Thursday, May 20, 2010

சிங்கப்பூர் டயரி - 4

சனி, ஞாயிறு அன்று நடந்த பயிலரங்குதான் சிங்கப்பூர் பயணத்தின் முதன்மை நோக்கம். முதன்மை ஆதரவு அளித்தது (போக வரச் செலவு, தங்கும் செலவு, இப்படி) தேசிய புத்தக வளர்ச்சிக் குழுமம். அடுத்த வார இறுதியில் மலேசியாவில் இதேபோன்ற பயிலரங்கம். ஆனால் இடையில் என்ன செய்வது? நான் சிங்கப்பூரிலேயே இருக்க முடிவு செய்திருந்தேன். ராகவன் தந்தைக்கு 75-வது பிறந்தநாள் விழா. அதனால் சென்னைக்குச் சென்றே ஆகவேண்டிய நிலைமை.

ஆனாலும் திங்கள் அன்று விடாமல் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சிங்கப்பூரில் தமிழ் ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கல்வி அமைச்சகத்தின்கீழ் வருவார்கள். அப்போது (தமிழ்) பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதும் அவர்கள் பணியில் ஒன்று. பிறகு மீண்டும் ஆசிரியப்பணிக்குச் செல்வார்கள்.

இப்படி பாடப்புத்தகம் எழுதும் ஆசிரியர்களுக்குத்தான் திங்கள் பயிலரங்கு நடைபெற்றது.

பாடப்புத்தகம் எழுதுவதில், அதுவும் தமிழில் பாடப்புத்தகம் எழுதுவதில் எங்களுக்கு எந்த முன் அனுபவமும் கிடையாது. அதை முன்னமேயே அவர்களிடம் சொல்லியிருந்தோம். அவர்கள், தாங்கள் தயாரித்திருந்த சில பாடப்புத்தகங்களை எங்களுக்கு அனுப்பியிருந்தனர். தொடக்கக் கல்வி 6 வகுப்புகள், உயர்நிலைக் கல்வி 4 வகுப்புகள் என அனைத்துக்கும் அவர்கள் தயாரித்திருந்த பாடங்களை மேலும் எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பது தொடர்பான கலந்துரையாடலாக இருந்தது அன்றைய நிகழ்வு.

சிங்கப்பூர் தமிழ் மாணவர்கள் தமிழ்ச் சூழலிலேயே இல்லை. அவர்கள் வாழ்வது ஆங்கிலச் சூழலில். எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில். வீட்டில்கூட தமிழ் அதிகம் பேசுவதில்லை என்றார்கள். இப்படிப்பட்ட நிலையில் எதை தமிழ்ப் பாடமாக வைத்தால் அவர்கள் ஆர்வத்தோடு படிப்பார்கள் என்பதே பெரிய விவாதமாக இருந்தது.

அவர்கள் தற்போது தயாரித்துவரும் ஓரிரு பாடங்களை எடுத்துக்கொண்டு, அவற்றை திரையில் எடிட் செய்து காண்பித்தார் ராகவன். அதைத் தொடர்ந்து மேலும் விவாதம் நடைபெற்றது.

அமர சித்திரக் கதைகளை எப்படித் தமிழாக்கம் செய்கிறோம் என்பதை நான் திரையில் காண்பித்தேன். அவற்றை சிறுவர்கள் படித்துப் புரிந்துகொள்ளுமாறு செய்ய என்னவெல்லாம் செய்கிறோம் என்பதையும் காண்பித்தேன். குழந்தைகளுக்கான புத்தகங்களில் பேச்சுத் தமிழ் இல்லாமல், எழுத்துத் தமிழாகவே இருக்கவேண்டும் என்று சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்கள் விரும்புவதைப் புரிந்துகொண்டேன். அமர சித்திரக் கதைகளிலும் அதையேதான் இலக்காக நாங்கள் வைத்துள்ளோம். ஆனால் மிக எளிமையான மொழி. எப்படி வார்த்தைகளைக் குறைத்து, அதே பொருளைத் தருமாறு செய்கிறோம் என்பதைப் பற்றிப் பேசினேன்.

குறுகிய நேரத்தில் நாங்கள் நடத்திய பயிற்சியை அங்கு குழுமியிருந்த அனைவரும் நன்கு விரும்பினர் என்றே தோன்றியது. ஆனால் இதை விரிவாகச் செய்யவேண்டுமானால் நாங்களும் அதிகம் தயாரித்துக்கொள்ளவேண்டும்; காலமும் மூன்று நாள்களாகவாவது இருக்கவேண்டும்.

