Friday, April 24, 2015

வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து

விக்கிபீடியா 'Hate Crime' என்பதை இவ்வாறு வரையறுக்கிறது:
In both crime and law, hate crime is a usually violent, prejudice motivated crime that occurs when a perpetrator targets a victim because of his or her perceived membership in a certain social group. Examples of such groups include but are not limited to: ethnicity, gender identity, language, nationality, physical appearance, religion, or sexual orientation.
எந்தவித நேரடி முன்விரோதமும் இல்லாத நிலையில், சம்பந்தமே இல்லாத ஒருவர்மீது இனம், மொழி, பால், தேசம், பாலுறவு விருப்பம், தோற்றம் ஆகியவை காரணமாக வெறுப்பினால் உந்தப்பட்டுத் தாக்குதல் நடத்துவதுதான் ‘வெறுப்புக் குற்றம்’ எனப்படுகிறது.

பொதுவாக இம்மாதிரியான குற்றங்கள் நடக்கும்போது அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் அறிவுஜீவிகளும் குறைந்தது வாய் வார்த்தையாலாவது கண்டிப்பார்கள். தமிழகத்தின் என்ன நடந்தது? பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் கண்டித்ததுடன் நேராகச் சென்று தாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள். காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர் நேரில் சென்று பார்த்ததுடன் மாநிலத் தலைவரின் கண்டன அறிக்கையை வெளியிட்டார்.

தினம் ஒரு அறிக்கை விடும், ராமானுஜர் சீரியல் எழுதும் திமுக தலைவர் கருணாநிதியோ, அறிக்கைத் திலகம் பாமக ராமதாஸோ வாயைத் திறக்கவில்லை.  இடதுசாரிக் கட்சிகள், ம்ஹூம், ஒரு வார்த்தை இல்லை. ஆளும் அஇஅதிமுகவிடமிருந்து ஒரு சத்தம் இல்லை. அதிகாரபூர்வ எதிர்க்கட்சி தேமுதிகவிடமிருந்து ஒரு முனகல் இல்லை. நடைப்பயண நாயகன் மதிமுக வைகோ, புதுப்புயல் தமாக வாசன், தலித்துகளின் ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் ஆகியோரிடமிருந்து ஒரு குரல் இல்லை. இந்தக் கட்சிகளின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்கூட வாய் திறக்கவில்லை.

திராவிடர் கழகத்தின் வீரமணி, தங்கள் அமைப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, தாங்கள் இதுபோன்ற தாக்குதல்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.

பத்திரிகையாளர் ஞாநி சொல்கிறார்: “இதுபோன்ற செயல்களை பெரியாருடன் தொடர்புபடுத்தவே கூடாது. அவர் அமைப்புரீதியான மாற்றங்களை வன்முறையற்ற வழியில் செயல்படுத்தவே விரும்பினார். இந்த நபர்கள் தங்களைப் பெரியாரியர்கள் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது. உரிமைகளை மீறும் இந்தச் செயல்கள் பகுத்தறிவின் வரையறைக்குள் வரமாட்டா.”

இம்மாதிரி பெரியாரியர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவே முடியாது. இம்மாதிரியான தாக்குதல்களில் தங்கள் பங்கு என்ன என்பதை பெரியாரியர்கள் விளக்கியே ஆகவேண்டும். இத்தனை ஆண்டுகளாகத் தாங்கள் பரப்பி வந்திருக்கும் வெறுப்பு விதைதானே இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது? ஸ்வராஜ்யா இதழில் நான் எழுதியுள்ள கட்டுரையில் 2006-ல் நடந்த சில செயல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

சரி, மனித உரிமை அமைப்புகள் என்று சில உள்ளனவே, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். அப்படி ஒன்றும் கருத்து சொல்லக்கூடிய செயலாக இது அவர்களுக்குத் தெரியவில்லை போல.அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் போன்றவர்கள் பொதுவான மனித உரிமைகளுக்காக மிகவும் போராடுபவர்கள். அவர்களுக்கு இதுகுறித்துச் சொல்ல ஏதுமில்லை.

தனிப்பட்ட முறையில் நீ கண்டித்தாயா, நீ கண்டித்தாயா என்று கேட்பது எனக்கு ஏற்புடையது அல்ல. ஆனால் இதற்காக என்று இருக்கும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும்கூட இதுகுறித்து ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர் நிலை என்ன, பார்ப்பன வெறுப்பு என்பது எப்படிப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை நன்கு விளக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நான் எழுதிய கட்டுரை ஒன்று மிகக் கடுமையான எதிர்வினைகளைப் பெற்றது. இல்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்குகிறேன் என்றார்கள். இன்று என்ன நடந்துள்ளது என்று பாருங்கள்.

சமூக வலைத்தளங்களில் பல தனி நபர்கள் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் unequivocal-ஆகக் கண்டிக்காமல், கூடவே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பல விஷயங்களைப் பற்றிப் பேசியதையும் பார்க்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தின் உண்மையான அவலம் அவர்கள்கூட இல்லை. இந்த விஷயத்தை எள்ளி நகையாடிய சிலர்தான். அவற்றைப் பார்ப்போம்.

1. ஆந்திராவில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூப்பாடு போடாத சிலர் இப்போது இரண்டு பேருடைய நூல் அறுந்ததற்குக் கொதிப்பது ஏன்?

இவை இரண்டும் ஒப்பிடப்படக்கூடிய செயல்களே அல்ல. நூல் அறுந்தது சாதாரண விஷயம்தான். உயிர் போகவில்லைதான். ஆனால் என்னவிதமான ஒப்பீடு? இரண்டும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதுதானே? இதைக் கண்டிப்பதற்கு அதைக் கண்டித்து வாங்கிவந்த சான்றிதழைக் காண்பிக்கவேண்டுமா? இருவரும் தமிழர்கள்தானே? ஒரு பக்கம் சுட்டது ஆந்திர போலீஸ். இன்னொரு பக்கம் தாக்கியது தமிழர்கள். தாக்கப்பட்டவர்கள் வெறும் பார்ப்பனர்கள். பிரச்னை அதுதானா?

2. நூலைதானே அறுத்தார்கள்? அதற்கு ஏன் இந்தப் பொங்கல்?

பிரமாதம். புடைவையைத்தானே பறித்தார்கள்? சட்டையைத்தானே கிழித்தார்கள்? லேசாக மேலேதானே கையை வைத்தார்கள்? கொஞ்சமாகக் கீழேதானே தள்ளினார்கள்? ஒரு தட்டுதானே தட்டினார்கள்? வெறும் இரண்டு பேரைத்தானே தாக்கினார்கள்? அடடா, அடடா!

3. அடக்குமுறையின் வெளிப்பாடுதான் பூணூல். அதனை அவர்களாகவே நீக்கியிருக்கவேண்டும். இல்லை என்பதால் இந்தச் செயலில் ஈடுபடவேண்டியிருந்தது.

இதனை இந்தப் பதிவில் எதிர்கொள்ளப்போவதில்லை. தனியாக எழுத உள்ளேன். எந்தச் சட்ட வரையறைக்குள்ளும் அடங்காத ஒரு எதிர்பார்ப்பு இது. பிறர் எம்மாதிரியான மதச் சடங்குகளைச் செய்யவேண்டும் என்று எவ்விதத்திலும் யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. அவரவர் விரும்பிய வகையில் சட்டத்துக்கு உட்பட்டு மத வழிபாடு செய்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

4. பொதுமக்கள் கூடும் இடங்களில் திறந்த மார்புடன் இருக்கும் இவர்களை சட்டை போடச் சொல்லவேண்டும்.

தமிழகத்தில் நான் பார்த்தவரை வயலில் விவசாயம் செய்வோர் முதல் வீடுகளில், தெருக்களில், பல பொது இடங்களில் வெறும் துண்டுடனோ, அதுகூட இல்லாமலோ திறந்த மார்புடன் கீழாடை மட்டும் அணிந்துகொண்டு அனைத்து சாதி ஆண்களும் செல்கிறார்கள். இதனை ஆபாசம் என்றும் பெண்களுக்கு எதிரானது என்றும் சொல்பவர்கள் சட்டம் கொண்டுவந்து மாற்ற முயலுங்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக, மாநிலத்தின் அனைத்து ஆண்களும் தெருவில் இறங்கும்போது இதனைச் செய்யவேண்டியிருக்கும்.

***

தமிழகத்தில் பொதுவெறுப்பின் அடிப்படையில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திப்பது தலித்துகள்தான். சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தலித்துகளைத் தாக்குகின்றனர். தலித் மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்ததற்காக கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தின் ஒரு பள்ளியில் “தாளாளர் சாலமன் ஜெபா, அவரது மனைவியும் தலைமையாசிரியருமான ஜெயக்குமாரி, ஆசிரியர்கள் ஹெலன் அருள் எமிமாள், மேரி சுஜித்ரா, ஏஞ்சலின் ஸ்டெபி, ஜேக்கப், ஆக்னஸ், சரோஜா” ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இவை அனைத்துமே ஹேட் கிரைம் என்பதன்கீழ் வரும். சென்னையில் இரு பார்ப்பனர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதே வகையின்கீழ் வரும். இவற்றை அனைத்து மக்களும் கடுமையாக எதிர்க்கவேண்டும். நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால், நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்.

