Tuesday, August 13, 2013

அடிப்படைக் கல்வியில் பிரச்னை

ட்ரீஸ், சென் எழுதியுள்ள An Uncertain Glory புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வோர் அத்தியாயமும் என்னை மிகவும் தொல்லை செய்கிறது. 66-வது சுதந்தர தினத்தை நெருங்கியுள்ளோம். இத்தனை ஆண்டுகளில் உருப்படியாக ஒன்றையுமே சாதிக்கவில்லை. நம்மைவிட ஏழை நாடுகளெல்லாம், நமக்குப் பிறகு சுதந்தரம் வாங்கியவர்களெல்லாம் பல விஷயங்களில் நம்மைத் தாண்டிச் சென்றுவிட்டார்கள். மிக மிக அடிப்படையான விஷயங்கள் இவையெல்லாம். அதில் ஒன்று கல்வி.

நம்மளவுக்குக் கல்வியில் பின்தங்கிய நாட்டைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும். ஒருபக்கம் ஐஐடி, ஐஐஎம் என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் படிப்பறிவற்றோர் எண்ணிக்கை மிக மிக அதிகம் நம் நாட்டில். அரசுப் பள்ளிக்கூடங்களில் பல ஆசிரியர்கள் பல நாட்களுக்கு வேலைக்கே வருவதில்லை. ஒருசில திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பலவற்றில் தலைமையாசிரியர்களே பள்ளிக்கு வருவதில்லை. மறுபக்கம், உணவு, சீருடை, புத்தகம் ஆகியவற்றை இலவசமாகக் கொடுத்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதிலும் குறைபாடு. ஓராண்டில் 200 நாள்கள் பள்ளிக்கூடம் நடத்தப்படவேண்டும் என்றால் ஆசிரியர்/மாணவர் வருகை தராததைக் கணக்கில் எடுத்தால் பாதிக்குப் பாதி நாள்கள் வீணாகிவிடுகின்றன என்கிறார்கள் ட்ரீஸ், சென். அதிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தும் பாடம் நடத்தாததைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 50 நாள்கள்கூட மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுவதில்லை என்கிறார்கள்.

ஆனால் உலகிலேயே ஒரு நாட்டின் பெர் கேபிடா ஜிடிபி (தலைக்கு இவ்வளவு வருமானம்) என்பதை வைத்துப் பார்க்கும்போது, மிக அதிகமான சம்பளம் இந்திய அரசுப்பணி ஆசிரியர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் (OECD Countries) ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் ஜிடிபி பேர் கேபிடாவுடன் ஒப்பிடும்போது 1.2 மடங்கு. சீனாவில் 0.9 மடங்கு. ஜப்பானில் 1.5 மடங்கு. பாகிஸ்தானில் 1.9 மடங்கு. இந்தியாவில் 3 மடங்குக்குமேல். மாநிலத்துக்கு மாநிலம் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவின் 9 பெரிய மாநிலங்களில் (தமிழகம் சேர்த்து), 3.0 மடங்கு. உத்தரப் பிரதேசத்தில் 6.4 மடங்கு, பிகாரில் 5.9 மடங்கு.

பிறரைவிட இவ்வளவு அதிகமாகச் சம்பளம் கிடைக்கிறது என்பதாலேயே ஆசிரியப்பணியில் நாட்டமில்லாதவர்களும் ஆசிரியர் வேலைக்கு வருகிறார்கள். அதனைப் பெறுவதற்காக எத்தனை லஞ்சத்தைக் கொடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. வேலையில் சேர்ந்ததும் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள்; பள்ளிகளுக்கு வருவதில்லை; வந்தாலும் பாடம் நடத்துவதில்லை.

மேலும் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுத்துக் கட்டுப்படியாவதில்லை என்பதால் அரசுகள் மேற்கொண்டு ஆசிரியர் நியமனங்களைச் செய்வதில்லை. மாறாக மிகக் குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்கிறது. இப்படி நியமிக்கப்படுவோர், அதிகச் சம்பளம் வாங்குவோருடன் சேர்ந்து ஒரே பள்ளியில் வேலை செய்கிறார்கள்.

இதே நிலைதான் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் நடக்கிறது. மறுபக்கம் தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்கிறார்கள் ஆசிரியர்கள். இதையே ட்ரீஸ், சென் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:
The result of all this is an oddly dualistic teaching cadre, where professional but often laid-back ‘permanent teachers’ work side by side with informal but more active ‘contract teachers’ hired at a fraction of the former’s salary.

--Dreze, Jean; Sen, Amartya, An Uncertain Glory: India and its Contradictions, Penguin
எவ்வாறு ஊதியக்குழு, தன்னிஷ்டத்துக்கு அரசு ஊழியர் ஊதியங்களை அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறது என்பதையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஆசிரியர்கள் இவ்வளவு சம்பளத்தை வாங்குகிறார்களே, வேலையாவது ஒழுங்காகச் செய்து தொலைக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. விளைவு, பெரும்பான்மை மாணவர்களுக்கு எழுத, படிக்க, எளிமையான கணக்குகளைப் போடத் தெரிவதில்லை. எட்டாம் வகுப்பு வரை பாஸ் போட்டுக்கொண்டே வந்து, ஒன்பதாம் வகுப்பில் விட்டுவிடுகிறோம்.

இதற்கு மாற்று தனியார் பள்ளிகள் அல்ல என்கிறார்கள் ட்ரீஸ், சென். என் வலதுசாரி மனோபாவத்தைத் தாண்டி இங்கு நான் ட்ரீஸ், சென்னுடன் உடன்படுகிறேன். கல்வியிலும் உடல்நலத்திலும் முழுமையான தனியார் துறையால் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். அரசின் தலையீடு மிக மிக அவசியம். ஆனால் அரசு ஆசிரியர்கள் இப்போது நடந்துகொள்ளும் விதத்தை வைத்துப் பார்த்தால் அரசுப் பள்ளிகளால் பிரயோஜனம் இல்லை என்றும் புரிகிறது.

என் நண்பர்கள் சிலர் (சத்யா உட்பட) வவுச்சர் முறை என்பதை முன்வைக்கிறார்கள். ட்ரீஸ், சென் வவுச்சர் முறையில் குறைபாடு உள்ளது என்கிறார்கள். அதுகுறித்து ஒரு சிறிய விவாதமும் உள்ளது. (எழுதினால் இந்தப் பதிவு நீண்டுவிடும்.)

பிற ஏழை நாடுகளில்கூட ஓரளவுக்குச் சிறப்பாக இயங்கும் கல்விமுறை என் இந்தியாவில் இப்படி ஆகிப்போயுள்ளது? இது நம்மை மிகவும் வருத்தமுறச் செய்யவேண்டும். இன்று பல குடும்பங்களில், உணவுச் செலவைவிடக்  கல்விக்கான செலவுதான் அதிகமாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டால் மந்திர வித்தைபோல பிள்ளைகள் சிறப்பான கல்வியைக் கற்றுத் தேர்ந்து வாழ்வில் உயர்ந்துவிடுவார்கள் என்று பல கீழ்நடுத்தர மக்களும் ஏழை மக்களும் நினைக்கிறார்கள். இது உண்மையே அல்ல. இவர்கள் போகும் பல தனியார் பள்ளிகளிலும் மிகக் குறைவாகச் சம்பளம் வாங்கும் தரமற்ற ஆசிரியர்கள்தான் உள்ளனர். அவர்கள் சொல்லித்தரும் அரைகுறை ஆங்கிலக் கல்வி படுமோசமானதும்கூட.

***

ட்ரீஸ், சென் எடுத்துக்காட்டும் பிரச்னைகள் அனைத்தும் மிக முக்கியமானவை. ஆனால் அவர்கள் முன்வைக்கும் வழிமுறைகளை நான் ஏற்கவில்லை. உதாரணமாக எந்தவித ஆய்வும் இல்லாமல், கல்வியுரிமைச் சட்டம் கல்விப் பிரச்னைகள் பலவற்றையும் தீர்த்துவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் என் பார்வையில், கல்வியுரிமைச் சட்டம், ஏற்கெனவே பிரச்னைகள் நிரம்பியுள்ள ஒரு துறையில் பிரச்னைகளை அதிகப்படுத்தியுள்ளது.

ஒரு வாரத்துக்குப்பின், இதுகுறித்து விவரமாக எழுதுகிறேன்.

59 comments:

  1. Thanks badriseshadri for focussing on a very vital issue that has ramifications for one hundred years from now. Unfortunately the educated middle class is simply indifferent to this issue living in a selfish cocoon.

    ReplyDelete
    Replies
    1. what can middle class do for this problem.. They work hard, earn a decent income and spend for their kids education...
      The problem badri discuss is about inefficient public education system that is targeted for poor people..he says root cause of the evil is overpaid govt teachers...how is that problem related to indifferent middle class ... ppl like u with leftist mentality are root cause of all evils affecting this society

      Delete
  2. Dear Badri

    One more issue with India is the slow legal system. Even in countries like Pakisthan and Srilanka, the legal system works fast and the appeals are completed in 12 Months. Unless we have a faster legal system, we cannot bring any changes in any sector. Historically only punishment brings in responsibility - Sankaranarayanan

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் சென்சஸ் போன்ற கணக்கெடுப்புக்கள், அடிக்கடி கூட்டப்படும் கூட்டங்கள், சம்பளப்பட்டியல் தயாரித்தல், விடுப்பு ஆவணங்கள் பராமரித்தல், சத்துணவு மேற்பார்வை,இலவச சீருடை, இலவச புத்தகங்களை பெற்று வந்து வினியோகித்தல், இன்ன பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படும் நாட்களையும் கணக்கெடுத்தால் நீங்கள் கூறும் 50 நாட்களிலும் கூடப் பாடங்கள் நடப்பதில்லை.

    ReplyDelete
  4. Exactly My Thoughts.. I have expressed this to many of my friends in the recent past.
    /*
    பிறரைவிட இவ்வளவு அதிகமாகச் சம்பளம் கிடைக்கிறது என்பதாலேயே ஆசிரியப்பணியில் நாட்டமில்லாதவர்களும் ஆசிரியர் வேலைக்கு வருகிறார்கள். அதனைப் பெறுவதற்காக எத்தனை லஞ்சத்தைக் கொடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. வேலையில் சேர்ந்ததும் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள்; பள்ளிகளுக்கு வருவதில்லை; வந்தாலும் பாடம் நடத்துவதில்லை.
    */

    ReplyDelete
  5. As long as the salary gets paid regardless of performance, things will stay like this. This is true not just for government teachers, but government doctors, and other government workers.
    The quality of teachers in private sector schools aren't all that great either. Perversely, that is because the pay is quite low in this case. The pay is so low that capable people do not aspire for a career in teaching.
    I guess there are no easy solutions. Paying teachers well but at the same time demanding performance can solve the issue, but as long as government employees cannot be fired for not turning up/poor performance, the status quo of poorly paid not so motivated teachers and highly paid and can't be fired absentee government teachers is here to stay.

    ReplyDelete
  6. Solution is effective public education system that ensures accountability from teachers. Teachers deserve reasonable salary. Salary paid to teachers may appear to be high but is that really so.

    ReplyDelete
  7. Hmm.. Now, all those net revolutionaries will start on you on "over paid" teachers!! Those mouse "revolutionaries" will spend more time attacking that part rather than focusing on the issue at hand. உழைக்கும் மக்களின் ஏக போக பிரதிநிதிகள் பொங்கி எழுவர் !! "கடமையை செய்யாதே பலனை எதிர் பார் " என்பதே கொள்கை. வெளங்கிடும் நம்ம நாடு :-(

    ReplyDelete
  8. மெக்காலே கல்வி முறை என்று நீங்கள் சொல்லாமல் விட்டது வருத்தம் தான் .. மூல காரணம் தெரிந்து கொள்வது நல்லது
    கீழ்கண்ட லிங்கை கொடுத்ததற்காக வ(ரி)சையில் வருபவர்கள் வரவும் ,,, http://www.tamilhindu.com/2011/08/indian-education-hanged-on-the-cross/

    ReplyDelete
  9. the root cause http://www.tamilhindu.com/2010/06/gurukula_system_for_british_poor/

    ReplyDelete
  10. எனக்குத் தெரிந்த ஒரு கேஸில் ஒருவர் டீ கடை நடத்தி வந்தார். எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் அவரது முறை வந்த போது ஆசிரியர் நியமனம் பெற்றார். அவரது தொழில் டீக்கடை. தொழிலை விடாமல் ஆசிரியராகப் பணியாற்றினார்.இது எப்படி என்று ஊகித்துக் கொள்ளலாம். இம்மாதிரியான நிலைமைகள் அபூர்வமானதும் அல்ல
    சுமார் 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் தொழிலில் அக்கறை கொண்டவர்களே ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.பள்ளி நிர்வாகத்துக்கு ஆசிரியர்கள் மீது அதிகாரப் பிடி இருந்தது. ஆசிரியர்களைப் பள்ளி நிர்வாகம் தட்டிக் கேட்க முடிந்தது.
    இப்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் ஆசிரியர் நியமன முறையில் பள்ளி நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை.ஆசிரியர்களைத் தட்டிக் கேட்க இயலாது.ஆசிரியர் நியமன விஷய்த்தில் என்று அரசு அதிகாரம் செலுத்த ஆரம்பித்ததோ அன்றே கல்வி முறை குட்டிச் சுவராக ஆரம்பித்து விட்டது.

    ReplyDelete
  11. //Hmm.. Now, all those net revolutionaries will start on you on "over paid" teachers!! Those mouse "revolutionaries" will spend more time attacking that part rather than focusing on the issue at hand. உழைக்கும் மக்களின் ஏக போக பிரதிநிதிகள் பொங்கி எழுவர் !! "கடமையை செய்யாதே பலனை எதிர் பார் " என்பதே கொள்கை. வெளங்கிடும் நம்ம நாடு :-(//

    Buddy, your 2 cents (on the solution!)?

    ReplyDelete
    Replies
    1. Well, I agree with Badri on overpaid-non-accountable-teachers is the problem. That is much more than 2 cents on the solution - to expect teachers be accountable for the salary paid is *the* solution. To ignore all those 'left' (out) "revolutionaries" is the need of the hour.

      Delete
  12. நல்ல பதிவு. இதே புக்குல சும்மா அஞ்சாறு பக்கத்துக்கு அம்மா கேண்டீனப் பத்தி ஆகா ஓகோன்னு அமர்த்தியா பாராட்டி எழுதியிருக்கறத படிச்சீங்களா ???

    ReplyDelete
    Replies
    1. I am yet to reach that section. However, I disagree with Dreze, Sen conclusion on Amma Unavakam. I think they are disaster in the waiting. However, Tamil Nadu is a model worth studying. Dreze, Sen book has shown me (so far) that Tamil Nadu has, despite corruption and indifference, done much better than many, nay most, nay almost all other states on many social indicators. It has to be appreciated. But I would be happy if we can do hundred times better.

      Delete
    2. I read the article in The Hindu. Dreze and Sen have not written anything about Amma Unavakam. They are generall praising Tamil Nadu's innovation in the areas that are dear to their heart. I think many of TN's initiatives can be appreciated but not all. Soe of them are disastrous. The Hindu writer links a qute in appreciation of TN to Amma Canteens. Anyway, let me finish up the book and revert on this.

      Delete
  13. எட்டாம் வகுப்புவரை யாரையுமே பெயில் ஆக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றமே உத்தர‌விடும் நாட்டில், ஆசிரியர்களை மட்டும் பழித்து என்ன பயன்? எட்டு வகுப்புவரை தேர்வே இல்லாமல் வருபவனை , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச்சொன்னால் எப்படி? [அத‌ற்காகத்தான் பத்தாம் வகுப்புத்தேர்வையும் ரத்து செய்யும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது போலும்...... நாடு உருப்பட்டுவிடும்..... ] இதில் மதிப்பெண்ணை வைத்து மாணவர்களை மதிப்பிடக்கூடாது என்ற அறிவுஜீவிகளின் அலம்பல் வேறு...... பிறகு ஒரு மாணவனின் திறமையை வேறு எப்படித்தெரிந்துகொள்வதாம்?

    நம் நாட்டில் பல விஷயங்களை குழப்புவதில் நீதித்துறைக்கு உள்ள பங்கை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது.......சமீபத்தில் கூட மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.... இந்தியா முழுக்க ஒரே விதமான கல்விமுறை இல்லாத நிலையில் , அனைவரின் திறமையையும் ஒரு குறிப்பிட்ட முறையில் மதிப்பிடத்தானே நுழைவுத்தேர்வு? மருத்துவம் போன்ற மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட துறைகளில் திறமையற்ற‌வர்கள் நுழைவதை வேறு எப்படித்தடுப்பதாம்?

    சில வருடங்களுக்கு முன்பு தமிழக அளவில் தொழிற்படிப்புகளுக்கு நடந்துவந்த நுழைவுத்தேர்வை அரசு ரத்து செய்தது....காரணம் கேட்டால் கிராமப்புற மாணவர்களுக்கு சிரமமாக இருக்கிறதாம்...... அப்படியெனில் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளித்து , அவர்களையும் போட்டியில் பங்கெடுக்க வைப்பதுதானே அரசின் வேலை?ஓட்டப்பந்தயத்தில் நமக்கு முன்னால் ஓடுபவனின் காலை உடைத்து விட்டு நாம் முதலில் வந்து பலன் என்ன?

    ஆசிரியர்களை தங்கள் அரசியல் ஆதாயத்துக்கு [வாக்குச்சாவடி முறைகேடுகளுக்கு ] பயன் படுத்தியதை ஆரம்பித்து வைத்தவர் கருணாநிதி...... அதற்காகவே கட்சிக்காரர்க‌ளுக்கும் , தகுதியற்றவர்களுக்கும் வாய்ப்பளித்து , அவர்களுக்கு அளவுக்கு மீறிய சம்பளங்களையும் , சலுகைகளையும் வழங்கி அவர்களை ஒரு பலமான ஓட்டு வங்கியாக மாற்றிய புண்ணியவான் அவரே.....சவப்பெட்டியின் மீது அறையப்பட்ட கடைசி ஆணியாக ,சம‌ச்சீர்கல்வியை திணித்தவரும் அவரே......

    இப்போது முப்பருவத்தேர்வு முறை , பொதுத்தேர்வுகளில் மதிப்பெண்களை வாரி வழங்குதல் போன்ற '' அரிய '' பணிகளை ஜெ ஆரம்பித்து வைத்துள்ளார்....... இதெல்லாம் எங்கு போய் முடியப்போகிறதோ?

