Sunday, May 15, 2011

மன்னார் வளைகுடா வாழ்க்கை

கடந்த இரு தினங்களாக வேம்பார் என்னும் கிராமத்தில் People's Action for Development என்ற தொண்டு நிறுவன பணியாளர்களுடன் நேரம் செலவிட்டேன். அவர்களுக்கு இணையத் தொழில்நுட்பம், வலைப்பதிவுகள் தொடங்குதல், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை பற்றியும் அவர்கள் பகுதி பிரச்னைகளை எப்படி வலைப்பதிவுகள்மூலம் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது பற்றியும் விளக்கிச் சொன்னேன்.

அப்போது ‘மன்னார் வளைகுடா வாழ்க்கை’ என்ற வலைப்பதிவை அவர்கள் ஆரம்பித்தனர். சில பொதுவான பிரச்னைகள் பற்றி எழுதிய பதிவுகளை அதில் சேர்த்தனர். அவற்றைத் தொடர்ந்து படிக்க நீங்கள் செல்லவேண்டிய இடம்:

மன்னார் வளைகுடா வாழ்க்கை

தொடர்ந்து அவர்களது வலைப்பதிவைப் படிப்பதன்மூலம் மீனவர்/ பனைத்தொழிலாளர் பிரச்னைகளையும் மன்னார் வளைகுடா சூழல் பிரச்னைகளையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

3 comments:

  1. நல்ல பணி
    தொடரட்டும் இந்த நற்பணிகள்

    ReplyDelete
  2. //மீனவர் பனைத்தொழிலாளர் பிரச்னைகளையும் மன்னார் வளைகுடா சூழல் பிரச்னைகளையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.// இப்பொழுது நான் மன்னார் வளைகுடா வாழ்க்கை-வலைப்பதிவின் 13 வது FOLLOWERS
    நன்றி பத்ரி

    ReplyDelete
  3. neenkal koduththa payirchi mulam inayathalam,valaipathivu patri katrukonden enkal niruvanathirku vanthamaikku remba nanrikal

    ReplyDelete