Monday, January 11, 2010

சென்னை சங்கமத்தில் கிழக்கு பதிப்பக அரங்கு

சென்னை சங்கமம் ஆண்டாண்டு பொங்கல் சமயத்தில் சென்னையில் நடக்கும் விழாவாக ஆகியுள்ளது. இந்த ஆண்டு சென்னை முழுவதும் 15 இடங்களில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதன் அடிப்படை, நாட்டார் கலைகளை முன்வைப்பது என்றாலும், கூடவே பாட்டு கூத்துடன், உணவு ஒரு பெரும் இடத்தைப் பிடித்துள்ளது.

நிகழ்ச்சி நடத்துனர்களிடம் பேசி அனைத்து இடங்களிலும் புத்தகங்களைக் காட்சிக்கு (விற்பனைக்கும்தான்!) வைக்க விரும்புவதாகச் சொல்லியிருந்தோம். அவர்கள் ஒரே ஓர் இடத்தில் மட்டும் புத்தகக் கடையை வைக்கலாம் என்று அனுமதி தந்துள்ளனர். இந்த வசதியை அனைத்து பதிப்பாளர்களுக்குமே தருகின்றனர் (எனவே பிரத்யேகமாக என்று எங்களுக்கு மட்டும் கிடையாது!). ஒவ்வொரு கடைக்கும் கட்டணம் உண்டு. நக்கீரன் பங்கேற்கும் என்று தெரிகிறது. வேறு யாரெல்லாம் வருவார்கள் என்று தெரியாது.

இன்று 11 ஜனவரி முதல் சங்கமம் நிகழ்ச்சி முடியும் 16 ஜனவரி வரையில் இந்த இடத்தில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தக விற்பனை நடக்கும்.

10x10 அளவிலான ஓர் இடத்தில், மெரீனா கடற்கரை, லேடி வில்லிங்டன் கல்வியியல் அமைப்பு வளாகத்தில் கடை இருக்கும். இடம் குறைவு என்பதால் புதிய புத்தகங்கள் ஒரு சில மட்டுமே கிடைக்கும் என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். நேற்று முடிந்த புத்தகக் காட்சியில் புத்தகம் வாங்கத் தவறவிட்ட பலரும் இங்கு கட்டாயம் சென்று உணவை ருசித்துக்கொண்டே, தமிழர் கலைகளையும் ரசித்துக்கொண்டே புத்தகங்களையும் வாங்கலாம்.

தொடர்புக்கு: மஹாராஜன், 94443-55906
.

1 comment:

  1. Am not an expert in the industry; just a book buyer. I plan to not travel in January for two reasons: Chennai Open and Book exhibition. My experience this year:
    1. Space is not allocated according to popularity. Some shops were crowded but very small. Several shops were not crowded.
    2. Visitor comforts are ignored. Very primitive.
    3. Why cannot Kizhakku, Uyirmai, Vikatan and the other popular publishers create a better experience in a more permanent exhibition?
    Why should they depend on a chamber that cannot treat its members unequally?
    4. I used to make three/four visits a year (limitation of what my wife and I can carry back in one trip). This time, we did not have to. The range of books has come down significantly.

    T R Santhanakrishnan

    ReplyDelete