
நாவல் இலக்கியம் பற்றிய கட்டுரை ஒன்றை நாஞ்சில் நாடன் வாசித்தார். (இந்த நிகழ்வில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு ஒன்றை தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பகம் அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும்.) நாஞ்சிலுக்கே உரித்தான் கிண்டல், கேலி அதில் இருந்தது.

இந்த விருது தொடர்பாக வெளியான அவரது கருத்துகளில் ஓர் ஏக்கம் வெளிப்படுகிறது. அது அவரைப் பற்றிய ஏக்கமல்ல. தமிழ் இலக்கியத் துறை பற்றியும் தமிழுக்குக் கிடைக்கும் சாகித்ய அகாதெமி விருதுகள் பற்றியுமான ஏக்கம். ஒரு கலைஞன் அவன் வாழ்நாள் சாதனையின் உச்சத்தில் இருக்கும்போது விருது கொடுக்கப்படவேண்டுமா அல்லது ரிடயர் ஆகிப் போகும்போது பென்ஷன்போலக் கொடுக்கப்படவேண்டுமா? மிகச் சரியான கேள்வி. (அப்படிப் பார்த்தால் பெரும்பாலும் சரியாகக் கிடைக்கும் கேரள எழுத்தாளருக்கான விருதில் இம்முறை நாஞ்சிலைவிட வயது அதிகமான வீரேந்திர குமாருக்குக் கிடைத்துள்ளதே?)

நாஞ்சில் நாடனின் ஒரு நாவலை - எட்டுத் திக்கும் மதயானை - ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாங்கள் வெளியிட்டுள்ளோம். Against All Odds
நாஞ்சில் நாடனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
சூடிய பூ சூடற்க - சாகித்ய அகாதெமி 2010 விருது பெற்ற நாஞ்சில் நாடன் புத்தகத்தை வாங்க
நாஞ்சில் நாடனின் பிற புத்தகங்களை வாங்க
பா.ராகவனின் பதிவு
தி ஹிந்து செய்தி
தினமணி செய்தி
சாகித்திய அகாடெமி ஃபார்மாட்டே ஒரு ஆண்டில் வெளியான சிறந்த படைப்புக்கான விருது ஃபார்மாட். அதை படைப்புக்கான விருதிலிருந்து படைப்பாளிக்கான விருதாக மாற்றிவிட்டது தான் குழப்பமே. (கொடுக்கறவங்களும், அவருக்கு கொடுக்கல இவருக்கு கொடுக்கலன்னு திட்டறவங்களும் சேந்து பண்ணது தான்). அதோட இது புனைவுப் படைப்புகளுக்கு கொடுக்கப்படற விருது மட்டுமல்ல, இலக்கிய விமர்சனம், கட்டுரை போன்ற அபுனைவு படைப்புகளுக்கும் தான் கொடுக்கப் படுகின்றன. அதனால் கதை எழுதறவங்க எல்லாத்துக்கும் கிடைக்கறதுக்கு சான்ஸ் கம்மி.
ReplyDelete