பேநசீர் புட்டோவின் படுகொலையால் பக்கத்து நாடான நேபாளத்தில் நடப்பது வெளியே தெரியாமல் அமுங்கிவிட்டது.
மன்னர் ஞானேந்திரா பிப்ரவரி 2005-ல் நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தார். ஏப்ரல் 2006-ல் நாட்டில் பொதுமக்கள் தெருவுக்கு வந்து புரட்சி செய்தனர். ஒரு பக்கம் மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். மக்கள் புரட்சியைத் தொடர்ந்து ராணுவம் மன்னரிடமிருந்து சற்றே விலகியது. மாவோயிஸ்டுகளும் குடியாட்சி முறைக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட, மன்னர் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டி வந்தது.
அவருக்கு வேறு வழியிருக்கவில்லை.
புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவர கட்சிகளும் மாவோயிஸ்டுகளும் முடிவு செய்தனர். ஆனாலும் உடனடியாக மன்னரை என்ன செய்வது என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. கடைசியாக மாவோயிஸ்டுகளின் வற்புறுத்தலால் இரண்டு நாள்களுக்கு முன்னதாக மன்னர் என்னும் பதவியை ஒழித்துக்கட்ட நாடாளுமன்றம் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.
ஏப்ரல் 2008-ல் அரசியல் அமைப்புச் சட்ட சபை தேர்வாகும்போது நேபாளம் ஒரு குடியரசாகும்.
மக்கள் புரட்சிக்கு சரியாக இரண்டாண்டுகள் கழித்து மன்னர் பதவிக்கு மூடுவிழா நடத்த உள்ளனர்.
அதைத் தொடர்ந்து நாட்டில் எந்தக் குழப்பமும் வராமல் அனைத்துக் குழுவினரும் வலுவான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுவோம்.
முந்தைய பதிவுகள்:
நேபாள் குடியாட்சிக்கு ஆபத்து
Viva Le Nepal
மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே!
Sunday, December 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment