Thursday, May 31, 2012

ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று சென்றிருந்தேன். நிகழ்ச்சியின் நோக்கம், ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்ற ஆங்கிலேயர், சென்னை பல்லாவரம் அருகே கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்து 149 ஆண்டுகள் முடிவடைந்து, 150-வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாட.

சென்னை பல்லாவரம் மலையடிவாரத்தில் தோண்டிய இடமெல்லாம் கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. விதவிதமான கற்கோடரிகள். இவை ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தவை அல்ல. லட்சக்கணக்காண ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. 2 லட்சம் ஆண்டுகள் முதல் 25 லட்சம் ஆண்டுகள் வரை இருக்கலாம். பழைய கற்காலம் (பாலியோலித்திக்) என்று சொல்லப்படும் இந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஹோமினின் இனங்கள் பூமியில் வாழ்ந்தன.

இன்று நாம் ஹோமோ சாப்பியன் என்று சொல்லும் மனித இனத்துக்கு முந்தைய ஹோமோ எரக்டஸ், ஹோமோ நியாண்டர்தாலன்ஸ், அதற்கும் முந்தைய ஆஸ்ட்ரலோபிதிசீன் போன்ற இனங்கள்கூடக் கற்கருவிகளைச் செய்து பயன்படுத்தின என்று சொல்கிறார்கள். இந்தக் கருவிகள் உலகின் பல பாகங்களில் கிடைக்கின்றன.

சமீபத்தில் நான் பிரிட்டிஷ் மியூசியம் சென்றிருந்தபோது உலகின் பல பாகங்களில் கிடைத்துள்ள கற்கருவிகளைப் பார்த்தேன். என்ன அற்புதமான கற்கோடரிகள்! இவை சில ஆயிரம் ஆண்டுகள் முதல் பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவை. விதவிதமான கற்கள். கருங்கல், ஜேட், ஃப்ளிண்ட் என வகைவகையான கற்கள். சிலவற்றைத் தட்டித் தட்டிச் செதுக்கினால் கருவி வரும், சிலவற்றை சாண்ட்பேப்பர் போல எதையோ கொண்டு இழைத்தால்தான் கோடரியைச் செய்யமுடியும்.

ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் பல்லாவரத்தில் கண்டெடுத்த கற்கருவிகளைக் கண்டு அதிசயித்து, இந்த இடத்தில் ஒரு தொழிற்சாலையே இருந்திருக்கவேண்டும் என்றார். Madras Stone Tools Factory என்றே இந்த இடத்தை அழைத்தார்.

இன்றைய தமிழகத்தில் பழைய கற்காலக் கருவிகள் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைத்துள்ளது. இன்னும் தோண்டினால் இன்னும் எத்தனை எத்தனையோ இடங்களில் கிடைக்கும். பெரிய கற்காலப் புதைகுழிகள் ஏகப்பட்ட இடங்களில் உள்ளது. பாறை ஓவியங்கள் இன்னும் பலப்பல இடங்களில்.

நேற்றைய கூட்டத்தில் ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் பற்றியும் மாந்தனின் பரவல் பற்றிய தன் சில கருத்துகளையும் ஒரிஸ்ஸா பாலு பேசினார். நல்ல பிரசண்டேஷன் என்றாலும் கொஞ்சம் நீண்டுவிட்டது. அதில் சொல்லப்பட்ட அனைத்தும் வந்தவர்களைச் சென்றடைந்ததா என்று தெரியவில்லை. பாலு ஒரு தொழில்முறை ஆராய்ச்சியாளர் அல்ல என்றாலும் தன் பேரார்வம் காரணமாகத் தன் சொந்தச் செலவில் பல இடங்களுக்கும் சென்று சொந்த முயற்சியில் ஆராய்ச்சி செய்யும் ஆர்வலர். கடல் பற்றிய ஆராய்ச்சியே அவருடைய முதன்மைக் களன். இந்தியாவிலிருந்து, அதுவும் குறிப்பாகத் தமிழகத்திலிருந்து உலகம் முழுமைக்கும் மக்கள் சென்றிருக்கக்கூடும் என்ற கருத்தை பாலு முன்வைக்கிறார். வட ஆப்பிரிக்காவிலிருந்துதான் மக்கள் பல இடங்களுக்கும் சென்றிருக்கக்கூடும், அதுவும் கால் நடையாக நடந்து என்ற கோட்பாட்டுக்கு எதிரான, மாற்றான ஒரு கோட்பாடு இது. கடல் ஆமைகள் செல்லும் பாதை, பாய்மரக் கப்பல்கள் செல்லும் பாதை ஆகியவற்றை முன்வைக்கும் பாலுவின் கோட்பாட்டுக்கு ஃபூட் கண்டுபிடித்த கற்கருவிகள் ஒரு நல்ல வலுவான சாட்சியம். பாலுவின் கோட்பாடு சுவாரசியமானது; மேற்கொண்டு ஆராயப்படவேண்டிய ஒன்று.

