தமிழ்ப் பாரம்பரியம் குழுமம் சார்பில், நாளை (சனிக்கிழமை), 1 ஆகஸ்ட் 2009 மாலை 5.30 மணிக்கு, B.சிவகுமார், ‘சிலப்பதிகாரம் - ஒரு பயண காவியம்’ என்ற தலைப்பில் பேசுவார்.
சங்க இலக்கியமான சிலப்பதிகாரம், நாட்டியவடிவமாக, நாடகமாக, ஓவியமாக, இசையாக என்று பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டுள்ளது. தற்போது சிவக்குமார் சிலப்பதிகாரத்தை ஒரு graphic novel-ஆக படைக்க முனைந்துள்ளார். இந்த முயற்சியில் இறங்கியபின் இதற்காக இக்காவியம் நடைபெற்றதாகக் கூறும் வழித்தடங்களின் வழியாக இவரும் பயனித்துள்ளார். தற்போது அந்த இடங்களெல்லாம் எவ்வாறு உள்ளது என்பதையும் நமக்குக் படமாகக் காட்ட உள்ளார்.
சிவகுமார், இரா.நடராசன் எழுதிய ‘ஆயிஷா’ குறுநாவலை குறும்படமாக இயக்கியவர். பின்னர் சில குறும்படங்களைத் தயாரித்துள்ளார். உலக அளவில் குறும்பட விருதுகளைப் பெற்றுள்ளார். நல்ல ஓவியரும்கூட. பாரம்பரிய கலைச் சிற்பங்களை தத்ரூபமாக பென்சில் ஸ்கெட்ச் செய்வார். தற்போது அவர் ஈடுபட்டிருக்கும் ஒரு செயலில், மகாபலிபுரத்தின் சிற்பங்களையும் குகைக் கோயில்களையும் ஸ்கெட்ச் செய்துள்ளதை நான் பார்த்திருக்கிறேன்.
நிகழ்ச்சி நடக்கும் இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வெங்கடநாராயணா சாலை, தி.நகர்.
ஆலயம்
1 day ago
No comments:
Post a Comment