சிங்கப்பூர் தமிழ் பாடப்புத்தக ஆசிரியர்களின் ஆர்வம் வியக்கவைக்கிறது. மாணவர்களுக்கு எப்படியாவது நல்ல தமிழை போதிக்கவேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும் வெளிப்படையாகத் தெரிகிறது. பொதுவாக நாம் இப்படிப்பட்டவர்களை தமிழ்நாட்டில் எங்காவது ஓரிடத்தில் மட்டும்தான் பார்க்கமுடியும். அவர்களும்கூட பாடப்புத்தகம் தயாரிக்க வழியற்றவர்களாக இருப்பார்கள்.

சிங்கப்பூரின் செயல்திறன் மிக்க திட்டத்தில், நல்ல ஆசிரியர்கள் இனங்காணப்பட்டு மேலே வருகிறார்கள். அவர்களது திறமை சரியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்களைப் பார்த்தால் ஆயாசமே மிஞ்சுகிறது. அதுவும் அறிவியல், வரலாறு போன்ற புத்தகங்கள் படிக்கச் சகிக்காமல் உள்ளன.

நிச்சயமாக இந்த ஆண்டு தமிழில் பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள் எழுதுவதில் இறங்கப்போகிறோம்!

***

மாலை பயிலரங்கு முடிந்த உடனேயே ராகவன் நேராக ஏர்போர்ட்டுக்குச் செல்லவேண்டும். பெட்டிகளை அள்ளிக்கொண்டு வழியில் சிம்லின் கோபுரத்தில் நிறுத்தி, ஒரு எலெக்ட்ரானிக் பொம்மையை வாரிக்கொண்டு நேராக விமான நிலையம் விரைந்தார். அங்கே விமானம் தாமதம் என்ற அறிவிப்பு.

ராகவனுக்கு சிங்கப்பூரை முழுமையாகப் பார்க்கமுடியவில்லையே என்ற ஆதங்கள் உள்ளது. அதனால் என்ன? மீண்டும் வராமலா போய்விடப்போகிறோம்?

செவ்வாய் அன்று தேசிய நூலகத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசவேண்டும். அதுபற்றி நாளைக்கு.

(இப்போது மலேசியா வந்துவிட்டேன்.)

25 comments:

  1. உங்களது ஏதோ ஒரு பதிவில் ஜான் விலே பற்றி சொல்லியிருந்த நினைவு..
    அதிகம் கனவுகள் காண்பீர்கள் என்று தோன்றுகிறது,கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சிங்கையில் தமிழ்பாடங்களை பேச்சு தமிழுக்கு கொண்டுவருவதாகவல்ல கேள்விப்பட்டேன்!! ஆதாவது 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பு பல தமிழ் மாணவர்களின் தேர்ச்சி முறை மிக மோசமாக இருப்பதை கண்டு கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில், கல்வி முறையை பேச்சு வழக்குக்கு கொண்டு வந்தால் தமிழை வாழவைக்க முடியும் என்று முடிவு செய்ததாக செய்தி தாளில் படித்த ஞாபகம்.தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் என்ன வழிமுறையை கடைபிடிக்கிறார்கள் பாருங்கள்...இதன் மூலம் வருங்கால சந்ததிகளுக்கு மறைமுக போதனையும் கொடுக்கப்படுகிறது.இப்படிப்பட்ட அரசாங்கம் இருந்தால் போதும் எந்தநாடும் வளர்ச்சி மேல் வளர்ச்சி காணும் என்பது நிச்சயம்.

    ReplyDelete
  3. தமிழகத்தில் இருந்து சில ஆசிரியர்களை பணிக்கு எடுத்தாலும் அப்படியே கொத்தாக அள்ளிக்கொண்டு போடுவதில்லையாம்.அவர்களையும் பல வித முறைகளுக்கு ஆட்படுத்தி உள்ளூர் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி கொண்டு வந்த பிறகே சரியான இடத்துக்கு கொண்டுவருகிறார்கள்.
    மாணவர்கள் எக்குதப்பா பேசினா கம்பெல்லாம் எடுத்து வீசிட முடியாது. :-)

    ReplyDelete
  4. //நிச்சயமாக இந்த ஆண்டு தமிழில் பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள் எழுதுவதில் இறங்கப்போகிறோம்!//

    நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. "நிச்சயமாக இந்த ஆண்டு தமிழில் பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள் எழுதுவதில் இறங்கப்போகிறோம்!" மிகவும் வரவேற்கத்தக்கது.

