Thursday, October 16, 2003

கொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம் (இல்லை, அரசியல்)

* மணிசங்கர் அய்யர் தாக்குதல் பற்றி. முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என்னை மணிசங்கர் தரக்குறைவாகப் பேசினார், அதற்கு என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சபாநாயகர் காளிமுத்துவே சாட்சி. ஆனால் நான் கண்ணியமாக நடந்து கொண்டேன். தாக்குதல் நடந்தது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்கிறார். எப்படி நம்புவது? இதைப்பற்றிய நேற்றைய என் பதிவு.

* கலைஞர் கருணாநிதி ஜெயமோகன் தன்னை ஒரு தீவிர இலக்கியவாதி இல்லை என்று சொன்னதைக் கண்டிக்குமாறு முரசொலியில் ஒரு கவிதை எழுதித் தள்ளிவிட்டார். அதில் ஜெயமோகனை, 'வாலைச் சீண்டும் வானரம்', 'தீராவிடம்', 'தும்பறுந்த கன்று', 'நரி', 'பொன்னைப் (தன்னைப்) பார்த்து இளிக்கும் பித்தளை', 'கற்பூர வாசனை தெரியாத [கழுதை]', 'கபோதி', என்று தன் இலக்கியத் திறமைகள் அனைத்தையும் காட்டி விட்டார். இனியும் ஜெயமோகன் கலைஞரை ஒரு தீவிர இலக்கியவாதியாகக் கருதாவிட்டால் அடுத்து சோடா பாட்டில்கள், சைக்கிள் செயின்கள் மற்றும் இதர திராவிட சமாச்சாரங்கள் அனுப்பி வைக்கப்படும்!

No comments:

Post a Comment