    ReplyDelete
  14. those who took teaching 'BY CHOICE' will do better. But now
    100% teachers are choosing 'BY CHANCE'

    ReplyDelete
  15. Thanks for all the comments. I am away for a week, in Malaysia and will respond in detail when I am back. I would have finished the book by then. I intend to blg on each chapter and all the issues raised in this book. I recommend this book to anyone interested in India's development. You may disagree with Sen, but you cannot ignore the points he has raised. I also recommend the book 'Poor Economics' by Abhijit Banerjee and Esther Duflo. Will connect the two and write later.

    ReplyDelete
  16. http://pooreconomics.com/teaching-book?page=1

    ReplyDelete
  17. http://www.tamilpaper.net/?p=6967

    அரசு பள்ளிகளின் தரம் சில காலங்களுக்கு முன்பிருந்ததை விட முன்னேறி தான் வந்திருக்கிறது ஆனால் விடாபிடியாக அவற்றை வெகு மட்டமாக காட்டும் வேலை தொடர்வது தான் வேதனை
    இதில் பத்திரிக்கைகளின்,பத்திரிக்கை துறை சார்ந்தவர்களின் பங்கு மிக அதிகம்
    அரசு பள்ளிகளில் என்ன குறை என்று என்று யாராவது பட்டியல் இடுங்களேன்

    எந்த வித இடமும் இல்லாமல் அடுக்குமாடிகளில் நடைபெறும் பள்ளிகளை ,அதிக நேரம் வகுப்புகள் எடுக்கும் மாணவர்களை எடுக்கும் மதிப்பெண்களை வைத்து பிரித்து,யாரும் யாரிடமும் பேச கூடாது ,கண் அசராமல் மனப்பாடம் செய்து கொண்டிருக்க வேண்டும் ,விளையாட்டை பற்றி மூச்சு விட கூடாது என்று நடக்கும் பள்ளிகளை எடுத்துகாட்டாக எடுத்து கொண்டு பள்ளிகளை வெறும் அதிக மதிப்பெண் பெரும் மாணவர் பாக்டரிகளாக நடத்துவதை சரி என்று சொல்வது போல் உள்ளது அரசு பள்ளிகளின் மீதான காட்டமான விமர்சனங்கள்
    வெளியுலகம் பற்றி ஒன்றும் தெரியாமல் ,ரயில்வே கழிப்பறையை பயன்படுத்த கூட தயங்கும் (அதற்காகவே வெளியூர் பயணங்களை ,மாணவர்களுடன் சுற்றுலாக்களை தவிர்க்கும்)மாணவ மாணவிகளை உருவாக்கி கொண்டிருக்கும் தனியார் பள்ளிகள் பற்றி தான் நாம் அதிகம் கவலை பட வேண்டும்

    விளையாட இடம்,பல தரப்பட்ட வகுப்புகளை சார்ந்த மாணவர்களை தோழராக,தோழியாக அடையும் வாய்ப்பு ,நூற்றுக்கு நூறு எடுப்பது மட்டுமே முக்கியம் என்று என்னும் மாணவர்கள் மட்டுமே உடன் படிக்காத சூழ்நிலை ,ஏழ்மையை பற்றிய அறிவு,ஒன்றாக உண்ண வாய்ப்பு தரும் சத்துணவு ,மாணவர்கள் அவர்களாக கற்று கொள்ள கிடைக்கும் நேரம் என அரசு பள்ளியின் அனுகூலங்கள் பல
    அல்ஜீப்ராவும் பிரேசிலில் அதிகம் விளையும் பயிரும் சில மாணவருக்கு தெரியவில்லை என்பதால் அரசு பள்ளிகள் வெகு மோசம் என்ற கருத்து சரியா

    கிரிக்கெட்டோ கணக்கோ வரவில்லை என்றால் வேறு வாய்ப்புகள் உலகத்தில் இல்லையா.அவை கண்டிப்பாக வர வேண்டும் என்று ஆசிரியர்கள்,பெற்றோர்கள் போராட வேண்டும் ,அது தான் உண்மையான ஆசிரியன்,பெற்றோருக்கு அழகு என்ற எண்ணம் அனைவரின் அடிமனதிலும் துளிர்க்க பத்திர்க்கைகள் தான் முக்கிய காரணம்

    ஆந்திராவில் ஒன்பதாவது முதல் பள்ளிகள் காலை ஏழு முதல் இரவு ஏழு வரை.ஞாயிறு கூட அரை நாள் தேர்வுகள் உண்டு.பள்ளிகளில் பத்தடி கூட விளையாடும் இடம் இருக்காது
    இந்தியாவிலேயே அதிக அளவில் மாணவ மாணவிகளை IIT போன்ற கல்லூரிகளுக்கு அனுப்புவதில் அவர்கள் தான் முதலிடம்.அதை தான் அரசு பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களிடம் எதிர்ப்பார்க்கிறீர்களா

    ReplyDelete
  18. சிறுவர்கள் மூன்று கிலோமீட்டருக்குள் உள்ள பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் ,அரசு,தனியார் பள்ளிகள் இரண்டிலும் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு எந்த வித நுழைவு தேர்வும் இல்லாமல் சீட்டு குலுக்கி போட்டு ஒதுக்கப்பட வேண்டும் என்பவை மாற்றங்கள் இல்லையா
    பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானங்கள் எனபது முக்கியம் இல்லையா
    நம் மக்கள் அமெரிக்காவில் இருக்கும் இந்த விதிமுறையால் நல்ல பள்ளி என்று அவர்கள் கருதும் இடங்களுக்கு குடி பெயர்வதும் சாதரணமான நிகழ்வு .அந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களை விட நம் மக்கள் தான் இந்த நல்ல பள்ளி விளையாட்டை முழு மூச்சோடு விளையாடுபவர்கள்
    இங்கிலாந்து நாட்டு அரசு பள்ளிகளில் கருப்பர்கள்,பாகிஸ்தானியர்கள் அதிகம் பேர் படிக்கிறார்கள் என்று அரசு பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் அதிக பணம் செலவழித்து சேர்ப்பதில் முதலிடத்தில் நிற்பவர்களும் இந்தியர்களே.பள்ளிகளின் கல்வி நிலை அவர்களுக்கு என்றும் முக்கியம் அல்ல.தாங்கள் தங்கள் குழந்தைகளுக்கு பார்க்கும் மாப்பிள்ளை ,பெண் போல தான் பள்ளி விஷயத்திலும் அவர்கள் முடிவு இருக்கிறது.
    இதில் பள்ளி சரியில்லாததால் தான் தனியாரை தேடி போகிறார்கள் எனபது தவறான வாதம்

    ReplyDelete
  19. இது மத்திய அரசு பள்ளிகளின் நிலை

    http://www.ndtv.com/article/india/over-81-per-cent-clear-class-xii-cbse-exams-107634

    Among the institutions, students of Jawahar Navodaya Vidyalaya put up a good show with 96.89 per cent of them passing the exam.

    The pass percentage of schools under Kendriya Vidyalaya Sangathan stood at 93.38.

    The pass percentage of Government schools stood at 83.98 and Government aided schools at 79.54.

    இது மாநில அரசு பள்ளிகளின் நிலை

    http://timesofindia.indiatimes.com/city/Tamil-Nadu-Indias-most-literate-state-HRD-ministry/articleshow/46390844.cms

    மாணவர்களை பள்ளியில் தொடர வைப்பதில் தமிழகத்திற்கு முதலிடம் .இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதங்களும் 80 சதவீதத்திற்கு அருகில்
    ஆனால் அவை கற்காலத்தில் இருப்பது போல ஒரு தோற்றம் உருவாக்கபடுவதில் உள்ள உள்நோக்கம் என்ன

    ReplyDelete
  20. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது ஒழுக்கம்,நட்பு,சமத்துவம்,பகிர்ந்து கொள்ளும் குணம்,சகிப்புத்தன்மை ,விளையாட்டு போன்றவற்றோடு படிப்பையும் தெரிந்து கொள்ள தான்.அனைவரும் ஐன்ஸ்டீன் ,கபில் தேவ் ,ஆனந்த ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா

    வலிமை எனபது தைரியமாக எதிர் கொள்ளும் மனநிலை.வேன்களில் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவனுக்கும் ,அரசு தந்த சைக்கிளில் ,இல்லை நடந்து,பேருந்து ஏறி பள்ளி,கல்லூரி செல்லும் மாணவனுக்கும் உள்ள வித்தியாசம் தான் தனியார் பள்ளிக்கும் அரசு பள்ளிக்கும் உள்ள வித்தியாசம்

    பத்தாவது பாஸ்,+2 பாஸ் எனபது தான் பல வேலைகளுக்கு அடிப்படை தகுதி .நம் அரசு பள்ளிகளில் படிப்பவர்களின் தேர்ச்சி சதவீதங்களும் எண்பது சதவீதத்திற்கு அருகில் தானே உள்ளது
    மிகவும் மோசமாக நடத்தப்படும் பள்ளிகள் அரசு,தனியார் இரண்டு இடங்களிலும் உண்டு.அவற்றை சரி செய்ய போராடுவது சரி

    வீட்டுல ரெண்டு மூணுக்கு மேல குழந்தை இருக்கறவங்க யாரும் தனியார் பள்ளியை தேடி போக முடியாது
    என்னோடு பணி புரியும் உத்தர் பிரதேசத்தை சேர்ந்த தோழருக்கு ஏழு குழந்தைகள்.பெண் குழந்தைகளை ஊரில் அரசு பள்ளியில் படிக்க வைக்கிறார். இரண்டு ஆண் குழந்தைகளை மட்டும் தன்னோடு வைத்து கொண்டு மத்திய அரசு பள்ளியில் படிக்க வைக்கிறார்.இது தான் நெஜம்
    மதிப்பெண் நிறைய வாங்க வைக்கும் பள்ளியில் படிக்க வைத்தால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கற்பிக்க வைக்கப்பட்டதன் பலன் இது

    தனியார் பள்ளியில் வகுப்பறையில் ஏ சி இருக்கிறது என்று படிக்க வைப்பவர் பலர். தன மகனை அனுப்ப தனியாக வண்டி வைத்து அதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர் பலர்.அப்படிப்பட்டவர்களை என்ன செய்தாலும் அரசு பள்ளி பக்கம் திருப்ப முடியாது.

