Wednesday, July 24, 2013

ஒரு நாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?

என் சாப்பாட்டுத் தேவைகள் மிகக் குறைவானவை. ஆடியோடி வேலை செய்வதில்லை. உடம்பு பெருத்துவிட்டது. இளைக்காவிட்டால் வியாதிகள் பெருகும். வயது ஆகிறது.

காலையில் நான் பல்வேறு தானியங்களையும் பயறுகளையும் சேர்த்து அரைத்த மாவைக்கொண்டு கஞ்சி செய்து சாப்பிடுகிறேன். அதில் பால் சேர்த்துக்கொள்கிறேன். இனிப்புக்கு வெல்லம். அதற்கு ஆகும் செலவைக் கணக்கிட்டேன். நான் சாப்பிடும் இரண்டு டம்ளர் கஞ்சிக்கு (பால், வெல்லம் சேர்த்து) சுமார் 6 ரூபாய் ஆகிறது. கம்பு, கேழ்வரகு, சோளம், சம்பா கோதுமை, சிகப்பரிசி, பல்வேறு பருப்புகள் (நிலக்கடலை, கொள்ளு, பச்சைப் பயறு, பொட்டுக்கடலை), வேண்டுமென்றால் கொஞ்சமாக பாதாம், முந்திரி, வாசனைக்குக் கொஞ்சம் ஏலக்காய் என்று தடபுடலாகச் சேர்த்தாலுமே இதுதான் செலவு. இவற்றை நன்கு வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுவைத்து, வேண்டியபோது மில்லில் கொடுத்து நைஸாக அரைத்து வைத்துக்கொள்வோம். இன்று என் வீட்டில் நான், மனைவி, மகள் மூவரும் காலையுணவாக இதைத்தான் உட்கொள்கிறோம்.

மதிய உணவு, கோதுமைச் சப்பாத்தி அல்லது அரிசிச் சாதம். சப்பாத்தி செய்ய விலையுயர்ந்த பிராண்ட் கோதுமை மாவு + பல தானிய மாவு இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தினால், ஒரு சப்பாத்திக்கு ஆகும் செலவு 60-70 பைசா. அதிகபட்சமாக என்னால் ஐந்து சப்பாத்திக்குமேல் சாப்பிட முடியாது. ஆக மொத்தச் செலவு ரூ. 3.50. அரிசிச் சாதமாக இருந்தால் எவ்வளவு ஆகும்? மிக நல்ல பொன்னி பச்சரிசி/புழுங்கரிசி விலை கிலோ ரூ. 50 என்று எடுத்துக்கொண்டால், ஒரு வேளைக்கு எனக்குத் தேவை 125-150 கிராமுக்குமேல் கிடையாது. அதிகபட்சம் ரூ. 7.5 அரிசிச் சாதத்துக்கு.

இதற்குத் தொட்டுக்கொள்ள ஆகும் சைட் டிஷ் அல்லது சாம்பார்/ரசம்/கறி? சப்பாத்திக்கு சைட் டிஷ் என்றால் தலைக்கு 25 ரூபாய் தாண்டாது. குறைந்தபட்சம் ரூ. 5 (வெறும் பருப்பு மட்டும் என்றால்), அதிகபட்சம் ரூ. 25 (பன்னீர், கிழங்கு...). சாம்பார்/ரசம்/கறி என்றால் ரூ. 30 வரை ஆகலாம் என்று யூகிக்கிறேன். சில காய்கறிகள் அதிக விலை கொண்டவையாக இருக்கலாம். ஆனால் ஒரு மாதச் சராசரி என்றால் ஓர் ஆளுக்கு இதற்குமேல் போகாது என்றே நினைக்கிறேன்.

இரவு உணவு ஓட்ஸ் கஞ்சி. விலையுயர்ந்த ஓட்ஸ் வெரைட்டி கிலோ ரூ. 120. இதில் ஒரு நாள் கஞ்சிக்கு எவ்வளவு ஆகிறது என்று கணக்கிட்டுப் பார்த்தேன். ரூ. 5 மட்டுமே. ஓட்ஸ் கஞ்சியில் சேர்த்துக்கொள்ளும் உப்பு, மோருக்கும் சேர்த்து குத்துமதிப்பாக இவ்வளவுதான் ஆகிறது.

இவற்றை மட்டுமே உண்டால் சமச்சீர் போஷாக்கு கிடைக்காது என்று வைத்துக்கொள்வோம். எனவே ஒரு நாளைக்குக் குறைந்தது 250 மில்லி பால் உட்கொள்ளவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு 10 ரூபாய். முட்டை விரும்பி உண்பவராக இருந்திருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் என்றால் அது அதிகபட்சம் ரூ. 8 (இரண்டுக்கும் சேர்த்து). கூட நாள் ஒன்றுக்கு பழங்களாக ரூ. 30, மசாலாப் பொருள்களுக்கு ரூ. 10, சமையலுக்கு ஆகும் கேஸ்/மின்சாரம் ரூ. 10 என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆக,
    காலையுணவு: ரூ. 6
    மதிய உணவு: ரூ. 20 - 40
    இரவு உணவு: ரூ. 5
    பால், முட்டை, பழம், சமையல் செலவு: ரூ. 70

ஒரு நாள் உணவுச் செலவு
    (குறைந்தபட்சமாக): ரூ. 50
    (அதிகபட்சமாக): ரூ. 120

இதிலிருந்து கட்டாயமாகக் கீழ்நோக்கிக் குறைக்கலாம். அரிசி, பருப்பு, கோதுமை, ஓட்ஸ் எனப் பலவற்றிலும் விலைகுறைந்த பிராண்டுகளும் உள்ளன. நான் உள்ளதிலேயே அதிகமான விலை உள்ள பிராண்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

என்னைவிட மிக அதிகமாக உடல் உழைப்பைச் செய்பவர்கள், வளரும் சிறு பிள்ளைகள், இளைஞர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்குக் கட்டாயமாக அதிக உணவு தேவை. அது மேலே சொன்னதைப் போல அதிகபட்சம் இரண்டு மடங்கு இருக்கலாம் என்று யூகிப்போம். இவையெல்லாம் ஒரு பெரு நகரத்தில் அதிக விலைப் பொருளை அடிப்படையாக வைத்துச் சொல்லும் எண்கள்.

