1,500க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் இறந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
தொலைபேசியில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தமிழ்நாட்டிலே மொத்த இழப்பு - 90% மீனவர்கள் - மிகப்பெரிய எண்ணிக்கையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கடலுக்குள் சென்ற படகுகள் - வெறும் படகுகளாக மட்டுமே திரும்பி வருகின்றனவாம்.
அதேபோல பொருள் சேதமும் மிகப்பயங்கரம்: பல மீன்பிடிப் படகுகள், கட்டுமரங்கள், மீன்வலைகள் ஆகியவை முழுதும் நாசமாகி, அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்பதோடு கூட இழப்பு பல நாடுகளை மொத்தமாகத் தழுவியுள்ளது என்பதும் மிகவும் வருந்தத்தக்கது.
வடதமிழ்ச்சங்கம் பிரித்தானியாவில் ஒரு விழா
1 hour ago

http://hosted.ap.org/dynamic/files/photos/M/MAS10112260915.html?SITE=FLTAM&SECTION=HOME&TEMPLATE=DEFAULT
ReplyDeleteஇலங்கையில் நண்பர் ஒருவருடன் பேச முடிந்தது. தொலைதொடர்பு மோசமான நிலையில் உள்ளது. காவல்துறைக்கோ, அரசுக்கோ என்ன நடக்கிறதென்றே தெரியவில்லையாம். இலங்கையில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு மேல் இந்தக் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பிபிசி தெரிவிக்கிறது.
ReplyDelete