Friday, August 21, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 4: சர்க்கரை நோய் பற்றி டாக்டர் முத்து செல்லக்குமார்

இந்தியாதான் உலகின் சர்க்கரை நோய் தலைமையகம்! அதிலும் தென்னிந்தியாவில்தான் சர்க்கரை நோய் அதிகமாகத் தாக்குகிறது. நமது உணவு முறையே சரியில்லை; அல்லது சமீபகாலத்தில் நம் உணவுமுறையிலும் நம் வாழ்க்கைமுறையிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்து, அதனால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். அல்லது நமது மரபணுவிலேயே ஏதோ கோளாறு.

சிறு வயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு. அதனால் இன்சுலின் அல்லது டயாமைக்ரான்; தினசரி உடலைக் குத்தி ஒரு சொட்டு ரத்தம் எடுத்து வீட்டிலேயே பரிசோதனை; சர்க்கரை இல்லாத காப்பி. அல்லது இது எதையும் செய்யாமல், எப்படி வந்தது என்ற சுவடே தெரியாமல் கொலஸ்ட்ரால், நெஞ்சுவலி. நெஞ்சுவலி வரும்போதுகூட சர்க்கரை நோய் இருப்பதால், அதன் சிக்னல்கள் ஏதும் சரியாக மூளைக்குச் செல்லாமல், அதனால் உயிரிழப்பு. அதைத்தவிர கண் திரை பாதிப்பு, கால்கள் பாதிப்பு - கால்களை வெட்டவேண்டிய நிலையேகூட வரலாம்.

இப்படி சர்க்கரை நோயின் அபாயங்கள் எவ்வளவோ. சர்க்கரை நோயை தவிர்க்க அல்லது தாமதிக்க என்ன செய்வது? வந்துவிட்டால் நாம் என்ன செய்யவேண்டும்? பல கேள்விகளுக்கான விடைகள் டாக்டர் முத்து செல்லக்குமாருடன் நிகழ்ந்த இந்த பாட்காஸ்ட்டில் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆடியோவுக்குச் செல்ல இங்கு சுட்டவும்.

தொடர்புள்ள புத்தகங்கள்:

           
           

No comments:

Post a Comment