அரசு தரும் விலை மலிவான அரிசி, கோதுமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ஒரு நாளைக்கு ரூ. 30-க்குள்ளேயே ஒருவருடைய உணவுத் தேவைகள் பூர்த்தி ஆகிவிடும் என்று சொல்லலாம். அதற்குமேலும் ஒருவர் செலவு செய்யலாம்; பணம் இருந்தால். ஆனால் இதற்குள்ளாகவே அடிப்படைப் பசியை எளிதில் போக்கிவிடலாம். போஷாக்கான உணவும் கிடைத்துவிடும்.

74 comments:

  1. சரி தீர்ப்பு சொல்லுங்க!

    ReplyDelete
  2. Replies
    1. ஒரு வேளை மான்டேக்சிங் அலுவாலியாவும் இப்படித்தான் கணக்கு போட்டிருப்பாரோ?

      Delete
  3. ஒரு வேளை மான்டேக்சிங் அலுவாலியாவும் இப்படித்தான் கணக்கு போட்டிருப்பாரோ?

    ReplyDelete
  4. காமெடி பதிவா பத்ரி???... சொல்லவே இல்லை...

    -Maakkaan.

    ReplyDelete
  5. Man Power Cost? சமைக்கிறவர், பரிமாறுகிறவர், பாத்திரம் கழுவுகிறவரின் உழைப்புக்குக் கூலிக் கணக்கு இதில் சேர்த்தாகவேண்டும், இல்லையா?

    ReplyDelete
  6. ஒருத்தருக்கு 30 ரூபாய் வீட்டில் 5 பேர் இருந்தால் 150 ரூபாய் தான் ஆகுமோ?? டவுட்டு

    ReplyDelete
  7. அய்யா வணக்கம் உங்களின் சம்பளம் அல்லது வருமானம் எவ்வளவு? நீங்கள் செய்யும் செலவுகள் எவ்வளவு உங்கள் குடும்பத்தின் பின்புலம் என்ன?நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்ன?? நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு எவ்வளவு செலவாகும். என்பதினை பட்டியிலிட்டு சொல்ல முடியுமா ?? நீங்க மேலே உணவு வகைகளுக்கு குறிப்பிட்டது போல....! இந்த சூழலில் வாழும் மனிதர்கள் எந்த மாதிரி வாழ்கிறார்கள் என்ற கணக்கெடுப்பையும் எடுத்த பிறகே இப்படி ஒரு எல்லோருக்கும் போதும் என்ற கட்டுரையை எழுதிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன் உங்கள் கட்டுரைக்கு முழுதும் முரண் படுகிறேன்.

    ReplyDelete
  8. //சரி தீர்ப்பு சொல்லுங்க!//

    ஹாஹ்..ஹா... பதிவை விட இம்மறுமொழியை மிக ரசித்தேன் அதிஷா!

    ReplyDelete
  9. கூட்டி கழிச்சி பார்த்தால் சரியாதான் வருது
    நம்மாழ்வார் வழி தங்கள் வழி போலும் !

    ReplyDelete
  10. மறியாதைக்கு உரிய பிரதமர் தான் வாங்கும் முன்று பென்சன்களையும் மாத சம்பளத்தையும் நிறுத்திவிட்டு அரசு ஏற்பாடு செய்துள்ள சகல உணவு வசதிகளையும் ரத்து செய்துவிட்டு தினமும் நான் கொடுக்கும் 33 ரூபாயில் வாழ்வார பத்திரி அய்யா கொஞ்சம் கேட்டு சொல்லுங்கோ. அப்படியே உங்கள் ஆரோக்கியமான உணவு பட்ஜெட் படித்தவுடன் புல்லரித்துவிட்டது. இதை வைத்து பார்க்கும்போது மாதத்திற்கு 900 ரூபாய் இருந்தால் உங்களுக்கு போதும் என்று தோன்றுகிறது. தேவை அதிகமாக ஏன் பணத்தை சேர்த்து கொண்டு இருக்கீர்கள் உங்களுக்கு வரும் வாருமானத்தில் இந்த 900ரூபாய் எடுத்துக்கொண்டு மீதியை நீங்கள் அலுவாலிவுக்கே கொடுத்தால் பொருளாதார நெருக்கடியில் உள்ள நாட்டை காப்பாற்ற முடியுமே கொஞ்சம் யோசிங்க எசமான்.

    ReplyDelete
  11. சிரிப்பு தான் வருது. இப்போதான் தெரிகிறது பதினொரு டாக்டர் பட்டம் பெற்றவரின் பொருளாதாரம் எப்படி மக்களிடம் அமல் படுத முடியாமல் தினருக்கிறது என்பது. வாழ்துக்கள்.

    ReplyDelete

  12. என்ன ஆச்சு ?

    நீங்கள் பட்டியல் இட்டு இருப்பவை எல்லாம் மூலப் பொருளுக்கான செலவுதான். சமைக்கும்போது ஆகும் கேஸ் செலவு, அவற்றைப் பாதுகாக்க வைக்கப்படும் ஃப்ரிட்ஜ் செலவு, பாத்திரங்கள், சமையலறை பராமரிப்பு, வேலை உதவியாளருக்கு சம்பளம், ....

    ஒரு மாதத்தில் சமையல் சார்ந்த செலவீனங்கள் என்று ஒட்டு மொத்தமாகப் பார்த்து கணக்குப் போட்டுச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  13. மனசாட்சியோட தான் எழுதுனீங்களா?

    ReplyDelete
  14. இப்பத்தான் புரியுது கிழக்கு பதிப்பகம் ஏன் கோவிந்தா ஆச்சின்னு!

    ReplyDelete
  15. ஒருநாளைக்கு உணவுக்கென முப்பது ரூபாய் செலவிட்டது போக மீதிப் பணத்தைக் கொண்டு கிழக்கு பதிப்பகத்தில் புத்தகங்கள் வாங்கி அறிவைப் பெருக்கிக்கொள்ளலாம். அறிவே பலம்.

