Monday, April 15, 2013

உலகப் புத்தக நாள் பெருவிழா 2013

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி, சர்வதேச புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனைக் கொண்டாடும்விதமாக, சென்னை புத்தக சங்கமம் என்ற அமைப்பு சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. 18 ஏப்ரல் 2013 முதல் 27 ஏப்ரல் 2013 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.

கிழக்கு பதிப்பகம் இந்தக் கண்காட்சியிலும் கலந்துகொள்கிறது. ஸ்டால் எண் 12.

நீங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப, இந்தக் கண்காட்சிக்கோ அல்லது சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழாவுக்கோ வந்துசெல்லுங்கள். கோடையின் வெப்பத்தைப் புத்தகங்கள் தணிக்கட்டும்!


5 comments:

  1. // கோடையின் வெப்பத்தைப் புத்தகங்கள் தணிக்கட்டும்! // விசிறிக்குப் பதிலா மக்கள் யூஸ் பண்ணிக்கப் போறாங்க சார் :-)

    ReplyDelete
  2. Sir,

    I respectfully submit that you should discontinue the arrangement for buying books by/over phone

    Viswanathan Dubai

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் விஸ்வநாதன். உங்களுக்கு அந்தச் சேவை பயன் இல்லாமல் இருந்திருக்கலாம்; அல்லது அதன் சேவைத் தரம் உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு சேவையின் தன்மையைப் பொருத்து அதற்கென சில வாடிக்கையாளர்கள் வந்துசேருவார்கள். அவர்களுக்கு அந்தச் சேவை எதையோ அளிக்கிறது. உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாததற்காக நான் என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். டயல் ஃபார் புக்ஸ் சேவை தொடரும். அடுத்த சில வருடங்களிலாவது அதன் சேவைத் தரத்தை மேலும் உயர்த்தமுடியும் என்று நம்புகிறேன்.

      Delete
  3. \\நீங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப, இந்தக் கண்காட்சிக்கோ அல்லது பபாசி நடத்தும் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழாவுக்கோ வந்துசெல்லுங்கள். கோடையின் வெப்பத்தைப் புத்தகங்கள் தணிக்கட்டும்! \\

    change papasi here also.

    ReplyDelete