தலித்கள் நுழைந்ததால் கோயில் தீட்டாகிவிட்டது என்றும் பரிகாரம் செய்யவேண்டும் என்றும் உயர்சாதிக்காரர்கள் அடம் பிடிக்கிறார்கள்.
அப்படி ஏதாவது நடந்தாலும் நடக்காவிட்டாலும் தலித்கள் தினம் தினம் கோயிலுக்கு - பக்திக்காக இல்லாவிட்டாலும்கூட - போகவேண்டும். விருப்பமிருந்தால் பிறர் கோயிலுக்கு வரட்டும், இல்லாவிட்டால் ஒழியட்டும்.
தலித்கள் உள்ளே நுழைந்ததற்காக பரிகாரம் செய்ய கோயில் பூசாரிகள் முற்பட்டால் தலித்கள் வன்கொடுமைச் சட்டத்தின்படி (SC/ST (Prevention of Atrocities) Act, 1989) பூசாரிகளையும் கோயில் நிர்வாகத்தினரையும் தண்டிக்க முகாந்திரம் உண்டு.
இந்தச் சட்டத்தின் இரண்டு ஷரத்துகள் கவனிக்கப்படவேண்டியவை. யார் இந்த சட்டப்படி குற்றம் செய்கிறார் என்று சட்டம் இவ்வாறு சொல்கிறது:
3.1 (xiv) denies a member of a Scheduled Caste or a Scheduled Tribe any customary right of passage to a place of public resort or obstructs such member so as to prevent him from using or having access to a place of public resort to which other members of public or any section thereof have a right to use or access to
3.1 (x) intentionally insults or intimidates with intent to humiliate a member of a Scheduled Caste or a Scheduled Tribe in any place within public view
கோயிலுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது முதல் ஷரத்தின்படி குற்றம். உயர் நீதிமன்ற ஆணைக்குப்பின் அனுமதிக்கப்பட்டாலும் மேற்கொண்டு பரிகாரம் அது, இது என்று செய்தால் அது தலித்களை அவமதிப்பது என்ற வகையில் மேற்கோள் காட்டிய இரண்டாம் ஷரத்தின்படி குற்றம்.
ஒரிஸ்ஸா முதல்வர் நேரடியாகத் தலையிட்டு எந்தவிதமான எதிர்ப்பையும் அவரது நிர்வாகம் ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
Friday, December 15, 2006
பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர்
என் முந்தைய பதிவு: காஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம், பிப்ரவரி 05, 2006
காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தன் அதிகாரபூர்வ தரப்பை மாற்றிக்கொண்டுள்ளது. காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று தன் நாடு ஒருபோதும் சொன்னதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முஷாரஃப் NDTV-யில் காஷ்மீர் தொடர்பாக தான் நிறைய விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த நேரத்தில் இந்தியா உடனடியாக முஷாரஃப்புடன் தொடர்புகொண்டு, பேசி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும்.
முஷாரஃப் ஏற்கெனவே தன் திட்டத்தை விவரித்துள்ளார். பாகிஸ்தான் பக்கம் உள்ள நார்தர்ன் டெரிடரீஸ் பகுதியை இந்தியா மறந்துவிட வேண்டும். அதேபோல இந்தியா பகுதியில் உள்ள ஜம்மு, லடாக் பகுதியைத் தனி மாநிலமாகப் பிரித்து ஆர்டிகிள் 370 இல்லாத, பிற மாநிலங்களுக்கு ஒப்பான ஒரு பகுதியாக ஆக்கவேண்டும்.
மீதம் உள்ளது இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர், அக்ஸாய் சின் பகுதிகள்.
இதில் அக்ஸாய் சின், பாகிஸ்தான் ஏற்படுத்திய பிரச்னை என்றாலும்கூட, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னை அல்ல.
இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர் இரண்டுக்கும் அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் கொடுத்து இரண்டு பகுதிக்கும் இடையேயான போக்குவரத்தை அதிகப்படுத்தி ஒரு பத்தாண்டுக்குப் பிறகு என்ன நிலை என்று பார்க்கலாம்.
இரண்டு பக்கங்களிலும் என்னென்ன பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது?