    ReplyDelete
  16. தீர்ப்புதான் சொல்லிட்டாரே. 27 + 3 = 30.

    ReplyDelete
  17. ஹன்ஸா

    நாம் என்றோ சாப்பிட்ட நல்ல சாப்பாட்டின் காரணமாக, இன்று உடல் குண்டாகிவிடும் என சொல்லி 30ரூ உணவு போதும் நமக்கு. ஆனால் சத்தான உணவு சாப்பிட்டே இராத அவனுக்கு..?

    ReplyDelete
  18. ippove kanna kattuthe...

    ReplyDelete
  19. சமைப்பதற்கான எரிப்பொருள், மற்றும் மின்சாரம், அவற்றை சமைக்க இடத்திற்கான வாடகை ( எங்கே தெருவிலா சமைக்கிறது) மற்றும் பான வகை ... இதெல்லாம் ..?.. மேலும் ஓரே வகையான உண்வையே தினமும் உட் கொள்ள இயலுமா?.
    ..

    ReplyDelete
  20. hello sir athu unkala mathiri nala sapitu themba irunthu udamba kuraikanum nu ninaikiravankaluku ithu pothum.....varumai kotirku kela ula elzai makaluku intha sapadu vayarai niraikathu....ukanthu velai pakura unkaluku correct ah irukum..ana ukarave time ilaam velai seium avankaluku sari patu varathu...unkala thandi 1st yosinka sir

    ReplyDelete
  21. யோவ்.. மனசாட்சியோட தான் பேசறியா..

    காலையுணவு: ரூ. 6 - இது பெருசா உடல் உழைப்பு இல்லாத உனக்கு வேணா ஓகே... என்பது சதவீதம் விவசாய நாடுன்னு சொல்ற இந்திய பெருமக்களுக்கு பொருந்தாது சாமி..

    நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு மாசம் இருபது கிலோ அரிசி.. அரசன்குதுல குடுக்ரங்க... எங்க உங்க கணக்க இதுல போடுங்க பாப்போம்..

    ReplyDelete
  22. Dear Padhri,
    Let me know your contact number dear? Obsoletely wrong your calculation..... Think that you are an educated.... how did you made this wrong calculation gentleman?

    ReplyDelete
  23. சூப்பர் அப்பு. மோன்டேக் சிங்கும் இப்படிதான் ஏ.சி ல உக்காந்துகிட்டு கணக்கு போட்டிருப்பாரு போல.

    ReplyDelete
  24. இதுக்கு பதிலா வேளாவேலைக்கு ஒரு டம்பளர் தண்ணிய குடிச்சிட்டு அந்த பணத்தை மிச்சம் பண்ணி மவுண்ட்ரோடுல ஒரு பங்களா வாங்கலாமே...

    ReplyDelete
  25. காலை உணவை லேட்டாகவும் இரவு உணவை சீக்கிரமாகவும் சாப்பிட்டு மதிய உணவை கட்டடித்தால் இன்னும் பத்து ரூபாய் மிச்சமாகுமே?

    ReplyDelete
  26. மனசாட்சியோட தான் எழுதுனீங்களா?

    ReplyDelete
  27. வருக நண்பா வருக
    அறியாமை அகற்ற வருக
    நமக்கு இந்த சமுதாயம் உயிர் கொடுத்தது இந்த சமுதாயம் உணவு கொடுத்தது கல்வி கொடுத்தது வேண்டிய எல்லாம் கொடுத்தது நம் வாழும் இந்த வாழ்க்கை இந்த சமுதாயம் கொடுத்தது இதையெல்லாம் நாம் நம் சமுதாயத்திற்கு திரும்ப அளிக்க கடமைப் பட்டவர்கள் உனது எழுத்தால் ஒரு மனிதருக்கேனும் பயன் இருக்குமானால்நீ பெற்ற கடனை திரும்ப அளிக்க துவங்கிவிட்டாய் என்றாகும்.ஆகவே நாம் எழுதும் எழுத்தால் செயலால் இந்த சமுதாயம் பயனடைய வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்ற உனக்கு வேண்டிய சக்தி கிடைக்கட்டும் என்று வாழ்த்தி வரேவேர்க்கின்றேன் தோழரே வருக வருக

    ReplyDelete
  28. I ve never commented on any blogs.. but after reading this I couldn't stop myself from commenting..
    There is a saying .. Dazzle everyone with ur brilliance or at least baffle them with ur BS.. !
    Is this dazzling or baffling?
    I better leave it to u to decide..

    ReplyDelete
  29. yes. i agree with you.. first you pls live with 900 rupees per month for another 12 months and tell us the real plus and minus.. we will follow..

    ReplyDelete
  30. Very good.. let us try your way.. But before that you practice this first... i / we request you to try out with Rs. 900 per month for another one year.. after one year tell us the plus and minus.. then i / we will follow.. tnks..

    ReplyDelete
  31. deai nee soru thingiriya illa pee thingiriya?

    ReplyDelete
  32. 1.கோவிலில் கொடுக்கும் இலவச அன்னதான திட்டம் இதற்க்கு ஒரு பட்ஜெட்..
    2.அம்மா உணவகத்தில் உண்டால் ஒரு பட்ஜெட்..
    3.டயட்டில் இருப்பவர்களுக்கு ஒரு புட்ஜெட்..
    நீ எல்லாம் நல்ல வருவ ..பத்ரி.. பண்டார பரதேசி..!?

    ReplyDelete
  33. ஒரு ரூபாய் கூட இல்லாமல் சாப்பிடலாம்... பிச்சை எடுத்து சாப்பிட்டுட்டு ஊத்தவாய் நாராயணன் மாதிரி திண்ணையில் படுத்து தூங்கிடலாம்...

    ReplyDelete
  34. you too Bahdri.......................

    ReplyDelete
  35. First think about yourself how much you are wasting to have your breakfast.even like you peoples don't going to have breakfast/lunch/dinner without quality products.even if you are going to have breakfast you are going for the star hotels and you are wasting the 1000 rs for one time lunch.*I dont know what the hell your calculation.you know the rate of the requirements which are used to prepare the food?and please try to live with only 40-50 per day.after that write your mind calculations and your ideas to others.once again dont write these kind of essays anymore.