அதே நேரம் நேற்று இறுதியாகப் பேசிய ஒரு பேராசிரியர், கூட்ட நோக்கம் என்று நான் நினைத்திருந்ததற்கு மாறாக முற்றிலும் அரசியல் தளத்திலேயே பேசினார். தமிழர்களின் பெருமை வெளியே தெரியாமல் இருப்பதற்காகப் பலர் சேர்ந்து சதி செய்கின்றனர் என்பதில் ஆரம்பித்து, தமிழர்களுக்கு என்று தனி நாடு இல்லாமல் இருப்பதுதான் பிரச்னை என்று விரிந்து, திராவிடம், ஆரியம், சமஸ்கிருதம், மாந்தவியல், மொழியியல், அரசியல் என்று மிகவும் விரிந்து பரந்ததாக இருந்த அவரது பேச்சில் ஸ்காலர்ஷிப் மட்டும்தான் குறைவாக இருந்தது.

தமிழ் என்ற மொழியின் அடையாளம் மிகவும் சமீபத்தியது. குரங்கு, குரங்கு-மனிதன், மனிதன் என்ற பரிணாம வளர்ச்சியில் மொழி மிகவும் தாமதமாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயுதங்களை, கருவிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவது அதற்குப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. தமிழன் என்ற அடையாளத்தை 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதன்மீது ஏற்றி, தமிழனே உலகின் ஆதிமனிதன் என்று சொல்லி என்ன பெருமையை நாம் அடையப் போகிறோம்?

தமிழ்நாட்டில் வரலாறு படிக்கும் ஆர்வம் குறைவாக உள்ளது. வரலாற்று ஆராய்ச்சிகளும் குறைவே. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்று பார்த்தால் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மறுபக்கம், பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் உள்ளூரின் தொல்காலம் பற்றிச் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீர நடுகல் சிலைகள் உள்ளன. பெருங்கற்காலப் புதைகுழிகள் உள்ளன. கற்கருவிகள் தோண்டத் தோண்டக் கிடைக்கின்றன. இதுபற்றி நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தருவது ஒன்றுமே இல்லை. அவற்றைச் சரி செய்ய நாம் பல முயற்சிகளை எடுக்கவேண்டும்.

வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பல விஷயங்களை யூகமாகத்தான் நாம் சொல்லமுடியும். உலக அரங்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அந்த யூகங்கள் இருக்கவேண்டும். அந்த அளவுக்குத் தரமான அகடெமிக் ஸ்காலர்ஷிப்பை நாம் உருவாக்கவேண்டும்.

அரசியல் பேச்சாளர்களை அல்ல.

23 comments:

  1. ||
    இந்தியாவிலிருந்து, அதுவும் குறிப்பாகத் தமிழகத்திலிருந்து உலகம் முழுமைக்கும் மக்கள் சென்றிருக்கக்கூடும் என்ற கருத்தை பாலு முன்வைக்கிறார்.
    ||

    இதனை மொழியியல் தளத்தில் கந்தையா போன்ற பலர் முன்வைத்திருக்கிறார்கள்..