    ReplyDelete
  6. //ஆனால் இடையில் என்ன செய்வது?//
    இதில் என்ன குழப்பம்? ஒரு வாரம் என்பது உங்களைப் போன்ற பிசியானவர்களுக்கு நீண்ட காலம் அல்லவா? இரு பயிற்சியரங்குகளும் வெவேறு அமைப்பினர் ஆர்கனைஸ் செய்திருப்பார்கள் அல்லவா? ஆக ஒவ்வொரு வேலையும் போகவரும் விமான டிக்கெட்டையும் உள்ளடக்கியிருக்க வேண்டுமே.

    ஒன்று முடிந்தவுடன் சென்னை திரும்பினால் இங்கு செய்ய வேண்டிய வேலைகள் உங்களுக்கு ஆயிரம் இருக்குமே. அடுத்த வாரம் மலேசியா செல்வதற்கான செலவுகளை இன்னொரு அமைப்பினர்தானே ஏற்றுக் கொள்ள வேண்டும்?

    அதன்றி நடுவில் ஒரு வாரம் அங்கேயே தங்கினால் ஹோட்டல் செலவை ஏற்பது யார்? நீங்களாக மலேசியாவில் வேறு வேலை இருந்து அங்கு போவது வேறு விஷயம்.

    வெறும் போக்குவரத்து செலவு மற்றும் ஹோட்டல் செலவுகள் மட்டும்தானா? பயிற்சி அரங்கத்திற்காக தனி பேமெண்ட் ஒன்றும் கிடையாதா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. ராமதுரை எழுதியது
    தமிழ் பாடப் புத்தகம் ஆகட்டும், அறிவியல் பாடப் புத்தகம் ஆகட்டும் அதை ஒரே நபர் எழுதுவது தான் முறை. அப்படியின்றி ஒரு பாடப் புத்தகத்தில் ஆளுக்கு ஒரு அத்தியாயம் எழுதும் முறை கூடாது. அப்படியான முறையில் ஒரு முழுமை, சீர்மை இராது.இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை

    ReplyDelete
  8. Despite the best efforts of the Ministry of Education and its enthusiastic Tamil teachers, the overall Tamil standard in Singapore schools remains abysmally low.

    There are few exceptions of course. I found that the Muslim families of Tamil origin generally speak the best Tamil and encourage their children to take up Tamil seriously.

    The people you met in Singapore -- Tamil media personalities, Mahizhanan and the organisers of your workshop, the Tamil teachers etc., are but a tiny, tiny, tiny fraction of the Indian community in Singapore that really cares about Tamil. So you need to temper your judgment about Tamil standards here.

    Language is an important identity issue in multiracial Singapore. So, while the Chinese and Malays rally united behind their respective mother tongue languages in schools -- promoting, improving and constantly fine-tuning it -- the same urgency is never found with Tamil.

    Part of the reason is, increasingly the Tamil identity is diluted and eroded as more and more non-Tamil Indians arrive and settle down and are actively lobbying to replace Tamil with their own regional languages for their children.

    Although Tamil is entrenched in the constitution as one of the 4 national languages, unless the Tamil community wakes up and does something both socially and politically, it is hard to prevent the ultimate demise of Tamil in Singapore.

    ReplyDelete
  9. good insights anonymous..the irony here is that Tamil is eroding in Tamilnadu. Why look elsewhere?

    ReplyDelete
  10. Badri Sir,

    1. irony-kku, tamizh chol enna ?

    2. Tami"zh" sorrodar, aangilathil eppadi vandhadhu?

    Thanks,
    Venkat

    ReplyDelete
  11. சிங்கை அநானிகள்,நீங்கள் முதலில் தமிழில் எழுதிப் பழகுங்கள்,தமிழில் பேசிப் பழகுங்கள்..பிறகு அனைத்தையும் அனைவரையும் குறை சொல்லலாம்.

    தமிழை நேசிப்போம்,தமிழில் பேசுவோம் என்று ஒரு இயக்கமே நடத்துகிறார்களே,ஏன் நீங்கள் தமிழ்ப் பயன்பாட்டுக்கு தயாராக இல்லை?

