Tuesday, May 22, 2007

இரு திரைப்படங்கள்

பெரியார்

இந்தப் படம் பற்றி 'இட்லிவடை' ஒரு பதிவு எழுதியிருந்தார். இரவுக்காட்சியில் வுட்லண்ட்ஸ் திரையரங்கில் 15% கூட அரங்கு நிரம்பவில்லை என்று. அவர் பார்த்த வாரத்துக்கு அடுத்த வாரம் ஞாயிறு முன்னிரவுக் காட்சியில் (6.30 மணி), அதே தியேட்டரில் நான் பார்த்தேன். அரங்கு முழுவதுமாக நிரம்பியிருந்தது. வெறும் கட்சிக்காரர்கள் அல்ல, குடும்பத்தோடு மக்கள் வந்திருந்தனர். குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு.

பெரியார் என்னும் மாபெரும் ஆளுகையை அறிமுகப்படுத்தும் படம் என்ற வகையில், படம் ஓரளவுக்கு வெற்றிபெறுகிறது. ஆனால் சினிமா எனும் கலையின் அடிப்படையில் பார்த்தால் படம் பெரும் தோல்வியைத் தழுவுகிறது. பெரியாரின் பல முகங்களையும் எடுத்துக்காட்டுவதில் தவறியுள்ளனர். முக்கியமாக மொழிப்போர். அதைப்பற்றி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படத்தில் ஒன்றுமே இல்லை.

படம் பார்க்கும்போது மக்கள் பல இடங்களில் கைதட்டி ரசித்தனர். அவையெல்லாம் கடவுளை, மூடப்பழக்கங்களைக் கேலி செய்யும் காட்சிகள். ஆனாலும் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, ஏன் மணியம்மை (குஷ்பூ) நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளவில்லை என்று கணவனிடம் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்.

மொத்தத்தில் பொதுமக்களிடையே பெரியாரைக் கொண்டுசேர்க்கும் அளவுக்கு படம் வெற்றிபெற்றுள்ளது.

மொழி

சத்யம், ஐனாக்ஸ் எல்லாம் டிக்கெட் கிடைக்காமல் அண்ணா சாலையில் 'அண்ணா' எனும் தியேட்டரில் பார்த்தேன். ஏதோ 'A' செண்டர் படம் என்று நினைத்திருந்தேன். ஆனால் கூடியிருந்த மக்கள் கூட்டம் பலதரப்பட்டவர்களையும் உள்ளடக்கியிருந்தது.

படம் slick ஆக எடுக்கப்பட்டிருந்தது. வேகமாகச் செல்லும் திரைக்கதை அமைப்பு. குழப்பமே இல்லாமல் சுவையாக எடுத்துள்ளார் ராதா மோகன். முக்கிய பாத்திரங்களில் நடித்த நால்வரும் நன்றாக நடித்துள்ளனர்.

உடல் ஊனத்தை 'பரிதாபம்' என்ற உணர்ச்சி மட்டுமே கொண்டு பார்க்குமாறு எடுக்கப்படும் படங்களிலிருந்து மாறுபட்டு வந்தாலும் ஜோதிகா பாத்திரம் தனக்கு பிறக்கும் குழந்தையும் தன்னைப்போலவே இருந்துவிடுமே என்னும் ஒரே காரணத்தால் திருமணம் செய்துகொள்ளத் தயங்குவது கொஞ்சம் இடிக்கிறது. படத்தில் பெரும்பாலும் புரட்சியைக் காண்பிக்கும் இயக்குனர், திருமணம் என்றாலே குழந்தை பெற்றுக்கொள்ளத்தான் என்னும் கொள்கையை உடைத்து எறியுமாறு செய்திருக்கலாம். கல்யாணம் செய்துகொண்டு எவ்வளவோ அநாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொள்ளலாம். ஏன், ஊனமுள்ள குழந்தைகளைக்கூட தத்து எடுத்துக்கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழலாம்.

மற்றபடி இந்து-கிறித்துவ மணம், விதவை மறுமணம், ஊனத்தைத் தடையாக நினைக்காமை, பெண்கள் சுதந்தரமானவர்களாக, பிறருக்கு அடிமையாக இல்லாமல் வாழ்வது போன்ற பலவற்றை 'moral of the story is...' என்று சொல்லாமல் இயல்பாகக் கதைக்குள்ளே கொண்டுவருவது மகிழ்ச்சியைத் தருகிறது.

படத்தை மக்கள் அனைவரும் வெகுவாக ரசித்துப் பார்த்தனர்.

2 comments:

  1. Badri, i think very rarely you are posting film reviews...or you are not watching films frequently?

    Anyhow, these two films deserve good reviews as they are in one way aimed at rising the taste of the audience, and your reviews are good indeed :)

    ReplyDelete
  2. The "elephant in the living room" regarding the Periyar movie is the government-funded whitewashing of EVR's story. Nobody (including you), it seems dares to mention that one of EVR's prime legacies a culture of hate, of scapegoating and blaming the Brahmins, the foul language and caricatures that come from even the Chief Minister's level when it comes to the Brahmin community of Tamil Nadu. The film completely hides this aspect of EVR and until some other more open-minded person takes a movie, this part of his story will be forgotten by the generations.

    ReplyDelete