Tuesday, December 22, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி

எல்.ஐ.சி இந்தியா நிறுவனத்தின் சேர்மனாகப் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி பின்னர் இன்ஷூரன்ஸ் ஆம்பட்ஸ்மேனாகவும் சில காலம் பணியாற்றினார். இன்ஷூரன்ஸ் தொடர்பாக எங்கெல்லாம் பிரச்னை வரும் என்பதை நன்கு அறிந்தவர்.

அவர் முதலில் எங்களுக்கு எழுதியது தமிழில் ஆயுள் காப்பீடு பற்றிய புத்தகம். பின்னர் ஆங்கிலத்தில், மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு என மூன்றைப் பற்றியும் தனித்தனிப் புத்தகங்களை எழுதினார். தமிழிலும் மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு பற்றி அவர் எழுதியுள்ளவை மேனுஸ்கிரிப்டாகக் கையில் உள்ளன. சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் அவற்றை எடிட் செய்து கொண்டுவந்துவிட நினைத்தது நடக்கவில்லை. மார்ச் மாதத்துக்குள்ளாகவாவது கொண்டுவந்துவிடவேண்டும்.

ஆஹா எஃப்.எம் கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதை கீழே:



தரவிறக்கிக்கொள்ள

கிழக்கு மொட்டைமாடியில் அவர் பேசியதன் ஒலிவடிவம் இங்கே.

தொடர்புள்ள புத்தகங்கள்:

        
  

No comments:

Post a Comment