* பாகிஸ்தான் பகுதியில் முஷாரஃப்புக்கு நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அதை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டிய பிரச்னை குறைவாகவே இருப்பதால் அவர் ஓரளவுக்கு பிரச்னைகளை எதிர்கொண்டுவிடலாம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நன்றாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
தி ஹிந்து கட்டுரை
* இந்தியப் பகுதியில் பாஜக இதைக் கடுமையாக எதிர்க்கும். பாஜக, கம்யூனிஸ்டுகள் ஆதரவு இல்லாமல் எந்தவிதமான தீர்வும் வர முடியாது. மன்மோகன் சிங் உடனடியாக பாஜக, கம்யூனிஸ்ட் தலைமையுடன் உரையாடலைத் தொடங்க வேண்டும்.
* நேஷனல் கான்ஃபரன்ஸ், PDP இரண்டுமே இந்த முயற்சிக்கு கொஞ்சமாவது எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள். பின் வேறு வழியின்று ஏற்றுக்கொள்வார்கள்.
* ஹூரியத் அமைப்பு, பயங்கரவாதிகள் நிச்சயமாக எதிர்ப்பார்கள். பின்னவர்களை மிலிடரி வழியிலும் முன்னவர்களை ராஜரீக வழியிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
* ஜம்மு & காஷ்மீர் பொதுமக்கள் இந்த முயற்சியை வரவேற்பார்கள் என்றே நினைக்கிறேன்.
----
கிழக்கு பதிப்பகம் முஷாரஃப் எழுதியுள்ள 'In The Line of Fire' புத்தகத்தின் தமிழாக்கத்தை ஜனவரி மாதம் கொண்டுவருகிறது.
காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தன் அதிகாரபூர்வ தரப்பை மாற்றிக்கொண்டுள்ளது. காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று தன் நாடு ஒருபோதும் சொன்னதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முஷாரஃப் NDTV-யில் காஷ்மீர் தொடர்பாக தான் நிறைய விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த நேரத்தில் இந்தியா உடனடியாக முஷாரஃப்புடன் தொடர்புகொண்டு, பேசி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும்.
முஷாரஃப் ஏற்கெனவே தன் திட்டத்தை விவரித்துள்ளார். பாகிஸ்தான் பக்கம் உள்ள நார்தர்ன் டெரிடரீஸ் பகுதியை இந்தியா மறந்துவிட வேண்டும். அதேபோல இந்தியா பகுதியில் உள்ள ஜம்மு, லடாக் பகுதியைத் தனி மாநிலமாகப் பிரித்து ஆர்டிகிள் 370 இல்லாத, பிற மாநிலங்களுக்கு ஒப்பான ஒரு பகுதியாக ஆக்கவேண்டும்.
மீதம் உள்ளது இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர், அக்ஸாய் சின் பகுதிகள்.
இதில் அக்ஸாய் சின், பாகிஸ்தான் ஏற்படுத்திய பிரச்னை என்றாலும்கூட, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னை அல்ல.
இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர் இரண்டுக்கும் அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் கொடுத்து இரண்டு பகுதிக்கும் இடையேயான போக்குவரத்தை அதிகப்படுத்தி ஒரு பத்தாண்டுக்குப் பிறகு என்ன நிலை என்று பார்க்கலாம்.
இரண்டு பக்கங்களிலும் என்னென்ன பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது?
* பாகிஸ்தான் பகுதியில் முஷாரஃப்புக்கு நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அதை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டிய பிரச்னை குறைவாகவே இருப்பதால் அவர் ஓரளவுக்கு பிரச்னைகளை எதிர்கொண்டுவிடலாம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நன்றாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
தி ஹிந்து கட்டுரை
* இந்தியப் பகுதியில் பாஜக இதைக் கடுமையாக எதிர்க்கும். பாஜக, கம்யூனிஸ்டுகள் ஆதரவு இல்லாமல் எந்தவிதமான தீர்வும் வர முடியாது. மன்மோகன் சிங் உடனடியாக பாஜக, கம்யூனிஸ்ட் தலைமையுடன் உரையாடலைத் தொடங்க வேண்டும்.
* நேஷனல் கான்ஃபரன்ஸ், PDP இரண்டுமே இந்த முயற்சிக்கு கொஞ்சமாவது எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள். பின் வேறு வழியின்று ஏற்றுக்கொள்வார்கள்.