    மின்மடலில் கூட தமிழைப் பயன்படுத்துங்கள்,அலுவல் ரீதியாக ஆங்கிலத்தில் எழுத நேர்ந்தால் மட்டும் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..

    வெங்கட்,தமிழ்ப் பொருள் பற்றி ஆங்கிலத்தில் கேள்விகள்...நல்ல நகை முரண்--அதுதான் 'ஐரணி'..
    ழ வைக் குறிக்க ஆங்கிலத்தில் எழுத்துக்கள் இல்லை என்ற எவனாவது ஒரு தமிழனின் வாயை அடைக்க ஒரு பீட்டர் கண்டுபிடித்ததாக இருக்கும் அந்தப் பயன்பாடு..

    ReplyDelete
  12. //அறிவன்#11802717200764379909 said...
    சிங்கை அநானிகள்,நீங்கள் முதலில் தமிழில் எழுதிப் பழகுங்கள்,தமிழில் பேசிப் பழகுங்கள்..பிறகு அனைத்தையும் அனைவரையும் குறை சொல்லலாம்.//

    Here it is! I was expecting such a typical Singapore asinine reaction -- a habit, no doubt, borne out a life-long anxiety of being defensive!

    For the Tamil protectors and promoters, coming up with another campaign is same as having the job done.

    "தமிழை நேசிப்போம்,தமிழில் பேசுவோம்" is probably one such campaign, where it is customary to over-report results and pat oneself on the back for the job well done!

    What did you achieve in the campaign?

    ReplyDelete
  13. பத்ரி,பதிவில் கிளம்பிய சர்ச்சைக்கான எனது வருத்தங்கள்.ஆனால் எனது பதில் அவசியம்!புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete
  14. மிஸ்டர் அனானி,கேள்வி-இயக்கம் என்ன சாதித்தது என்பதல்ல..இயக்கம் நடத்தியும் நீங்கள் ஏன் தமிழ்ப்பயன்பாட்டுக்கு தயாராக இல்லை என்பதுதான்?


    நீ என்ன முயற்சி எடுத்தாலும் நான் இம்மி கூட மாற மாட்டேன்;ஆனால் முயற்சிப்பவர்களையும் நொள்ளை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பேன் என்பது போன்ற மனநோய் வாதிகளிடம் வாதிடல் வீண்..

    உங்களுக்கு இரண்டு செய்திகள் மட்டும் தர விருப்பம்:
    1.நானும் கூட தமிழ்பதிவில் எழுதிக் கொண்டிருந்தாலும் எனது தனிப்பட்ட மின்மடல்களை ஆங்கிலத்தில்தான் எழுதிக் கொண்டிருந்தேன்..அந்த இயக்கத்தின் விளம்பரத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கே ஒரு வெட்கம் ஏற்பட்டது;தமிழிலக்கியப் பரிச்சயமும் தமிழார்வமும் இன்றைய தமிழின் தேய்மை குறித்தான ஆதங்கமும் கொண்ட நானே ஏன் நடைமுறையில் அனைத்து தளத்திலும் தமிழைப் பயன்படுத்துவதில்லை என்ற கேள்வி எழுந்ததால் அனைத்து தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களிலும் தமிழைப் பயன்படுத்துவது என்ற சுய உறுதி எடுத்துக் கொண்டேன்..
    2.தமிழை நேசிப்போம்;தமிழில் பேசுவோம் இயக்கத்தில் எனக்கு செயல் தொடர்பெதுவும் இல்லை.ஆகவே என்னிடம் நேர்மறை நொள்ளை பேசிப் பயனில்லை!
    ஆகவே சிங்கை அரசின் அந்த மொழிப் பிரிவினருடன் நீங்கள் வாதிடலாம் அல்லது சண்டை போடலாம்! எங்கே,நமக்குத்தான் பெயருடன் வந்து வாதிடுவதற்கே தொடை நடுங்குகிறது,பின்னெங்கே அரசாங்கத் தொடர்புள்ளவர்களிடம் பேசுவது?!

