Friday, September 03, 2004

வைகோ போடா வழக்கு

மத்திய அரசு நியமித்த போடா மறு ஆய்வுக் கமிட்டியின் உறுப்பினர்கள் நீதிபதி சஹார்யா, ரஹ்மான், இனாம்தார் ஆகியவர்கள் வைகோ மீது போடா சட்டப்படி வழக்குத் தொடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும், அதனால் தமிழக அரசு வைகோ மீதான வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் 8 ஏப்ரல் 2004 அன்று அறிவித்தது.

தொடர்ந்து ஆகஸ்ட் 2004இல் தமிழக அரசும் வைகோ மீதான வழக்கை இழுத்து மூடக் கேட்டு போடா சிறப்புத் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இன்று போடா நீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து வைகோ மீதான வழக்கு தொடரும் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் சஹார்யா கமிட்டி வைகோ மீதுள்ள வழக்கை முழுமையாக கவனிக்கவில்லை என்றும் இந்த வழக்கை திரும்பப் பெறுவதற்காக போடா மறு ஆய்வு கமிட்டி சொல்லியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் போடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் கூறியுள்ளார்.

என்.டி.டி.வி க்குப் பதிலளித்த வைகோ தான் இதை எதிர்பார்த்ததாகச் சொன்னார். தமிழக அரசு தன் மனுவை சரியாகத் தயாரிக்கவில்லையென்றும், அதே சமயம் போடா நீதிமன்றம் இப்படித்தான் முடிவு எடுக்கும் என்றும் தான் நினைத்ததாகவும், அதுவே சரியாகப் போயுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், மிகக் கவனமாக தான் எந்த நீதிபதியின் மேலும் குற்றம் சாட்டவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். திரும்பத் திரும்ப "My experience with this POTA court has been different." என்று மட்டுமே சொன்னார். (இல்லாவிட்டால் அடுத்து நீதிமன்ற அவதூறு வழக்கு என்று ஒன்று வரும்!)

POTA Special Court's behaviour is, indeed, different.

1 comment:

  1. Helo,
    Just blog-hopping...i wish i can understand your language :)
    The writing looks familiar..tamil right?
    * me * from malaysia

    ReplyDelete