தமிழக அரசு ஆகஸ்டு 31, 2003 க்குள் சென்னையில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் சேமிப்புக்கான அமைப்பினை (Rain water harvesting unit) கட்டாயமாக அமைக்க வேண்டும் என்று அவசர ஆணை (ordinance) பிறப்பித்துள்ளது. மிகவும் அவசியமான ஒன்று என்றாலும் இது போன்ற "துக்ளக்" சட்டங்கள் நடைமுறைக்கு ஒவ்வாதன. வெறும் 40 நாட்கள் அவகாசம் கொடுத்து விட்டு அத்தனை வீடுகளிலும் இது நடைபெற வேண்டுமென்றால், அது எப்படி சாத்தியம்? கிட்டத்தட்ட 99% வீடுகளில் இதுபோன்ற ஆணை அமலுக்கு வந்ததே தெரியாது.
ஆகாஷ் கங்கா என்னும் அமைப்பின் இணைய தளத்தில் மழைநீர் சேமிப்பு பற்றிய விவரங்கள் தெரிய வரும். சென்னைக் குடிநீர் வாரியத்தின் இணையப் பக்கத்திலும் இது பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.
அம்ம நாம் அஞ்சுமாறே!
1 hour ago
No comments:
Post a Comment