    ராம்குமாரின் சிந்து வெளி நாகரிகம் படித்தீர்களா?

    ||தமிழன் என்ற அடையாளத்தை 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதன்மீது ஏற்றி, தமிழனே உலகின் ஆதிமனிதன் என்று சொல்லி என்ன பெருமையை நாம் அடையப் போகிறோம்?||

    ஏன் பெருமை இருக்கக் கூடாது?
    உலகத்தில் பல முன்னேற்றங்கள் நடைபெற தன்னூக்கமும் தன்னைப் பற்றிய நிறைவு நினைவும்தான் முக்கியக் காரணிகள்.

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதியதை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டிருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்கமாட்டீர்கள். தமிழன் என்ற அடையாளம் பிற்காலத்தது. அதனை முற்காலத்தின்மீது ஏற்றிச் சொல்ல முடியாது. தமிழன் கற்காலக் கருவியைக் கண்டுபிடித்தான் என்று சொல்வது தவறு. கற்காலக் கருவியை உருவாக்கிய குழுவிலிருந்து ஒரு சிலர் தமிழைக் கண்டுபிடித்தனர், இன்னொரு சிலர் என்று எகிப்திய மொழியைக் கண்டுபிடித்தனர்.

      Delete
    2. ஐயய்யோ..! அப்ப கல்தோன்றி மண்தோன்றா காலத்தே....முன் தோன்றிய மூத்த நியாண்டர்தால் தமிழ் நியாண்டர்தால் இல்லையா ? :D

      Delete
    3. பத்ரி,

      ஹரப்பர்களின் கருவிகளும் எழுத்துப் பலகைகளும் ஆதிச்சநல்லூர் அகழ்வில் கிடைத்த கருவிகளும் ஒத்திருப்பதைப் பலர் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

      மொழியியல் நோக்கிலான பல ஆய்வில் திராவிடத் தொன்மை மொழி தமிழாக இருக்க முடியும் என்பதற்கான பல சான்றுகள் இருக்கின்றன.

      எனவே மொழி என்ற ஒன்று உருவாகும் முன்னரே கருவிகள் கண்டு பிடிக்கும் அறிவும், முதன்முதலில் பண்பட்ட ஒரு மொழியாக தமிழ் விளங்கியிருக்கக் கூடிய சாத்தியங்களும் மறுக்க முடியாதவை.

      அவற்றில் பெருமை கொள்வது தமிழர்களின் உரிமை..

      வஜ்ரா,
      இந்தக் கிண்டல்களை மீறி தமிழ் மொழியும் நாகரிகமும் உயர்வானவையே.. நம்மால் உரிமை கொள்ள முடியாத ஒரு சிறந்து பொருளை வைத்திருக்கும் ஒருவனைப் பார்த்து நாம் முதலில் செய்வது கிண்டல் மட்டுமே!!

      Delete
    4. மிஸ்டர் அறிவுள்ளவன்,

      தமிழ் தொன்மையான மொழி, அது பெருமைக்குறிய விசயம் தான். அதற்க்காக மனிதனே தோன்றாத காலத்துக்கெல்லாம் அதை முன் தோன்ற வைத்து பெருமை பீத்திக்கொள்வது கேவலமான செயல்.

      மறுபடியும் நீங்கள் வீம்பாக, குரங்கிலிருந்து பரிணமித்தி வந்த சில அறிவுள்ள ஜீவராசிகள் (மனிதர்கள் அல்லர்) இன்று தமிழ் நாடு என்றழைக்கப்படும் நிலப்பரப்பில் வாழ்ந்த அறிகுறிகள் தெரிவதை வைத்து அவை "தமிழ் கலாச்சாரமே" என்று தூக்கிக்கொண்டு வந்துவிடுவது கிண்டலுக்கு உரிய செயலன்றி வேறில்லை. இத்தகய மனிதன் தோன்றுவதற்கு முன் தோன்றிய பெருமை வேறு எந்த மொழிக்கும் இருக்குமா என்பது சந்தேகமே!

      நாளை டைனோசார்கள் எலும்புகள் கிடைத்தால் அவையும் "தமிழ் டைனோசார்களே" என்று சொல்வீர்களாக்கும்!

