பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய "Tiger Claw Tree" (Penguin Publishers) என்னும் ஆங்கிலப் புதினத்தின் தமிழாக்கம் "புலிநகக் கொன்றை" (காலச்சுவடு பதிப்பகம் - அவரே தமிழாக்கியுள்ளார்) சனி அன்று வாங்கினேன். இதன் ஆங்கிலப் பதிப்பை விமரிசைக்கையில் அசோகமித்திரன், "ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்" என்று பாராட்டியுள்ளார். நான் ஏற்கனவே ஆங்கில நாவலைப் படித்தமையால், அது இன்னும் மனசில் அழியாமல் இருந்தமையால், தமிழில் படிக்கத் தயக்கம். நேற்று ஒருவகையில் ஆரம்பித்துவிட்டேன்.
நாங்குநேரி - நம்மாழ்வார் பிறந்த ஊர், மதுரகவி ஆழ்வார் தொண்டு செய்த ஊர் - ஜீயருக்கு மடப்பள்ளியில் புளியோதரை செய்து போடும் சமையற்காரருக்கு மகளாகப் பிறந்த பொன்னம்மாளின் கதையாக நீண்டு வளரும் இந்தக் கதையில், தமிழகத்தின் வரலாறும் விரிவடைகிறது. முழுக் கதையையும் மீண்டும் தமிழில் படித்துவிட்டு என் சிறு விமரிசனத்தை இங்கு வைக்கிறேன்.
கூடவே இன்னும் பல புத்தகங்களை வாங்கினேன். முக்கியமாக மா.கிருஷ்ணனின் (அ.மாதவையாவின் புதல்வர்) 'மழைக்காலமும், குயிலோசையும்' புத்தகமும் வாங்கினேன். இந்தப் புத்தகத்தைப் பற்றியும், கிருஷ்ணனைப் பற்றியுமான ராமச்சந்திர குஹாவின் கட்டுரை The Hindu இதழிலிருந்து இதோ.
பிரபஞ்சத்தில் மனிதர்கள்
21 hours ago

No comments:
Post a Comment