    ReplyDelete
  36. தம்பி நீங்க நேத்துதான் செவ்வா கெரகத்துலேருந்து வந்தீங்களா,,,,ரேஷன் அரிசிய என்னைக்காவது தின்னு பார்த்துருக்கீங்களா?பருப்பு,புளி,எண்ணெயெல்லாம் என்னா வெல விக்குதுன்னு தெரியுமா,,கடையில ஒரு டீ ,ஒரு இட்லி என்னா வெலன்னு தெரியுமா,,,அய்யா ஒருவேலைக்கு போகனும்னா பஸ்ல டிக்கெட் எடுக்கனும்,அதுக்கு எவ்வளவு ஆகும்னு தெரியுமா


    தம்பி நீங்களும்,அலுவாலியாவும் இருக்க வேண்டிய எடம் இங்க இல்ல தம்பி,,ரெண்டு பேரும் செவ்வா கெரகத்துக்கே போயிடுங்க நாடாவது உருப்புடும்

    ReplyDelete
  37. Badri,

    I think you are right. Today's piece by Swaminathan Iyer in Times of India convincingly argues that if the poverty line is pushed up to a new bar to $ 2 by Rangarajan Panel, it would be actually a disaster. http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/entry/why-no-applause-for-138-million-exiting-poverty

    ReplyDelete
  38. Badri,

    felt bad at the tone of comments made by these emotional people who can not understand basic maths ..

    If consumption of Rs 24/day (at today’s prices) was the poverty norm for decades, why does Rs 32/day sound so low today? Mainly because we don’t usually think in terms of consumption per day. The average family size in India is five members. Poor people have more children, so an average poor household will have around six members. If six members consume Rs 32/day, it adds up to almost Rs 6,000 per month.

    Middle class HYPOCRICY on poverty line...
    http://swaminomics.org/middle-class-hypocrisy-on-the-poverty-line/

    Very difficult to make these people understand ....
    Now it makes sense why this country gets leaders like indira/nehru/sonia who can keep on fool them in the name of socialism/garibhi hatao/NREGA....

    ReplyDelete
  39. I agree with your calculations. Expenses for the food is low and we spent more on other. I know lot of people (family) who live with Rs.10000.00 per month.

    ReplyDelete
  40. I THINK YOU ARE RIGHT TO A CERTAIN EXTENT,BUT OUR MONTHHLY
    EXPENSES DOESNOT END WITH FOOD ALONE. RENT, POWER BILL, ,TELEPHONE BILL DRINKINNG WATER (CAN), TRANSPORT, EDUCATION,
    ENTERTAINMENT EXPENSES, FESTIVAL EXPENSES, DRESS EXP, MEDICINE
    AND DOCTOR BILL AND OUR INSURANCE NEEDS ALL ADD UP TO A
    GIGANTIC SUM, WE ARENOT ABLE TO MEET OUR EXPENSES WITH OUR
    EARNINGS AND JUST LIKE OUR COUNTRY BORROW FROM WORLD BANK
    WE ARE ALSO FORCED TO BORROW AND LIVE OUR DEBT-RIDDEN LIFE.

    ReplyDelete
  41. பொன்.முத்துக்குமார்Mon Jul 29, 10:05:00 PM GMT+5:30

    தனிமனித விமர்சனம் செய்வோர் கவனத்திற்கு :

    ஏம்பா, பின்னூட்டர்களா, பத்ரி சொன்னது ஒங்களுக்கு புடிக்கலை-ன்னா / தவறு-ன்னு நெனைச்சீங்க-ன்னா, என்ன தப்பு-ன்னு ஒங்க தரப்ப எழுதுங்க. அத உட்டுட்டு எதுக்கு தனிமனித தாக்குதல் இப்படி ?

    இன்னும் எத்தன நாளைக்குத்தான் தனக்கு புடிக்காத கருத்த சொல்றவங்கள தனிப்பட்ட முறைல தரம் தாழ்ந்து விமர்சனம் பண்ணுவீங்க ? இதுதான் / இவ்ளோதான் ஒங்க தராதரமா ?

    அசிங்கமா இல்ல ? அருவருப்பா இல்ல ?? கேவலமா இல்ல ???

    ReplyDelete
    Replies
    1. யோவ் பத்ரிக்கு முன்னாடி நீதான்யா இதப் படிக்கணும்...படிச்சிப் பாரும் பதில் சொல்லும்
      http://www.vinavu.com/2013/07/30/badris-poverty-budget/

      Delete
    2. பொன்.முத்துக்குமார்Fri Aug 02, 02:25:00 AM GMT+5:30

      இதுக்கெல்லாம் பதில் சொன்னணும்-னு கேக்குற ஒங்கள .....

      Delete
  42. http://www.vinavu.com/2013/07/30/badris-poverty-budget/

    தொழிலதிபர் பத்ரியின் எளிமையான வாழ்க்கை மற்றும் ஓட்ஸ் கஞ்சியின் பின்னே இப்படி ஒரு உண்மை இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

    ReplyDelete
  43. தான் சாப்பிடறத மட்டும் சொன்னாரே பத்ரி, அவர் என்ன வேலை செய்யறார்னு சொன்னாரா

    ReplyDelete
  44. சூப்பரு...கிழக்குப் பதிப்பகத்தில் ரெண்டனாவிற்கு புத்தகம் விற்றால் இது சாத்தியம். லட்சம் லட்சமாக கொள்ளையடிக்கும் ஒருவர் சொன்னால் குண்டியால் மட்டுமே சிரிக்கமுடியும்.

    ReplyDelete
  45. ////பொன்.முத்துக்குமார்Mon Jul 29, 10:05:00 pm IST

    தனிமனித விமர்சனம் செய்வோர் கவனத்திற்கு :

    ஏம்பா, பின்னூட்டர்களா, பத்ரி சொன்னது ஒங்களுக்கு புடிக்கலை-ன்னா / தவறு-ன்னு நெனைச்சீங்க-ன்னா, என்ன தப்பு-ன்னு ஒங்க தரப்ப எழுதுங்க. அத உட்டுட்டு எதுக்கு தனிமனித தாக்குதல் இப்படி ?