      Delete
    5. வஜ்ராயுதத்தைத் தூக்கிக் கொண்டு திரிபவருக்கு,
      || அதற்க்காக மனிதனே தோன்றாத காலத்துக்கெல்லாம் அதை முன் தோன்ற வைத்து பெருமை பீத்திக்கொள்வது கேவலமான செயல்.||

      இப்படி நான் இந்தப் பதிவில் நான் எங்கும் சொல்லவில்லை. முதன் முதலில் மனித இனம் தோன்றியது தென்னிந்தியக் கடல் பகுதியில் எனவும் அவர்கள் 20,160 பாகை விரிப்பில் பல இடங்களுக்குப் பரவி வாழ்ந்தார்கள் என்பதும்,முதன் முதலில் தோன்றிய மொழி முதலில் மனித இனம் தோன்றிய இடத்திலிருந்துதான் வந்திருக்க முடியும் என்பதும் எளிய அனுமானங்கள்.( பல வாதப் பிரதிவாதங்கள் இருப்பினும் பெரும்பான்மை ஆய்வாளர்களால் இந்தத் தியரி ஒப்புக்கொள்ளப்பட்டிருகிறது)

      இவை ஆய்வுகளின் மூலமும் நிறுவப் பட்டிருக்கின்றன என்பது என் சுட்டுதல்; அந்த நிறுவதல் தமிழர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ளும் எவருக்கும் பெருமையுடைய ஒன்றுதான்.

      தமிழர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் அல்லது அடையாளப் படுத்திக் கொள்ள முடியாதவர்களுக்கு நவ துவாரங்களிலும் எரிச்சல் கிளம்புவதும் இயல்புதான்.

      ||மறுபடியும் நீங்கள் வீம்பாக, குரங்கிலிருந்து பரிணமித்தி வந்த சில அறிவுள்ள ஜீவராசிகள் (மனிதர்கள் அல்லர்) இன்று தமிழ் நாடு என்றழைக்கப்படும் நிலப்பரப்பில் வாழ்ந்த அறிகுறிகள் தெரிவதை வைத்து அவை "தமிழ் கலாச்சாரமே" என்று தூக்கிக்கொண்டு||

      ||நாளை டைனோசார்கள் எலும்புகள் கிடைத்தால் அவையும் "தமிழ் டைனோசார்களே" என்று சொல்வீர்களாக்கும்!||

      இவற்றில் கருத்துக்களை விட,விவாதத்தை விட வன்மமும் எள்ளலும் தான் துருத்தித் தெரிகிறது.

      பத்ரியின் தளத்தை உங்களுடன் சண்டையிடப் பயன்படுத்துவதில் எனது விருப்பமின்மையால் இனி இந்த இடத்தில் இது பற்றிப் பேசப் போவதில்லை.

      Delete
    6. உங்கள் நவதுவாரத்தை நீங்கள் பொத்திக்கொண்டது சந்தோசமே.

      Delete
  2. Badri,
    another good article from you. it's made me think. thanks.i am very eager to attend this kind of meeting. could you please tell me how to get info?

    ReplyDelete
  3. 1)ஆதிச்ச நல்லூர்(ஆதித்த நல்லூர்?) பற்றிப் படித்திருக்கிறீர்களா? திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது. அது எந்தக் கற்காலம்?
    அதற்கும் பல்லாவரத்துக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
    2)கப்பல் பழைய கற்காலத்திலேயே இருந்திருக்க முடியும் என்பதற்கு வேறு சான்றுகள் இருக்கிறதா?
    3)சுவாரசியமான கட்டுரை. இது போன்ற பதிவுகள் நிறைய எதிர்பார்க்கிறோம். இது உங்கள் MA படிப்பின் தொடர்ச்சியா? அல்லது சொந்த ஆர்வமா?

    ReplyDelete
  4. தமிழ் மொழிமேல் நம் சமுதாயம் பற்றுகொள்ளாமல் இருப்பதற்கு நாம்தான் முழுக்க காரணம். எல்லா பெற்றோர்களும் தம் குழந்தைகளை ஆங்கிலவழி கல்வி பயிற்றுவிக்கவே ஆசை கொள்கின்றனர். அவர்களை தமிழ்வழியில் படிக்க வலியுறுத்துவது வளர்ந்து வரும் நம் நாட்டிற்கு பொருந்தா. ஆக நம் மொழியையும் காத்து, குழந்தைகளும் வளர வழிஎதுவென்றால்

    1, State Board/Matriculation பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் கட்டாயப் பாடமாக தமிழை கொண்டுவரவேண்டும்.