    ReplyDelete
  21. இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைபடுவது தமிழன் குணம்.
    வாத்தியார் மட்டும் அல்ல எல்லாருக்கும் இதே குணம் தான்

    அரசு பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பவர்களில் ஓரிருவர் மருத்துவம்அல்லது பொறியியல்,சட்டப்படிப்பு சேருவார்கள்.
    சிலர் கலை கல்லூரிகளில் சேருவார்கள்
    சிலர் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மேல்படிப்பு சேருவார்கள்.சிலர் ராணுவத்தில்,காவல் படையில்,மத்திய மாநில அரசு பணிகளில் சேருவார்கள் .சிலர் சினிமாத்துறையில் சேர முயற்சிப்பார்கள்
    சிலர் ITI சேருவார்கள் .அது பெரிய குற்றம் மாதிரி நினைப்பது ஏன்
    எங்கள் பள்ளியில் படித்தவர்கள் முக்கால்வாசி பேர் IIT மீதி இருப்பவர் NIT என்று சில பள்ளிகள் இருப்பது தான் அளவுகோலா

    நகராட்சி பள்ளி ஆசிரியையின் மகன் நான்.என் சித்தி,அத்தைகள்,மாமா,சித்தப்பாக்கள் ,அண்ணி என அரசு,தனியார் பள்ளிகளில் ஆசிரியராக இருப்பவர் தான் அநேகம்.
    அவர்களை பெரிய குற்றவாளிகள் போல சித்தரிப்பதில் ,ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தை பழிப்பதில்,அவர்கள் பெரும் பணக்காரர்கள் போல காட்டுவதில் ஏதாவது உண்மை உள்ளதா

    என் தாய் பணி புரிந்த ஐந்தாவது வரை உள்ள பல்லாவரம் நகராட்சி பள்ளிக்கு குழந்தையாக இருந்ததில் இருந்து இன்று வரை பல முறை சென்று இருக்கிறேன்.பள்ளி கட்டிடங்களில் நல்ல மாற்றம் தான் ஏற்பட்டுள்ளது.படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறி உள்ளதால் அவர்கள் அரசு மருத்துவமனையை விட்டு விட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு தாவுவது போல தனியார பள்ளிகளுக்கு தாவுகிறார்கள்.

    ReplyDelete
  22. நூறு,ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகவும் கடமை உணர்ச்சியோடு பணியாற்றியது போலவும்,இப்போது அவர்களுக்கு சம்பளம் மிக அதிகமாக தப்படுவதால் அரசு பள்ளிகள் மிகவும் சீரழிந்து விட்டது போல கூற எடுத்து கொள்ளப்பட்ட அளவுகோல்கள் என்ன

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று அரசு பள்ளிகளின் நிலை பல மடங்கு மேல் தான் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்
    அதை விட சிறந்த வசதிகளை,ஆசிரியர்களை கொண்ட சில தனியார் பள்ளிகள் வந்து விட்டதால் அவற்றோடு ஒப்பிட்டு அரசு பள்ளிகள் மிகவும் தரமிழந்து போனதாக எழுதுவதில் துளி கூட உண்மை கிடையாது

    ஒவ்வொரு ஆண்டும் துவங்கப்படும் பல தனியார் பள்ளிகளில் 10 சதவீத பள்ளிகள் கூட சில ஆண்டுகளை கடந்தும் இயங்கும் நிலை கிடையாது.ஆசிரியர் சரியில்லை என்று ஒரு பல ஆண்டுகளாக இயங்கும் தனியார் பள்ளியில்(பலர் தங்கள் குழந்தைகளை சேர்க்க முயற்சி செய்து தோற்ற பள்ளியாக இருந்தாலும் ) இருந்து வேறு தனியார் பள்ளிகளுக்கு மாற்றுபவர்களின் எண்ணிக்கைக்கும் குறைவு கிடையாது
    பள்ளியில் மாணவ மாணவிகள் என்ன கற்க வேண்டும் என்பதில் தெளிவில்லாத பெற்றோருக்கு தான் முதலில் பள்ளி கல்வி பற்றி புரிய வைக்க வேண்டும்.
    பள்ளிகள் காவல்துறை /ராணுவ பயிற்சி மையங்கள் அல்ல.அனைவரையும் ஒரே குறிக்கோளுக்காக,ஒரே வேலைக்காக தயார் செய்ய.

    ReplyDelete
  23. அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் என்ன என்பதை பதிவு செய்தால் பல உண்மைகள் விளங்கும்.புதிதாக வேலையில் சேரும் போது ஆசிரியர் வாங்கும் சம்பளமும்,20 ஆண்டுகள்,முப்பது ஆண்டுகள் பணிக்கு பிறகு அவர்கள் சம்பளத்தையும் பார்த்தால் இந்த GDP அடிப்படையில் செய்யப்படும் கணக்கின் ஜிகினாத்தனம் புரியும்.
    ஆசிரியரின் சம்பளத்தோடு மாணவரின் எண்ணிக்கை ,ஆசிரியர்-,மாணவர் விகிதம் ,மற்ற நாடுகளில் ஆசிரியர்கள் பெறும் சம்பளம் போன்றவற்றோடு ஒப்பிட்டால் சரி.மொத்த வருவாயில் ஒப்பீடு செய்வதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா
    அரசின் வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்களுக்கு செல்கிறது என்றால் வருவாய் குறைவு,வருவாயை பெருக்க வேண்டும் என்று அர்த்தம்.
    ஊதிய கமிசன்கள் பல அளவுகோல்களின் கீழ் தான் ஊதியங்களை நிர்ணயிக்கின்றன.மற்ற அரசு ஊழியர்களை போல தான் ஆசிரியர்களும்.அவர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளும் வெகு குறைவு.
    http://www.edudemic.com/2011/10/global-teacher-salaries/

    இதில் மொத்த சம்பள அடிப்படையிலான பட்டியலில் இந்தியா இன்னும் நுழைய கூட இல்லை.
    இந்தியாவின் ஆண்டு வருமானம் குறைவாகவும் மக்கள் தொகை அதிகமாகவும் இருப்பதால் per capita GDP மிகவும் குறைவு.
    அமெரிக்காவில் வீட்டு வேலை செய்பவர்/வண்டி மேசானிக்/ப்ளம்பர் போன்றவர்களின் சம்பளம் ஆசிரியர்களின் சம்பளத்தை விட சற்றே குறைவு.ஆனால் இந்தியாவில் ஆசிரியரின் சம்பளம் அவர்களின் சம்பளத்தை போல மூன்று மடங்கு அதனால் இந்தியாவில் ஆசிரியர்கள் அநியாய சம்பளம் வாங்குகிறார்கள் என்று வாதிடுவது ஞாயமா

    ReplyDelete
  24. Dear Mr Poovannan: Are you saying TN public/Govt schools are great? And that just because your relatives are working/have worked as teachers?

    You referred to an article from Times of India paper. But, what would you say for this article in that very same paper? http://timesofindia.indiatimes.com/home/education/news/Indian-students-rank-2nd-last-in-global-test/articleshow/11492508.cms

    Would you say we can continue to do "all pass" till eight standard. And we'll just throw very good marks to our kids in 10'th/12'th standard exams just by testing their ability to memorize. Who cares about comparison to other countries in a globalized world? So long as we are "better" than other Indian states, we should be happy. Is that it??

    -Sundar

    ReplyDelete
    Replies
    1. பள்ளிகளுக்கு மாணவமாணவிகளை வரவழைத்து அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விடாமல் நின்று விட எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் தேவையான ஒன்று.
      படிப்பை நிறுத்தி விட்டு குழந்தையை வேலைக்கு அனுப்ப /வேலைக்கு எடுத்து கொள்ள (குறிப்பாக வீட்டு வேலைக்காக பெண் குழந்தைகளை )ஒரு பெரிய கூட்டம் இங்கு உண்டு

      பள்ளி படிப்பு படித்தவர் எத்தனை பேருக்கு அடிப்படை கால்பந்து,கூடைப்பந்து தெரியும் என்றும் பாருங்களேன் சார்.பள்ளி என்றால் அனைவரையும் அல்ஜீப்ராவில் /பூகோளத்தில் புலியாக ஆக்க வேண்டும் என்ற எதிர்ப்பாப்பு சரியா.எட்டு அல்லது பத்து வருடங்கள் ஒழுங்காக காலையில் எழுந்து பள்ளிக்கு சென்று பலருடன் பழகி ,தனக்கு பிடிதததை அறிந்து கொள்ளும் நிலையை உருவாக்குவது தான் பள்ளிகளின் வேலை.
      ஓவியம்/கால்பந்து பிடிக்கும் ஒருவருக்கு கணக்கு வரவில்லை என்பதற்காக அவர் ஆசிரியரை குறை சொல்வது சரியா.கணக்கை வெறுத்த பாரதியாரை ,சரியான மாணவன் அல்ல,அவர் கணக்கு ஆசிரியர் அந்த வேலைக்கு தகுதி இல்லாதவர் என்று வாதிடுவது சரியா

      ஆசிரியர்கள் பல நாள் விடுமுறையில் இருக்கிறார்கள் என்றால் அதை தடுக்க கண்காணிப்பு வேண்டும்.ஆசிரியர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று எந்த சங்கமும் ஆசிரியர்களுக்கு வலியுறுத்துவது கிடையாது.

      Delete
    2. We should be more worried about the physical and mental health of the students and unfortunately private schools lag behind govt schools in this crucial aspect.Emphasis is only on scoring marks and getting a rank in entrance and children have schools from 0700hrs to 1900 hrs without holidays for several years with zero time for play /extracurricular activities.
      Sachin failed in his tenth standard and it doesnt prevent him from being the best in his field.Are there any studies which prove that countries where majority of school students do well in maths and physics are doing better than those where few students do well in academics,few shine in sports,few in arts,few in politics,few as entrepreneurs,few join armed forces,few become farmers etc.
      What do we expect from a school.Do we expect pele and maradonas from every school or atleast students with sound basic knowledge of football.

      Our anger against failure in academics ignoring sports/arts is surprising and saddening.I will be very worried with low attendance of a student but it really doesnt matter if he is poor in tamil or maths or football inspite of attending school regularly if he or his teachers are able to identify what suits him best and is to his liking

      Delete
    3. Is that a either/or question? I guess not. Both sports and art/knowledge are needed - and we should pay attention to both. I completely agree there with you on the importance of sports / extra curricular activities. But, that does not mean that we should live with the current sorry state of teaching. FWIW, I studied in a Govt Tamil medium school - when I see the same school today - I am sorry about the situation.

      -Sundar

      Delete
    4. I am neither arguing govt schools are great,ideal and have reached their full potential nor support absenteesim of teachers.My argument is against demonification of govt school teachers,exaggegerating their salaries using dubious methods and the improvement in performances over the years by govt school students
      The criteria to be taken for assessment of govt schools has to be pass percentage in board exams,reduction in dropout rates,availability of toilets,play grounds,midday meals,gender ratio in enrolment and completion of studies and the situation has really improved compared to what it was 30 years back.
      Performance of private schools which select students after entrance for both the child and parents have become the benchmark and the society forces the parents of academically good students studying in govt schools to shift them to private schools for their?wellbeing leaving behind mostly students disinterested in academics leading to comparatively poor results.Admission in govt schools is not based on exams or interviews and age is the only criteria for admission and significant number of govt school teachers work hard to get their students learn the basics well.The figures of few/only 10% work etc are just motivated speeches without any merit

      Delete
  25. Dear Mr Poovannan: Navodaya பள்ளிகள் குறித்து குறிப்பிட்டுள்ளீர்கள். Navodaya பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளனவா ? If Navodaya schools are doing well as you referred to, why do we prevent those in TN? Whoever wants to put their kids on those schools, let them do so - just like people put their kids in English medium private schools, CBSE schools that teach Hindi as third language and so on.

    -Sundar

    ReplyDelete
    Replies
    1. இந்தியை கட்டாய பாடமாக வைக்க கூடாது எனபது தான் தமிழக அரசுகளின் கோரிக்கை.விருப்ப பாடமாக இருக்க எந்த எதிர்ப்பும் கிடையாது.ஆனால் கட்டாய ஹிந்தி இல்லையேல் பள்ளியே கிடையாது என்று இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் மத்திய அரசு விடாபிடியாக நவோதய பள்ளிகளை தமிழகத்தில் திறக்காமல் தவிர்க்கிறது.ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில விசேஷ சலுகைகள் உண்டு.கஷ்மீரோ,பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாநிலங்களோ-அதே போல தமிழகத்தில் ஹிந்தியை விருப்ப பாடமாக மத்திய அரசு ஏற்று கொண்டு நவோதய பள்ளிகளை திறக்க கூடாதா
      மாநில அரசு ஒதுக்கும் நிலத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் நடக்கும் பள்ளிகள் அவை.கல்வியில் மாநிலத்திற்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கும் நிலை தான் நவோதய பள்ளிகளின் மூலம் ஹிந்தியை திணிக்கும் முயற்சி

      Delete
    2. நண்பரே, நமக்கு நம் மக்களின் மீது நம்பிக்கை இல்லையா ? சுதந்திரமாக முடிவு எடுக்க தெரியாதவர்களா ? நவோதயா பள்ளிகளை தொடங்கினால் என்ன? ஹிந்தி வேண்டாம் என்பவர்கள் தத்தம் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்க்க மாட்டார்களே.. விரும்புவர்கள் படிக்கட்டுமே. அரசாங்கம் ஏன் அதைத் தடுக்க வேண்டும் ?

      சரி. விருப்ப படமாக மட்டுமே ஹிந்தி இருக்க வேண்டும் என்றால் அதற்காக ஏன் நமது அரசியல்வாதிகள் குரல் குடுக்கவில்லை ? மந்திரி பதவி வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும். அனால் நம் மக்களுக்கு பயன்படும் விஷயங்களில் அக்கறை இல்லையெனும்போது மத்தியில் ஆள்பவர்களை குறை கூறும் தகுதி நமக்கெங்கே ?

      Delete
    3. மத்திய அரசு எனபது வெளிநாட்டு அரசா

      தமிழகத்தில் கட்டாய ஹிந்தி வேண்டாம் என்பதை ஒத்து கொண்டு பள்ளிகளை திறக்க வேண்டியது தானே

      தினமும் காலையில் இயேசு பாடல்கள் பாட வேண்டும், மதியம் விரும்புவருக்கு மாட்டு கறி தர ஒப்பு கொண்டால் பள்ளியியன் மொத்த செலவை ஏற்று கொள்கிறேன் என்று கிருத்துவ நிறுவனங்கள் முன்வந்தால் அதை ஒத்து கொள்ள வேண்டும் என்று வாதிடுவீர்களா
      உங்களுக்கு மாட்டு கறி ஒவ்வாமை .சிலருக்கு கட்டாய ஹிந்தி ஒவ்வாமை. மக்கள் வோட்டு போட்டு தானே கட்டாய ஹிந்தி ஒவ்வாமை உள்ள கட்சிகள் ஆட்சிக்கு வருகின்றன.கட்டாய ஹிந்தி இருக்கும் நவோதயா பள்ளிகளை கொண்டு வருவேன் என்று கூறி ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் நவோதயா பள்ளிகளை ஹிந்தியோடு துவங்கினால் மக்கள் அதை ஏற்கிறார்கள் என்று ஒத்து கொள்ளலாம்

      Delete
    4. எனக்கு மாட்டு கறி ஒவ்வாமை என்று உங்களுக்கு யார் சொன்னார்கள் ? எனக்கு இல்லை. I am fine with whatever people want to eat. In fact, that is precisely what I am arguing!! Let the people decide - be it food or religion or education. BTW, I know there are Christian/Hindu schools which ask kids to tell prayers - which I don't personally agree with. But, if someone does not want that, they are free to not send their kids there. Those who are okay - can send their kids. What is our problem in that??

      As for people voting, even the central govt. is also voted by the people - people all over the country!! Are you suggesting that just electoral majority is sufficient for any decision? If so, why not the majority of central govt. insufficient? Say if 41% people speak Hindi and so shall we accept that as "national language" as Hindi-walas suggest?? We don't - we won't - rightly so. We agree that there are fundamental rights of individuals, minorities - religious/linguistic/any other - to choose whatever *they* like. If so, people choice does not end with election alone.


      -Sundar

      Delete
    5. மத்திய அரசு வெளிநாட்டு அரசல்ல. அவ்வாறு நான் கூறவும் இல்லை. ஆனால் அவர்கள் ஹிந்தியை விருப்பபாடமாக மட்டுமே ஏற்போம் என்று கூறி வாக்கு பெறவில்லை. As per your theory of majority of a govt., would you say central govt. should be allowed to implement whatever they prefer??

      -Sundar

      Delete
  26. Mr Badri

    I am associated with rural Govt Schools for the past two decades, past 10 years more closely. I did my schooling in Tamil medium . I can tell you most of the rural 12th students are not able to write even simple words in TAMIL with out any mistake, imagine Maths or any other subject. I fully blame teachers for this pathetic condition. I do not know about the quality of the Pvt schools in rural areas. But our job is only to question quality of Govt Schools since this is only source for uplifting most deserving people.

    ReplyDelete
  27. I want present situation to continue.
    whatever be the reasons, navodaya schools should not be started in tamil nadu. Anything benefitting poor should not be allowed.
    Govt schools only can supply "thondargal" to political parties. that chain should not be cut.
    Govt schools can only supply unskilled labours.
    without getting proper employment, the GOvt school students may take up their parent's work. Then who will do the job of vannar, kuavar and asari?
    so i support govt schools.