* ஹூரியத் அமைப்பு, பயங்கரவாதிகள் நிச்சயமாக எதிர்ப்பார்கள். பின்னவர்களை மிலிடரி வழியிலும் முன்னவர்களை ராஜரீக வழியிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
* ஜம்மு & காஷ்மீர் பொதுமக்கள் இந்த முயற்சியை வரவேற்பார்கள் என்றே நினைக்கிறேன்.
----
கிழக்கு பதிப்பகம் முஷாரஃப் எழுதியுள்ள 'In The Line of Fire' புத்தகத்தின் தமிழாக்கத்தை ஜனவரி மாதம் கொண்டுவருகிறது.
Thursday, December 07, 2006
சன் குழுமம் விரிவாக்கம்
சன் டிவி லிமிடெட் என்ற பெயரில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் சன் குழுமத்தின் தமிழ் மற்றும் மலையாளச் சானல்களை மட்டுமே உள்ளடக்கியது. தெலுங்கு, கன்னட சானல்கள் தனி நிறுவனங்களாக (Private) இருந்தன.
இப்பொழுது Udaya TV Pvt. Ltd., Gemini TV Pvt. Ltd. ஆகிய இரு நிறுவனங்களையும் Sun TV Ltd. என்னும் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தோடு இணைக்கப் போகிறார்கள்.
சன் டிவி லிமிடெட் லிஸ்ட் செய்யப்பட்டபோது 90% பங்குகள் மாறனிடத்திலும் 10% பங்குகள் (நிதிநிறுவனங்கள் சேர்த்து) பொதுமக்களிடமும் இருந்தன. ஜெமினி, உதயா நிறுவனங்களின் அனைத்துப் பங்குகளும் மாறன் + புரோமோட்டர்கள் கையில். ஜெமினி, உதயா நிறுவனங்களை இணைக்க, இவ்விரு நிறுவனங்களையும் சன் டிவியைப் போன்று 43% மதிப்புள்ளது என்று தீர்மானித்து பங்குகளை வழங்குகிறார்கள்.
நிறுவனங்கள் இணைந்தபிறகு சன் டிவி லிமிடெட் நிறுவனத்தில் புரோமோட்டர்கள் தவிர்த்து உள்ள பிறரது பங்கு 7%க்கு சற்று குறைவாக இருக்கும். மாறன் + புரோமோட்டர்கள் வசம் 93% பங்குகள் இருக்கும். புதிய நிறுவனத்தின் மார்க்கெட் கேபிடலைசேஷன் (இன்றைய பங்கு விலையை வைத்துப் பார்க்கும்போது) 13,840 கோடி ரூபாய்கள்.
இப்பொழுது Udaya TV Pvt. Ltd., Gemini TV Pvt. Ltd. ஆகிய இரு நிறுவனங்களையும் Sun TV Ltd. என்னும் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தோடு இணைக்கப் போகிறார்கள்.
சன் டிவி லிமிடெட் லிஸ்ட் செய்யப்பட்டபோது 90% பங்குகள் மாறனிடத்திலும் 10% பங்குகள் (நிதிநிறுவனங்கள் சேர்த்து) பொதுமக்களிடமும் இருந்தன. ஜெமினி, உதயா நிறுவனங்களின் அனைத்துப் பங்குகளும் மாறன் + புரோமோட்டர்கள் கையில். ஜெமினி, உதயா நிறுவனங்களை இணைக்க, இவ்விரு நிறுவனங்களையும் சன் டிவியைப் போன்று 43% மதிப்புள்ளது என்று தீர்மானித்து பங்குகளை வழங்குகிறார்கள்.
நிறுவனங்கள் இணைந்தபிறகு சன் டிவி லிமிடெட் நிறுவனத்தில் புரோமோட்டர்கள் தவிர்த்து உள்ள பிறரது பங்கு 7%க்கு சற்று குறைவாக இருக்கும். மாறன் + புரோமோட்டர்கள் வசம் 93% பங்குகள் இருக்கும். புதிய நிறுவனத்தின் மார்க்கெட் கேபிடலைசேஷன் (இன்றைய பங்கு விலையை வைத்துப் பார்க்கும்போது) 13,840 கோடி ரூபாய்கள்.
Subscribe to:
Posts (Atom)