    2, +2 முடித்து தமிழ்/தமிழ் இலக்கியம் போன்ற படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முழுக்கட்டணத் தள்ளுபடி

    3, தமிழ் இசை பயில்பவர்கள், மேளம், நாதஸ்வரம் பயில்பவர்களுக்ககென்று தனி கல்லூரி/பல்கலைகழகம் அமைத்தல்
    (வேகமாக நாம் இத்தகைய கலைஞர்களை இழந்து வருகிறோம். இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இசைஞர்கள் இருப்பார்களா என்று பயம் ஏற்படுகிறது.)

    ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் இலக்கியப் போட்டிகள், இசைப் போட்டிகள், சமையல் போட்டிகள், நடனம், சிற்பம், விளையாட்டுகள், நடத்துதல் வேண்டும்.

    இதுவரை நம் முன்னோர்கள் பாதுகாத்த தமிழ்மொழியை நாம் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு நம் மொழியை ஒப்படைத்தல் நம் தலையாய கடமையாகும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பத்ரி

      செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரியும் அரணமுறுவல் அவர்கள் பேசியது எங்களுக்கே மிகவும் வருத்தம் அளித்தது
      எங்கள் நோக்கம் கல்கோடரியை ஆசியாவிலே முதல் முதலாக கண்டு பிடித்த இடம் விமானநிலையத்திற்கு எதிரில் இருந்தும்
      யாரின் கவணம் இல்லாமல் இருப்பதை வெளிபடுத்தும் நோக்கமும் ,

      கடல் சூழ்ந்த இன்றைய எல்லைகள் அன்று இல்லாத அகண்ட தமிழகத்தில் கடற்கரை ஓரம் வாழ்ந்த மக்களின் கடல் சார் பயணங்கள் பல வேறு கட்டங்களில் கடல் நீரோட்டத்தை ஆமைகள் வழி இனம் கண்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற கருது கோலும் ஒரு காரணம்
      தொடர்ந்து ஆய்வில் இருக்கிறேன்

      உங்களின் மரபு காக்கும் உணர்வை நான் முழுவதும் அறிந்ததால் உங்களின் வருகை பயன் அளிக்கும் என்று கருதினோம்