    ReplyDelete
  15. //வெறும் போக்குவரத்து செலவு மற்றும் ஹோட்டல் செலவுகள் மட்டும்தானா? பயிற்சி அரங்கத்திற்காக தனி பேமெண்ட் ஒன்றும் கிடையாதா?//

    டோண்டு,பத்ரி உங்களை போல சிறிய (சில்லறை)வியாபாரி அல்ல நீண்ட கால திட்டத்துடன் சிங்கை மற்றும் மலேசியா சந்தையில் தடம் பதிக்க இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொள்வார்கள்

    அல்ப்பத்தனமாக சிறிய விஷயங்களுக்கெல்லாம் “பில்”போட்டு பெரிய வாய்ப்புகளை இழக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  16. irony - நகைமுரண் (இந்திரா பார்த்தசாரதியின் 'புரட்சி' - இந்த வார (16/5/2010) கல்கி 'பாலம்' தொடரில் வாசித்தது)

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  17. With due apologies to Badri for using his blog comments for what seems to be another pointless discussion, let me say my final words and stop.

    Arivan, my original comment, if you read carefully, firstly puts forth my perception of the state of Tamil in Singapore. Secondly, it tries to inform Badri that the sample of people he interacted with in Singapore suffer the self-selection bias and therefore might distort any judgement about standards, interest in Tamil. Thirdly, it explains the difference between Tamil and the other 2 national languages with respect to language and self-identity and speculates on a possible cause. Finally it proposes a solution (social & political).

    I did not see a single response to any of the above in your comment. Instead what do you do? – you take the easy way out and go on a personal attack for not using Tamil in writing. Not only is it completely beside the point, it is precisely the kind of defensiveness that we unfortunately display when faced with criticism. What this does is, it reinforces the widely held (history is full of such examples) notion that Singaporeans will not, or incapable of engaging with detractors on issues.

    I concede that your "தமிழை நேசிப்போம்;தமிழில் பேசுவோம் campaign" is sort of a social solution. But having seen the glut of campaigns, you can’t blame me for being sceptical of campaigns in general in Singapore. But, hey, if you are so conditioned by them, good for you and go for it!

    In closing, my sincere apologies if I came across as rude and hurt your feelings. I guess I did not pay as close an attention to the TV advertisements that promoted the kindness campaign on how to be nice and behave towards others.

    Request to Badri: It would be very useful to hear from you on the quality of participants at your workshop and your impressions on the general state of affairs in Singapore. We heard from you (and from Paa.Raa’s posts) about the earnestness. What do you think of the ability?

    ReplyDelete
  18. நண்பர் வெங்கட்ராமன்,செய்திக்கு நன்றி..ஆனால் கல்கி-இப்போது-படிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை!

    அது சுயமாக எழுதியதுதான்..
    நன்றி.

    ReplyDelete
  19. ||With due apologies to Badri for using his blog comments for what seems to be another pointless discussion, let me say my final words and stop.

    Arivan, my original comment, if you read carefully, firstly puts forth my perception of the state of Tamil in Singapore. Secondly, it tries to inform Badri that the sample of people he interacted with in Singapore suffer the self-selection bias and therefore might distort any judgement about standards, interest in Tamil. Thirdly, it explains the difference between Tamil and the other 2 national languages with respect to language and self-identity and speculates on a possible cause. Finally it proposes a solution (social & political).||

    நண்பர் அனாநி,பத்ரியிடம் மன்னிப்புடன் நானும் பதிலளித்து விட்டு முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.
    உங்களது கருத்தைப் படிக்காது நான் கருத்துச் சொன்னதான பொருளில் எழுதி இருக்கிறீர்கள்;இல்லை!
    ஒரே ஒரு வித்தியாசம்.உங்களது கருத்துக்களுக்கான விசாரங்களுக்குள் ஈடுபடாமல் அந்த நான்கு காரணங்களுக்கும் காரணிகளுக்கும் எது தீர்வாக இருக்க முடியும் என்று நான் நினைப்பதை எதிர் வாதமாக முன் வைத்தேன்.அதை நீங்கள் சரியாக எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட தாக்குதலாக,பிழையாக எடுத்திருக்கிறீர்கள்.
    இன்றைக்கு தமிழுக்கான இலக்கியத்திற்கு சுமார் 3000 வருட தொடர்ச்சி-நமக்குத் தெரிந்து- இருக்கிறது!இன்றும் சிறிது முயற்சித்தால் அகத்தியத்தையோ தொல்காப்பியத்தையோ நம்மால் படித்துத் தெரிந்து புரிந்து கொள்ள முடிகிறது.காரணம் என்ன?
    இன்னொரு இந்தியப் பாரம்பரிய மொழியாக அடையாளப்படுத்தப்படுவது சமத்கிருதம்.அதிலும் எண்ணற்ற புராணக் கட்டுகள்,நீதிநூல்கள் சுமார் 2000 வருடத் தொடர்ச்சியில் இருக்கின்றன.ஆனாலும் இன்று எத்தனை பேர் சங்கரரின் பாஷ்யத்தையோ அல்லது வேறு ஒரு சமத்கிருத நூலையோ படிக்க முடிகிற நிலையில் இருக்கிறார்கள்?