    இன்னும் எத்தன நாளைக்குத்தான் தனக்கு புடிக்காத கருத்த சொல்றவங்கள தனிப்பட்ட முறைல தரம் தாழ்ந்து விமர்சனம் பண்ணுவீங்க ? இதுதான் / இவ்ளோதான் ஒங்க தராதரமா ?

    அசிங்கமா இல்ல ? அருவருப்பா இல்ல ?? கேவலமா இல்ல ???////

    இந்த பதிவே அசிங்கமாக இருக்கு....

    ரொம்ப அருவருப்பா இருக்கு.....

    ரொம்ப ரொம்ப கேவலமான பதிவு இது.
    Reply

    ReplyDelete
    Replies
    1. பொன்.முத்துக்குமார்Wed Jul 31, 10:06:00 PM GMT+5:30

      // இந்த பதிவே அசிங்கமாக இருக்கு....

      ரொம்ப அருவருப்பா இருக்கு.....

      ரொம்ப ரொம்ப கேவலமான பதிவு இது. //

      ஏன் அப்படி இருக்கு-ன்னு விளக்கம் கொடுக்கணும், அதுக்கு வக்கும் வாக்கும் இல்லையா, பொத்திகிட்டு சும்மா இருக்கணும். சும்மா மொட்ட தாத்தா குட்டை-ல உழுந்தான்-ன்னு பதிவு எழுதறவன் மேல தனிப்பட்ட காரணங்களுக்காக 'அவன் கொள்ளை அடிக்கிறான், கொடுக்காபுளி திங்கிறான்'-ன்னு தனிமனித தாக்குதல்-ல இறங்கினா அது மகா மகா 'ராவணன்'-தனமா இருக்குமே ஒழிய விவாதத்துக்கோ உரையாடலுக்கோ தகுதியிருக்காது.

      மறுபடியும் சொல்றேன் :

      பத்ரி, தனது சுய அனுபவம் சார்ந்தும், சுற்றுப்புறத்தோரின் அனுபவங்களை கேட்டு அவை தனது சுய அனுபவத்தோடு ஒத்துப்போவதை உறுதி செய்தும் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கார்.

      அது ஒங்களுக்கு தப்பா தெரிஞ்சா, 'இத பாருப்பா, நீ இன்னென்ன விஷயங்கள கணக்கில எடுத்துக்குல, இன்னென்ன காரணங்களுக்காக நீ சொல்ற புள்ளிவிபரம் தப்பாவுது, நீ இருக்குற அதே சோஷியல் ஸ்டேடஸ்-ல எல்லாரும் இருக்க முடியாது, அதனால நீ சொல்ற புள்ளிவிபரம் எல்லாருக்கும் ஒத்துப்போவாது' அப்படி-ன்னு தெளிவா உங்க நிலைப்பாட்ட எடுத்து வைங்க, முடிஞ்சா.

      இல்லையா, புடிக்கலையா, அவரோட பதிவுகளை இனி படிக்காம இருங்க.

      இணையத்துல தமிழ் வந்து, அதுல உரையாடல், பின்னூட்ட வசதி-லாம் வந்து இத்தன வருஷம் ஆச்சு. ஆரம்ப காலத்துல இந்த அடையாளமற்று ஈடுபடும் தனி மனித தாக்குதல்-லாம் கிளுகிளுப்பாத்தான் இருக்கும், ஆனா சட்டுன்னு அதெல்லாம் தாண்டி வராம, இன்னமும் நான் ஆரோக்கியமான உரையாடலுக்கு தயாராகமாட்டேன், தனி மனித தாக்குதல்-லதான் இறங்குவேன்-ன்னு புடிவாதமா இருந்தா அது என்ன தனம், சொல்லுங்க ?

      பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.

      Delete
  46. Semma Comedy Sir Neenka

    ReplyDelete
  47. பதில் சொல்லுமையா பத்ரி....
    http://www.vinavu.com/2013/07/30/badris-poverty-budget/

    ReplyDelete
  48. திரு பத்ரி அவர்களே, நீங்கள் உங்களுடைய வசதி தற்போது நீங்கள் பார்க்கும் வேலை, வீடு அனைத்;தையும் துறந்துவிட்டு, வாடகை விட்டில் தங்கியிருந்து ஏதவாது கூலி வேலை பாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு உண்மை நிலவரம் என்வென்று புரியும்..

    ReplyDelete
  49. இங்கு கோவப்படுபவர்கள் முக்கால்வாசி பேர் வீட்டில் வீட்டு வேலை செய்ய பணிப்பெண்கள் இருப்பார்கள்.அவர்களுக்கு எந்த அடிப்படையில் சம்பளம் கொடுக்கிறார்கள் என்று கூறலாமே.
    ரிகக்ஷா ,ஆட்டோ ஓட்டுனர்களுக்கு/ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு எந்த அடிப்படையில் கட்டணம் தர வேண்டும் என்றும் கூறலாமே
    ஒழுங்காக மீட்டர் கட்டணம் வாங்கி கொண்டு வண்டி ஓட்டும் ஆட்டோ டிரைவர் ,வண்டியை கடனில் வாங்கி இருந்தால்,வாடகைக்கு எடுத்து ஓட்டினால்,நாள் முழுவதும் பல ட்ரிப் அடித்தாலும் 150 ரூபாய்க்கு மேல் கிடைக்காது.ஆட்டோ மீட்டர் கட்டணம் வெகு குறைவு,அநியாயம் என்று நாம் குதிக்கிரோமா

    அடிப்படை நிர்ணயங்கள் குறைந்தபட்ச அளவை வைத்து செய்யபடுபவை

    ReplyDelete
  50. அய்யா,

    நீங்க சொல்லியிருக்கிறது ஒரு நாள் சாப்பாட்டு செலவு.

    இதோ மத்த செலவுகள்: மாதம் ஒரு முறை செய்ய வேண்டிய செலவுகளை, முப்பதால் வகுத்துக்கொள்க.

