Thursday, June 28, 2007

பண உதவி தேவை: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு

திருப்பத்தூரை அடுத்த மிட்டூர் என்ற இடத்தில் சரவணன் என்பவரும் அவரது சில நண்பர்களும் 'மனம் மலரட்டும்' என்ற சமூக சேவை அமைப்பை நடத்திவருகிறார்கள். (இதைப்பற்றி முன்னர் சில பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.) அந்தப் பகுதிகளில் உள்ள வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொறியியல்/மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர பயிற்சி, பண உதவி ஆகியவற்றைச் செய்துவருகிறார்கள்.

மிட்டூர், பூங்குளம் பகுதிகளில் இருந்து மூன்று மாணவர்கள் (இரு ஆண், ஒரு பெண்) நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்புகள் உள்ளன. அவர்களது பெயர்:

1. சந்திரசேகர்
2. நவியரசன்
3. நூர்ஜெஹான்

இவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்.

ஒருவருக்கு காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், கிண்டியிலும் மற்ற இருவருக்கு சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் அரசு கோட்டாவிலும் இடங்கள் கிடைக்கலாம். (முழு விவரம் எஞ்சினியரிங் கவுன்செலிங் முடிந்ததும்தான் தெரியவரும்.)

சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து நான்கு வருடங்கள் படிக்க, கல்விக் கட்டணம், ஹாஸ்டல் செலவு, பிற செலவுகள் என்று வருடம் ரூ. 75,000 ஆகும். மொத்தமாக ரூ. 3 லட்சம்.

கிண்டி கல்லூரியில் படிக்க ஆகும் செலவு சற்றுக் குறையலாம்.

பணம் கொடுத்து உதவ விரும்புபவர்கள் சரவணனை அல்லது ஸ்டாலினைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சரவணன் மின்னஞ்சல்: manam.malarattum@gmail.com
தொலைப்பேசி எண்: 0416-3208797
மொபைல் எண்: 94864-37227 (இந்த எண் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் வேலை செய்யும்)

ஸ்டாலின்: 98949-60335

No comments:

Post a Comment