நாகராஜ் வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கொடுத்த தீர்ப்பில் சொல்லப்பட்ட சில கருத்துகள் SC/ST பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் விலக்கு தேவைப்படும் என்று சொல்வதாகப் பலர் கருதினர். இதை அடுத்து பல அரசியல் கட்சிகளிடமிருந்தும் நீதிமன்றத்துக்கு எதிரான கண்டனங்களும் அவசரச் சட்டம் இயற்றவேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.
மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் மிலான் பானெர்ஜி, மேற்படி நாகராஜ் வழக்கின் தீர்ப்பில் SC/ST கிரீமி லேயர் பற்றி தீர்ப்பாக எதுவும் சொல்லவில்லை என்றும் ஏற்கெனவே ஒன்பது நீதிபதிகள் பெஞ்ச் கொடுத்த இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பில் SC/ST-க்கு கிரீமி லேயர் தேவையில்லை என்று சொல்லியிருந்ததால், ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அதற்கு மாற்றாக ஏதாவது சொல்லியிருந்தாலும் அது பொருந்தாது, என்றும் சொல்லியிருக்கிறார்.
இத்துடன் இந்த விவகாரம் இப்பொழுதைக்கு முற்றுப் பெறுகிறது.
இதைப்பற்றிய என் முந்தைய இரு பதிவுகள்:
SC/ST கிரீமி லேயர்
இட ஒதுக்கீடு - கிரீமி லேயர்
The Outsider 8: உடல் நலம் பேணுவது எப்படி?
17 hours ago

No comments:
Post a Comment