    ReplyDelete
  28. இங்கு பூவண்ணன் என்பவர் விலாவரியாக எழுதியுள்ளார். அதில் அவர்தம் உள்ளக்கிடக்கை வெளிவருகிறதே தவிர உண்மை நிலை அவர் அறியார்போலும். இரும்புலியூரில் ஒருவர் இரவின்மடியில் இன்பக்கனா கண்டு இயல்புக்கு மாறான இட்டுக்கட்டிய இன்சுவைக் கதை கூறுவது போலுள்ளது அவர்தம் வாதம். அரசுக்கல்வித்துறையில் உள்ளவன் எங்கிற முறையில் பல உண்மைகள் தெரியும். சிற்சில பள்ளிகளை விட பல பள்ளிகளில் கல்விமுறையும் ஆசிரியர்களின் அறப்பணி இல்லவே இல்லை என்பதுதான் இன்றைய நிலை. சில சென்னைப் பள்ளிகள் நன்றாக உழைக்கின்றன.... தனியாரை விடத் தரம் வாய்ந்தவை .... சில பல பஞ்சாயத்துப்பள்ளிகளும் தமிழகமெங்கும் நன்றாக செயல்படுகின்றன. இவ்வகைப்பள்ளிகளின் பல நல்லாசிரியர்கள், கடமைக்கும் மனச்சான்றுக்கும் கட்டுப்பட்டு பேருழைப்பு காட்டும் தெய்வம் அவர்கள். ஆனால் மொத்த அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இவை பதினைந்து விழுக்காடுகூட இல்லை. மிதமுள்ள 85% விழுக்காடு பேரிடி !!!! அய்அய்டி , என் அய் டி என்று பிரபல தொழில்நுட்பப்பள்ளிகளுக்கு மாணவர்கள் தேர்வானால்தான் நல்ல பள்ளி என்று சொல்லவில்லை. உண்மை நிலை என்னவென்றால், பல 8ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழும் ஒழுங்காகப் பேசத்தெரியவில்லை. தமிழில் கோர்வையாக, பிழையின்றி நான்கு வரிகள் எழுதவும் தெரியவில்லை. கணக்கு, அறிவியல் பக்கமெல்லாம் நான் போகவில்லை. அடிப்படைத் தமிழே இந்த நிலை. கிராமங்களின் நிலை இன்னும் மோசம். நான் தனியார் பள்ளிகள் அருமை என்று வாதம் செய்யவில்லை. அவைகள் பெரும்பாலும் குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்களை வசக்கிப்பிழிந்து மாணவர்களை மனப்பாடப்பொறிகளாக ஆக்கும் ஆலைகள். ஆனால், நாம் ஒப்பிட வேண்டியது மைய அரசின் சார்பில் நடத்தப்படும் கேந்திரிய வித்தியாலயா எனப்படும் கே வி அரசுப்பள்ளிகள். தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து 35 இவ்வகைப்பள்ளிகள் உள்ளன. சமூகநீதியாம் இடஒதுக்கீடு முதல் அரசுப்பணி நியமனங்கள் விதிமுறைப்படி நடத்தப்படும் பள்ளிகள். இதில் நிச்சயம் 90 விழுக்காடு பள்ளிகளின் தரம் அருமை என்றும் ஆசிரியர்கள் நல்ல கடமையுணர்ச்சியுடன் பணியாற்றுகிறார்கள் எனவும் என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். இங்குள்ளதுபோல் ஆசிரியர் பணிநியமனத்தில் ஊழலும் கட்சி அரசியல் குறுக்கீடுகளும் அங்கு கிடையாது என்பது முக்கிய அம்சம். ஆசிரியர் ஊதியங்களில் மிகப்பெரும் வேறுபாடு கிடையாது. கேந்திரிய வித்தியாலயா சங்கத்தன் என்னும் மைய அரசு சார்ந்த மைய அமைப்பு முறையாக நாடெங்கும் இவ்வகைப் பள்ளிகளை நடத்துகிறது. பெரும்பாலும் நாடெங்கும் மாற்றலுக்குள்ளாக வாய்ப்புள்ள மைய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் வசதிக்காகவும் சிலபல பள்ளிபகுதிகளின் பொதுமக்கள் நலன்கருதியும் நடத்தப்படுகிறது. தனியாரெல்லாம் இல்லை. இதுவும் அரசுப்பள்ளிதான். ஆனால் இவர்களைப்போல் மாநில அரசினால் ஏன் தரமாக நடத்த முடியவில்லை ??

    ReplyDelete
    Replies
    1. என் ஊர் பெயரை எல்லாம் சரியா சொல்லும் அனானி அண்ணே

      என் குழந்தைகளும் மத்திய அரசு பள்ளியில் தான் படிக்கிறார்கள்.வட கிழக்கு மாநிலங்களில் உள்ள KV பள்ளிகள் முதல் அமேதியில் உள்ள பள்ளிகள் வரை பல மாநிலங்களில் மத்திய அரசு பள்ளிகள் பலவற்றின் நிலையும் ஆசிரயர் சரியாக வராத சூழல் கொண்டவை தான்.தீவிரவாதிகள் தடுக்கிறார்கள் என்று பள்ளி பக்கமே எட்டி பார்க்காமல் உள்ளூர் படித்த இளைஞர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து substitute teachers வைத்து இயங்கும் KV பள்ளிகள் பல உண்டு.

      KV பள்ளிகளின் நிலைக்கும் தமிழக அரசு பள்ளிகள் நிலைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.சென்னையில் கூட மீனம்பாக்கம்,தாம்பரம்,ஆவடி KV பள்ளிகளில் சேர்ப்பதை விட IIT /CLRI உள்ளே உள்ள KV பள்ளிகளுக்கு தான் அடிதடி.அங்கு தான் நல்ல ஆசிரியர்களாம்.
      நம் மக்களின் மனநிலை அப்படி.அங்கு படித்தால் தான் அனைவரும் நூற்றுக்கு நூறு வாங்குவார்கள்/வாங்க வேண்டும் என்ற வெறி.மீனம்பாக்கம் KV இல் சேர்ப்பதை விட தனியார் CBSE பள்ளியில் சேர்ப்போம் என்று மாறுதலாகி வரும் போது இங்கு இருப்பவர்கள் பேச்சை வைத்து முடிவு செய்பவர்கள் அநேகம்.எந்த காரணத்தால் இந்த பள்ளி சரியல்ல என்று ஒதுக்குகிறாய் என்றால் எந்த காரணமும் வராது

      Delete
    2. மத்திய அரசு பள்ளிகள் பலவற்றின் நிலையும் ஆசிரயர் சரியாக வராத சூழல் கொண்டவை தான். KV பள்ளிகளின் நிலைக்கும் தமிழக அரசு பள்ளிகள் நிலைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

      ********** ************** ------------- நாலு பத்தி முன்னாலதான் அரசுப்பள்ளிகளை ஆகா ஓகோன்னு கொண்டாடிவிட்டு இப்பிடி டமால்னு கீழ போட்டு உடைக்கிறீங்களே !!!

      Delete
  29. //இங்கு பூவண்ணன் என்பவர் விலாவரியாக எழுதியுள்ளார்.//

    Just let him tell where his children or grandchildren are studying. Then we know he tells the truth or for namesake.

    ReplyDelete
  30. திரு பூவண்ணன், நவோதயா எதிர்ப்பு நன்று. அப்படியே உங்கள் பிள்ளைகள் படிக்கும் மத்திய அரசுப்பள்ளியிலும் எங்கள் குழந்தைகள் இந்தி மூன்றாவது மொழியாகக்கூட படிக்கமாட்டார்கள் அப்படி கட்டாயப்படுத்தினால் பிள்ளைகளை பள்ளியிலிருந்து நிறுத்தி, விலக்கிக்கொள்வேன் என்று எழுதிக்குடுத்துவிட்டீர்களா ???

    ReplyDelete
    Replies
    1. http://www.navodaya.gov.in/welcome%20sbs.htm

      , Navodaya Vidyalaya Samiti. Admissions in JNVs are made through the JAWAHAR NAVODAYA VIDYALAYA SELECTION TEST (JNVST) at Class VI. The medium of instruction in JNVs is the mother tongue or regional language up to Class VIII and English thereafter for Maths and Science and Hindi for Social Science.
      ஹிந்தி வேண்டாம் என்று சொல்லும் உரிமை வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் அரசுகளுக்கு உண்டா,இல்லையா என்பதை விட்டு விட்டு என் குழந்தைகளின் படிப்பை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை
      தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளிலும் கட்டாய ஹிந்தி உண்டு. வெளிமாநிலத்தை சார்ந்த அரசு/பொதுத்துறை ஊழியர்களுக்காக உள்ள பள்ளிகள் என்பதால் அதை மாநில அரசு எதிர்க்கவில்லை.அதில் தலையிடவும் மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது
      நவோதய பள்ளிகள் நடத்த மாநில அரசு நிலம் வழங்க வேண்டும்.மாணவர்கள் பள்ளி உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
      மத்திய,மாநில அரசுகள் இரண்டின் கூட்டால் இயங்க வேண்டிய பள்ளியில் மாநில அரசின் கொள்கைகள் மதிக்கபடகூடாது என்பதில் ஏதாவது ஞாயம் உள்ளதா
      மருத்துவம் ,பொறியியல் படிக்க கூட நுழைவு தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு நுழைவு தேர்வை ரத்து செய்து விட்டது.அப்படி இருக்கும் போது அரசு பள்ளியில் ஏழை மாணவர்களை சேர்க்க நுழைவு தேர்வு வேண்டாம் என்று சொல்ல மாநில அரசுக்கு உரிமை இல்லையா

      Delete
    2. There are many CBSE schools where "local" TN kids study - both Govt owned as well as private. All are not kids of "outsiders" (of TN) or central govt. employees. Also apparently, over 500 formerly "metric" schools have applied for CBSE affiliation.

      Even private schools ultimately receive help from both thw state and the central governments by the way of tax benefits etc. - which is why 25% seats are to be enforced.

      So, as per your argument, the city/town folks who can "afford" private schools, can learn Hindi/French/anything - if they choose to do so. State govt can live with that. More private schools are marching towards that - state govt. can live with that too. If a private school is enforced to take 25% poor kids, they can also have the choice (not sure how far that is enforced though).

      But, the other poor, rural folks have to live at the mercy of state govt's policy decisions. They have made all the choices at time of voting for state elections. State gov. can legitimacy to prevent poor folks from choosing! I think I now get your idea of majority, public choice and policy decisions. Thanks.

      -Sundar

      Delete
    3. dear sir

      I have argued on similar lines when it came to english when the state govt decided to introduce english medium as i sincerely beleive that english is more needed and essential than hindi.
      Nothing can be more farce than three language formula which is nothing but an attempt to remove english and make hindi as the link language and centre spends thousands of crores every year for this purpose where people are awarded in cash for replacing english with hindi in official communication.
      I am not against centre or state making learning computers or farming compulsory but forcing hindi on all should never be tolerated or allowed.
      kindly give one valid reason on why hindi is needed across the country when all states study their regional language and english which becomes the link language
      Is it fair to force the mother tongue of one group on all as the link language in a diverse country like India.

      Delete
    4. Dear sir

      I am completely with you on being against on forcing anything against the will of people. But then is it fair for state to force something on it's people - merely because state thinks what is 'good' for it's citizens? Govt. can say X, Y, Z are the minimum things to study (say, should study Tamil, Math, Science in TN and this is the minimum portion to cover etc.) But, is it fair for a gov. - state or center to decide what all is needed on behalf of people? If the people want to put their kids in whatever school they like, what is the problem for state? People who can afford get whatever they want. Essentially, TN govt decides what is "good" for the poor students. I support English medium effort by the TN gov. for the same reason - let the people decide what is good for their kids. If the people want English medium, then they will take it. Both rich and poor will/can have choices. And I believe that should be true for Navodaya schools too. Again - I am not saying let us force Hindi or English or anything else by state. But, if people want it - let them have it. State should only enforce mininum and not close all the available choices.

      You said you are okay with enforcing computers or farming. While some may agree, I am sure you'll concede what you consider "good" need not be considered "good" by everyone else. For example, I *may* think that giving laptops without proper training/curriculum is not going to help much. Essentially, based on your choices, you'd like Govt. to enforce few things and not enforce other things! Now, even if majority think in that fashion (along with you), I believe Govt. should not enforce much on it's citizens. Whoever thinks 3 or N (where N >> 3) language formula may help them -- let them have it. You are convinced that it is not very useful and I am sure you'll decide accordingly for your kids. But then, we should treat people as rational - intelligent enough to decide for themselves. Any attempt to patronize people will backfire anyway.

      Delete
    5. Arguing in favour of three language formula which is utterly discriminatory to nonhindi speakers is similar to the argument that karnataka being the upper riparian state has all rights to decide when to release water and being a lower riparian state tamilnadu has silently oblige by it.Hindi speakers having a higher number or being a upper riparian state should not and doesnot give any advantage in any just society
      Its the question of favouring a particular language across the country with the ulterior motive of making it as the link language replacing english which is the issue for which tamilnadu has fought steadfast for several decades benefitting the entire country including hindi speaking population

      http://swaminomics.org/how-english-survived-in-india/


      The party has (in one of two factional avatars) ruled the state ever since. Many people think South India resisted Hindi. Not really. The resistance was specifically Tamil. Former foreign minister Dinesh Singh, from Uttar Pradesh, once complained bitterly to me that Hindi would have triumphed but for Tamil Nadu.

      Delete
    6. So, essentially people who can afford can learn if they choose to learn! But if you are poor, Govt. will decide everything for you - we'll tell the poor that "you don't know anything, we'll decide everything for you. You voted for us, we'll decide everything for you". I think you did not address that aspect of my argument - you are going on tangent! You keep repeating your principle against imposition of a language - I've no problem with your opposition. I am also against imposing things against the will!

      Question is .. why should state gov. decide/pre-close options for people? People choose a party to rule -- but that does not mean Govt can decide everything on their behalf! Is the Govt (and parties in TN) scared that people may choose otherwise? That the people can see through their (il)logic?

      Delete
    7. sir

      Its a govt school and policies are made by the government and the centre is adamant on having compulsory hindi and is not willing to start the school which needs state participation and support when the state policy of being against three language formula comes in the way.The centre is not bothered that its own citizens are denied residential subsidised education and is unwilling to compromise for the sake of its people.
      Is it fair to expect the state to compromise on its principles which are correct when seen from a neutral and unbiased angle.Is there any logic in expecting the state to surrender its rights on cauvery water or educational policies to accomodate a discriminatory and adamant centre
      Poor can join in KVs which follow three language with compulsory hindi under RTE and the state has no objections to it.

      Delete
  31. இது அரசு அலங்கோலம் (தினமலர் செய்தி ஆகத்து 22, 2013)

    குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சி.இ.ஓ. நடத்திய அதிரடி ரெய்டில் பான் மசாலா, குட்கா போன்ற போதைபாக்கு பாக்கெட்டுகளும், செல்போன், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பயன்படுத்திய பிளஸ் 2 மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    பள்ளி மாணவர்களிடையே செல்போன், மெமரி கார்டு மோகம் பரவலாக இருந்து வருகிறது. இவற்றை வீட்டில் பயன்படுத்துவதை விடுத்து பள்ளிகளில் வகுப்பறை வரை கொண்டு வந்து பயன்படுத்தும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருவது ஆரோக்கியமற்றதாக உள்ளது. தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற போதை பாக்குகளையும் மாணவர்கள் பயன்படுத்தும் அதிர்ச்சி தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் நேற்று சில அரசு பள்ளிகளில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

    மணிக்கட்டி பொட்டல் அரசு மேல்நிலைப்பள்ளி, இடலாக்குடி அரசு பள்ளி, கொட்டாரம் அரசு பள்ளி ஆகியவற்றில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களிடம் திடீர் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது பள்ளி மாணவர்கள் படிக்கும் நேரத்தில் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்ததால் சோதனை செய்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மாணவர்களிடம் செல்போன்கள் 4, அவற்றில் பயன்படுத்திய மெமரி கார்டுகள், சென்ட் பாட்டில்கள், தனியாக வைத்திருந்த சிம் கார்டுகள், பிரேஸ்லெட், பெரிய பக்கிள்சுடன் கூடிய பெல்டுக்கள், வெளிநாட்டு, மற்றும் கோல்டு வாட்சுகள், போதை பான்மசாலா, குட்கா பாக்கெட்டுகள், நவீனநாகரீக சீப்புகள் போன்றவை மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைப்போல் சில மாணவர்களின் முடி அலங்காரம் சினிமா நடிகர்கள் பாணியில் வளர்த்தும், மோசமான தோற்றத்தில் டை அடித்து மாற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு சி.இ.ஓ. அறிவுரை வழங்கினார். மேலும் படிக்கும் காலகட்டத்தில் இதுபோன்று கவனத்தை திசைதிருப்பி தவறான பாதையில் செல்லவைக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

    பள்ளிகளில் நடத்திய திடீர் ரெய்டு குறித்து சி.இ.ஓ. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது;

    ஒழுக்கமுள்ள பள்ளியை உருவாக்க முதலில் ஆசிரியர்கள் ஒன்றுபட்ட கூட்டு செயல்பாட்டை உருவாக்கவேண்டும். ஆசிரியர்களின் கடமை கற்பித்தலோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. ஒழுக்கம் குறைந்த மாணவர்களை திருத்துவதோடு, ஏழ்மையான குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அர்ப்பணிப்போடு செயல்படவேண்டும். ஒழுக்கம் குறைந்த மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தும்போது அவர்களையும் திருத்தமுடியும் என்ற நம்பிக்கை உருவாகும். ஒழுக்கமும், பண்பும் உள்ள மாணவர்கள் வாழ்வின் அனைத்து பருவங்களிலும் மிகச்சிறந்த மனிதர்களாக திகழமுடியும் என்ற உண்மையை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    அவர்களின் ஒழுக்கமே பள்ளியின் நிறை, குறைகளுக்கெல்லாம் காரணமாக அமைகிறது. மாணவன் ஒழுக்கம் உள்ளவரா என்பதை அவனது நடத்தை, புறத்தோற்றம், உடல்மொழி போன்றவற்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும். பள்ளிகளில் ஒழுக்கத்தை உருவாக்கவேண்டும் என்ற தவிப்பு ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் பள்ளியும், மாணவர்களும் சிறந்த மதிப்பு மிக்கவர்களாக உயர்வர்.

    மேலும் ஒவ்வொரு மாணவர்களின் வீடுகளும் அவர்களின் நடத்தையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே முக்கியமான பள்ளி பருவத்தில் உபயோகிக்கக்கூடாத பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை நல்ல பாதைக்கு அழைத்து செல்லவே இந்த ரெய்டு நடத்தப்பட்டது என்றார்.