    இன்று இந்தியாவில் தெற்கே தமிழகத்தைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பெரும்பாலானவர்களால் அறிந்த மொழியாகவும் இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் பல வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் கூட தொடர்பு மொழியாகவும் இந்தி இருக்கிறது.இத்தனைக்கும் இந்தியில் தமிழில் இருக்கும் அளவுக்கு,ஒப்புநோக்கும் அளவுக்கு இலக்கிய சாரம் இருப்பதாக-எனக்குத் தெரிந்தவரை-இல்லை.

    இந்த மூன்று மொழிகளின் நிலைகளுக்குமான காரணம் ஒன்றுதான்.
    அது,தொடர்ந்த பயன்பாடு!
    நீங்கள் கீழே தவறான காரணிக்குச் சுட்டியிருக்கும் வரலாறு,பயன்பாடில்லாத மொழிகள் அழிந்திருப்பதற்கான நெடிய சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறது.சமத்கிருத அழிவு அதில் ஒன்று..

    தமிழ்மொழி இதுநாள் வரை(என் வயது முப்பதுகளின் மத்தியில்-எனது தோழர்கள் வரையிலான தலைமுறையில்)சாதாரண தொடர்பு மொழியாகவும் பயன்பாட்டிலும் இருந்திருக்கிறது.பயன்பாட்டுக்கு மேல் இலக்கியத்திலான ஈடுபாடு வேண்டுமானால் அடுத்த கட்டமான இலக்கிய வளர்ச்சி,கலாசாரப் பரவல் போன்றவையாக இருக்கலாம்..ஆனால் மொழி வாழ முதலில் சுவாசம் வேண்டும்;சுவாசம் இருக்க சாதாரண வாழ்வில் பயன்பாடு வேண்டும்..அது உங்களிடமே இல்லை..எனவேதான் அதை மிக நேரடியாகச் சுட்டினேன்..பொதுவாக எனது வாதத்தின் கூறு-style-அது..மிக நேரடியாக உணரவைக்க எழுதுவது.

    பயன்பாட்டில் இல்லாத எந்த மொழியும் அழியும்.மொழி பயன்பாட்டில் இருக்க அரசும் அமைப்புகளும் ஒரு அளவுக்குத்தான் முயல முடியும்;அந்த மொழியின் மீது ஈடுபாடு இருப்பவர்கள் அதை விருப்புடன் பயன்படுத்தி புழக்கத்தில் வைத்திருந்தால்தான் அது வாழும்.இல்லையெனில் வீழும்.

    இந்த வீழ்ச்சி சிங்கையில் உங்கள் தலைமுறையிலேயே அதாவது ஒப்புநோக்கத்தில்-comparative-எனது தலைமுறையிலேயே நடந்து கொண்டிருக்கிறது;
    தமிழகத்தில் அது எங்களுக்கு அடுத்த தலைமுறையில் நடந்து கொண்டிருக்கிறது.இன்றைய 20 களில் இருக்கும் தமிழக வாலிபர்களுக்கு ஒரு திருக்குறளை பிழையின்றி வாசிக்கக் கூட தெரிந்திருப்பது அதிசயமாகவே இருக்கிறது.சிங்கையில் இளையர்களின் தமிழைக் கேட்கவே வேண்டாம்,எரிச்சல் மண்டும் கேட்டாலே,அந்த அளவுக்கு பிழையான இழுத்த பயன்பாடு..இந்தப் பயன்பாட்டுக்குறை உங்கள் அப்பாவின் காலத்திலேயே துவங்கி,உங்கள் காலத்தில் வளர்ந்து,உங்கள் மகனின்,மகளின் காலத்தில் முதிர்ந்து கொண்டிருக்கிறது..அதுவும் எனது வலிக்கான,மிக நேரடி பதிலுக்கான காரணம்!

