‘நேசமுடன்’ வெங்கடேஷ் தன் மின்னஞ்சல் இதழில் தமிழ் பதிப்புலகம் பற்றி வெளியிட்டுள்ள பதிவு மிக முக்கியமானது. அந்தப் பதிவில் நிச்சயம் பல தகவல் போதாமைகள் உள்ளன. எனக்குத் தெரிந்த தகவல்கள் அடிப்படையில் சில சிறு மாற்றங்களைக் கொடுக்கலாம். ஆனால், ஓரிடத்தில் சில தகவல்களைச் சேகரித்துத் தருவது என்ற வகையில் இந்தப் பதிவு முக்கியமானது.
நான் வெங்கடேஷிடம் போனில் சொன்னதுபோல, அவர் இந்தப் பதிவை ஆங்கிலத்துக்கு மாற்றி, வலைப்பதிவில் சேர்க்கவேண்டும். பலருக்கு உபயோகமாக இருக்கும்.
வெங்கடேஷின் பதிவு தொடர்பான சில கருத்துகளை அவ்வப்போது இங்கே பதிய விரும்புகிறேன்.
திருப்பூர் உரை ‘படைப்பியக்கத்தின் அறம்’
6 hours ago
No comments:
Post a Comment