Saturday, May 29, 2010

மதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு விழா

நாளை (ஞாயிறு) 30.05.2010 அன்று மாலை 6.00 மணிக்கு, திருநெல்வேலி ம.தி.தா இந்து மேல்நிலைப் பள்ளியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியிட்டு விழா நடைபெறும்.

தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிடுபவர், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன். சிறப்புரை வழங்குபவர் சாலமன் பாப்பையா.

இந்தப் புத்தகத்தை முன்பதிவு செய்திருந்த பல நூறு வாசகர்களிடையே இருந்து 10 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்கள் பத்து பேரும்தான் புத்தகத்தில் முதல் பத்து பிரதிகளை மேடையில் பெற்றுக்கொள்கிறார்கள்.

முன்பதிவு செய்த (சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள்) மதியின் கையெழுத்திட்ட புத்தகம் அனுப்பிவைக்கப்படும். திங்கள், செவ்வாய் முதற்கொண்டு முன்பதிவு செய்தவர்களுக்குப் புத்தகங்கள் செல்லத் தொடங்கும்.

புத்தக வெளியிட்டு விழாவுக்கு அனைவரும் வருக.

5 comments:

  1. Hai Badri sir,

    It was very nice prog.I really enjoyed the evening time. Very first time i saw u. I am also a Magazine editor and publisher of Health Care Tamil monthly medical magazine.
    I wanted to give u a Shawl.Crowd is there so i simply sit.
    Anyhow thanks....

    ReplyDelete
  2. Hi Badri,
    Thanks. I have received it today.
    Thanks

    ReplyDelete
  3. விழாச் செய்திகளை நாளிதழ்களில் படித்தேன். வகுப்பு ஆசிரியர் ஒருவர் மதியின் முதல் கார்ட்டூனைப் பத்திரமாக வைத்திருந்து திருப்பிக் கொடுத்தாராமே. சிலிர்த்து விட்டேன். எனை அனுதினமும் மகிழ்விக்கும் மதி எனும் மகத்தான கலைஞனுக்கும், உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. செல்வேந்திரன்: அந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்கள் இரண்டு நிகழ்ந்தன. அருகிலேயே நான் இருந்தேன். அவை பற்றி இன்று மாலைக்குள் எழுதுகிறேன். வீடியோ உள்ளது. அதனை கொஞ்சம் துண்டாக்கி, இன்றே சேர்க்கமுடியுமா என்று பார்க்கிறேன்.

    ReplyDelete