      உண்மையில் வருந்துகிறேன்

      உங்களுக்கு நன்றாக தெரியும் என் போன்றோர் வெளி மாநிலத்தில் வாழ்ந்தவர்கள்

      நோக்கம் நிலமும் பொழுதும் தான்

      உங்கள் வருகைக்கு நன்றி

      மேடை பேச்சில் நிகழ்வுக்கு ஏற்ற பேச வேண்டிய பயிற்சி மிகவும் தேவை நம்மிடம்

      அன்புடன்

      ஒரிசா பாலு என்கின்ற சிவ பாலசுப்ரமணி B+ve

      Delete
    2. பாலு: உங்கள்மீது எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. திரு. அரணமுறுவல்மீதும் இல்லை. இந்தக் கூட்டத்தில் பேசப்படவேண்டியது வேறு என்று நான் நினைத்தேன். அதனைப் பகிர்ந்துகொண்டேன். கூட்டத்தின் நோக்கமும் அது சார்ந்து பேசவேண்டியதும் அனைவரும் அவசியமாகப் பின்பற்றவேண்டிய ஒன்று. நம் அனைவருக்குமே பலப் பல pet theories உண்டு. உதாரணமாக, உங்களுடைய கடல் ஆமை தியரியையே எடுத்துக்கொள்ளுங்கள். அது சுவாரசியமானது என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனால் அதுதான் உண்மை என்று நிறுவ நீங்கள் இன்னும் பல சான்றுகளைக் காண்பிக்கவேண்டும். உலக அறிஞர்களை உங்கள் பார்வையின் பக்கம் கொண்டுவரவேண்டும். அதன்பின்னரே அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அதேபோலத்தான் அனைத்துக் கோட்பாடுகளுமே. தனிப்பட்ட முறையில் நம் விருப்பு வெறுப்புகள் எதுவானாலும் சான்றோர் அவையில் எந்தக் கருத்தை எப்படி வைக்கவேண்டும் என்பது முக்கியமல்லவா? அரசியல் மேடைப் பேச்சில் rigour என்பதே தேவையில்லை. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று அடித்துவிட்டுக்கொண்டே போகலாம். அதுதான் என் வருத்தம். அரசியல், அரசியலோடு இருக்கட்டும். நமக்கு வேண்டியது ஸ்காலர்ஷிப், கருத்துகளை ஆணித்தரமாக, சான்றுகளுடன் எடுத்துவைக்கும் திறன். உலக அறிஞர்களை நம் கருத்தை ஏற்கவைக்கும் திறன். நன்றி.

      Delete
    3. நன்றி நான் தொடர்ந்து ஆய்விலும்
      ஆமைகள் தொடர்பான அனைத்து ஆய்வு மையங்களிலும் தொடர்பிலும் இருக்கின்றேன் ,அதே சமயத்தில் தொன்மை மரபு தொடர்பான் அமைப்புகளிடம் ஆர்வம் காட்டி களப்பணி செய்து வருகிறேன்

      முறை படி என்னுடிய கட்டுரைகள் உலக ஆய்வு வட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உலக அரங்கில் வர முழு ஈடுபாட்டுடன் முயன்று வருகிறேன் .

      காலம் இதற்கு விரைவில் பதில் சொல்லும்


      Globetrotting man followed turtle track, claims study

      M T Saju TNN
      ...
      Chennai:

      It was the beginning of a big voyage when he saw a school of turtles scrawling towards the shore for nesting in the famous Gahirmatha beach in Orissa. S Balasubramani, a marine researcher, was working on a project when he got interested in turtle nesting and Tamil migration. It is his belief that the two activities were linked in someway once upon a time.

      He claims that people from the Tamil coasts used to travel to all over the world following the tracks used by the turtles even from the Stone Age. “Turtles are considered the navigator of the oceans.

      They use ocean currents to cover long distances which helped Tamil sailors explore other countries,” according to Balasubramani.

      Since the coastal climate is ideal for nesting, turtles still travel to the coasts of Orissa and Tamil Nadu from all parts of the world. There are particular routes where sea currents occur and the turtles can sense it very well, he says.

      “There are 53 turtle nesting places in Tamil Nadu which are all close to the ancient ports. So there is a strong connection between the migration of Tamils and the nesting of turtles,” he concludes with his own logic.

      To prove his point, Balasubramani even has a list of turtle nesting places in the world having Tamil names. “There are a number of coasts having names in Tamil. Thamila (Myanmar) and Sabha Santagan (Malaysia), Koolan, Cholawan and Ooru (Australia), Catalan (Spain) Nanmadal and Kumari (Pacific ocean) are some examples,” he says.

      In addition to the study of literary references and scientific oceanic studies, Balasubramani conducts experiments on the Tamil Nadu coast making use of the traditional knowledge of the fisherfolk community along with technical advances from various forums.

      The study, conducted using latest technologies like satellite tracking, claims there used to be voyages following the routes of turtles from the coast of Tamil Nadu to places like US, Australia, New Zealand, China and Japan. A bell with Tamil inscriptions on it found from a Parua Maori tribal house at Wangarai, New zealand, in 1836 shows that voyages took place between the Tamil coasts and Kiwi land, it says.

      Why should one follow the turtles’ route? “The turtle can swim a maximum of 85km a day, but it can cover at least 250km floating on the ocean currents. Our ancestors must have used this system to cover the sea,” he believes. However, more research is to be done in the field to establish the point.

      “There are incidents like traveling from one place to the other looking at the star. Likewise, there may be some connection between turtle nesting and Tamil migration. If you take the way the fisherfolk treat the turtles, you will know that they respect the species.

