OCR என்றால் Optical Character Recognition - அதாவது படமாக உள்ள எழுத்துக்களை, கணினி மூலம் ஆராய்ந்து, கணிவடிவிற்கு மாற்றுவது - எழுத்துருக்களை அடையாளம் காண்பது ஆகும்.
அச்சிட்ட புத்தகம் ஒன்று வாங்குகிறீர்கள். அது கணினி வடிவில் இருந்தால், பிறரோடு கருத்து பரிமாற உதவியாயிருக்கும். யாஹூ குழுமங்களில் மேற்கோள் காட்டலாம், விமரிசனம் எழுதலாம். கணினி மூலம் பல கோப்புகளுக்கிடையே ஒரு குறிப்பிட்ட சொல்லை மட்டும் தேடலாம்.
நீங்கள் ஒரு scanner-ஐ (ஒளி மூலம் தாளில் உள்ளதை கணினிப் படமாக மாற்ற உதவும் கருவி) வாங்கினால், அதனோடு ஆங்கில எழுத்துகளை கண்டறியும் மென்பொருளும் கூடவே தரப்பட்டிருக்கும். இதன் மூலம் தினம் வரும் செய்தித்தாளை, ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கும் பக்கங்களை சுலபமாக scan செய்து, OCR செய்து, கணினி வடிவிற்குக் கொண்டு வந்துவிடலாம்.
தமிழில் இந்த வசதிகள் குறைவு. நேற்று 'பொன்விழி' என்று ஒரு மென்பொருளை வாங்கினேன். இது சென்னையைச் சேர்ந்த 'குரு சொலுஷன்ஸ்' என்னும் நிறுவனத்தால் விற்கப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வி. பாலசுப்ரமணியன், 17/10 வாசுதேவ புரம், மேற்கு மாம்பலம், சென்னை 600 033, தொலைபேசி எண் +91-44-2473 1048, மின்னஞ்சல் vengba@hotmail.com.
இந்த மென்பொருளைப் பற்றிய தகவல்களை அடுத்த கட்டுரையில் காண்க.
எழுத்தும் தத்துவமும்
2 hours ago
No comments:
Post a Comment