84 comments:

  1. இரண்டு சம்பவங்களில் ஒன்று ஒரு பிள்ளையார் சிலைக்கு பூஜை, அல்ங்காரம் செய்வது தொடர்பான முன்விரோதம் காரணமானது என்றும் மற்றது இட்டுக்கட்டப்பட்ட (நடைபெறாத) விஷயம் என்றும் செய்திகள் வருகின்றன. உண்மைகள் நீதிமன்ற விசாரணையில்தான் தெரியவரும். அவசர முடிவுகளுக்கு வராமல் இருப்பதும் என்ன நடந்தது என்றே சரிவரத் தெரியாதபோது அறிக்கை வெளியிடாமல் இருப்பதும் நல்லதே.
    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. பத்திரிகைகள் சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாகப் பார்த்து, இரண்டு கட்சிகள் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்து, சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தாங்களாகவே சரணடைந்து, சிலர் கைது செய்யப்பட்டு, அதன்பின்னும் இவ்வாறு வேறு காரணத்தைப் பொய்யாக ஃபேஸ்புக்கில் பரப்பும்போது அதை எடுத்துப்போட்டு இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தே இருக்காது என்று காட்ட முனைபவர்களை என்ன செய்வது? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

      Delete
    2. *** இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தே இருக்காது என்று காட்ட முனைபவர்களை ***
      நான் அப்படி முனையவில்லை. பத்திரிகைகள், ஃபேஸ்புக் உட்பட ஊடகங்களில் வரும் செய்திகள் எதையுமே நான் முழுவதும் நம்பவில்லை, அவ்வளவே. ஹேட் கிரைம்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மேலும் இந்த சந்தர்ப்பத்தைத் தம் சுயநல நோக்கங்களுக்கு எந்தத் தரப்பும் பயன்படுத்திக் கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டிவிடவும் அனுமதிக்கக் கூடாது.

      சரவணன்

      Delete
    3. பொன்.முத்துக்குமார்Fri Apr 24, 09:22:00 PM GMT+5:30

      சரவணன், இதே நியாயத்தை எல்லா தாக்குதலுக்கும் வைப்பீர்களா அல்லது பிராமணர்கள் தாக்குதலுக்கு ஆட்படும்போது மட்டும்தான் “நீதிமன்ற விசாரணை வரும்வரை அறிக்கை விடக்கூடாது” என்பீர்களா ?

      Delete
    4. பொன்.முத்துக்குமார்Fri Apr 24, 09:25:00 PM GMT+5:30

      ஞாநி ஏன்தான் இப்படி இருக்கிறாரோ ? ’பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி’ என்பதுதான் அமைப்புரீதியான மாற்றம் வேண்டி எழுந்த குரலா ? அதெப்படி ஈ.வே.ரா கட்சிக்காரர்கள் பூணூலறுக்கும்போது மட்டும் அதில் ஈ.வே.ரா-வை சம்பந்தப்படுத்தக்கூடாது, ஆனால் ஒரு சாதிக்காரர்கள் கொழுப்பெடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீது கொலைவேறி தாக்குதலில் ஈடுபடும்போது அது இந்துமதத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது ?

      Delete
    5. /// சரவணன், இதே நியாயத்தை எல்லா தாக்குதலுக்கும் வைப்பீர்களா ///

      ஆம். யார் தாக்கப்பட்டாலும் அவசரப்பட்டு குட்டையைக் குழப்பி அறிக்கைப் போர்களில் ஈடுபட்டு உணர்ச்சிகளைத் தூண்டிவிடக் கூடாது என்பதே என் கருத்து.

      சரவணன்

      Delete
  2. Gnani has gone a step further in his FB reaction saying that it is likely that the charges on the attackers are likely to be fabricated - "இது தொடர்பாக சில பெரியாரியக்க தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையான பெரியாரியர்களாக இருப்பின் இந்த செயலை நிச்சயம் செய்திருக்கமாட்டார்கள். இந்த வழக்கே பொய் வழக்காகவே இருக்கும்."

    ReplyDelete
  3. அவர்கள் எல்லாம் இது குறித்து ஏதும் பேசினால் அவர்களது போலி மத சார்பின்மைக் கொள்கைக்கு தீட்டு வந்துவிடும் பத்ரி... பேசமாட்டார்கள்... வோட்டுப் பொறுக்கிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

    ReplyDelete
  4. நல்ல பதிவு பத்ரி.. வழக்கம்போல இதற்கும் பார்ப்பான் திராவிடன் என சப்பைக் கட்டுவார்கள். சங்க காலம் முதல் தமிழகத்தில் இருக்கும் பார்ப்பான் இவர்களுக்கு இன்னமும் வந்தேறி. திராவிடக் கழகத்தின் ஒரே சாதனை தமிழகமெங்கும் வெறுப்பரசியலைத் தூண்டுவது.

    ReplyDelete
  5. //எந்தவித நேரடி முன்விரோதமும் இல்லாத நிலையில், சம்பந்தமே இல்லாத ஒருவர்மீது...//

    There is no previous enmity between the attackers and the priests and they have never come into contact with each other. You begin your blog post with these categorical statements. I am afraid, you may be wrong here. As far as I understand, the attackers are local guys from local slums or working classes. The priests are working in a Pillaiyar temple in their vicinity. They had a quarrel with the head priest over a celebration in the temple and the priest behaved like a orthodox brahmins calling them impure and polluting them the temple by their activity. Their act was not to insult the temple like any DKist but to participate in a celebration. As you know quite well, all such fellows are religious in private lives. The conduct of the priest to prevent them has excited their fury; and they were waiting for an opportunity to attack him physically. They will behave like that; because they are from lower classes which react to insults with such physical attacks. Along with the head priest, they attacked another because, it was alleged that, when they went to the temple to perform the act, and the Headpriest called his junior to help drive them away as their coming near the karpakraham would pollute. Some words were exchanged - by the priests and the youth. So, it cannot be said that they don't know each other; and there is no previous enmity. If there is some previous enmity between a muslim guy and a hindu guy, the Hindu guy will attack the muslim guy no doubt, if he gets a safe opportunity but he may not be interested in attacking him as a Muslim, like pulling his topee or his beard. But the sacred thread was pulled because, there is a religious angle is involved; and the priests chased the youth away as his achaarams and the temple's purity were attempted to be damaged by them. Therefore, they were interested to show that his achaarams are indeed the culprits for their insults.

    The attacks on these two priests should be decried only by those who endorse the behaviour of the priests. Otherwise, no. The whole community, if it stands behind the priests, demonstrate the same haughty and arrogant behavior using religion for which Tamil brahmins came to be hated in TN. On the contrary, if persons like you, have first enquired what has really happened, and then, if it is true that the priests'conduct is despicable, joined the side of the youth, it would be welcome as a fight for egalitarainaims in the religion. But the usual course for people like you to immediately draw a conclusion that in all attacks the victims are innocent and poor; and the attackers did unprovoked. Violence is bad and to condemned.But you can't expect the low class youth to behave like gentemen. At the same time, it is perfectly in order if we expect the priests to behave kindly and affectionately with all: because being a priest is that. W/o that quality, one's place is not in temple; but in the slum with the same rowdy youth.

    -- Bala Sundara Vinayagam

    ReplyDelete
    Replies
    1. Mr Bala Sundara Vinayagam- what you have written is also hate crime. What gives the right for one to violently attack another . Venkat

      Delete
  6. INDA VISAYATHIL AVRGAL ILLORUME IDAI ADARIKINDRANAR POLUM. VALGA VALARGA. INIMEL AVADU IVARGALAI NAMBI OTTU PODATHIRKAL

    ReplyDelete
  7. Con't.d

    All of you seem to be living in the past because you present a falsified picture of brahmins of TN. They are the poorest of the poor and they are innocent and they are leading virtuous lives. Your swarajya post wants to impress the readers with such falsehoods. The truth should be seen and experienced. Today brahmins are avaricious and ready to ride roughshod over all virtues to further their interests. No one is in the profession of priest as a sacred duty towards God. All are in it for their stomachs. In big temples, they are salaried workers. In all temples if they are cities like Madras or Madurai, they receive good and unaccounted income. No one is dying of starvation. We are talking about priests not other Tambras. Among others, the poverty exists but due to other reasons like lack of reservations, or some private reasons. But for priests, no poverty. If the temples are not governmental, but private, the private owners pay them well, for e.g Vana thirupathi built by Saravana Bhawan Rajgopal. In the same place, there are Nava Tirupathis under government. The priests are paid by government; but they dont get other than govt income because, the worshippers to Nav thirupathis are less. Just go to big temples and watch how the priests prosper. But at the same time, except the priests, there are brahmins among temple employees who dont access to the money poured on plates of camphors: like workers in Madappalli.

    In sum, poverty among priests are not as you make it out to be. At the same time, poverty among other caste people, like the sandars who were shot dead, and coolies in slums are grinding, humiliating and insurmountable. Please see the ground realities before writing essays like the one in swarajyamag. Please control your caste feelings and look at the issue like a third person, dispassionately. As long as you feel yourself a brahmin - it is visible and naked in all you wrote in TOI and here, and in swarajyamag - you will present false pictures.


    -- Bala Sundara Vinayagam

    ReplyDelete
    Replies
    1. Mr Bala Sundara Vinayagam - this is a continuation of your hate crime against Brahmins ..What gives you the right to talk ill about other caste or religions .. ARe you the self appointed judge- Venkat

      Delete
  8. Sorry. I have to say something more: two more:

    When we say Tamil Brahmins, it is a reflexive act from us to visualise them as innocent, virtuous and deserving mercy. Long ago, it was a correct visualisation. But not now. As the Elder seer of Kanchi used to write and say, the Tambras have changed and become complete materialists. In all his talk and writings, he exhorted Tambras to return to their old way of live: simple living and high thinking. He may not have included the priests but only those Brahmins, like you, in different professions. But we must include priests also today. This may not be as bad as we think: because in a society madly in search of new gadgets and new luxuries, high thinking and simple living can isolate any one. Brahmins want to live like others and experience and enjoy the luxuries of life. That’s not an issue: to be like others. But the issue is: they use religion as hypocrisy – that make people like you to use adjectives for them like: appaavis and poor. An old and innocent priest was attacked, w/o knowing whether the priest abused religion or not.
    Next problem more glaring and havin a huge potential of isolating them is that their fanatical association with Hindutva. One can argue citing semantics of the term Hindutva. It is sacred and correct to love one own’s religion and wanting to practice it – what’s wrong with that? But Hindutva in today context is not a religious term. It is socio-political. The religious Hindutva doesn’t make one hate other religions and see vasudeva kudumbakkam. But political hindutva gets legitimacy only if the Hinduvavite hates and denigrates other ideologies. Brahmins, to a man, are followers of fanatical Hindutva. Exceptions are there; but we take a general view. If you doubt it, ask a common non-brahmin: he would say, yes, all of them will vote for BJP and want Hindutva agenda to be pushed. So, in any Hindutva group, you find them: fanatical and spewing venom. Go to Tamilhindu.com and you will see a lot of crowd.
    Since they get associated with political Hindutva and overlook all faults of Jeyalalitha merely because nammaavaa, it is no wonder others treat them to be fanatical caste and ideology lovers.

    -- Bala Sundara Vinayagam

    ReplyDelete
    Replies
    1. The only sensible word in your series of gibberish narrations is in the beginning " Sorry" ...Please grow up .. Venkat

      Delete
  9. To sum up, today Tambras are political and fanatical. They are also casteists – only I shall support my caste man, even if he is the notorious Devanathan of Kanchi !. All these three characterises are found in other people too, but for different ideologies. Other people are scattered across following a variety of ideologies and parties, but Tambras are found only in one ideology and one party. If they take to that ideology for general purpose, like India heritage etc., it may be ok somewhat. But there is a selfish ardour and hope of bringing back the glory of Chola days when their ancestors received royal privileges and grants and got treated with velvet gloves and became cynosure of the eyes of general society. People called them samis and fell at their feet for blessing. H.Raja’s Hindutva is for political sops and favour. A brahmin’s Hindutva is to bring back the past. In one auto biographical writing of a famous Tamil Brahmin writer, he says he lived for many decades outside TN and when he returned to native village, he bemoaned to see there was none to call him Sami and fall at his feet. Because they are the foot soldiers of Hindutva, it was Bjp who first came out in open to condemn the attack on the priest. Grateful gesture, indeed! Others either hesitated, or delayed or kept mum because no political gain for them to support theTambaras: after all, they will vote for Jeyalalitha and for Modi for Parliament. If Bjp comes to help for political gain, why not others not to come to help for political loss?
    We must see the undercurrents in society and the lives of modern Tambras should be taken as members of the self-same society you and I live in, i.e as the Tambras swim in the currents along with, the dirty flotsam and jetsam will stick on all on their bodies and clothes like on us. We and them are wallowing in the same gutter. Truth being this, we single out them from society and hold them up as innocent, poor, religious and virtuous and our sympathies should go them.

    Finis

    Au revoir

    ReplyDelete
    Replies
    1. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை...

      Delete
  10. Brilliant Badri - Venkat

    ReplyDelete
  11. பூணூல் அறுப்பை தேசமே கண்டிக்க வேண்டும் என்று பொங்குகிறார் பத்ரி. நியாயம்தான். நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.

    அதே நேரம் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பத்ரி ‘ஏனோ’ நிம்மதி அடைந்தார் இல்லையா, அதுமாதிரியான நிம்மதியை பூணூல் அணியாதவர்களும் இச்சம்பவத்தில் அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்கிற கோணத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அரவிந்த்Fri Apr 24, 03:55:00 PM GMT+5:30

      இதுவும் ஞயாயமாதானே படுது !

      Delete
    2. பாபர் மசூதி இடிப்பில் நிம்மதி அடைந்தவர்கள் என்று எங்கள் யாவரையும் பொதுமைப் படுத்தி எத்தனை நாட்களுக்குத் தான் உங்கள் சாயம் வெளுக்கும் போலி மத சார்பின்மைக் கொள்கையைப் பரப்பிக் கொண்டிருப்பீர்கள்? பூனூலை அறுத்தவனுக்கும் பெரியாரியதுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஞாநி வாதாடுவது சரி என்றால் பாபர் மசூதியை இடித்தவனையும் எங்களையும் நீங்கள் ஏன் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறீர்கள்? உங்களிடம் நியாயமான பதிலை எதிர்பார்க்க முடியாது என்றாலும் பாதிக்கப் பட்டவர்களுக்குக் குரல் கொடுக்க எங்களுக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் கேட்க வேண்டியதாய் இருக்கிறது... உங்களுக்கு வியர்வை வடிந்தால் அது கூட ரத்தம்... எங்களுக்கு ரத்தம் வடிந்தால் அது கூட உங்களைப் பொறுத்த வரை தக்காளி சட்னி... அப்படித்தானே? நல்லா இருக்குதுங்க உங்க ஞாயம்...

      Delete
    3. where did babar masoothi come here ? what is there to correlate?

      Delete
    4. எங்களுக்கு ரத்தம் வடிந்தால் // இதில் எங்களுக்கு என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்

      Delete
    5. ஹிம்..... ஆமாங்க, தக்காளி சட்னிதாங்க.

      Delete
    6. பொன்.முத்துக்குமார்Fri Apr 24, 09:32:00 PM GMT+5:30

      இதுகூட நியாயமாத்தான் படுது :))

      Delete
    7. 20 பேரை (சீம்)ஆந்திரர் கொன்ற போது ' நிம்மதி' அடைந்து, அதை தெலுங்கு சினிமா விமர்சனத்தில் போட்டு காமெடி ஆக்கியவர் வடுகவந்தேறிகள் - என்ற கோணத்திலும் கூடவே பரிசீலிப்பது நல்லது!

      Delete
  12. I totally agree with Badri. The comments which support the attacks show the crooked mind of the writers who are in that Periyar crowd.

    ReplyDelete
  13. கண்டிக்க தக்க ஒரு குற்றமே இது. மாற்று கருத்து எனக்கோ, தலைவர் கலைஞருக்கோ , அய்யா வீரமணிக்கோ நிச்சயம் இருக்காது. ஆனால் இது போன்ற சிறு குற்றங்களுக்கும் கலைஞர் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆயிரத்தில் ஒன்று லட்சத்தில் ஒன்றாக நடக்கும் குற்றமாகவே இதை பார்க்க வேண்டும். குற்றவாளிகள் பிடிபட்டுள்ளார்கள், விசாரணை நடக்கிறது. இது போன்ற குற்றம் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நடக்குமேயானால் நிச்சயம் கலைஞர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், அப்படி நீங்கள் ஒடுக்கப்படும் சமூகமாக மாறும் நிலை வந்தால் (அதற்கான வாய்ப்பு 0.1 சதவிகிதம் கூட இல்லை என்பதே நிதர்சனம்) உங்களுக்காகவும் திக மற்றும் திமுக போராடும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

    ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பதையும் ஊருக்கு சொல்லும் பொருட்டு கீழே நான் படித்த செய்தியினையும் கொடுத்துள்ளேன். போலீஸ் விசாரணை நடக்கிறது. குற்றவாளிகள் எங்கும் ஓடிவிடவில்லை, போலீஸ் கஸ்டடியில் தான் இருக்கின்றனர். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும். பொறுத்திருங்கள் பத்ரி, அதற்குள் இது போன்ற விஷமமாக பிரசாரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  14. மணிமாறன் வயிரவன்
    மயிலாப்பூரில் அர்ச்சகரின் பூணுல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் பின்னணியில் வெளிவராத உண்மைகள்:
    சென்னை மயிலாப்பூரை சேர்ந்த அர்ச்சகர் விஸ்வநாதனை தாக்கிய கும்பல் ஒன்று அவரது பூணுலை அறுத்ததாக செய்தி வெளியானது. இந்த சம்பவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்களும், நாளேடுகளும் செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படும் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் விஸ்வநாதன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பூணுல் அறுப்பு உள்ளிட்ட அரசியல் எதுவும் இல்லை என்பதே உண்மை. கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழா அன்று மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள விநாயகருக்கு பூஜை செய்வது தொடர்பாக ஒரு பக்தருக்கும், அர்ச்சகர் விஸ்வநாதனின் மகனும் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகருமான சண்முகநாதனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சாமிக்கு அலங்காரம் செய்வதில் திறமைசாலியான அந்த பக்தர் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்துள்ளார். இதற்கு ஒரு உபயதாரர் உதவியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர் சண்முகநாதன் சாமி சிலையை தொட்டு பூஜை செய்வதற்கு உங்களுக்கு உரிமையோ, அருகதையோ இல்லை, அதை வைதீக பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறி அந்த பக்தரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பக்தர் மாலை போட்டிருந்ததால் பதில் கூறாமல் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று திரும்பிய அந்த பக்தர் நேற்று முன்தினம் மாலையை கழட்டியுள்ளார். அன்றைய தினமே சிலரை ஏற்பாடு செய்து சண்முகநாதன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். அப்போது காரணீஸ்வரர் கோவில் சாவியை வாங்க சண்முகநாதனின் வீட்டிற்கு சென்ற விஸ்வநாதனை தவறுதலாக அந்த கும்பல் தாக்கியுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் கூச்சலிட்டதால் அந்த கும்பல் தப்பியோடியது. இந்த சம்பவத்தை விஸ்வநாதனின் இரண்டாவது மகனான அர்ச்சகர் மங்கலநாதன், திட்டமிட்டு பூணூலை அறுத்ததாக அரசியல் சாயம் பூசினார். இதற்கு வலுவூட்டும் வகையில் அசோக் நகரில் ஒரு முதியவரின் பூணூலை ஒரு கும்பல் அறுத்துவிட்டு ஓடிவிட்டதாக கதை புனையப்பட்டது. (இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது). இந்து மதத்தின் பிரதிநிதி தாங்கள் தான் என்று கூறும் பார்ப்பனர்களின் பிரதிநிதியான சண்முகநாதனின் அடாவடித் தனம் மயிலாப்பூருக்கே தெரிந்த விஷயம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காரணீஸ்வரர் கோவில் நடை ஒரு நாள் கூட காலை 6 மணிக்கு முன்னதாக திறக்கப்பட்டதில்லை. இன்று கூட அந்த கோவில் 7 மணிக்கு தான் திறக்கப்பட்டது. இந்த கோவில் மாதவ பெருமாள் கோவில் நிர்வாக அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அவர் காரணீஸ்வரர் கோவில் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை. சாமி சிலைகளை தொட்டு பூஜை செய்ய பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதாக எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை. தெருவோர நடைபாதையில் உள்ள பிள்ளையாருக்கு பூஜை செய்த பக்தரிடம் சண்முகநாதன் மோதியது பிராமணீய ஆதிக்கத்தின் வெளிப்பாடே. சிலைகளை வைத்து பூஜை செய்வது இந்நாட்டின் பூர்வீக மக்களின் வழிபாட்டு முறையாகும். இது ஆரியர்களின் வருகைக்கு முன்பே இந்தியாவில் இருந்துள்ளது என்பதற்கு ஏராளமான வரலாற்று சான்றுகள் உள்ளன. இந்த உண்மை மிதவாதிகளாக இருக்கும் பெரும்பான்மை பக்தர்களுக்கு தெரிந்தால் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை.





    ReplyDelete
  15. பாபர் மசூதி இடிப்பில் நிம்மதி அடைந்தவர்கள் என்று எங்கள் யாவரையும் பொதுமைப் படுத்தி எத்தனை நாட்களுக்குத் தான் உங்கள் சாயம் வெளுக்கும் போலி மத சார்பின்மைக் கொள்கையைப் பரப்பிக் கொண்டிருப்பீர்கள்? பூனூலை அறுத்தவனுக்கும் பெரியாரியதுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஞாநி வாதாடுவது சரி என்றால் பாபர் மசூதியை இடித்தவனையும் எங்களையும் நீங்கள் ஏன் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறீர்கள்? உங்களிடம் நியாயமான பதிலை எதிர்பார்க்க முடியாது என்றாலும் பாதிக்கப் பட்டவர்களுக்குக் குரல் கொடுக்க எங்களுக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் கேட்க வேண்டியதாய் இருக்கிறது... உங்களுக்கு வியர்வை வடிந்தால் அது கூட ரத்தம்... எங்களுக்கு ரத்தம் வடிந்தால் அது கூட உங்களைப் பொறுத்த வரை தக்காளி சட்னி... அப்படித்தானே? நல்லா இருக்குதுங்க உங்க ஞாயம்...

    ReplyDelete
  16. நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் நக்சலைட்டுகள் அல்லது முஸ்லீம் தீவிரவாதிகள் சதி என்று தான் எல்லா பத்திரிக்கைகளும் தங்களது ஊகத்தையே தீர்ப்பாக அறிவித்துள்ளனர்.அடுத்தடுத்த விசாரணைகளில் இந்த ஊகங்கள் பொய்ப்பிக்கப்பட்ட வரலாறும் உள்ளது.பத்ரி போன்ற பத்திரிக்கையாளர்கள் அப்போதெல்லாம் hate crime பற்றி பேசியதே இல்லையே,ஏன்?

    ReplyDelete
  17. யுவகிருஷ்ணா: உண்மையான உங்கள் கருத்தை உங்கள் பதிவில் இடும் நாள் வருமா?

    ReplyDelete
  18. ///நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால், நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்.// பூணூல் அணிவது சமதர்ம சமுதாயத்தின் குறியீடா?

    ReplyDelete
  19. மிக முக்கியமாக அ.தி.மு.க இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

    ReplyDelete
    Replies
    1. //ஆளும் அஇஅதிமுகவிடமிருந்து ஒரு சத்தம் இல்லை//

      ஊமரு, பதிவ ஒழுங்கப்படி ஊமரு!!!

      Delete
  20. சமூகத்துக்குப் பயனுள்ள இடுகைகளை பத்ரி பல காலம் வெளியிட்டிருந்தாலும் அங்கெல்லாம் ஒன்றோ இரண்டோ கமெண்டுகள் வந்திருக்கும். இந்த இடுகைக்கு அம்பிகள் பொங்கியதைக் கண்டு அவரே ஆச்சரியப்பட்டிருப்பார்.

    பேஸ்புக்கெங்கும் 'கோயிஞ்சாமிகள்' என்று பார்ப்பனர்களால் நக்கலடிக்கப்படும் மௌஸ் பிடிக்கத் தெரிந்த நவபார்ப்பனர்கள் லைக்குகளை அள்ளி வீசுவதற்குப் பின்னும் யாரும் இச்செயலை கண்டிக்கவில்லை என்பது பச்சைப் பொய்.

    ** இரண்டும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதுதானே? இதைக் கண்டிப்பதற்கு அதைக் கண்டித்து வாங்கிவந்த சான்றிதழைக் காண்பிக்கவேண்டுமா? இருவரும் தமிழர்கள்தானே? ஒரு பக்கம் சுட்டது ஆந்திர போலீஸ். இன்னொரு பக்கம் தாக்கியது தமிழர்கள். தாக்கப்பட்டவர்கள் வெறும் பார்ப்பனர்கள். பிரச்னை அதுதானா?**

    ஏன் பத்ரி, ஆந்திராவில் வெறும் தமிழர்கள் கொல்லப்பட்டதால்தான் நீங்கள் கண்டிக்கவில்லையா?

    ** இந்தக் கட்சிகளின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்கூட வாய் திறக்கவில்லை.**

    அவர்களெல்லாம் 2002ல் அகமதாபாத் கலவரங்களில் ஒருத்தர் கம்முனு ரசித்துக் கொண்டு இருந்தாரே, அவரிடம் பாடம் கற்றிருக்கிறார்கள் போல.

    **பிரமாதம். புடைவையைத்தானே பறித்தார்கள்? சட்டையைத்தானே கிழித்தார்கள்? லேசாக மேலேதானே கையை வைத்தார்கள்? கொஞ்சமாகக் கீழேதானே தள்ளினார்கள்? ஒரு தட்டுதானே தட்டினார்கள்? வெறும் இரண்டு பேரைத்தானே தாக்கினார்கள்? அடடா, அடடா!**

    உங்களுக்கு வந்தா ரத்தம். அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சாஸா?

    ** தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இவை அனைத்துமே ஹேட் கிரைம் என்பதன்கீழ் வரும். சென்னையில் இரு பார்ப்பனர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதே வகையின்கீழ் வரும். இவற்றை அனைத்து மக்களும் கடுமையாக எதிர்க்கவேண்டும். நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால், நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்.**

    பேஷ், பேஷ் இது ரொம்ப நன்னா இருக்கு.
    இப்படியாப்பட்ட சிறப்பு வாய்ந்த மாட்டை தென்னை மரத்தில் கட்டி விட்டியாச்சு. திருமாவோ, டாக்டரோ கூட்டணிக்கு வரலைன்னா வேணா உ.பி சதீஷ் சந்திர மிஸ்ராவை கூப்பிட்டுப் பாருங்க.

    ReplyDelete
  21. தமிழ் பிராமணர்கள்!
    நீங்கள் தமிழர்களா இல்லை பிராமணர்களா? ஏன் தமிழையும் பிராமணர்களையும் பசை போட்டு ஒட்ட வைக்கிறீர்கள்? எங்காவது தமிழ் நாடார், தமிழ் வன்னியர், தமிழ் கவுண்டர், தமிழ் தேவர், தமிழ் முத்தரையர், தமிழ் பறையர், தமிழ்ப் பள்ளர், தமிழ் நாவிதர் என்று கேள்விப்பட்டுள்ளீர்களா?

    எங்காவது தெலுங்கு கவுண்டர், பெங்காலி வன்னியர், பிகாரி நாடார் என்று கேள்விப்பட்டுள்ளீர்களா?

    இதுதான் 20 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒலிக்காத குரல்கள், சிறு சம்பவத்திற்கு ஓங்கி ஒலிப்பதன் காரணம்.

    ReplyDelete
    Replies
    1. Der Sir,

      The names of castes you have mentioned are only from Tamilnadu not in other staes, may be identified by some other names. But brahmins are available in every states in the same name.

      Delete
    2. You aren't fully correct. Paraiyars, Pallars, Nadars, Chettiars are very well present in Kerala. Go to Varkala, we can find many Chettiars. Usilamani is a Malayalam actor also. In one film he acted as a fat and old Chettiar with two young wives, the comedy was a big hit there. Nadars occupy important position in Kerlala politics. Neelalokida Dasan Nadar was a Minsiter, although removed, for some sexual harassment of an IAS officer. His wife is well known to me: she is now MLA of Kovalam. Actor Satyan, so famous for the role of Pazhani in Chemmeen, astounded Kerala with his sterling performance, was a CSI nadar who was before entering cinema, was an Inspector of Poice in Kerala, fondly and affectionately called by Keralaites as Nadar Inspector. Pillais, as you know, are omnipresent in Kerala. The Manonmayeem Sundaram Pillai, who wrote Tamil State Song, was a Kerala born Pillai (from Alleppey). Pillais of KK dist give and taken brides from Kerala. All of them dont call themselves Malayalee Pillais and Tamil Pillais, Malayaelee Nadars and Tamil Nadaars. It is only you who call your Tamil Brahmins.

      Delete
    3. தமிழ் பிராமணர்கள் தமிழ் பேசுகிறவர்கள்,தாய் மொழியாக கொண்டவர்கள் நீர் சொன்ன மற்றவரெல்லாம் சொன்னவுடன் தமிழர் என்று தெரியும். பிராமிணர்கள் தமிழர்கள் அல்ல என்று ஒரு கூட்டம் சொல்லிகொண்டே இருக்கிறது. ஆகவே இச்சொல் வழக்கில் வந்துள்ளது. இதற்கு இவ்வளவு பெரிய வியாக்கியானம் கொடுக்கும்படி உள்ளது. வெற்று சொற்கள் . நேரமும் வீண்

      Delete
    4. Not the reason quoted by you. The abuse is continuing by your type of people over a century now. And after 1967 it is more virulent. It is a hate crime.

      Delete
  22. Thanks Badri. Great article again.I'm sure you must have experienced "racism" first hand in your daily life, from common man to VIPs. Write about that as well, everyone will come to know how deep the cancer of "brahmin hatred" has spread.

    ReplyDelete
    Replies
    1. He has come already full circle. What more to cover yet? He is now identified as a Casteist writer. What more label you want him to add to his credit?

      Delete
  23. பிராமணனை வெறுப்பவன் முட்டாள் பூனூலை அறுப்பவன் அயோக்கியன் புரோகிதரை அடிப்பவன் காட்டுமிராண்டி இதுதான் எனது கருத்து. வந்தேரிகளுக்கெல்லாம் இட ஒதுக்கீடு கொடுக்கும் இந்த நாட்டில் மூதாதையர் செய்தவற்றுக்காக பேரப்பிள்ளைகளை பழி வாங்குவதுபோல் அரசு வேலையில், படிப்பில் ஒதுக்கீடு இல்லாமல் அதனால். பிறந்த இந்த மண்ணை விட்டு அயல்நாடு சென்று பிடித்தம் இல்லாத வாழ்க்கை வாழும் அந்த சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய குரல் என்றும் ஒலிக்கும். இன்றைக்கு ஒரு வயதான அர்ச்சகரை அடிக்கும் இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு கிராமங்களில் இன்றைக்கும் சேரிக்கும் ஊருக்கும் தனித்தனியாக தண்ணீர்த்தொட்டி இன்னும் பிற வசதிகள் கேட்கும் ஆதிக்க சாதியினரை நோக்கி குரலை உயர்த்தும் துணிச்சல் உண்டா? கண்டதேவி கோயில் தேர்த் திருவிழா பிரச்சினையில் எந்த பிராமணன் தலையிட்டான்? தமிழகத்தில் ஒரு வாரம் ஹெல்மெட் போட்டு பஸ் ஓட்டினார்களே அதற்கு எந்த பிராமணன் காரணம்? தாமிரபருணி ஆற்றில் 18 பேர் செத்தார்களே அதற்கு பிராமிணனா காரணம்? தென் மாவட்ட சாதிக் கலவரத்துக்கும் பிராமினணுக்கும் என்ன சம்பந்தம்? மேற்கு மாவட்ட சாதிக் கொடுமைகளுக்கு எந்த பிராமிணன் காரணம்? ஒரு தாழ்த்தப்பட்டவன் வீட்டு விசேஷத்துக்கு ஒரு புரோகிதர் வரவில்லையென்றால் அதற்கு காரணம் அவர் அல்ல. அவர் ஒரு தாழ்த்தப்பட்டவன் வீட்டுக்கு சென்றால் அவரால் பிற்படுத்தப்பட்டவன் வீட்டுக்கு செல்ல முடியாது. அதுதான் காரணம். இன்றைக்கு IT துறையில் அரசாங்க வேலையில் ஒரு தாழ்த்தப்பட்டவனை ஒதுக்குவது ஒரு பிற்படுத்தப்பட்டவன்தானே தவிர வேறு யார்? இன்றைக்கு அய்யர் matrimony மட்டும்தான் உள்ளதா? மற்ற சாதிக்கு கிடையாதா? இந்தப் பகுத்தறிவுவாதிகள் கவுரவக் கொலைக்கு எதிராய் இதுவரை வாய் திறந்துள்ளார்களா? இந்தப் பகுத்தறிவுவாதிகள் தாங்கள் தாழ்த்தப்பட்டவர்களை வெறுப்பதுபோல் பிராமணனையும் வெறுக்க வைக்கும் சூழலை உருவாக்கும் முயற்சியில்தான் உள்ளனர். சாதி வெறியர்களை இவர்கள் என்றைக்காவது திட்டி அறிக்கை விட்டுள்ளனரா?

    ReplyDelete
    Replies
    1. Good reply to all
      This kind of argument lasts 60 years
      After 1947
      Will be there forever

      Delete
    2. பிராமணந்தான் இந்த நாட்டில் ஏற்றத் தாழ்வை உருவாக்கியவன் என்று சொல்லும் பகுத்தறிவுவாதிகளே இன்றைக்கு கடந்த 40 வருடங்களாக அரசின் அத்தனை பதவிகளிலும், சட்டமன்றத்திலும், IAS IPS பதவிகளில் எத்தனை பார்ப்பனன் உட்கார்ந்தான்? உட்கார்ந்ததது மற்றும் ஆட்சி புரிந்தது, சட்டம் இயற்றியது எல்லாமே மற்ற சாதிக்காரர்கள்தான். ஆனால் ஏன் சாதி அப்படியே சிம்மாசனம் இட்டு உட்கார்ந்திருக்கிறது? ஏன் இன்னும் மனிதனே மனிதக் கழிவை அள்ளுகிறான்? இட ஒதுக்கீட்டின் மூலம் வந்தவர்கள் மட்டுமே நேர்மையாகப் பணியாற்றியிருந்தால் கூட இன்றைக்கு ஊழல் இல்லாத சமுதாயம் படைக்கப்பட்டிருக்கும். நடந்ததா? என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். பிராமினந்தான் இன்றைக்கும் நேர்மையாகப் பணி செய்கிறான். நீங்கள் எந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கோ அல்லது நிறுவனுத்துக்கோ செல்லுங்கள் அங்கே sincere என்று பணியாற்றுபவன் கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருப்பான். . பிராமணனை ஒழிப்பதுதான் சாதி ஒழிப்பு என்று கூறும் பகுத்தறிவுவாதிகளே! எந்த கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவன் ஊரின் நடுவில் வசிக்கிறான். எல்லா மதத்தினரும் ஊருக்குள் வசிப்பான். ஆனால் தாழ்த்தப்பட்டவந்தான் ஊருக்கு வெளியே வசிப்பான். சாதாரண தாழ்த்தப்பட்டவனை விடுங்கள். இன்றைக்கு திருமாவளவனை எந்த திராவிடக் கட்சி மதிக்கிறது? திமுக காரனே கூசும் அளவுக்கு தி முக தலைமையை புகழ்ந்த திருமாவளவனுக்கு திமுக ஒரு சீட்தான் கொடுத்தது. தமிழ் நாட்டில் ஒரு வார காலம் சாதி ஊழிக் காற்றை நடத்தியவர்களுடன் கூட்டணிக்காக கல்யாணச் சாப்பாட்டோடு பல்லை இழித்து திருமாவளவனை கூட்டணியைவிட்டு போகாமல் போகச் சொன்னது இந்த திராவிடக் கட்சிதானே? அதில் எந்த பிராமணன் தலையிட்டான்? இத்தனை வருடம் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டபின்னரும் இன்னும் தாழ்த்தப்பட்டவன் தப்படிக்கப் போகிறான் என்றால் .......மலம் அள்ளச் செல்கிறான் என்றால் .......சாக்கடை, கழிவறையை சுத்தம் செய்யச் செல்கிறான் என்றால்.... இந்த திராவிட பகுத்தறிவுவாதிகள் என்ன செய்தார்கள்? தாழ்த்தப்பட்டவனுக்காக மத்திய அரசு கொடுத்த நிதி ஒன்று பயன்படுத்தாமல் விடப்படுகிறது. அல்லது அனைவருக்குமான இலவசத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றால்.....ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றால்.....பகுத்தறிவுவாதிகளே......சமூக நீதி என்பது என்ன? அல்லது யாருக்கு? இறுதியாக ஒன்று. இன்று இருக்கும் எந்தக் கட்சியும் இந்து மதத்திலிருக்கும் சாதிப் பேயை ஓட்ட நினைக்கவில்லை. மாறாக தாழ்த்தப்பட்டவனையும், அவனின் துணை கொண்டு பிராமணனையும் மேலும் மேலும் கீழே இறக்கப் பார்க்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு மதம் ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் சாதி ஒரு பிரச்சினை. உச்சியில் இருப்பவனையும், அடித்தளத்தில் இருப்பவனையும் ஒரு சேர கீழே தள்ளவேண்டும். அவ்வளவுதான். நடுவில் இருப்பவன் கீழே இருப்பவனை உதைக்கிறான். மேலே இருப்பவனை குத்துகிறான். இதில் மேலே இருப்பவன் குப்புற விழுந்தால் கீழே இருப்பவன்தான் காரணம் என்று மேலே இருப்பவனுக்கு சைகை காட்டுகிறான். இதை மேலே இருப்பவனும் தவறாக நம்புகிறான்.

      Delete
    3. நான் கண்டிப்பாக பிராமணன் அல்ல

      Delete
    4. **
      மேற்கு மாவட்ட சாதிக் கொடுமைகளுக்கு எந்த பிராமிணன் காரணம்? ஒரு தாழ்த்தப்பட்டவன் வீட்டு விசேஷத்துக்கு ஒரு புரோகிதர் வரவில்லையென்றால் அதற்கு காரணம் அவர் அல்ல. அவர் ஒரு தாழ்த்தப்பட்டவன் வீட்டுக்கு சென்றால் அவரால் பிற்படுத்தப்பட்டவன் வீட்டுக்கு செல்ல முடியாது. அதுதான் காரணம்.
      **

      ஆக, உங்களுக்காக தாழ்த்தப்பட்டவன் வீட்டுக்கு போகத் தோணாது. பிற்படுத்தப்பட்டவன் சொன்னாத்தான் போவீங்களா?
      நீங்களாகவே போய் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டியது தானே.

      Delete
  24. Shanmuganaathan SwaminathanFri Apr 24, 10:43:00 PM GMT+5:30

    சமூகத்திடம் இருந்து எந்த உதவியும் பெறாமல், சமூகத்துக்கு கான்ட்ரிப்யூட் செய்கிறவர்களுக்கு கிடைக்கிற மரியாதை இதுதான்.

    மைனாரிட்டி எண்ணிக்கையில் இருக்கிற சாஃப்ட் டார்கெட்டை பொது எதிரியாய் காட்டி , சேஃப் கேம் ஆட நினைக்கிறார்கள்.

    ReplyDelete
  25. Badhri kudos
    This is very evident, that it is done for political mileage. Since BJP is trying make awareness with the masses and trying unity among Indians. These hypocrites want to diversify the thoughts and split Hindus based on caste, so that again they can divide aryan dravidan vote banks and split votes to feed dravidian parties. Hope you understand what I am trying to brief.

    ReplyDelete
    Replies
    1. Bjp wants brahmin votes of TN. Because they are sure vote bank. They want to confirm it more and more. Brahmins help them retain deposits at least. So, it is with ulterior motive that they lend support to the Brahmins

      Delete
  26. "பன்றிகளுக்கு இசை கற்றுத்தர முயலவேமுயலாதே! ஏனெனில் - அதனால் உனக்கு ஏற்படும் நேரவிரயத்திற்கு அப்பாற்பட்டு, அவைகளுக்கு அது மகாமகோ கோபத்தையும் ஊட்டும்."

    -- ராபர்ட் ஹென்லென்

    எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான் இந்த ஆசாமி!

    தர்க்கரீதியான சிந்தனை, வரலாற்றறிவு, நுண்மான் நுழைபுலம் அறிதல், தார்மீகச் செயல்பாடுகள் என்பதெல்லாம் இல்லவேயில்லாமல், வாழ்வனுபவங்களை செறிவுபடுத்திக் கொண்டு மேலே தம்மை தொடர்ந்து உயர்த்திக்கொண்டு செல்லாமல் - மாறாக -
    பரப்புரைகளுக்கும் பசப்புரைகளுக்கும் இலவசப் பிச்சைகளுக்கும் குடிவெறிக்கும் வெறுப்பியத்துக்கும் அடிமையாகி இருக்கும் குடிமையுணர்ச்சி அற்ற உதிரிவாத திராவிட இயக்க சமூகத்துக்கு எப்படி இசையைக் கற்றுக் கொடுக்க முடியும், சொல்லுங்கள்?

    உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. 1. அந்த இசையைத்தான் கொஞ்சம் விளக்குங்களேன்.

      2. பன்றிகள் தொழுவத்தில் கோமான்களுக்கு என்ன வேலை என்று கேட்டால் ஏன் கோவம் வருகிறது.

      Delete
    2. One Ramasami is enough to isolate Tamil brahmins from Tamil society. Write more and more Sir, in this way. Tamil brahmins will be hatred more and more.

      Delete
    3. அற்புதம்!
      உங்கள் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்!

      Delete
  27. எல்லோருமே பத்ரியா மாறிட்டா இந்த குடுமிப்பிடி சண்ட தேவயே படாதே... ஏன் நாற்பத்தாறு பேருக்கும் இந்த கொல வெறி

    ReplyDelete
  28. ENTHA PONGAL SANGARAMANI KONNAVAN MELLAYUM VARANUM...

    ReplyDelete
  29. 1. the attackers need to be arrested as per law.
    2. This is a stray incident hence why hullabullo needed.?
    3, Had the news be reported as Hindu priests are getting attacked, public reaction would have been different but it is tried as attack on brahmins. & to make individual gains.

    ReplyDelete
  30. இங்கு ஆதரவு தெரிவிக்கும் அம்பிகளே, காஞ்சிபுரம் சங்கரராமனுக்கு நீதி கிடைக்கப் போராடினீர்களா? உங்கள் எழுச்சியை அங்கிருந்து தொடங்கியிருக்கலாமே? அங்கு என்ன நடந்தது? அது ஏன் இங்கு நடந்திருக்கக் கூடாது?

    ReplyDelete
    Replies
    1. Sankararaman's case was fought in court. State was very virulent in booking Sankaracharya. You guys only have interest in convicting him and you took a biased stand. Let truth prevail in that case as per law. Why should anyone go there and demonstrate? Arguement's lacks sense.

      Delete
  31. * இன்று பார்ப்பணீயம் ஒடுக்கப்படுபவர்களை நாங்கள் தாக்கவில்லையே என்று ஓடிவிட முடியாது.

    * ஏனென்றால் நால் வருணங்களையும், வருண வேறுபாடுகள் பிறப்பினால் வரும் என்று அதைச் சார்ந்த சிந்தனை போக்குகளை இம்மண்ணில் விதைத்தது பார்ப்பணீயமே.

    * பிறப்பினால் பேதம் உண்டாகும் என்ற சிந்தனையை பேதத்தை எந்தத் தமிழ் நூல் அல்லது இலக்கியம் அல்லது பண்பாடு இந்த மண்ணின் மக்களிடையே விதைத்தது?

    * இன்று நவபார்ப்பணர்கள் என்று நான் அழைக்கும் பல பிற்படுத்தப்பட்டவர்கள் இன்னும் சிந்தனைத் தெளிவு பெறாததாலேயே பார்பணீயத்தின் செயல் வீரர்களாக (காலாட்படையாக) உருவாகி உள்ளனர். பார்பணீயத்தின் உள்வட்டத்துக்குள் சேரவும் தலைப்படுகிறார்கள்.

    * பார்ப்பணீயத்தின் முதன்மைப் பிரதிநிதிகளுக்குத் தெரியும், தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் இன்று அவர்கள் களத்தில் இறங்கக்கூடாது என்று. அதற்கு மாற்று தங்களுக்கென ஒரு காலாட்படையை உருவாக்குவது.

    * அந்தப் படைதான் நவபார்ப்பணர்களாக உருவாகி வரும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள்.

    * எனவே, நாங்கள் தாக்கவில்லை, தாக்குதல்களுக்கு நாங்கள் காரணமின்னலை என பார்ப்பணீயம் நழுவிக் கொள்ள முடியாது.

    * இம்மண்ணில் சமூக மாற்றம் உண்டாகும் வரை, பார்ப்பணீயம் பொறுப்பேற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    ------------------------------------------------------------------------------------------------

    * அடுத்து தங்களுக்கு என்று ஒரு குழு உருவாக்கி, அக்குழுவின் நலனுக்கு அடுத்தவன் உழைப்பில் தான் உண்டு வாழ்வதே பார்ப்பணீயத்தின் முதன்மைக்கூறு.

    * இது பார்ப்பணீயத்தை முன்னெடுப்பதற்கும், பார்ப்பணீயத்தின் பிரதிநிதிகளின் வாழ்வாதாரத்துக்கும் பொருந்தும்.

    * அதன் அடுத்தகூறு, தன் குழு மட்டுமே வாழவேண்டும், அடுத்தவன் தன்னை அண்டியே/ஆண்டியாகவே இருக்க வேண்டும் என இருப்பது அதன் அடுத்த கூறு.

    * நான் சொல்வதை மட்டும் நீ கேள், உன் கருத்து எனக்குத் தேவையில்லை என்பது அதன் அடுத்த கூறு.

    * நல்வாழ்வு தன் குழுவுக்கு மட்டுமே, அடுத்தவனுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்வதும் அதன் அடுத்த கூறு.

    இதுதான் முதல் discrimination.

    * இத்தகைய சிந்தனைப்போக்கின் விளைவுகள் இங்கு மாறாதவரை இந்த ஒடுக்குமுறைகளுக்கு பார்ப்பணீயம் முதன்மைப் பொறுப்பை ஏற்கத்தான் வேண்டும்.

    * பெரியார் செய்த கலகத்தின் விளைவு, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்தனைத் தெளிவு அடையும்போது நான் ஏன் பார்ப்பணீயதுக்குப் பல்லக்குத் தூக்க வேண்டும் என்ற கேள்வி வரும், அடுத்தது எப்படி அடுத்தவனை எனக்கு அடிமையாக்குவது என்ற எதிர்மறைச் சிந்தனையையும் தோற்றுவிக்கும்.

    * இது இரண்டுமே பார்ப்பணீயத்தின் அதிகார பீடத்தை ஆட்டங் காணச் செய்யும். இது reverse-discrimination.

    * இந்தப் பிண்ணனியிலேயே, பார்ப்பணீயத்தின் பிரதிநிதிகள் தங்கள் அதிகாரம் கை நழுவிச் செல்லாமல் இருப்பதற்காகவே தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக கூப்பாடுகள் எழுப்பப்படுகின்றன.

    முதல் discrimination மாறாதவரை reverse-discrimination மாறப்போவதில்லை.

    ReplyDelete
  32. **
    இம்மாதிரி பெரியாரியர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவே முடியாது. இம்மாதிரியான தாக்குதல்களில் தங்கள் பங்கு என்ன என்பதை பெரியாரியர்கள் விளக்கியே ஆகவேண்டும்.
    **

    சங்கர்ராமன் கொலையை, தேவநாதன் திருவிளையாடலை, சிதம்பரம் வழிபாடு உரிமை இவற்றை யார் விளக்குவார்கள் பத்ரி?

    ReplyDelete
  33. **
    தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இவை அனைத்துமே ஹேட் கிரைம் என்பதன்கீழ் வரும். சென்னையில் இரு பார்ப்பனர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதே வகையின்கீழ் வரும். இவற்றை அனைத்து மக்களும் கடுமையாக எதிர்க்கவேண்டும். நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால், நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்.
    **

    கரெக்ட் பத்ரி, இதை எதிர்த்து சங்கர மடத்தைக் குரல் கொடுக்கச் சொல்லுங்க, ராம கோபாலனை, ராஜாவைக் குரல் கொடுக்கச் சொல்லுங்க. தாழ்த்தப்பட்டவர்கள் நாலு பேரை கோவிலில் அர்ச்சகர் ஆக்குங்க, அவர்களை பார்ப்பணர்களுடன் சமமாக நடத்துங்க. அப்புறம் பிற்படுத்தப்பட்டவர்கள் ஒன்னஞ் செய்ய முடியாதே.

    ReplyDelete
  34. gujaal - நீங்கதான் பெரியார் சிலைக்கு மாலை போட்டு தீபாராதனை காட்ட தெருவுக்கு நாலு அர்ச்சகர் வச்சு இருக்கீங்களே.. அப்புறம் எதுக்கு இன்னும் தனியா அர்ச்சகர் வேணும் வேணும்னு கூப்பாடு போடுறீங்க.. மேல்மருவத்தூர், திருவேற்காடு, பண்ணாரி அம்மன் முதல் தமிழ் நாட்டுல இருக்கிற பல லட்சம் கோவில்கள்ல அர்ச்சகரா இருக்கிறவங்க அய்யர் இல்லைன்னு உங்களுக்கு தெரியாதா ? வெறுப்பை மட்டுமே உங்களுக்கு சொல்லித்தந்த கன்னட நாயக்கர் உங்க மாதிரி கண்மூடித்தனமான படித்த முட்டாள்களை உருவாக்கி வைச்சியிருக்கிறார் .

    ReplyDelete

  35. //* பிறப்பினால் பேதம் உண்டாகும் என்ற சிந்தனையை பேதத்தை எந்தத் தமிழ் நூல் அல்லது இலக்கியம் அல்லது பண்பாடு இந்த மண்ணின் மக்களிடையே விதைத்தது?//

    இது கேள்வி.

    ReplyDelete
  36. //மேல்மருவத்தூர், திருவேற்காடு, பண்ணாரி அம்மன் முதல் தமிழ் நாட்டுல இருக்கிற பல லட்சம் கோவில்கள்ல அர்ச்சகரா இருக்கிறவங்க அய்யர் இல்லைன்னு உங்களுக்கு தெரியாதா ?//

    உங்க எச்சிலில் உருண்டால்தான் நிம்மதியாக இருப்பீர்கள் போலிருக்கிறது.

    ReplyDelete
  37. can they do the same thing to a muslim or a christian in india. why this
    hatred towards hindu brahmins who have now become a minority.
    the so called pseudo secularism and appeasement of other religions is
    mainly for the vote bank politics in India.

    ReplyDelete
  38. //பிறப்பினால் பேதம் உண்டாகும் என்ற சிந்தனையை பேதத்தை எந்தத் தமிழ் நூல் அல்லது இலக்கியம் அல்லது பண்பாடு இந்த மண்ணின் மக்களிடையே விதைத்தது?//

    ."வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்
    சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
    மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
    தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை" சிலப்பதிகாரம் பாடல் "கோவலன் கண்ணகி திருமணம்"....

    2ஆம் நூற்றாண்டிலேயே பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் செய்து கோவலன் கண்ணகியை மணம் முடித்ததாக சொல்கிறது
    கன்னட நாயக்கர் வழி வந்தவர்க்கு தமிழ் நாகரீகம் பற்றி என்ன தெரியும் . தமிழ் இலக்கியம் எப்படி புரியும் ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அறிவை மெச்சுகிறேன். இதில் பார்ப்பனீயம் பிறப்பினால் வந்தது என்று உள்ளதா?

      Delete

    2. A must watch

      https://www.youtube.com/watch?v=C5Gua5FCzu4

      Delete
    3. அநாநி 1: பார்ப்பானியம் பிறப்பினால் வராது என்று மட்டும் இருக்கிறதா என்ன? (கேனத்தனமாக கேள்வி கேட்பது திகவின் தனியுரிமையா என்ன?)