    ReplyDelete
  32. இது தனியார் அலங்கோலம் (ஆ விகடன் , ஆகத்து 22, 2013)

    கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை தேர்வுத்தாளை திருத்திக்கொண்டிருந்தார். வினாத்தாளில் கேள்வி ஒன்றுக்கு, பாலியல் தொடர்பான தன் இச்சைகளை ஆசிரியையுடன் சம்பந்தப்படுத்தி ஒன்றரைப் பக்கத்துக்குப் பதிலாக எழுதியிருந்தான் ஒரு மாணவன்.

    உயர் வர்க்கக் குழந்தைகள் படிக்கும் நாமக்கல் பள்ளி அது. சில மாணவர்கள் கழிப்பறையில் ஆபாச அடைமொழிகளால் பள்ளியில் பணிபுரியும் பலரையும் மாணவிகளின் பெயரையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். விசாரணையில் அந்த மாணவர்களைக் கண்டுபிடித்து பள்ளி நிர்வாகம் மாணவர்களை டிஸ்மிஸ் செய்தது. தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அந்த மாணவர்கள், இப்போது மனநல ஆலோசனையில் இருக்கிறார்கள்.

    பள்ளிக்கூட வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளையும் பதற்றத்துடன் கழிக்கிறார்கள். '15 வயதில் ஆபாசப் படம், 16 வயதில் காதல், 17 வயதில் வீட்டைவிட்டு ஓடுவது’ எனச் சீரழிகிறது சிறுவர்களின் வாழ்வு. 'தங்கள் பிள்ளைகள் நல்லவர்கள்’ எனப் பெற்றோர்களின் உள்மனது அவர்களுக்கு ஆறுதல் சொன்னாலும், இன்னொரு புறம் சமூக யதார்த்தம் அவர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது.

    மாணவர்கள் மட்டும்தான் இப்படி என்று எண்ண வேண்டாம். இந்தப் படுகுழி சீரழிவில் மாணவிகளும் சிக்கியுள்ளனர்.

    ''சென்னையில் உள்ள மேல்தர வர்க்கக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் அது. வகுப்பு நடைபெறும்போது மாணவி ஒருத்தி வகுப்பறையில் மொபைலில் அடல்ட்ஸ் ஒன்லி வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதைக் கண்டுபிடித்த ஆசிரியை, 'உன் பெற்றோரை அழைத்துச் சொல்லட்டுமா?’ என்று கேட்க, 'நீங்க ஏன் இந்தக் கேள்வி எல்லாம் கேக்கிறீங்க? என் அப்பா அம்மாகிட்ட என்ன சொல்லப்போறீங்க? நான் நல்லாப் படிக்கிறேனா, ஒழுங்கா மார்க் வாங்குறேனா.... அதை மட்டும் பாருங்க’ என்று அலட்சியமாய் பதில் சொல்லியிருக்கிறாள். மதிப்பெண்களைத் தாண்டிய வாழ்க்கை மதிப்பீடுகளைக் கற்றுத் தராத பெற்றோர்களும் பள்ளிக்கூடங்களும்தான் இப்படியான நடத்தைகளுக்கு முழுப் பொறுப்பு'' என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

    ஒரு மிஸ்டுகாலில் தொடங்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையிலான உரையாடல், 'உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு’ என்று இழுத்து, ஆறே மாதத்தில் வீட்டைவிட்டு ஓடி வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளும் அளவுக்குச் செல்கிறது. சிறுவர்களோ, ஆபாசப் படங்களில் பார்க்கும் பெண்களைத் தேடிச் செல்வது, அதற்காகப் பணம் செலவழிப்பது, பணம் இல்லாதபோது பழகிய வீடுகளிலேயே திருடுவது, அதுவே சில நேரங்களில் கொலை வரை செல்வது என்று விபரீதமாகிவிடும். இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலானவற்றின் காரணங்களை ஆராயும்போது, சமூக வலைத்தளங்களும், செல்போன்களும்தான் முக்கியக் காரணமாக இருக்கின்றன.

    ReplyDelete
  33. பூவண்ணன் அவர்கள் எளிமையாகக் கூறுவது இதுதான்: அமெரிக்க மெக்கானிக்குக்கு இந்திய ஆசிரியருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிக்குப் போய் கணிதமும் அறிவியலும் கற்கத்தான் வேண்டும் என்பது சரியல்ல. சச்சின் பத்தாம் வகுப்புப் பெயில். அதனால் தான் அவர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குகிறார். உடனே எல்லோரும் கிரிக்கெட்டிலும் அல்ஜீப்ராவிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. எத்தனையோ அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். அது ஆசிரியர்கள் ஊதியத்தினால்தான். நல்ல நிலையில் கல்வி கற்பிக்காத அரசுப் பள்ளிகளுக்கு இந்தி திணிப்பும் தனியார் பள்ளிகளும்தான் காரணம். ஆசிரியர்கள் ஊதியம் அல்ல. என் குடும்பத்தினரில் பலர் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். எனவே அதிக ஊதியம் என்னும் பேச்சே தவறு.

    எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது ஒரு சமுதாயப் பணி. ஏழைகள் இல்லங்களில் வெட்டியாக அமர்ந்திருப்பவர்களை என்னதான் செய்வதாம்? இனி, பத்தாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளித்து அதன் பின் அரசுப் பள்ளிகளை மூடி விட வேண்டும். ஆசிரியர்களை மட்டும் வைத்திருந்து ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் யாரும் படிக்கக் கூடாது.

    தமிழகத்தில் நவோதய பள்ளிகளைத் துவங்கி கால பந்து பயிற்சி மட்டும் அளிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. பொன்.முத்துக்குமார்Fri Aug 23, 02:44:00 AM GMT+5:30

      I couldn't control my laughter. You don't need to respond anonymously. Poovannan won't send auto, ;)

      Delete
  34. உங்கள் பதில் என்னை திருத்தி விட்டடது சார்.கண்கலங்கி கைகூப்பி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்,
    அரசு ஊழியர்கள்,அரசு பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு மோசமானவர்கள்,சோம்பேறிகள் என்பதை புரிய வைத்ததற்கு நன்றி.
    அவர்கள் அனைவரையும் ஒரு வருட கடுங்காவல் தண்டனைக்கு அனுப்ப வேண்டும்.பிறகு இப்போது தரப்படும் சம்பளத்தில் கால்பகுதி தந்து அவர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கினால் அரசு பள்ளிகள் கல்வி கற்பிப்பதில் உச்சத்தை தொடும்.போதுமா சார்

    ReplyDelete
  35. அனைத்துச் சிறுவரும் கல்வி என்றில்லாது அனைத்து சிறுவர்க்கும் ஒரேக் கல்வி என்பது முதல் மடமை. இது உலகெங்கும் நடக்கிறது.

    ஒரு நாளுக்கு ஏழு மணி நேரம் அறையில் அடைத்து புத்தகத்திலிருந்தும் சுவரில் எழுதியும் மட்டுமே பாடம் நடத்தினால் மூளையில் சிறிதளவே தங்கும். இப்படி படித்து மட்டுமே பட்டம் வாங்கியவர்கள் ஆசிரியர்களாய் வேலை செய்தால், அவர்களைப் போலவே மாணவர்களும் இருப்பார்கள்.

    ஆசிரியர் சொற்களை கக்க மாணவர் அப்படியே அதை தாளில் எழுதினால் தேர்வில் மீண்டும் அது கக்கப்படும். இவ்வகை படிப்பினால் புத்தகங்கள் மேல் ஒரு வெறுப்பும் வந்து, பாட புத்தகத்தை தவிற எந்த புத்தகத்தையும் படிக்க விரும்பாத நிலை வரும். உலகெங்கும் இது உண்மை, நிதர்சனம்.

    வாரம் ஒரு நாள் மரத்தடியில், குளக்கரையில், கடல் நதி கரையில், மைதானத்தில்,பஸ் நிலையத்தில், பாடம் நடத்தினால், ஆசிரியர்களுக்கும் மாணவருக்கும் சுமை குறையும் மனம் தளரும். 45 நிமிட்மும் மாணவர் கவனமாகக் செவிசாய்க்க மாட்டார். நடுவில் ஒரு 5 நிமிடம் அவர்களுக்கு தங்களுக்குள்ளே பேசும் சுதந்திரம் தர வேண்டும். இந்த மனப்பான்மையில் தான் தாகூர் ஷாந்திநிகேதனை தொடங்கினார், கலாக்‌ஷேத்திரா, KFI பள்ளி நடக்கின்றன.

    மாதாமாதம் 2,3 நாள் சில பெற்றோரை அழைத்து வகுப்பில் பாடம் நடத்தச் சொல்லலாம். நன்றாய் நடத்தினால் மகிழ்ச்சி, பலன். இல்லையேல் ஆசிரியரின் அருமை மாணவருக்காவது தெரியும். இவை எதற்கும் அரசு அனுமதி நிதி உதவி போன்றவை தேவையில்லை. தைரியமும் தெளிவும் போதும்.

    Under a normal distribution, urban or rural students, rich or poor, government teachers and private school teachers, will fall under similar curves. கற்பூர புத்தி, கரி புத்தி, வாழை மட்டை புத்தி என்று ஒரு நண்பர் சொல்கிறார். அவர் கல்லூரி ஆசிரியர்.

    ReplyDelete