    1.வீட்டு வாடகை, ( சொந்த வீடு இல்லாதவங்களுக்கு)

    2.பற்பசை

    3. சோப்

    4. டீ அல்லது காபி

    5.தண்ணீர்

    6. மருத்துவம்

    7.போக்குவரத்து

    8 தொலைபேசி

    9.பிள்ளைகளின் பள்ளி செலவு

    10.பொழுதுபோக்கு செலவு ( தொலைக்காட்சி, சினிமா)

    11.குடும்பத்திற்காகும் துணி செலவு

    எனக்கு நினைவில் வந்தது இவ்வளவுதான்.

    மேலே உள்ளவற்றில், உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் ஆகும் ஒரு மாத செலவு எவ்வளவு?

    ReplyDelete
    Replies
    1. பொன்.முத்துக்குமார்Wed Jul 31, 10:08:00 PM GMT+5:30

      ஐயா, கொஞ்சம் பதிவோட தலைப்ப படிச்சி பாருங்க பாப்போம்.

      ஏன்யா, ஏன்யா, ஏய்யா இப்படி ?

      Delete
    2. அய்யா பொன் முதுக்குமார் அவர்களே,
      கட்டுரையின் தலைப்பைப் பார்த்துவிட்டேன்அதான், நானே "இது உங்களுடைய ஒரு நாள் சாப்பாட்டு செலவு.." அப்படின்னு தெளிவா ஆரம்பிக்கிறேனே. அப்புறம் ஏன்யா இந்த கேள்வி? ஏன்யா..ஏன்யா..ஏன்யா?

      Delete
    3. பொன்.முத்துக்குமார்Thu Aug 01, 09:12:00 PM GMT+5:30

      "ஒருநாள் சாப்பாட்டு செலவு எவ்வளவு"-ன்னு ரொம்ப தெள்ள தெளிவா பதிவு போட்டுருக்காரு. அப்படீன்னா என்ன அர்த்தம் ? கொஞ்சம் .... கொஞ்.....சம் யோசிங்க ? ஆஆங் ... 'நா சாப்பாட்டு செலவு மட்டும்தான் பேசறேன், வேற எந்த செலவ பத்தியும் இல்லை' அப்படீ-ன்னு அர்த்தம். வெளங்கிச்சா ? அப்போ நாம எத பத்தி பின்னூட்டம் இடணும் ? இன்னும் கொஞ்சம் .... கொஞ்.....சம் யோசிங்க ? ஆஆஆஆங் .... "ஒருநாள் சாப்பாட்டு செலவு" பத்தி மட்டும் விவாதிக்கணும், உரையாடணும், பின்னூட்டணும். கை அரிக்குதே-னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம பற்பசை செலவு, டூத்ப்ரஷ் செலவு, சோப், சீப்பு கண்ணாடி செலவு அப்படீன்னு-லாம் ஆரம்பிச்சோம்-னு வைங்க .... வெளங்கிச்சா ?

      மாச மொத்த செலவு பத்தி பேசணும்-னா அதுக்கு தகுந்த மாதிரி பதிவு எழுத தெரியாதா ஆளா இவரு ?

      இந்த லட்சணத்துல / "இது உங்களுடைய ஒரு நாள் சாப்பாட்டு செலவு.." அப்படின்னு தெளிவா ஆரம்பிக்கிறேனே./-ன்னு பதிவுக்கு சம்பந்தமில்லாம பேசறேன்-ன்னு ஒப்புதல் வாக்குமூலம் வேற.

      பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்ட பாக்கு எட்டணா-ன்னு சொன்னானாம்.

      என்னமோ போங்க !

      Delete
    4. நீங்க பொங்குறது தெளிவா விளங்குது,

      அன்னாத்தை அடுத்து எங்க வந்து நிக்கப்போறார்? ஒரு நாள் சாப்பாட்டு செலவெ இவ்வளவுதான், மத்தவ்ங்களுக்கு கொஞ்சம் கூட கொறைய ஆகலாம்னு சொல்லுறார்?!!!

      "எப்ப சொல்லுறார்? நகரத்துல ரூ.33-ம், கிராமத்துல ரூ.27-ம் செலவு பண்ணுறவங்க வறுமைக்கோட்ட தாண்டிட்டங்க"-ன்னு பொருளாதார புலிகள் பிறாண்டும்போது...

      ஜன்க்..சக்க்..ஜன்க்..சக்க் --அப்படின்னு ஒரு சத்தம் கேட்டுச்சா?

      அது என்ன சவுண்டு?

      சரிப்பா. சத்தம் வெளங்கிருச்சு.

      நீ சொல்றது கரெக்டுன்னெ வச்சுக்குவோம். அப்பொ உன்னொட மத்த செலவுகள் எவ்வளவு-ன்னு நியாயமா சொல்ல முடியுமா? அப்படின்னு கேட்டா..."தோள் கண்டார்..தோளே கண்டார்..." அப்படின்னுதான் பேசணும், மூக்கையும் வாயையும் ஏண்டா பாக்குறேன்னா....

      என்னத்த..சொல்லி..என்னத்த பண்ண....?

      ஆனாலும் இந்த வாட்டி அடி கொஞ்சம் பலம்தானோ? அது சரி...அடி வாங்குன கைப்புள்ளைக்கே இவ்வளவு அடின்னா...அடி வாங்குனவனுக்கு எவ்வளவு அடி இருக்கும்..

      சரி விடுங்க பாசு. தொழில்ல இதெள்ளாம் சகஜம்!!!!

      இன்னும் நான் சொல்லுறது விளங்காத மாதிரி பின்னூட்டம் போடுறதுக்கு முன்னால... வினவு..வினவு-ன்னு ஒரு வெப் சைட் இருக்கு.அங்கெ கொஞ்சம் எட்டிப்பாருங்க பாசு.

      Delete
    5. பொன்.முத்துக்குமார்Mon Aug 05, 10:03:00 AM GMT+5:30

      நீங்க புடிச்ச முயலுக்கு மூணு காலுதான் தெரியுது ஒங்க கண்ணுக்கு. நியாயம்தான். என்ன, அந்த இன்னொரு காலத்தான் நீங்க புடிச்சிருக்கீங்க, அதனாலத்தான் மூணு காலு மட்டும் தெரியுது-ங்கிற உண்மைய ஒத்துக்கிற பக்குவம்தான் இன்னும் வர மாட்டேங்குது.