      அநாநி 2: அட்லீஸ்ட் பார்ப்பான்களில் இந்த கிஸ்ணன் மாதிரி கேளுவி கேட்டு சுயபரிசோதனை செய்யும் பார்க்கமுடியும். ஆனால், திகவினராக இருக்கும் பிற்படுத்தபட்ட ஆதிக்க சாதிகளில் இப்படி, நாம் சாதி தலித்களை ஆதிக்கம் செலுத்துவது சரியா என யாராவது கேட்பவர் உண்டா? எல்லா பழியும் பார்ப்பானுக்கே என்று சொல்லிவிட்டு, "பறைச்சிக ஜாக்கெட் போட்டதால்தான் துணி வெலை அதிகமாயிட்டது" என வெட்கமில்லாமல் பேசியவர்தான் உம்ம தலைவர், உம்மிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

      Delete
    4. //பார்ப்பானியம் பிறப்பினால் வராது என்று மட்டும் இருக்கிறதா என்ன? //

      இப்படி உன் பண்பாடு இருப்பதுதானே பிரச்சனை.

      Delete
    5. //இப்படி உன் பண்பாடு இருப்பதுதானே பிரச்சனை.//

      அது கேனத்தனமான கேள்வி என்று சொல்லிவிட்டேனே, பொறவும் அதை என் பண்பாட்டுடன் இணைத்து இனவெறுப்பரசியல் செய்தே நீ 'பிழை'ப்பதுதான் உண்மையான பிரச்சனை!!!

      Delete
    6. இந்த வீடியோவைப் பாருங்கள். யார் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பது புரியும்.

      https://www.youtube.com/watch?v=C5Gua5FCzu4

      Delete
    7. மறுபடியும் முதல்ல இருந்தா....நான் ஏற்கனவே சொல்லியது போல, கிருஷ்ணாவைப்போல், ஞாநி சங்கரனைப்போல் தனது சாதியினரின் நடத்தையை சாடும் பார்ப்பனர் இருக்கிறார்கள். ஆனால் உண்மையாக தலித் சாதியினரை சுரண்டியே வாழும் பிற்படுத்தபட்ட (அப்படி சொல்லிக்கும்) சாதிகளிலும் இப்படி பிழைப்பு நடத்துவோர் பலர் இருக்கிறார்கள். உதாரணமாக நாடார் சாதியின் செய்யும் சில வியாபாரங்களில் மற்ற சாதியினர் ஈடுபட்டால் ஓழித்தே விடுவார்கள்.கவுண்டர் ஊரில் தலித் இடம் வாங்கி விவசாயம் செய்ய முடியாது. இம்மாதிரியான ஆதிக்க சாதியில் எப்போதாவது பார்ப்பன கிருஸ்ணா மாதிரி யாராவது தனது சாதியினரை கண்டித்தது உண்டா? இவ்வளவு ஏன், கீழ்வெண்மனி கலவரத்தில் தனது நாயக்க சாதியினரை கண்டிக்க மறந்தவர்தானே பெரியார்? அப்படி எந்த மூஞ்சியுடன் பார்ப்பானரை மட்டும் குறை காண்கிறீர்கள்? ஆதிக்க சாதியினரை விட பார்ப்பனர் எவ்வளவோ பெட்டர். இதை அறிந்ததால்தான் உபியில் மாயாவதி பார்பனருடன் தலித்-பார்ப்பனர் கூட்டணி உருவாக்கினர்.அதை பிற்படுத்தபட்ட ஆதிக்க சாதி யாதவர் உடைத்துப்போட்டனர். இங்கே பெரியார் பார்ப்பனரை காட்டியே பிற்படுப்பட்ட ஆதிக்க சாதியின் ஆதிக்கம் அமைத்தது போல!!!

      ஒடுக்கபட்டோருக்கு இப்போது பார்பனருடன் பாட்டுப்பாடவும், கோவில் பஜனை செய்யவும் போட்டி போட நேரமோ விருப்பமோ இல்லை. ஆனால் தொழில் செய்ய, மரியாதையுடன் வாழவதை தடுக்கும் பிற ஆதிக்க சாதியினருடன்தான் பிரச்சனை. அதை திக கவனிக்கட்டும். அதை விடுத்து செத்த பாம்பை அடித்து சீன் போட்டால் கழுவிக்கழுவிதான் ஊத்துவோம்!!!

      Delete
  39. ஈ வே ரா என்றுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசியதும் இலை, சிந்தித்ததும் இல்லை. ஈ வே ரா தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாக பேசியதை பற்றி மு க வே கேலிசித்திரம் வரைந்துள்ளார் (பறைச்சி எல்லாம் ஜம்பர் போடுவதால், துணி விலை ஏறுகிறது என்று சொன்னவர் தான் ஈ வே ரா).

    முன்பு, மு க ஆட்சி காலத்தில், இப்படிப்பட்ட தாக்குதல் நடந்த போது, மைனாரிட்டிகள் (பிராமணர்கள்) அடக்கத்துடன் நடந்தது கொள்ள வேண்டும் என்றவர். இதே அடைகத்தை கிருஸ்துவர்களிடமும், இசுலாமியர்களிடமும் போதிப்பாரா?

    அஞ்ஞானி சங்கரன் என்ன தான் குட்டிக்கரணம் அடித்தாலும், உம்மை பூணூல் போடாத பார்ப்பனர் என்று தான் ஈ வே ரா வை வைத்து பிழைப்பவர்கள் கூறுவார்கள்.

    (உண்மையான ஞானி) சங்கரன்

    ReplyDelete
  40. நலங்கிள்ளிThu Apr 30, 09:19:00 PM GMT+5:30

    https://www.youtube.com/watch?v=C5Gua5FCzu4

    இந்த யூடியூப் முகவரியைப் பார்க்கப் பரிந்துரைத்த நண்பருக்கு நன்றி. பார்ப்பனியக் கருத்தியலின் உள்ளடக்கத்தைப் புட்டு புட்டு வைத்துள்ளார் கர்னாடக இசைப் பாடகர் டி. எம். கிருஷ்ணா

    ReplyDelete
  41. எது வெறுப்பரசியல்
    கோத்ராவில் கொலைகள் நடந்ததற்கு பல நூறு மைல் பரப்பளவில் குறிப்பிட்ட மதத்தவரா என்று தேடி பிடித்து கொன்றது தான் ஐயா வெறுப்பரசியல்.அதை நியாயபடுத்திய,அதற்க்கு உதவியாக இருந்த அரசியல் கட்சிகளை,கட்சி தலைவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டு வெறுப்பரசியல் என்றால் என்ன என்று பாடம் எடுப்பது ஞாயமா
    கேவலம் மாட்டு கறி உண்ணும் மிலேச்சன் நம்மை ஆள்வதா என்று வாஞ்சி நாதன் கொலை செய்தது வெறுப்பரசியல். தனக்கு பிடித்த உணவை உண்ணும் உரிமை அனைவருக்கும் உண்டு என்று சொன்னவரை,அதை வலியுறுத்தும் இயக்கத்தை வெறுப்பரசியல் செய்கிறார்கள் எனபது சரியா
    மாட்டு கறியால் பூகம்பம் வருகிறது,மாட்டு கறி பெரும் பாவம் அதை தடை செய் என்று தன் சாதி உணவை கடவுளுக்கு உகந்த உணவாகவும் மற்றவர்களின் உணவை பெரும்பாவமாகவும் ஆக்குவது தானே ஐயா வெறுப்பரசியல்.
    https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan/posts/931163116909873 மேல் உள்ள பதிவில் உள்ள ?தேசபக்தர்கள் செய்த குற்றங்கள் (குழந்தைகள் ,பெண்கள்,ப்லகு நோய்க்கு மருத்துவம் செய்து வந்த மருத்துவர்கள் என்று கொலை செய்ய வைத்தது )வெறுப்பரசியலா அல்லது இப்படிப்பட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுத்த,சட்டத்தின்,தேர்தலின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தியது வெறுப்பரசியலா
    கைம்பெண் மணம் பெரும்பாவம்,அவர்கள் தரிசு மண் , என்று சொல்வது வெறுப்பரசியலா அல்லது அவர்கள் விருப்பப்பட்ட வாழ்க்கை வாழ அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவது வெறுப்பரசியலா
    லவ் ஜெஹாத்,நாடக காதல் என்று பொய்களை பேசி வெறி உணர்ச்சியை தூண்டி வெறுப்பு குற்றங்களை நிகழ்த்துவது வெறுப்பரசியலா அல்லது சாதி,மதம் கடந்த காதலுக்கு ஆதரவாக இருப்பது வெறுப்பரசியலா
    ராமகோபாலன்களும் வி எச் பி மணியங்களும்,ராஜாக்களும் மதவெறியோடு மதபெருமை பேசுவது வெறுப்பரசியலா அல்லது மத நம்பிக்கைகளை ஏற்காதவர்கள் ,அதன் தீமைகளை பேசுவது வெறுப்பரசியலா

    ReplyDelete
  42. http://dharumi.blogspot.in/2015/05/835.html

    ReplyDelete