துக்ளக் 22 அக்டோபர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 55ஆவது பகுதியிலிருந்து
"மிருகங்களை பலியிட்டு கடவுளை வழிபடுவது சரியா அல்லது தவறா என்கிற விவாதமே தவறானது - என்று நினைக்கிறேன். அதாவது மிருகபலி சரியா தவறா என்பதல்ல விவாதம். அதை சரியா தவறா என்று விவாதிக்கலாமா என்பதுதான் என் கேள்வி."
"... கீதையில் கிருஷ்ண பகவான், 'என்னை யார் எப்படி அணுகுகிறார்களோ, அவர்களை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்' என்று கூறுகிறார். இப்படித்தான் கடவுளை அணுக வேண்டும் என்று கூறாத ஒரே மதம் ஹிந்து மதம்தான். அப்படியிருக்க, இப்படியொரு விவாதம் - அதாவது கடவுளுக்கு பலியிடுவது சரியா தவறா என்கிற விவாதம் - ஏன் ஏற்பட்டது?"
"[கண்ணப்ப நாயனார் கதையைச் சொல்லி] ஆக, கடவுளை இப்படித்தான் வழிபட வேண்டும் என்பதோ, இவர்தான் கடவுள், மற்றவை சைத்தான்கள் என்று கூறுவதோ - பாரத நாட்டின் பாரம்பரியம் கிடையாது. இது கிறிஸ்துவ, இஸ்லாமிய மத பாரம்பரியம். இந்த எண்ணம் நம் நாட்டில் நவீனம் என்கிற முறையில் ஹிந்து மதத்திற்குள்ளேயும் புக ஆரம்பித்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தான விஷயம்."
"இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஹிந்து முண்ணனி போன்ற ஹிந்து இயக்கங்கள் கூட (கிறிஸ்துவ - இஸ்லாமிய முறையில்) இப்படி வழிபடுவது தவறு என்று கூறுவதுதான். திரு. ராமகோபாலனின் வழிகாட்டுதலில், அவரக்ளுடைய தவத்தின் ஆசியில் வளர்ந்த ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களில் நானும் ஒருவன். ஆனால் அவர் கூறும் இந்தக் கருத்து, ஹிந்து பாரம்பரியத்தை ஒத்த கருத்து அல்ல."
"மேலும் மத நம்பிக்கைகள் புனிதமானவை. மற்ற மதத்தினரை, மற்ற மத நம்பிக்கைகளை, நேரிடையாக பாதிக்காமல் இருக்கும் நம்பிக்கைகள் எல்லாமே புனிதமானவை. மிருக பலியிட்டு வழிபடுவது, வேறு எந்த மதத்தையும் நேரிடையாக பாதிக்கவில்லை. எப்படி தீ மிதிப்பது, வேல் குத்திக் கொள்வது போன்ற வழிபாட்டுப் பழக்கங்கள் வழக்கத்தில் இருக்கிறதோ - அப்படித்தான் பலியிடுவதும் மற்றவையும்."
"மிருகத்தை பலியிடுவது சரியா தவறா என்பதை விவாதிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது."
===
இந்தக் கருத்துகள் அனைத்துடனும் எனக்கு முழு உடன்பாடு.
The Voice Asian
2 hours ago
No comments:
Post a Comment