Tuesday, December 25, 2012

தமிழ் பாரம்பரியக் குழுமத்தின் ஓவியம் பற்றிய பேருரைகள்

இன்று (25 டிசம்பர் 2012) முதல் 30 டிசம்பர் 2012 வரை தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சென்னை, தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள தத்வாலோகா அரங்கில் காலை 10.00-12.00 மணிக்கு பேருரைகளை ஏற்பாடு செய்துள்ளது. (சில பேச்சுகள் தமிழிலும் சில ஆங்கிலத்திலும் இருக்கும்.)

25 டிசம்பர் 2012: தமிழகத்தின் பாறை ஓவியங்கள், காந்திராஜன்

காந்திராஜன் ஒரு கலை வரலாற்றாளரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். தமிழகத்தில், பழமையான பல பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்த பெருமை இவருடையது. பாறை ஓவியங்களையும் சுவரோவியங்களையும் ஆவணப்படுத்தியுள்ளார். வரலாறு, மானுடவியல் துறைகளில் ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.

26 டிசம்பர் 2012: இந்தியா முழுதும் பரவியுள்ள ஓவியக் கலை - ஒரு பார்வை, அர்விந்த் வெங்கட்ராமன்

அர்விந்த் வெங்கட்ராமன் ஒரு மென்பொருளாளர். நூற்றுக்கணக்கான கோயில்களில் உள்ள சிற்பங்களைப் படம் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளார்.

27 டிசம்பர் 2012: அஜந்தா குகை ஓவியங்கள், பேராசிரியர் சுவாமிநாதன்

சுவாமிநாதன், ஐஐடி தில்லியிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர். அஜந்தா குகை ஓவியங்கள் குறித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பேசியும் எழுதியும் வருபவர். தனிச்சுற்றுக்காக அஜந்தா ஓவியங்கள் குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார். அஜந்தா ஓவியங்கள் குறித்து மல்ட்டிமீடியா சிடி ஒன்றை வெளியிட்டுள்ளார். மாமல்லபுரம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் காஃபி டேபிள் புத்தககங்களை வெளியிட்டுள்ளார்.

28 டிசம்பர் 2012: காஞ்சி, பனமலை பல்லவ ஓவியங்கள், பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்

        சித்தன்னவாசல் ஜைன குகை ஓவியங்கள், ஓவியர் சந்ரு (சந்திரசேகரன்)

சிவராமகிருஷ்ணன், சென்னை நுண்கலைக் கல்லூரியில் ஓவியத்துறையில் பயிற்றுவிக்கிறார்.
ஓவியர் சந்ரு, சென்னை நுண்கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.

29 டிசம்பர் 2012: தஞ்சை பிருகதீசுவரம் கோயிலின் சோழர் கால ஓவியங்கள், விஜய குமார்

விஜய குமார் Poetry in Stone (http://poetryinstone.in/) என்ற தளத்தின் மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்திய சிற்பக் கலை, ஓவியக் கலை ஆகியவை பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்.

30 டிசம்பர் 2012: விஜயநகர, நாயக்க கால ஓவியங்கள், பேராசிரியர் ச. பாலுசாமி

பாலுசாமி, சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக உள்ளார். விஜயநகர, நாயக்கர் கலைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றவர். விஜயநகர, நாயக்க ஓவியங்களை ஆவணப்படுத்தும் திட்டம் ஒன்றின் தலைவராக இருந்தார். மாமல்லபுரத்தின் அருச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், புலிக்குகை ஆகியவை பற்றி புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

2 comments:

  1. A great event on our culture ... time to reinvent the artistic nature of ours...may help to trace our roots via these wonderful drawings ...congrats...

    ReplyDelete
  2. Badri, this is splendid. I wish I was in Chennai during this period. I am sure the speeches will be recorded.

    ReplyDelete