Tuesday, October 28, 2003

குருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்துகள்

சுகந்தி வழக்கு பற்றிய தீர்ப்பை சொல்லிய பின் நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் இவ்வாறு சொல்லியுள்ளார்: "இது போல கிராம பஞ்சாயத்தார்கள் மரத்தடியில் அமர்ந்து கொண்டு அபராதமும், தண்டனையும் விதிப்பதைத் தடுக்க - அதுபோல அத்துமீறி அதிகாரம் செய்வதையும் தடை செய்ய - ஒரு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும்."

இதுபற்றிய குருமூர்த்தியின் கருத்து மேற்கோள்களாக:

"... வலயப்பட்டி பஞ்சாயத்தார்கள் அந்தத் தவறை செய்ததற்காக எல்லா கிராம பஞ்சாயத்தார்களும் அப்படியே செய்வார்கள் என்று முடிவு செய்வது மிகவும் தவறு."

"... ஒட்டுமொத்தமாக கிராமப் பஞ்சாயத்துகளில், வலயப்பட்டியில் நடந்தது போலத்தான் தீர்ப்புகள் கொடுக்கப்படுகின்ரன என்கிற அடிப்படையில் சட்டம் கொண்டு வருவது விவேகமானது இல்லை. இதற்கு சினிமா கூட ஒரு காரணமாக இருக்கலாம். நீதிபதி கூறியது போல, மரத்தடியில் வெற்றிலை, பாக்கு, தண்ணீர் கூஜாவுடன் அம்மன் சிலை மின்னால் அமர்ந்து, அநியாயம் செய்யும் பஞ்சாயத்துகள்தான் பெரும்பாலும் சினிமாவில் சித்தரிக்கபடுகின்றன."

"நம் சமுதாயம், ஊர் ஒற்றுமை அவசியம் என்பது கூட கிராமங்களில் முக்கியமான அம்சங்களாக இருப்பது மக்களை தன்னடக்குகிறது. இதுதான் பஞ்சாயத்து முறையின் அடிப்படை. எது தர்மம், எது நியாயம் என்பதில் சட்டம் தனி மனிதனை மதிக்கிறது - பஞ்சாயத்து பொது சிந்தனையை முன்வைக்கிறது."

"இப்போது வெள்ளைக்காரர்கள் மூலமாக நம் நாட்டில் நிறுவப்பட்டிருக்கும் நீதிமுறை, வாதி - பிரதிவாதி அதாவது எதிரி-விரோதி என்கிற அடிப்படையிலான adversarial நீதிமுறை. நம் நாட்டில் பாரம்பரியமான நீதிமுறை, சமாதானமாகப் போக வைக்கும் conciliatory-யை அடிப்படையாகக் கொண்டது."

"நீதிமன்றத்தில் ஒரு சாட்சி கூசாமல் பொய் சொல்வதை நம்மால் பார்க்க முடியும். எப்படி பொய் சொல்வது என்று வக்கீல்களே சாட்சிக்கு சொல்லியும் கொடுப்பார்கள், ஆனால் கிராமங்களிலோ, மற்ற இடங்களிலோ நடக்கிற பஞ்சாயத்தில் கடவுள் முன் யாரும் பொய் சொல்ல பயப்படுவார்கள்."

"அம்மன் சிலை முன் நடக்கும் பஞ்சாயத்தில் பொய் சொல்வதற்கு சாட்சிகள் தயங்குவார்கள். அதே சாட்சிகள் நீதிமன்றங்களில் தயக்கமே இல்லாமல் பொய் சொல்வார்கள்."

"நீதிமன்றங்களில் தீர்த்து வைக்க முடியாத பல வழக்குகளை, இந்த பாரம்பரிய பஞ்சாயத்துகள் தீர்த்து வைப்பதை நானே பார்த்திருக்கிறேன். அதே சமயம், பல முக்கியமான வழக்குகள் நீதிமன்றத்தில் மாட்டிக் கொண்டு வருஷக்கணக்கில் திண்டாடுகின்றன என்பதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் நான். அதனால் இப்போது யார் என்னைக் கேட்டாலும் 'நீதிமன்றம் போகாமல் எப்படியாவது உங்கள் சச்சரவைத் தீர்த்துக் கொள்ளுங்கள்' என்றுதான் யோசனை கூறுகிறேன்."

இவ்வாறு சொல்லிவிட்டு தான் பங்கு பெற்ற பஜாஜ் குடும்ப சச்சரவு மற்றும் எல்&டி/கிராசிம் தகராறு பற்றியும் அவை எப்படி நீதிமன்றங்களுக்குப் போகாமல், 'out of court settlement' இல் முடிந்தன என்பதையும் சொல்கிறார்.

அடுத்து என் கருத்து.

No comments:

Post a Comment