      The won’t kill them, but send them back to sea. In many temples in China, Philipines and Indonesia, people even adorn turtles. There must be some connection. We need more research into the subject to prove the point,” says M G Sahibhushan, a history expert. Recently, researchers tracked over 12,700 miles of turtle swimming from the Indonesian coast to the US. But did the human follows the turtle species?

      A presentation will be made at the ICSA hall opposite the Egmore Museum on Wednesday.

      TIMES OF INDIA - 16.11.2011

      Delete
    4. “The Dravidians of the Stone age did not live in the forests and they lived in mountains. They were not barbarians like those of the Stone Age of other countries. The alone are the sons of the soil.” - Rmachandra Dikshidhar

      Delete
  5. வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பல விஷயங்களை யூகமாகத்தான் நாம் சொல்லமுடியும். உலக அரங்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அந்த யூகங்கள் இருக்கவேண்டும். அந்த அளவுக்குத் தரமான அகடெமிக் ஸ்காலர்ஷிப்பை நாம் உருவாக்கவேண்டும்.

    அரசியல் பேச்சாளர்களை அல்ல.

    அருமையான பதிவு. நாம் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஊக்கமும், ஆக்கமும் தர வேண்டும். அப்போது தான் அவர்கள் பணியை குடும்பக் கவலையை மறந்து தொடர முடியும். வசதியுள்ளவர்கள் உதவ வேண்டும் என்பது எனது பட்டவர்த்தமான கோரிக்கை.
    அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இன்று காலை மிகவும் மகிழ்வான செய்தி வந்தது

      சென்னை விமான நிலையம் எதிரில் திரிசூலம் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தை என்னுடிய கனவு திட்டமான

      The Madras stone Axe factory = Pre historical information park

      அமைக்க பஞ்சாயத் அமைப்பினர் முதல் கட்ட ஒப்புதல் அளித்து உள்ளதாக சொன்னார்கள்

      அடுத்த வருடம் 30.05.2013 பல்லாவரத்தில் தான் மெட்ராஸ் கல் கோடாரி நிகழ்வின் 150 ஆம் வருட விழாவை கொண்டாடுவோம் என்று நினைத...்ததற்கு முதல் படியாக இந்த செய்தி அமைந்தது

      இதற்காக இன்னும் சில நாட்களில் திரிசூலம் பஞ்சாயத்தின் சார்பின் ஒரு நிகழ்ச்சியை நடத்த போவதாக சொன்னார்கள்

      வெளி நாட்டில் இருந்து சென்னை வருபவர்களுக்கு ஒரு தனித்தன்மையை இந்த பழங்கற்கால தோட்டம் (பார்க்) அளிக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை , அதே சமயத்தில் கற்காலம் , கடலியல் , மானுடிவியல் , மரபு, வரலாறு , தொல்லியல் தொடர்பான ஆர்வம் உள்ளவர்களுக்கு

      நாங்கள் அமைக்க போகும் தகவல் மையம் ஆர்வலர்களுக்கு பயுனுள்ளதாக இருக்கும்

      இந்த திட்டம் நிலம் தொடர்பானது அதில் உருவான மொழி தொடர்பானது இல்லை

      நிலமும் பொழுதும் என்ற கருத்திற்கு ஏற்பதாக தான் செயல் பட போகிறோம்

      அடுத்த ஒரு மாதத்தில் செயல் திட்டம் தெளிவாகி விடும்

      அன்புடன்

      சிவ பாலசுப்ரமணி

      Delete
  6. ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு !

    பத்ரி அவர்களே! அவர் செய்தார் இவர் செய்தார் என்று தமிழ் இன உணர்வை அரசியலாக்காதீர்கள். அவரவர் உணர்வு அவரவர்க்கு...... தங்களுக்கு ஏன் ?

    தமிழ் நிலம் தொன்மையானது ! இம்மண்ணில் ஆதிமனிதன் வாழ்ந்தான். தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த மண் இது. மொழி,பண்பாடு என்பன பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய நிலை அடைந்தான் ஆதிமனிதன். நம்முடைய முன்னோன்
    அவனே! இம்மண்ணின் ஆதிமனிதன் தமிழன்தான். மொழி அக்காலத்தே தோற்றம் பெறவில்லை என்றால் அவன் நம்மினம் இல்லையா ?