      வரட்டும், மெல்ல வரட்டும். வளரணும் இல்லீங்களா ? அதுவரைக்கும் ராஸா அடிச்சி ஆடிட்டு இருங்க, என்னா ?

      Delete
  51. What about other expenses related to running a family?
    -- Rent, Utility(EB), Medicine, Education, Clothes, Transportation.

    Montek Singh Ahluwalia - its good to be wise, its bad to be stupid but its disaster for a stupid to think he is wise.

    ReplyDelete
  52. திட்ட கமிஷன் நிர்ணயிக்கும் வறுமைக் கோடு அளவானது, 1973-74ம் ஆண்டின் விலைவாசிகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் விலைக் குறியீட்டு எண் உயர்வின் (பணவீக்கத்தின்) அடிப்படையில் அதிகரித்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் பண வீக்கத்தின் அடிப்படையில் மட்டும் கணக்கிடுவது வாழ்வாதார தேவைகளை முழுமையாக பிரதிபலிப்பதில்லை என்பதுதான் நடைமுறை. உதாரணமாக, 1973-74ல் 1,000 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கிய ஒரு அரசு ஊழியருக்கு பண வீக்கத்தின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கியிருந்தால் அவரது சம்பளம் ரூ 18,000 ஆக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நியமிக்கப்படும் சம்பள கமிஷன்களின் படி அத்தகைய அரசு ஊழியரின் ஊதியம் இப்போது ரூ 70,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திட்ட கமிஷனின் அலுவாலியாவும், கிழக்கு பதிப்பகத்தின் பத்ரியும், சுவாமிநாதன் அங்கேலேஷ்வர் அய்யர் போன்ற பொருளாதார நிபுணர்களும் தமது சொத்துக்களையும் வருமானங்களையும் விட்டுக் கொடுத்து விட்டு, மாதம் ரூ 3,000 வருமானத்தில் (மூன்று பேர் குடும்பத்திற்கு) ஒரு பெருநகரத்தில் வாழ்ந்து காண்பித்தால் அவர்கள் பேசுவதில் இருக்கும் அபத்தத்தை புரிந்து கொள்ளலாம்.

    தொழிலதிபர் பத்ரியின் எளிமையான வாழ்க்கை மற்றும் ஓட்ஸ் கஞ்சியின் பின்னே இப்படி ஒரு உண்மை இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

    ReplyDelete
  53. யாருக்கு ஜால்ரா???

    ReplyDelete
  54. you are too theoratical in this issue Badri. Have you heard anything about indirect costs associated with this?

    ReplyDelete
  55. ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு சரக்கும் ப்ரீ ,சோறும் ப்ரீ

    ஒரு ராணுவ வீரருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் ரேஷன்

    கோதுமை 220 அல்லது 400 கிராம்

    அரிசி 220 அல்லது 400
    பருப்பு 90 கிராம்,சக்கரை,90 கிராம்,எண்ணெய் 80 கிராம்,டீ 9 கிராம் அல்லது காப்பி 4 கிராம்,உப்பு 20 கிராம் ,மசாலா 16 கிராம்
    காய்கறி 170 கிராம்,உருளை 110 கிராம்,வெங்காயம் 60 கிராம் ,சிட்ருஸ் பழங்கள் 49 கிராம் அல்லது பதபடுத்தப்பட்ட பழங்கள் 30 கிராம்

    பால் குடிக்கும் சைவர்களுக்கு தினமும் ஒரு லிட்டர் பால்

    முட்டை சாப்பிடும் சைவர்களுக்கு 750 ml பால்,ஐந்து முட்டை
    மாமிசம் சாபிடுபவர்களுக்கு 250 ml பால் ,180 கிராம் ஆடு அல்லது கோழி அல்லது 160 கிராம் மீன்

    90 நாளைக்கு ஒரு காஸ் சிலிண்டர்

    இவைகளை பெற்று கொள்ளலாம்.அல்லது மாதத்திற்கு 1700 ரூபாய்(ஒரு நாளைக்கு 53.66)பெற்று கொள்ளலாம்.துணை ராணுவ படைகளுக்கு பணம் கொடுக்கபடுகிறது.ராணுவ வீரர்கள் விடுமுறையில் செல்லும் போது பத்து நாளைக்கு 530 ரூபாய் ரேஷனுக்கு ஈடாக தரப்படும்

    மேலே சொல்லப்பட்ட உணவு அளவு அவர்கள் பயிற்சி,வேலை,உடல் உழைப்பு அடிப்படையில் அதிகமாக தரப்படும் ஒன்று.இருவர் இந்த தரப்படும் ரேஷன் அளவில் சாப்பிட முடியும்.
    இதை தருவது பல பகுதிகளில் காண்ட்ராக்டர்கள்.அவர்கள் இந்த 1700 ரூபாய்க்கு பொருட்களை தர ஒப்பு கொண்டு அதில் லாபமும் இருப்பதால் தான் காண்ட்ராக்ட் எடுக்கிறார்கள்
    ஒவ்வொரு பருவத்திலும் எந்த காய்கறி,பழம் குறைவாக உள்ளதோ அதை அதிகமாக வழங்குவார்கள்.அதிலும் இந்த அளவிற்காவது காரட் தர வேண்டும் என்ற கண்டிஷன் எல்லாம் உண்டு.அதிகாரிகளுக்கு அரிசி,கோதுமை அளவு குறைவு.மாற்றாக பிரட்,பட்டர் எல்லாம் உண்டு

    ReplyDelete
  56. வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணின் சம்பளம்,ரிக்ஸா ,ஆட்டோ /ஷேர் ஆட்டோ ஓட்டுனர் மீட்டர் கட்டணம்/டிக்கெட் விலை என்ன விலை வைத்தால் அவரும் அவர் குடும்பமும் இன்றைய சூழ்நிலையில் வயிறார சாப்பிட்டு,குழந்தைகளை படிக்க வைக்க ,வாடகை கொடுத்தோ,கடன் வாங்கி சிறிய வீடு கட்டி அதை சிறிது சிறிதாக மாதா மாதம் அடைக்கும் நிலையில் வாழ (மருத்துவ செலவுகளை சேர்க்கவில்லை.அரசு மருத்துவமனைகள் இருப்பதால் ) என்று நான் மேலே கேட்ட கேள்விக்கு யாரும் பதில் தர முயற்சிக்கவில்லையே

