Saturday, October 06, 2012

நல்லி திசை எட்டும் 2012 மொழியாக்க விருதுகள் விழா

நாளை 7 அக்டோபர் 2012 மாலை 6.00 மணி தொடங்கி, நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுகள் விழா சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெறுகிறது.

விருதுகள்:

வாழ்நாள் சாதனையாளர் விருது:

(1) கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி (தமிழிலிருந்து வங்காளத்துக்கும் வங்காளத்திலிருந்து தமிழுக்கும்)
(2) பேராசிரியர் (மறைந்த) ஆர். ராஜரத்தினம் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும்)

நூல்களுக்கான விருது பெறுவோர்:

(1) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு: Kurunthokai, ஆங்கிலமாக்கம்: அ. தட்சணாமுர்த்தி
(2) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (புனைவு): சோஃபியின் உலகம், தமிழாக்கம்: ஆர்.சிவகுமார்
(3) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (புனைவு): பாகிஸ்தான் போகும் ரயில், தமிழாக்கம்: ராமன் ராஜா
(4) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (அ-புனைவு): யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பாகம் ஒன்று | இரண்டு | மூன்று), தமிழாக்கம்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
(5) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (அ-புனைவு): காஷ்மீர்: முதல் யுத்தம், தமிழாக்கம்: பி.ஆர்.மகாதேவன்
(6) கன்னடத்திலிருந்து தமிழுக்கு: சர்வக்ஞர் வெண்பா, தமிழாக்கம்: தா.கிருட்டிணமூர்த்தி
(7) வங்காளத்திலிருந்து தமிழுக்கு: திஸ்தா நதிக்கரையின் கதை, தமிழாக்கம்: பி.பானுமதி
(8) அஸ்ஸாமியிலிருந்து தமிழுக்கு: தென் காமரூபத்தின் கதை, தமிழாக்கம்: அ.மாரியப்பன்
(9) தமிழிலிருந்து இந்திக்கு: பரம வாணி, இந்தியாக்கம்: பி.கே.பாலசுப்ரமணியன்
(10) மலையாளத்திலிருந்து தமிழுக்கு: உண்மையும் பொய்யும், தமிழாக்கம்: குளச்சல் மு. யூசுப்
(11) மலையாளத்திலிருந்து தமிழுக்கு: ஒற்றைக்கதவு, தமிழாக்கம்: கே.வி.ஜெயஸ்ரீ
(12) தமிழிலிருந்து மலையாளத்துக்கு: மணியபேர, மலையாளமாக்கம்: ஸ்டான்லி

மேலே உள்ள 12 நூல்களில் இரண்டு கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியானது: பாகிஸ்தான் போகும் ரயில் மற்றும் காஷ்மீர் முதல் யுத்தம்.

No comments:

Post a Comment