பங்குச்சந்தை தொடர்பாக 'அள்ள அள்ளப் பணம்' என்ற பெயரில் தொடராகப் புத்தகங்களைக் கொண்டுவருகிறோம். இந்தத் தொடர் புத்தகங்களின் ஆசிரியர் சோம. வள்ளியப்பன்.
அள்ள அள்ளப் பணம் - 1, ஜனவரி 2005 புத்தகக் கண்காட்சிக்குச் சற்றுமுன் வெளியானது. பங்குச்சந்தை பற்றிய அடிப்படைகளை எளிய மொழியில் விளக்கிப் புரிய வைத்தது.
இரண்டு வருடங்கள் கழித்து, அள்ள அள்ளப் பணம் - 2, ஜனவரி 2007 புத்தகக் கண்காட்சியின்போது வெளியிடப்பட்டது. இதில் ஃபண்டமெண்டல் அனாலிசிஸ், டெக்னிக்கல் அனாலிசிஸ், அடிப்படைப் பொருளாதாரத்தை வைத்து சந்தை எப்படி நடந்துகொள்ளும் என்பதைக் கணிப்பது ஆகியவை இருந்தன.
இந்தமுறை, ஜனவரி 2008 புத்தகக் கண்காட்சிக்கு, இந்தத் தொடரின் அடுத்த பகுதியாக 'ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்' பற்றிய அறிமுகம் வருகிறது.
எதிர்காலப் பங்கு ஒப்பந்தங்கள், இன்று படுவேகமாக வளர்ந்து வரும் துறை. அதை எளிதாக, கதை வடிவில் சொல்லிப் புரிய வைக்கிறது இந்தப் புத்தகம்.
*
பங்குச்சந்தையா, மோசம் போய்விடுவோம் என்று சிலர் பயப்படலாம். ஆனால் அதே சமயம் பங்குச்சந்தையில் கிடைக்கும் லாபங்களை விடக்கூடாது என்று நினைக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது இவர்களுக்கு உதவியாக இருக்கும்.
'நேசமுடன்' ஆர்.வெங்கடேஷ் எழுதியுள்ள மியூச்சுவல் ஃபண்ட் கையேடு இவர்களுக்குப் பயன்படும்.
முந்தைய பதிவு: லிவிங் ஸ்மைல் வித்யா
கவனிக்க மறந்த மனிதர்கள்
5 hours ago
புத்தக அறிமுகங்களுக்கு நன்றி பத்ரி.
ReplyDelete