    அரசு இலவசமாக யாருக்கு வீடு கட்டி தர வேண்டும் என்று ஒரு அளவுகோல் வைக்க வேண்டும் என்றால் என்ன அளவுகோல் வைப்போம். வீடே இல்லாமல் தெருவில் வசிப்பவர்,நிரந்தர வருமானம் இல்லாமல் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களில் குடிசையில் வசிப்பவர் என்று தானே வைக்க முடியும்.
    ஐம்பது வருடம் பழைய வீடு,சொந்த பழைய ஒட்டு வீடு ,சொந்த இடத்தில குடிசை வீடு எல்லாம் எப்படி ஒதுக்கலாம் என்று வாதிடுவது சரியா
    கடனை வைத்து பார்த்தால் அம்பானி முதல் எல்லாரும் ஏழை தான்.அளவுகோல்கள் குறைந்தபட்ச என்ற அடிப்படையில் தான் உருவாக்கப்படும்
    ஒரு தனிமனிதனுக்கு ஒரு நாள் உணவுக்கு 30 ரூபாய் எனபது ஒன்றும் குறைவான அளவுகோல் கிடையாது.நாம் சில வெட்டி பிட்வாதங்கள் காரணமாக பல உணவு வகைகளை வீணாக்குகிறோம்.வட மாநிலங்களில் ,ஏன் ஆந்திராவில் கூட வாழை தண்டு,பூ எல்லாம் யாரும் சாப்பிடுவது கிடையாது.மணத்தக்காளி,தூதுவேளை,நச்சுகொட்டை,முருங்கை இலை போன்றவை உணவு என்றே பெரும்பான்மையானோருக்கு தெரியாது
    அதே போல இங்கு சுரைக்காய்,பூசணிக்காய்,பலாக்காய் ,மூங்கில் வேர் ,கடுகு எண்ணெய் போன்ற பலவற்றை நாம் உண்ணுவது கிடையாது

    ReplyDelete
  57. இவனையெல்லாம் ஒரு அறிவாளி என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை நினைக்கும் போது தான் கவலையாக உள்ளது.

    ReplyDelete
  58. மூலப்பொருட்களின் விலையை மட்டும் சொல்லும் பத்ரி அதனை தயாரிக்க எடுக்கும் நேரம், அவ்வுழைப்புக்கான ஊதியம் என்பவற்றை கணக்கில் எடுப்பதில்லையா?

    மூலபொருட்களின் விலையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அப்பாவி உழைப்பாளிகளின் உழைப்பை மதிக்காத (உலகில் கேவலமான இந்திய காங்கிரஸ் சிந்தனை) மடமைப் போக்கும் மட்டமான சிந்தனையும் எழுத்தில் வெளிபடுகிறது.

    ReplyDelete
  59. ஒரு நாளைக்கு ஆகும் குடும்ப செலவு 347.50/
    கிலோ 52.00 ரூபாய் அரிசி 1/4 கிலோ : 13.00

    கேரட், பீன்ஸ், கத்தரி கிலோ ஆவ்ரேஜ் கிலோ 50 ரூபாய் காய்கள் 1/4 கிலோ : 12.50

    மசாலா, புளி, இதர சாமான்கள் : 8.00

    எரி வாயு : 6.50 (ஒரு சிலிண்டர் 400ரூபாய் இரண்டு மாதம் வருகின்றது)

    எண்ணை ரீபைண்ட் ஆயில் : 6.50 (லிட்டர் 100 ரூபாய்)

    பால் 1/2லிட்டர் : 18.00

    ஸ்நேக்ஸ் நொறுக்குத் தீனி : 13.50

    வாடகை 3000 மாதம் : 100.00

    கரண்ட் பில் மாதம் 200 : 6.50

    மருந்து மாத்திரைகள் மாதம் 400 : 13.50

    பெட்ரோல் செலவு மாதம் 400 மட்டுமே : 13.50

    சினிமா பொழுது போக்கு ,டி.டி.ஹெச் மாதம் 400 : 13.50

    ஆடைகளுக்காக வருடம் 5000 : 13.50

    விழாக்கள் பேருந்து பயணம் வருடம் 10,000 : 28.00

    கறி,கோழி,முட்டை,மீன் மாதம் 400 ரூபாய் வருகின்றது : 26.00

    ஸ்கூல் பீஸ் இந்து பள்ளியில் மிக்குறைந்த கட்டணத்தில்,பேருந்து கட்டணம் உட்பட வருடம் 20,000 : 55.00

    மொத்தம் ஒரு நாளைக்கு சராசரி திருப்பூர் வாசிகளுக்கு ஆகும் செலவு : 347.50

    இதுல சாப்பாட்டுச்செலவு மட்டும் : 70 ரூபாய் வருகின்றது.

    இது போக குழந்தைகள் சோப், துவைக்கும் சோப், பவுடர், தேங்காய் எண்ணை, இருக்கின்றது.

    சாப்பாட்டுச் செலவு மட்டும் ஒரு ஆளுக்கு 35ரூபாய் வருது.....!
    அதை மட்டும் கூறினால் எப்படி பத்ரி சார்...?

    ReplyDelete
    Replies
    1. அவர் மார்கெட் போய் பல வருடம் ஆகி இருக்கிறது என்று நினைக்கின்றேன்

      Delete
  60. இதைவிட எளிமையான ஒரு வழி இருக்கிறது.. பாய்ஸ்பட செந்தில் போல எந்தெந்த கோவிலில் எப்பப்ப பிரசாதம் கொடுப்பாங்க என லிஸ்ட் எடுத்து அங்கே அனுகினால் தினமும் இலவசமாகவே வாழலாம்!! நம் துறவிகளெல்லாம் அதைத்தான் செய்தார்கள்.. இதை IIM பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்!!

    ReplyDelete