    எல்லாவற்றிற்கும் மேலாக charity begins at home என்பதான சொலவடை போல சமுதாய ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் மாற்றங்கள தனி மனிதர்களிடமிருந்தே துவங்க வேண்டியிருக்கிறது..நாம் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் கூட!
    --தொடர்கிறது---

    ReplyDelete
  20. ---தொடர்ச்சி---
    ||I did not see a single response to any of the above in your comment. ...What this does is, it reinforces the widely held (history is full of such examples) notion that Singaporeans will not, or incapable of engaging with detractors on issues.||

    எப்படி இப்படி மிகச்சரியாக, ஒரு முழுக்கத்தவறான அனுமாணங்களுக்கு வந்து அந்த அடிப்படையில் வாதிக்கிறீர்கள் என்று தெரியவில்லை..
    சிங்கை அரசின் திட்டத்தை ஆதரிப்பது போன்ற தோற்றத்தில் பேசியதால் தோற்ற மயக்கம் கொண்டு விட்டீர்கள் போலிருக்கிறது..
    நான் சிங்கப்பூரியன் அல்ல!
    மேலும் கருத்துக்குச் சரியான தீர்வின் அடிப்படையிலேயே எனது வாதம் அமைந்தது,அமைந்திருக்கிறது..சிங்கைத் தமிழர்களின் குடும்பத்திற்குள்,தகவல் பரிமாற்றத்தில் தொடர்ந்த மொழியின் பயன்பாடு நீங்கள் குறிப்பிட்ட 4 காரணிகளுக்குமே தீர்வாக அமையும்;ஒரு காரணியான வேற்று மொழி இந்தியர்கள் இங்கு வந்து கலந்து அரசியல் ரீதியாக தமிழை கழற்றி விட்டு இந்தியைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்று சொல்வதை வேண்டுமானால் ஒரு சிறிது ஏற்கலாம்..ஆனால் அதிலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும்,தமிழ் ஏற்கனவே சிங்கையில் அங்கீகரிக்கப் பட்ட ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருக்கிறது..ஆனால் இந்தி முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது..
    அதாவது தமிழ் தொய்வில்தான் இருக்கிறது..முழுக்க வெளியே இல்லை!


    ||I concede that your "தமிழை நேசிப்போம்;தமிழில் பேசுவோம் campaign" is sort of a social solution. But having seen the glut of campaigns, you can’t blame me for being sceptical of campaigns in general in Singapore. But, hey, if you are so conditioned by them, good for you and go for it!||

    இயக்கங்கள் மாற்றங்கள் கொண்டு வருமா என்பதல்ல கேள்வி,நாம் அதற்கு செவி சாய்க்கிறோமா என்பதே கேள்வி..துரதிருஷ்டவசமாக இதை திரும்பவும் நினைவு படுத்த வேண்டியிருக்கிறது..
    மேலும் என் அம்மா ஒரு சொற்றொடரை அடிக்கடி சொல்வார்கள்..'உள்ளது போகாது,இல்லது வாராது' என்பது அது..
    சைவ சித்தாந்தத்தின் தத்துவங்களுள் ஒன்று அது,இருந்தாலும் சாதாரண எடுத்தாள்வுகளுக்கும் பொருந்தும்.

    சிங்கப்பூரர்களின் நேசம் பற்றிய நேரடி அனுபவங்கள் எனக்கு நிறைய இருக்கிறது! எனவே மீண்டும் அடிக் குறிக்க வேண்டி இருக்கிறது..இயக்க முயற்சிகள் ஒன்றும் மந்திரக் கோல்கள் அல்ல.ஒரளவுக்காவது அவற்றை நாம் கவனிக்கிறோமா என்பதுதான் எனது பார்வை..

    மேலும் உயர்மட்ட அளவில் சிங்கையில் தீட்டப்படும் திட்டங்கள் உங்களுக்கான நெடிய அனுபவத்தில் வெறுத்துப் போக வைத்திருக்கலாம்..ஆனால் ஒரு வெளியாளான எனது பார்வையில் அமைப்புகளும் நிர்வாகமும் ஒரளவுக்கு திறந்த மனத்துடனே இருப்பதாக நான் உணர்கிறேன்..சிங்கையின் நூலநிலைய அமைப்பு நான் பரிந்துரைத்த சுமார் 300 நல்ல புத்தகங்களை வாங்கி இருக்கிறார்கள்,எனக்கு நன்றி அறிவித்து மடல் அனுப்பி ஊக்கியிருக்கிறார்கள்..
    டவுன் கவுன்சிலில் நான் சுட்டிக்காட்டிய சில ஆலோசனைகளுக்கு நன்றி கூறி மாற்றங்களை மறு சீரமைப்பில் கொண்டு வருவதாக தெரியப்படுத்தி இருக்கிறார்கள்..உணவுச் சாலைகளில் சுட்டிக்காட்டிய குறைகளை சரிப்படுத்தி இருக்கிறார்கள்.இத்தனைக்கும் நான் உணவுச்சாலைகளில்-ஃபுட் கோர்ட்-சாப்பிடுவது மிக மிக அரிது..
    எனவே நான் விதயங்களை எளிதாக நேரடி மதிப்பில்-ஃபேஸ் வால்யு-எடுத்துக் கொள்கிறேன்..உங்களுக்கான அனுபவங்கள் வேறாக இருக்கலாம்..

    ||In closing, my sincere apologies if I came across as rude and hurt your feelings. I guess I did not pay as close an attention to the TV advertisements that promoted the kindness campaign on how to be nice and behave towards others.||
    முன்பே சுட்டியபடி உங்கள் மீது வருத்தம் ஒன்றும் இல்லை.மேலும் எனது நேரடி அனுபவங்களிலிருந்தே நான் விதயங்களை அனுமானிக்கிறேன்,பாடம் கற்கிறேன்..சிங்கப்பூரர்களுடனான எனது அனுபவங்கள் நினைத்து நெகிழ வைப்பவை அல்ல;எனினும் உங்களது நல்ல வார்த்தைகளுக்கு நன்றி.

    ||Request to Badri: It would be very useful to hear from you on the quality of participants at your workshop and your impressions on the general state of affairs in Singapore. We heard from you (and from Paa.Raa’s posts) about the earnestness. What do you think of the ability? ||
    இது முற்றிலும் வேறு கோணம்..நான் இதில் வாதிடவே இல்லை..

    பத்ரிக்கு..மீண்டும் வருத்தங்கள்..நிறைய நன்றிகள்..

    ReplyDelete
  21. congrats, after BORING the locals to death, u hv gone international!

    ReplyDelete
  22. நகைமுரண் = oxymoron?

    thyagarajan

    ReplyDelete
  23. oxymoron - முரண்தொடை

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  24. //oxymoron - முரண்தொடை

    அன்புடன்
    வெங்கட்ரமணன் //'Thanks, Venkatramanan

    Thyagarajan

    ReplyDelete
  25. பத்ரி,
    விவாதத்தின் முழுமை கருதி,அனானி அன்பர் என்னுடைய பதிவில் வந்து எழுதிய பின்னூட்டத்தை இங்கு ஒட்டுகிறேன்..வெளியிடுவது உங்கள் விருப்பம்..நன்றி..
    ***************
    Anonymous said...

    First of all, I am surprised big time that there is even an 'Anonymous' posting option in your blog! :)

    I do not, as a principle, comment in blogs that *demand* name and personal details. I have several reasons for why I do that, but they are not relevant here. However one of the reasons that you might like to know is that -- if my comments are going to be judged by what name (which mostly is arbitrary anyway) it comes with; or somehow a name is essential to take legitimise my comments, perhaps the blogger is not interested in receiving certain types of comments, or it simply is not worth my time commenting in the first place.

    Your initial rejection of my comments based on the fact that I wrote it in English was also in similar vain. It is tragic whenever voices are stifled in the name of technical impropriety (writing in English about Tamil, writing as Anonymous etc.) that have no bearing on the conversation at hand. I am sure you know dictatorships employ such tactics to suppress and sidetrack dissent and I was saddened to hear that from you as well.

    Thanks for explaining and arguing your position at Badri’s blog. I really appreciate your effort and thoughtfulness. I suspected that you are not a Singaporean. I meant not only in the sense of birth or citizenship but also apologists for Singapore.

    May 23, 2010 7:12 PM
    --------------------------------
    அறிவன்#11802717200764379909 said...

    அனானி,
    உங்களது பின்னூட்டத்தை மட்டுமல்ல,எந்த அனானியின் பின்னூட்டத்தையும் அது தனிமனிதத் தாக்குதல் அல்லது கழிசடையான வார்த்தைகளைக் கொண்டிருந்தால் மட்டுமே தவிர்த்திருக்கிறேன்...

    மற்றபடி நான் 'சிங்கப்பூரியன்' அல்ல என்ற 'உணர்ந்த'தற்கு நன்றி..

    ReplyDelete