Tuesday, July 02, 2013

நரேந்திர மோதியின் சாதனைகள்

[நரேந்திர மோதி பற்றி இரண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன், அவற்றை முடித்துவிட்டு சரவணகார்த்திகேயனின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்போகிறேன். அதற்குமுன் ஒரு சின்ன போஸ்ட் இங்கே.]

‘மோதிக்கு என்ன தெரியும், அவர் குஜராத்தைத் தாண்டி வெளியே வந்ததே கிடையாது’ என்பது பலருடைய வாதம். அதற்குக் காரணம் பெரும்பாலானோர் மோதியை கடந்த பத்தாண்டுகளாக, குஜராத் வாயிலாக மட்டுமே கவனித்துவந்துள்ளனர். ஆனால் குஜராத்தில் பாஜகவின் செயலராக, பின்னர் பாஜக பொதுச் செயலராக மோதி பல செயல்பாடுகளைப் புரிந்துள்ளார். குஜராத்தில் கேஷுபாய் படேல் தலைமையில் முதன்முதலில் பாஜக ஆட்சி அமைத்ததற்குக் காரணமே மோதியின் பணியினால்தான். அப்போது அவர்தான் குஜராத்தில் பாஜகவின் தேர்தல் வேலைகளுக்குப் பொறுப்பான செயலராக இருந்தார். அதை விட்டுவிடுவோம். குஜராத்துக்கு வெளியே மோதி என்ன செய்துள்ளார் என்று பார்ப்போம்.

* மோதி பாஜக பொதுச் செயலராக வட மாநிலங்களின் பொறுப்பு வகுக்கும்போதுதான், பன்சி லாலின் ஹரியானா விகாஸ் கட்சியுடன் பாஜக தேர்தல் உடன்பாடு செய்துகொண்டது. அதன் பலனாக, 1996-ல், ஹரியானாவில் காங்கிரஸ் அமைச்சரவையை வீழ்த்தி ஹரியானா விகாஸ் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. (ஆனால் பின்னர் கூட்டணி பிரிந்தது.)

* 1996-ல், மோதிதான் பாதல் தலைமையிலான அகாலி தளத்துடன் கூட்டணி ஏற்படுத்தி, சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸைத் தோற்கடிக்கக் காரணமாக இருந்தார்.

* அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டு 1997-ல் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்தார்கள். இடையில் தோல்விகள் ஏற்பட்டாலும், இன்றும் அகாலி தளம் - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது, பஞ்சாபின் ஆட்சியில் உள்ளது.

* இமாச்சலப் பிரதேசத்தில் மோதிதான், சாந்தா குமாருக்கு பதில் பிரேம் குமார் துமாலை முன்னிறுத்தி, காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து, மார்ச் 1998-ல் பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்ற வழி வகுத்துக் கொடுத்தார். (இப்போது ஆட்சியில் இருப்பது காங்கிரஸ்.)

* மத்தியப் பிரதேசம், கர்நாடகம் என்ற இரு மாநிலங்களும் கோவிந்தாசார்யாவின் பொறுப்பில் இருந்தன. அவர் வாஜ்பாயியை கேலி செய்யும் விதமாக (“வாஜ்பாய் வெறும் முகமூடி, அத்வானிதான் எல்லாம்”) பேசியதால், அவர் கழற்றிவிடப்பட்டு, அந்த இரு மாநிலங்களும் மோதியின்வசம் ஒப்படைக்கப்பட்டன. அப்போதுதான் கர்நாடகத்தில் ஏடியூரப்பா முன்னிறுத்தப்பட்டார். அவரும் கர்நாடகத்தில் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றினார். இப்போது ராஜ்நாத் - மோதி சேர்ந்துள்ள காரணத்தால் மீண்டும் ஏடியூரப்பா பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.

ஒருவிதத்தில் பார்த்தால் பாஜக ஏற்கெனவே வலுவாக இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தில்லி தவிர பிற மாநிலங்களில் பாஜகவுகு வலு கொடுத்து கூட்டணிகளை ஏற்படுத்தியதில் பெரும் பங்கு மோதியையே சாரும். (மகாராஷ்டிரக் கூட்டணியை ஏற்படுத்தி வழிநடத்தியவர் பிரமோத் மஹாஜன்.) அப்போதெல்லாம் கட்சியின் பின்புலமாக இருந்து பணியாற்றுபவருக்குப் பெரிய அளவில் பேரும் புகழும் இல்லாதிருந்த காலம். பாஜக என்றாலே அத்வானி, வாஜ்பாயி என்பதாகத்தானே பேச்சு இருந்தது?

மோதி இன்றளவும் இந்த மாநிலங்களில் தோழமைக் கட்சிகளுடனும் பாஜக தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். ஆனால் நிதிஷ் குமார் ஒருவரை மட்டும் முன்னிறுத்தி அவர் கூட்டணியிலிருந்து விலகிவிட்டார் என்ற காரணத்துக்காக மோதி ஒரு பிளவுவாதி என்று பத்திரிகைகள் பேசுவது அபத்தமாக உள்ளது.

2 comments:

  1. Badhri,
    Request you/others to read complete ModiNama series in www.manushi.in by Madhu Kishwar.

    That would help a lot.

    Badhri,
    Also request you to translate that series in Tamil and publish.

    Thanks
    Balaji


    ReplyDelete
  2. Badri
    Though the main stream media(MSM) has taken a vow to not loose any chance in belittling Modi, one can feel the strong pro-Modi sentiment among the public.
    It has become highly fashionable of the pseudo-secularists in MSM and blogging community to condemn Modi at the drop of hat. It's a open fact that guys like Nitish Kumar are fuming with jealousy.
    I really appreciate your articles on highlighting the administrative capabilities of Modi.
    Yes, we need a person like Narendra Modi at the helm for a change. We need to give him a chance. To hell with all the pseudo-secularists who think they are the voice of the nation.

    ReplyDelete