Wednesday, October 22, 2003

ஜெயமோகன் - கருணாநிதி - திராவிட எழுத்தாளர்கள்

இந்த விஷயம் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. ஆக, ஆக ஜெயமோகனின் புத்தகங்கள் நன்றாகவே விற்கும் போலவும் தெரிகிறது. அதை விரும்பித்தான் இந்த ஸ்டண்டா?

ஜெயமோகன் தான் மிகவும் மதித்த ஞானக்கூத்தன், கலாப்ரியா, வண்ணதாசன் போன்றவர்கள் இளையபாரதியின் புத்தக வெளியீட்டு விழாவில் உடல் கூசிப் போகுமளவுக்கு கலைஞர் கருணாநிதியை ஒரு இலக்கிய கர்த்தா என்று புகழ்ந்து தள்ளி கட்சித் தொண்டனையும் ஒருபடி மிஞ்சி விட்டனர். கருணாநிதி ஒரு இலக்கியப் படைப்பாளியே இல்லை, வெறும் பிரச்சார எழுத்தாளர்தான் என்கிறார். உடனே ஜெயமோகனின் பேட்டி விகடனிலும், இன்னும் விரிவான பேட்டி துக்ளக்கிலும் வந்து விட்டது. விகடன் பேட்டிக்கு எதிர் வினையாக, கோபமடைந்த கருணாநிதியும் முரசொலியில் ஒரு கவிதை வெளியிட்டு விட்டார். இப்பொழுது ஞானக்கூத்தன், கலாப்ரியா, வண்ணதாசன் போன்றோர் விகடனில் ஜெயமோகனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்னும் கொஞ்ச காலம் இந்தப் பிரச்சினை கணிந்து கொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment