Saturday, October 08, 2011

கிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி - தி.நகரில்

கிழக்கு பதிப்பகத்தின் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி மீண்டும் தி.நகருக்கு வருகிறது. அதே பழைய இடம். ஆனால் பல புதுப் புத்தகங்கள்.

தீபாவளி பர்ச்சேஸுசுக்கு என்று தி.நகர் செல்லாதோரும் உண்டா என்ன? அப்படியே ஒரு நடை நடந்து சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே எல்.ஆர்.ஸ்வாமி ஹாலில் நடக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று பார்த்துவிடுங்கள்.

முன்னர் ஏப்ரல் மாதத்தில் நடந்த கண்காட்சியின்போது இல்லாத பல புத்தகங்கள் இப்போது கிடைக்கும். எனவே கட்டாயம் ஒருமுறை சென்று பார்த்துவிடுங்கள்.

இடம்: எல்.ஆர்.ஸ்வாமி ஹால், சிவா விஷ்ணு கோவில் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில், தி. நகர்.
நாள்: 8 அக்டோபர் முதல்.
 

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. 

தொடர்புக்கு: 95000 45608

8 comments:

  1. தகவலுக்கு நன்றி..
    தென்மாவட்டங்களில் அடிக்கடி புத்தகக்கண்காட்சி நடத்தினால் எங்களுக்கு உதவியாக இருக்கும். நிறைய புத்தகங்களை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
    ஆண்டுக்கு ஒருமுறை புத்தகக்கண்காட்சி நடத்துவதால் (மதுரை தமுக்கத்தில்) புதிய புத்தகங்கள் வாங்க சென்னை வரவேண்டியுள்ளது.
    பரிசிலிப்பீர்கள் என்று நம்புகிறோம்..

    ReplyDelete
  2. புது வீடு, புது டெம்ப்ளேட்...கலக்கற பத்ரி!

    ReplyDelete
  3. ///ஆண்டுக்கு ஒருமுறை புத்தகக்கண்காட்சி நடத்துவதால் (மதுரை தமுக்கத்தில்) ///

    அந்த ஒரு தடவை கூட ஞாயிறு உட்பட ஈயடிக்கிறதே (இத்தனைக்கும் விலையில்லா நுழைவு அனுமதி :-) )எப்படி வருவார், கார்த்தி?

    சரவணன்

    ReplyDelete
  4. ராமதுரை எழுதியது
    புதிய கெட் அப் நன்றாகத் தான் இருக்கிறது.ஆனால் எழுத்துகள் வெளிறிய் நிறத்தில் உள்ளன. தலைப்பில் தங்க்ள் பெயரை சிவப்பு நிறத்தி போட்டால் நன்றாக இருக்கும். வலது புறத்தில் கலர் இருப்பது போல இடது புறத்தில் கலர் வருகிறமாதிரி செய்யலாம். இம்புரூவ் செய்ய வழி இருப்பதாகக் கருதுகிறேன்
    ராமதுரை

    ReplyDelete
  5. மிக விரைவில் மின்-புத்தகங்களை வெளியிடும்மாறு கேட்டுக்கொள்கிறேன்!

    ReplyDelete
  6. ஏங்க, பாண்டிச்சேரி-ல போடமாட்டிங்களா? எங்களுக்கெல்லாம் ஒரு சான்ஸ் கொடுங்களேன்?

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete