Saturday, January 13, 2007

சென்னை புத்தகக் காட்சி: நாள் 4

13/1/2007.

* இன்று காலை 11.00 முதற்கொண்டே கண்காட்சி திறந்திருந்தது. நல்ல கூட்டம். காயிதே மில்லத் கல்லூரிக்கு எந்த அளவிலும் குறையவில்லை. ஆனால் இங்கு இடம் அதிகம். அதனால் மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழாமல் நடக்கமுடிந்தது.

* நடிகர் சூர்யாவின் வாழ்க்கை அல்லயன்ஸ் மூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது. அந்தப் புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. சாலமன் பாப்பையா வெளியிட்டார். நடிகர் சிவக்குமார், சூர்யா ஆகியோர் வந்திருந்தனர். ஜோதிகா வரவில்லை என்று நினைக்கிறேன். நான் வாசலுக்குச் சென்று பார்க்கவில்லை. சூர்யா புத்தகங்களில் கையெழுத்து இட்டுத் தருவதாகச் சொன்னார்கள். அவர் எவ்வளவு புத்தகத்தில் இன்று கையெழுத்திட்டார் என்று தெரியாது.

* கங்கை அமரன் ஸ்பெஷல் ஷோ ஒன்று நடத்தினார். இசைக்கச்சேரி அல்ல, பேச்சுக் கச்சேரி.

* Pictures of the day:


நுழைவாயிலில் பிரம்மாண்டமாக தமிழகத்தின் பல்வேறு முக்கியமான லேண்ட்மார்க் விஷயங்களைப் படமாக வைத்துள்ளனர்.

2 comments:

  1. தகவலுக்கு நன்றிங்க

    ReplyDelete
  2. >>நடிகர் சூர்யாவின் வாழ்க்கை
    This is too much at this point. What next Simbu ?

    ReplyDelete