    நம் வீட்டுக் குழந்தைகள் பிறந்தவுடன் பேசவில்லை எனில் அவர்கள் நம்மினம் இல்லையா ?

    கற்கருவிகள் பயன்படுத்திய ஆதிமனிதன் வாழ்ந்த இடம் பல்லாவரம் மலைக்குன்றாவது தமிழகத்தில் தானே இருக்கிறது ? எகிப்தில் இல்லையே !

    "ராபர்ட் புருசு பூட் தமிழ் இன உணர்வு" என்று தலைப்பிட்டு வேறு பாதையில் பயணிக்க வேண்டாம் !

    நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?

    அப்படித்தான் நீங்கள் சொல்லும்போதும் பிறருக்கு இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. திங்கள் 11.06.2012 காலை பத்து முப்பது மணி அளவில்

      சென்னை எழும்பூர் மாநில அருங்காட்சியக தொல்லியல் அரங்கில் தென் இந்தியாவில் கிடைத்த பழங் கற்கால கை கோடாரி குறித்த ஒரு வார கண்காட்சி தினமும் காலை 10.30 to 1700 வரை நடக்க இருக்...கிறது .

      உலக அரங்கில் நமது தீபகர்ப்ப பகுதிகளிள் இதுவரை கிடைத்த கற்கால கோடாரிகள் எந்த அளவாரிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த கண்காட்சி புரிய வைக்கும்

      தோழி துளசி பிருந்தா அவர்களின் மானுடிவியல் பணிகள் மிகவும் சிறப்பானவை ,ஈடுபாட்டுடன் தன் பணிகளி செய்கிறார்

      மிக நேர்த்தியாக ராபர்ட் ப்ருசே பூட் சேகரிப்பு கொண்ட தனி கூடம் அமைத்து இருக்கிறார்கள் .

      விரைவில் திறக்க பட இருக்கிறது

      துவக்க விழாவிற்கு அழைப்பு வந்து உள்ளது

      திரிசூலம் கற்கால பூங்கா திட்ட குழுவில் அருங்காட்சியக நண்பர்களும் இருக்கிறார்கள்

      http://www.chennaimuseum.org/draft/gallery/02/antro.htmSee more

      Delete
  7. வரும் திங்கள் 11.06.2012 அன்று காலை பத்து முப்பது மணி அளவில்

    சென்னை எழும்பூர் மாநில அருங்காட்சியக தொல்லியல் அரங்கில் தென் இந்தியாவில் கிடைத்த பழங் கற்கால கை கோடாரி குறித்த ஒரு வார கண்காட்சி தினமும் காலை 10.30 to 1700 வரை நடக்க இருக்...கிறது .

    உலக அரங்கில் நமது தீபகர்ப்ப பகுதிகளிள் இதுவரை கிடைத்த கற்கால கோடாரிகள் எந்த அளவாரிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த கண்காட்சி புரிய வைக்கும்

    தோழி துளசி பிருந்தா அவர்களின் மானுடிவியல் பணிகள் மிகவும் சிறப்பானவை ,ஈடுபாட்டுடன் தன் பணிகளி செய்கிறார்

    மிக நேர்த்தியாக ராபர்ட் ப்ருசே பூட் சேகரிப்பு கொண்ட தனி கூடம் அமைத்து இருக்கிறார்கள் .

    விரைவில் திறக்க பட இருக்கிறது

    துவக்க விழாவிற்கு அழைப்பு வந்து உள்ளது

    திரிசூலம் கற்கால பூங்கா திட்ட குழுவில் அருங்காட்சியக நண்பர்களும் இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. dear balu,i want to know more about ur research.pl send me ur contact id to my id (kavinraj6666@yahoo.com)

      Delete
  8. dear balu, send me ur contact id to my id kaiinraj 6666@yahoo.com

    ReplyDelete
  9. thanks for the readings

    my mail id

    sunkenland@gmail.com kalinga_tamil@yahoo.co.in

    ReplyDelete