விசுவ இந்து பரிஷதின் ராட்சதக் கூட்டம் அயோத்தியில் போய் இறங்குகிறது. இவர்களை ராம பக்தர்கள் என்றும் கர சேவகர்கள் என்றும் செய்தித்தாள்களும், வானொலிகளும் சொல்லுகின்றன. இது தவறான வருணனை. இவர்களை தடியர்கள், குண்டர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிக்க தோகாடியா தலைமையில் அயோத்தி செல்லும் இவர்களை சிறையில் அடைக்கத் தேவையான இடம் இருக்காது. ஆனால் இந்தத் தலைவர்களை அடைக்கத் தேவையான இடம் நிறையவே இருக்கிறது.
பிரதமர் வாஜ்பாயி வி.இ.ப மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சொல்கிறார். எப்படி நம்பிக்கை வைப்பது? நிலைமை கட்டுக்கு மீறிப் போகிறது என்று இப்பொழுதே தெரிந்து விட்ட காரணத்தால் உடனடியாக இராணுவத்தை அயோத்திக்கு அனுப்பி அத்துமீறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அயோத்தியில் நடப்பதின் எதிரொலி நாடெங்கும் கேட்கும்.
ஆலயங்கள் வழியே வரலாற்றை மீட்டெடுத்தல்
6 hours ago
No comments:
Post a Comment